search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "madhava rao"

    குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாதவராவ் உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனுக்களையும் சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #GutkhaScam
    சென்னை:

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்பட்டன. இதற்காக அமைச்சர்கள், டி.ஜி.பி., முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு பெரும் தொகை லஞ்சம் கொடுக்கப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

    இதனடிப்படையில், குட்கா வியாபாரிகள் மாதவராவ், சீனிவாசராவ், உமா சங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால் துறை அதிகாரி என்.கே.பாண்டியன் கைது செய்யப்பட்டனர். அதன்பின்னர்  சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமாரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர்கள் தரப்பில் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.


    இந்த மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, மாதவராவ், சினிவாச ராவ், உமாசங்கர் குப்தா ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 3 பேரையும் ஜாமீனில் விட்டால் சாட்சிகளை கலைக்கக் கூடும் என சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. #GutkhaScam
    குட்கா ஊழல் வழக்கில் கைதான மாதவராவ் உள்ளிட்ட 4 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை வருகிற 16-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். #Gutkhascam #MadhavaRao
    சென்னை:

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்பட்டன. இதற்காக அமைச்சர்கள், டி.ஜி.பி., முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு பெரும் தொகை லஞ்சம் கொடுக்கப்பட்டது.

    இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றியது. இதனடிப்படையில், குட்கா வியாபாரிகள் மாதவராவ், சீனிவாசராவ், உமா சங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால் துறை அதிகாரி என்.கே.பாண்டியன் கைது செய்யப்பட்டனர்.



    இதையடுத்து கடந்த மாதம் 25-ந்தேதி, சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமாரை, சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது சிறையில் இருக்கும் சிவக்குமார், தனக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை சி.பி.ஐ. கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    அதேபோல, ஏற்கனவே கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 3 பேர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் எல்லாம் நீதிபதி வசந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர், ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 16-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். #Gutkhascam #MadhavaRao

    குட்கா ஊழலை கண்டித்து தஞ்சையில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #DMK #GutkhaScam

    தஞ்சாவூர்:

    தமிழக அரசு பதவி விலகக்கோரியும், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்

    தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தங்கினார்.

    இதில் முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, தேர்தல் பணிக் குழுத் தலைவர் எல்.கணேசன், உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், மாநில வர்த்தக அணி தலைவர் உபயதுல்லா, ஒரத்தநாடு ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் து.செல்வம், சட்டத் திருத்த குழு உறுப்பினர் இறைவன், தலைமை செயற்குழு உறுப்பினர் நீலமேகம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஏனாதி பாலசுப்பிரமணியன், மகேஷ் கிருஷ்ணசாமி, மாவட்ட அவை தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் புண்ணியமூர்த்தி, பாக்கியவதி தாண்டவன், மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா, காங்கிரஸ் தலைவர்கள் கிருஷ்ணசாமி வாண்டையார், பி.ஜி.ராஜேந்திரன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் உதயகுமார், தி.க. மாவட்ட தலைவர் வக்கீல் அமர்சிங், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தஞ்சை மாவட்ட செயலாளர் ஜெயினுலாபுதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்காரவி, மனித நேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் பாதுஷா, காங்கிரஸ் கட்சி மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் அன்பரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #DMK #GutkhaScam

    குட்கா ஊழலில் போலீஸ் உயர் அதிகரிகள், உணவு பாதுகாப்புத்துறை, கலால் துறை அதிகாரிகளுக்கு கோடிக் கணக்கான ரூபாய் லஞ்சம் கொடுத்தது உண்மை என்று மாதவராவ் வாக்குமூலம் அளித்துள்ளார். #Gutkha #ministervijayabaskar

    சென்னை:

    சென்னை செங்குன்றம் அருகே குட்கா ஆலை மற்றும் குடோன் நடத்தி வந்தவர் மாதவராவ். இதன் பங்குதாரர்களாக உமாசங்கர் குப்தா சீனிவாசராவ் ஆகியோர் இருந்தனர்.

    இவர்கள் 2013-ம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை தயாரித்து தமிழகம் முழுவதும் சப்ளை செய்து பல கோடி ரூபாய் குவித்தனர்.

    சட்டவிரோத செயல்களை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், அப்போதைய சென்னை போலீஸ் கமி‌ஷனராக இருந்த ஜார்ஜ், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு கோடிக் கணக்கில் லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது.


    இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்து மாதவராவிடம் வாக்குமூலம் பெற்றனர். அதேபோல் லஞ்ச ஒழிப்பு போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட பிறகு சூடு பிடித்தது. கடந்த 5 மற்றும் 6-ந்தேதிகளில் முன்னாள் கமி‌ஷனர் ஜார்ஜ், அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகள் உள்ளிட்ட 40 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    பின்னர் மாதவராவ், உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ், உணவு பாதுகாப்பு மற்றும் கலால்துறை அதிகாரிகள் என 5 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இவர்களில் மாதவராவ், சீனிவாசராவ் ஆகியோருக்கு இன்று வரை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. அவர்களிடம் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள்.

    குட்கா ஆலை மற்றும் குடோன் சட்டவிரோதமாக செயல்பட்ட காலகட்டத்தில் செங்குன்றம் இன்ஸ்பெக்டராக இருந்த சம்பத்குமாரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.

    அப்போது மாதவராவிடம் இருந்து லஞ்சம் பெற்று இடைத்தரகர்கள் 2 பேர் வாயிலாக ஐ.பி.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு கொடுத்ததாக சம்பத்குமார் கூறி உள்ளார். மேலும் புழல் உதவி கமி‌ஷனராக இருந்த மன்னர்மன்னன் இதற்கு உடந்தையாக இருந்தார் என்றும் அவர் கூறியதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    சி.பி.ஐ. அதிகாரிகளிடம் மாதவராவ், சீனிவாசராவ் ஆகியோர் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

    போலீஸ் உயர் அதிகரிகள், உணவு பாதுகாப்புத்துறை, கலால் துறை மற்றும் சென்னை மாநகராட்சி உயர் அதிகாரிகளுக்கு கோடிக் கணக்கான ரூபாய் லஞ்சம் கொடுத்தது உண்மை. இது சத்தியம்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    அடுத்தகட்டமாக டி.எஸ்.பி. மன்னர் மன்னனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். #Gutkha #ministervijayabaskar

    குட்கா ஊழல் வழக்கில் மாதவராவ், சீனிவாசராவுக்கு மேலும் 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.#Gutkhascam #GutkhaCBIProbe

    சென்னை:

    தமிழக அரசு கடந்த 2013-ம் ஆண்டு குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதித்தது. ஆனால், இந்த தடையை மீறி மாதவ ராவ், சீனிவாசராவ் ஆகியோர் குட்காவை தமிழகம் முழுவதும் விற்பனை செய்தனர்.

    இதற்காக அவர்கள், தமிழக அமைச்சர்கள், போலீஸ் டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுகுறித்து விசாரணை நடத்த சி.பி.ஐ. போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி, சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்து, அமைச்சர், டிஜிபி, முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் உள்ளிட்டோர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.


    பின்னர், குட்கா வியாபாரிகள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர், அரசு அதிகாரிகள் பாண்டியன், செந்தில் முருகன் ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். பின்னர், இவர்களை சி.பி.ஐ. கோர்ட்டில் கடந்த 10-ந்தேதி ஆஜர்படுத்தி, 4 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி பெற்றனர்.

    இந்த நிலையில், விசாரணையை முடித்து, 5 பேரையும் கோர்ட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆஜர் படுத்தினர். அவர்கள் அனைவரையும் வருகிற 20-ந்தேதி வரை கோர்ட்டு காவலில் சிறையில் அடைக்க நீதிபதி திருநீலபிரசாத் உத்தரவிட்டார். இதன் பின்னர், சி.பி.ஐ. போலீசார், புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், ‘மாதவ ராவ், சீனிவாசராவ் ஆகியோரை மேலும் 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி திருநீலபிரசாத், இருவரையும் 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். 17-ந் தேதி மாலையில் 4 மணிக்கு அவர்கள் இருவரையும் ஆஜர் படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மற்ற 3 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். #Gutkhascam #GutkhaCBIProbe

    குட்கா ஊழலில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கரை இன்னும் கைது செய்யாதது ஏன்? என்று தங்கதமிழ்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார். #ThangaTamilselvan #AMMK #GutkhaScam

    கொடைக்கானல்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் கொடைக்கானல் வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மத்திய, மாநில அரசுகள் மீது மக்கள் மிகுந்த வெறுப்படைந்துள்ளனர். தமிழக அரசுக்கு மத்திய அரசு இடையூறு செய்து வருகிறது. இரட்டை இலை சின்னம் பெற தினகரன் லஞ்சம் கொடுத்ததாக அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ஆனால் குட்கா ஊழலில் ரூ.150 கோடி வரை அமைச்சர், காவல் துறை அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டது உண்மை என தெரிய வந்துள்ளது. ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கரை இன்னும் ஏன் கைது செய்யவில்லை.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவரை இன்னும் அமைச்சர் பதவியில் இருந்து ஏன் நீக்கவில்லை.

