இலங்கை பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு.. விரைவில் வாக்கு எண்ணிக்கை

இலங்கை பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்றது. பெரும்பான்மைக்கு 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
இலங்கை பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு.. விரைவில் வாக்கு எண்ணிக்கை
Published on

2022 பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு முதன்முறையாக இலங்கையில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் அனுரா குமர திசநாயகா வெற்றி பெற்று அதிபர் ஆனார்.

அப்போதைய பாராளுமன்றத்தில் அனுரா குமர திசநாயகாவின் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு வெறும் மூன்று இடங்கள் மட்டுமே இருந்தன. பெரும்பான்மை இல்லாததால், பாராளுமன்றத்தை கலைத்து அதிபர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து தான் இலங்கை பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்றது.

225 இடங்கள் கொண்ட இலங்கை பாராளுமன்றத்துக்கு 196 உறுப்பினர்களை மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்வு செய்வார்கள். மீதமுள்ள 29 இடங்கள், கட்சிகள் தேசிய அளவில் பெற்ற வாக்கு சதவீத அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படும். பெரும்பான்மைக்கு 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

இந்த தேர்தலில், அதிபர் அனுரா குமார திசநாயகே, சஜித் பிரேமதாசா, முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மஹிந்த ராஜபக்சே ஆகியோரின் கட்சிகள் களத்தில் உள்ளன. அதே போல் தமிழ் கட்சிகளும் போட்டியிடுகின்றன. இந்நிலையில், இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது.

வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வரப்பட்டவுடன் உடனடியாக வாக்குகளை எண்ணும் பணி தொடங்கப்படும். அந்த வகையில் இன்று நள்ளிரவு தொடங்கி, முதற்கட்ட முன்னிலை நிலவரம் தெரியவரும். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com