    மக்களால் ஓரம் கட்டப்பட்ட முதல்- அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் தங்களை மிகப் பெரிய தலைவர்கள் போல காட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் புதிதாக ஒரு தொலைக்காட்சியை தொடங்கியுள்ளனர். அதில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் புகைப்படங்கள் இடம்பெற வில்லை. இது தொண்டர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


    முதல்-அமைச்சரும், துணை முதல் அமைச்சரும் இன்னும் மனதளவில் இணையவில்லை. விரைவில் தமிழகத்துக்கு நல்ல விடிவு காலம் பிறக்கும்.

    திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.ம.மு.க. கண்டிப்பாக வெற்றி பெறும். குக்கர் சின்னம் கிடைக்காவிட்டால் எந்த சின்னம் கிடைத்தாலும். அதில் வெற்றி பெறுவோம். நாங்கள் இடைத்தேர்தலில் வெற்றி பெறா விட்டால் அ.ம.மு.க.வை கலைத்து விட்டு அ.தி.மு.க.வுடன் இணைந்து விடுகிறோம். இது நடக்காது. ஆனால் நாங்கள் வெற்றி பெற்று அ.தி.மு.க.வையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்பது உறுதி.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் கூடி விரைவில் தீர்ப்பு வர உள்ளதால் மிகப் பெரிய அரசியல் மாற்றம் உருவாகும்.

    தமிழகத்தில் மின் வெட்டு பிரச்சினை மீண்டும் தலை தூக்கி வருகிறது. மின் வெட்டு உள்ளது என்று சொல்வதற்கு ஒரு அமைச்சர் எதற்கு? தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி மத்திய அரசின் தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம் பெற வேண்டும்.

    ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலையில் கவர்னர் தமிழக மக்களின் உணர்வை புரிந்து கொண்டு நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ThangaTamilselvan #AMMK #GutkhaScam

    குட்கா ஊழல் தொடர்பாக மாதவராவை நேரில் அமர வைத்து டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டரிடம் விசாரிக்க நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். #GutkhaScam
    குட்கா ஊழலில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகளையும் அடுத்தடுத்து கைது செய்ய சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.

    முதல்கட்டமாக மதுரை ரெயில்வே டி.எஸ்.பி. மன்னர் மன்னன், தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    சி.பி.ஐ. காவலில் உள்ள மாதவராவ் உள்ளிட்ட 5 பேரும் வருகிற 14-ந்தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர். அதற்குள் போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில்தான் டி.எஸ். பி.க்கும், இன்ஸ்பெக்டருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    இதனை ஏற்று இருவரும் இன்று காலை 10 மணி அளவில் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக இருப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து ஏராளமான பத்திரிகையாளர்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகம் முன்பு குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    ஆனால் எதிர்பார்த்தப்படி டி.எஸ்.பி. மன்னர்மன்னனும், இன்ஸ்பெக்டர் சம்பத்தும் வரவில்லை. இதன் பிறகே மாதவராவை சி.பி.ஐ. அதிகாரிகள் குடோனுக்கு அழைத்து சென்றனர்.

    மாதவராவின் சி.பி.ஐ. காவல் இன்னும் 2 நாளில் முடிவடைய உள்ளதால் அதற்கு முன்னர் போலீஸ் அதிகாரிகள் இருவரையும் நேருக்கு நேர் வைத்து விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.

    இதற்காக பல்வேறு கேள்விகளுடன் சி.பி.ஐ. அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். இன்று மாலை அல்லது நாளை டி.எஸ்.பி. மன்னர் மன்னனும், இன்ஸ்பெக்டர் சம்பத்தும் நேரில் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    குட்கா ஊழல் குறித்து அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சரமாரியாக கேள்விகளை கேட்க உள்ளனர். இதற்கு அவர்கள் அளிக்கும் பதிலின் அடிப்படையில் உயர் போலீஸ் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    டி.எஸ்.பி. மன்னர்மன்னர், இன்ஸ்பெக்டர் சம்பத் இருவரும் விசாரணைக்கு ஆஜராகும் போது கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    குட்கா ஊழல் பற்றி இருவரிடமும் விசாரணை நடத்தும்போது உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பும் வெளிச்சத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. #GutkhaScam

    சி.பி.ஐ. காவலில் உள்ள மாதவராவை குடோனுக்கு அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தியதன் மூலம் குட்கா ஊழலில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #GutkaScam
    சென்னை:

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் இதன் மூலம் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு நடப்பதாகவும் கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து செங்குன்றத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த குட்கா குடோனில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது ரூ.250 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    அரசு துறை அதிகாரிகளுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் ரூ.40 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுத்து குட்கா விற்பனை நடைபெற்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. குட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் மற்றும் 20-க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. குடோனில் கைப்பற்றப்பட்ட டைரி மூலம் இது வெளிச்சத்துக்கு வந்தது.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் ஐகோர்ட்டு குட்கா வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டது. கடந்த 3 மாதங்களாக டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் குட்கா ஊழல் தொடர்பாக அதிரடி விசாரணை நடத்தினர்.

    கடந்த 5-ந்தேதி அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் ஆகியோரது வீடு உள்ளிட்ட 35 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கின. குட்கா ஊழல் தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக குட்கா அதிபர் மாதவராவ், அவரது பங்குதாரர்களான சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்முருகன், கலால் துறை அதிகாரி பாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களை போலீஸ் காவலில் எடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 10-ந்தேதி காலை 11 மணி அளவில் 5 பேரும் ஐகோர்ட்டில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து அழைத்து செல்லப்பட்டனர்.

    நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் வைத்து அவர்களிடம் குட்கா ஊழல் தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த விசாரணையின் போது மாதவராவ் உள்ளிட்ட 5 பேரும் குட்கா ஊழல் தொடர்பாக பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளனர். இதனை குட்கா வழக்கில் முக்கிய ஆதாரங்களாக சி.பி.ஐ. அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.

    2013-ம் ஆண்டு குட்காவுக்கு தடை விதிக்கப்பட்ட பின்னர் அடுத்த ஆண்டே செங்குன்றம் குடோன் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதன் பிறகுதான் குட்கா வியாபாரி மாதவராவிடம் போலீஸ் அதிகாரிகளும், அரசு துறை அதிகாரிகளும் பேரம் பேசி ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து லஞ்சம் வாங்கி வந்ததும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனை அடிப்படையாக வைத்து அடுத்தக்கட்ட விசாரணையை சி.பி.ஐ. முடுக்கி விட்டுள்ளது. உணவு பாதுகாப்பு அதிகாரியான செந்தில்முருகன் ஒவ்வொரு மாதமும் ரூ.2½ லட்சம் லஞ்சம் வாங்கி இருப்பதாக சி.பி.ஐ. அதிகாரிகள் ஐகோர்ட்டில் தெரிவித்து இருந்தனர். இவர் மட்டும் குட்கா ஊழலில் பல கோடிகளை சுருட்டி இருப்பதும் அம்பலமாகி உள்ளது.

    இந்த நிலையில் சி.பி.ஐ. காவலில் உள்ள மாதவராவை இன்று காலை 11.30 மணி அளவில் நுங்கம்பாக்கம் சி.பி.ஐ. அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் வெளியில் அழைத்து வந்தனர். பின்னர் பலத்த பாதுகாப்புடன் அவரை காரில் ஏற்றி செங்குன்றத்தில் உள்ள குட்கா குடோனுக்கு அழைத்து சென்றனர்.



    குட்கா ஊழலில் பணம் கைமாறியது குறித்து அங்கு வைத்தும் அவரிடம் விசாரணை நடைபெற்றது. தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் எங்கிருந்து எல்லாம் செங்குன்றம் குடோனுக்கு கொண்டு வரப்பட்டது என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது.

    இதன் காரணமாக குட்கா விவகாரம் விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது. மாதவராவ் அளித்த வாக்குமூலத்தில் குட்கா ஊழலில் யார்-யாருக்கு தொடர்பு இருந்தது என்பது பற்றியும், ஒவ்வொரு மாதமும் லஞ்சமாக எத்தனை லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது என்பது பற்றியும் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.

    இதனை மையமாக வைத்தே சி.பி.ஐ. அடுத்தக்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளது. இதன் மூலம் குட்கா ஊழலில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உணவு பாதுகாப்புதுறை அதிகாரி செந்தில்முருகன், கலால் துறை அதிகாரி பாண்டியன் ஆகியோர் மாதவராவிடம் இருந்து வாங்கிய லஞ்சப்பணத்தை தங்களது உயர் அதிகாரிகள் யாருக்கும் பங்கு போட்டு கொடுத்தார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    இதில் அவர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் இந்த துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் சிலரும் விசாரணை வளைத்துக்குள் கொண்டு வரப்பட உள்ளனர்.

    இதன் மூலம் குட்கா ஊழல் வழக்கில் தொடர்புடைய அனைவரையும் இன்னும் சில தினங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #GutkaScam
    குட்கா வழக்கில் கைதான 5 பேரை காவலில் எடுக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக சிறப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. #GutkaScam
    குட்கா வழக்கில் குடோன் அதிபர் மாதவராவ், அவரது தொழில் கூட்டாளிகளான பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ் ஆகியோரும், அதிகாரிகளான செந்தில் முருகன், பாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் 5 பேரையும் காவலில் எடுக்க சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது. இதற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் வருகிற 10-ந்தேதி (திங்கட்கிழமை) மனுதாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி யுள்ளது.

    குட்கா ஊழலுக்கு துணை போனவர்கள் யார்-யார்? என்பது பற்றிய கூடுதல் தகவல்களை மாதவராவிடம் திரட்ட வேண்டி இருப்பதாகவும், அதற்காகவே அவரை காவலில் எடுக்க சி.பி.ஐ. முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    அதிகாரிகள் செந்தில் முருகன், பாண்டியன் ஆகியோர் குட்கா ஊழலில் எவ்வளவு பணத்தை லஞ்சமாக பெற்றனர் என்பது பற்றி மேலும் தகவல்களை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. லஞ்ச பணத்தில் 2 அதிகாரிகளும் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்களா? என்பது பற்றியும் இருவரிடமும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 5 பேரை 7 நாட்கள் காவலில் எடுக்க சி.பி.ஐ. முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. போலீஸ் காவலில் இவர்களிடம் விசாரணை நடத்தும் போது குட்கா ஊழல் வழக்கில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #GutkaScam
    அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு உதவியாக இருந்த மாதவராவின் 2 தரகர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #GutkaScam
    குட்கா வழக்கில் குடோன் அதிபர் மாதவராவ், அவரது தொழில் கூட்டாளிகளான பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ் ஆகியோரும், அதிகாரிகளான செந்தில் முருகன், பாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் குட்கா அதிபர் மாதவராவ், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு இடைத்தரகர்களாக ராஜேந்திரன், நந்தகுமார் ஆகியோர் செயல்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நேற்று காலையில் இவர்கள் இருவரும்தான் சி.பி.ஐ. பிடியில் முதலில் சிக்கினர். இவர்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைக்க இருப்பதாகவே தகவல் வெளியானது. ஆனால் மாதவராவ் அவரது பங்கு தாரர்கள், அதிகாரிகள் ஆகியோர் மட்டுமே கைது நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர். தரகர்களான நந்தகுமார், ராஜேந்திரன் இருவரிடமும் தொடர்ந்து சி.பிஐ. விசாரணை நடத்தி வருகிறது.

    இன்று 2-வது நாளாக விசாரணை நீடிக்கிறது. குட்கா வழக்கில் இருவரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் சாட்சிகளாக சேர்க்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. #GutkaScam
    குட்கா வழக்கில் கைதான முக்கிய குற்றவாளியான மாதவராவ் அப்ரூவராக மாறி இருப்பதால் மேலும் பல போலீஸ் அதிகாரிகள் கைதாகலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. #GutkaScam
    சென்னை:

    தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு கடந்த 2013-ம் ஆண்டு தடைவிதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போதை பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    ஆனால் அரசு மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு குட்கா வியாபாரிகள் தங்கு தடையின்றி அதனை விற்பனை செய்து வந்தனர். இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக வருமானவரி துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு செங்குன்றம் அருகே குட்கா வியாபாரி மாதவராவுக்கு சொந்தமான குடோனில் வருமானவரி துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு மூட்டை மூட்டையாக குட்கா போதைப் பொருட்கள் சிக்கின. ஏராளமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இதனை ஆய்வு செய்து பார்த்தபோது ரூ.250 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த சோதனையின் போது சிக்கிய டைரி ஒன்றே, குட்கா ஊழலை முழுவதுமாக வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. போலீஸ் அதிகாரிகள், சுகாதார துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரூ.40 கோடி வரையில் லஞ்சம் கொடுக்கப்பட்டதும், யார்-யாருக்கு எவ்வளவு லஞ்சப்பணம் கைமாறியுள்ளது என்கிற விவரமும் அதில் இடம் பெற்றிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் இதுபற்றி தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பினர்.

    அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், அப்போது சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனராக இருந்த ஜார்ஜ் ஆகியோரது பெயரும் டைரியில் இடம் பெற்றிருந்தது. இதுமட்டுமின்றி, போலீஸ், அரசு அதிகாரிகளின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.

    இது தொடர்பாக மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் முதலில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் குட்கா விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

    குட்கா வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட பின்னர் டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் தனியாக வழக்கு பதிவு செய்தனர். அதன் பின்னரும் குட்கா வழக்கு எந்த அசைவும் இல்லாமலேயே இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது அதிரடி ஆபரே‌ஷனை தொடங்கினர்.

    அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் ஆகியோரது வீடு உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையுடன் விட்டு விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குட்கா அதிபர் மாதவராவிடம் திரட்டப்பட்ட தகவல்கள் இந்த வழக்கை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது.

    குட்கா விற்பனைக்காக ரூ.40 கோடி லஞ்சம் கொடுத்தது தொடர்பாகவும், போலீஸ் அதிகாரிகள் மட்டுமின்றி, கலால் துறை உணவு பாதுகாப்புதுறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது பற்றியும் மாதவராவ் புட்டு, புட்டு வைத்தார். இதனை தொடர்ந்து குட்கா ஊழலில் தொடர்புடைய அதிகாரிகளும் சிக்கினர்.

    மத்திய கலால் துறை அதிகாரியான கே.என்.பாண்டியன், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களோடு குடோன் அதிபர் மாதவராவ், பங்குதாரர்களான உமா சங்கர் குப்தா, சீனிவாசராவ் ஆகியோரும் கைது நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்.

    இவர்கள் அனைவரும் சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் 5 பேரும் வருகிற 20-ந்தேதி வரையில் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    குட்கா வழக்கில் மாதவராவே முக்கிய குற்றவாளியாக உள்ளார். அவரே, யார்-யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்பதை பட்டியல் போட்டு அதனை செயல்படுத்தி உள்ளார். இதனை ஒப்புக் கொண்டுள்ள அவர் அப்ரூவராக மாறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதனை தொடர்ந்து குட்கா விவகாரத்தில் அடுத்தடுத்து மேலும் பல திருப்பங்கள் ஏற்பட உள்ளன. மாதவராவ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அரசு அதிகாரிகள் மட்டுமே இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அடுத்த கட்டமாக இந்த கைது நடவடிக்கை போலீஸ் அதிகாரிகள் மீதும் பாய்கிறது.

    குட்கா முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்ட கால கட்டத்தில் புழல் உதவி கமி‌ஷனராக இருந்த மன்னர் மன்னன், செங்குன்றம் இன்ஸ்பெக்டராக இருந்த சம்பத் ஆகியோரும் சி.பி.ஐ.யின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இருவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மன்னன் மன்னன் மதுரை ரெயில்வே டி.எஸ்.பி.யாகவும், இன்ஸ்பெக்டர் சம்பத் தூத்துக்குடியிலும் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் ‘‘விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், கமி‌ஷனர் ஜார்ஜ் ஆகியோரது பெயரும் சிக்கி இருப்பது உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்களில் கமி‌ஷனர் ஜார்ஜ் ஓய்வு பெற்றுவிட்டார்.

    அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான சொத்து ஆவணங்கள் சிக்கின. இதன் அடிப்படையில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதனால் ஜார்ஜ் மீதான பிடி இறுகி உள்ளதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.



    அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் ஆகியோரிடமும் நேற்று முன்தினம் நடந்த சோதனையின் போதே சி.பி.ஐ. அதிகாரிகள் முழு அளவிலான விசாரணையை நடத்தி முடித்துள்ளனர். தேவைப்பட்டால் மீண்டும் அவர்களிடம் விசாரணை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்பது பற்றி சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    இதனால் சி.பி.ஐ.யின் அடுத்த குறி யார் மீது? என்கிற எதிர்பார்ப்பும் அதிகமாகி உள்ளது. குட்கா ஊழல் வழக்கில் போலீஸ் அதிகாரிகளை சி.பி.ஐ. நெருங்கி இருப்பது காவல் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #GutkaScam


    ×