search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gudka scam"

    தமிழ்நாட்டில் கடத்தல் குட்கா விற்பதற்கு லஞ்சம் தரப்பட்டதாக நடந்து வரும் ஊழல் வழக்கை விசாரித்து வந்த கண்ணன் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பாபு என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். #TNGutkhascam
    சென்னை:

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

    செங்குன்றம் குட்கா குடோனில் வருமான வரி துறையினர் நடத்திய சோதனையின் எதிரொலியாக அங்கு கைப்பற்றபட்ட டைரியே குட்கா விவகாரத்தின் பின்னணியில் இருந்தவர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.

    தமிழக போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், ஓய்வு பெற்ற முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளின் பெயர்களும் இதில் அடிபட்டன.

    குட்கா குடோனில் சோதனை நடந்த போது புழல் உதவி கமி‌ஷனராக பணியாற்றிய மன்னர் மன்னன், செங்குன்றத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த சம்பத் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

    தமிழக சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கர் பெயரும் குட்கா விவகாரத்தில் சிக்கியது. இதன் காரணமாக குட்கா வழக்கில் போலீஸ் அதிகாரிகள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் குட்கா வழக்கில் குடோன் அதிபர் மாதவராவ் மற்றும் அவரது கூட்டாளிகளிடம் லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட அரசு அதிகாரிகள் ஆகியோரே கைது செய்யப்பட்டனர். 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அடுத்தகட்டமாக போலீசார் மீது சி.பி.ஐ.யின் பாய்ச்சல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இதனை உறுதி செய்யும் வகையில் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் கமி‌ஷனர் ஜார்ஜ், உதவி கமி‌ஷனர் மன்னர் மன்னன், இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோரது வீடுகளிலும் அதிரடி சோதனை நடத்தபட்டது.

    இதன் தொடர்ச்சியாக அவர்கள் மீது கண்டிப்பாக மேல் நடவடிக்கை பாயலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த சோதனை முடிந்த பின்னர் போலீஸ் அதிகாரிகளுக்கு சம்மனும் அனுப்பப்பட்டது. இன்ஸ்பெக்டர் சம்பத் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதனால் எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் சம்பத், முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு செய்தார். இதனை விசாரித்த நீதிபதி, இதற்கு விளக்கம் அளிக்குமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டார். இது தொடர்பாக கோர்ட்டில் பதில் அளித்த சி.பி.ஐ. இன்ஸ்பெக்டர் சம்பத் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்று விளக்கம் அளித்தது.

    இதனால் முன்ஜாமீன் தேவை இல்லை என்று கோர்ட்டு உத்தரவிட்டது. இன்ஸ்பெக்டர் சம்பத்திடம் விசாரணை முடிந்த பின்னர் அதில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பப்படும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுபோன்று எதுவும் நடைபெறவில்லை.

    இந்த நிலையில் குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் மீது அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இந்த குற்றப்பத்திரிகையில் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் இடம்பெறவில்லை. டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் கமி‌ஷனர் ஜார்ஜ், உதவி கமி‌ஷனர் மன்னர் மன்னன், இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோரது பெயர்களும் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



    குட்கா ஊழல் வழக்கில் போலீஸ் துறையினர் மீதே சரமாரியாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன.

    ஆனால் அது தொடர்பாக எந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாததும், குற்றப்பத்திரிகையில் யாருடைய பெயரும் சேர்க்கப்படாமல் இருப்பதும் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், ஊழல் வழக்கை விசாரித்து வந்த கண்ணன் இன்று மாலை மாற்றப்பட்டுள்ளார். குட்கா ஊழல் தொடர்பாக எந்த விசாரணையையும் இனி அவர் நடத்த கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக பாபு என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதேபோல், இந்த விசாரணையில் ஈடுபட்டிருந்த சி.பி.ஐ. ஆய்வாளரான கேரளாவை சேர்ந்த பிரமோத் என்பவரும் விசாரணையில் இருந்து விலகி இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. #Enquiryofficer #TNGutkhascam #probeofficer
    குட்கா ஊழல் தொடர்பாக மாதவராவ் உள்பட 6 பேர் சிக்கி உள்ள நிலையில் சி.பி.ஐ. மீண்டும் அதிரடி விசாரணை நடத்தி வருவதால் போலீஸ் அதிகாரிகளும் கைது ஆகலாம் என தெரிகிறது. #GutkhaScam #CBI

    சென்னை:

    குட்கா ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ. அதிகாரிகள், குட்கா வியாபாரி மாதவராவ் உள்பட 6 பேரை இதுவரை கைது செய்துள்ளனர்.

    செங்குன்றம் அருகே உள்ள குட்கா குடோன் உரிமையாளரான மாதவராவ், பங்குதாரர்கள் சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, மத்திய கலால் துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்பு துறை அதிகாரியான செந்தில் முருகன் ஆகியோர் கடந்த 6-ந்தேதி கைதானார்கள். இவர்களை சி.பி.ஐ. அதிகாரிகள் காவலில் எடுத்தும் விசாரணை நடத்தினர்.

    செங்குன்றம் குட்கா குடோனில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. இதில் குட்கா தயாரிக்க பயன் படுத்தப்பட்ட எந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    குட்கா ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகளான டி,ஜி.பி. டி.கே. ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ், மற்றும் உதவி கமி‌ஷனர் மன்னர் மன்னன், இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. இவர்களில் மன்னர்மன்னன் சம்பத் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் சம்பத் மட்டும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். விசாரணைக்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். இதோடு குட்கா விவகாரம் முடிவுக்கு வந்து விட்டதாகவே கூறப்பட்டது.

    இந்த நிலையில் குட்கா வழக்கில் சி.பி.ஐ. தனது அடுத்த அதிரடியை தொடங்கியுள்ளது. உணவு பாதுகாப்பு துறையில் திருவள்ளூர் மாவட்ட ஆய்வாளராக இருக்கும் சிவக்குமார், நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். குட்கா வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் இவர்தான் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    ஆனால் அதனை ஏற்க கோர்ட்டு மறுத்திருந்தது. இந்த நிலையில்தான் அதிகாரி சிவகுமாரை சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்த சி.பி.ஐ. அதிகாரிகள் கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து குட்கா வழக்கில் போலீஸ் அதிகாரிகளையும் கைது செய்ய சி.பி.ஐ. மீண்டும் வேகம் காட்டுவதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

    குட்கா ஊழலை பொறுத்தவரையில் குடோன் உரிமையாளரான மாதவ ராவ் மற்றும் அவரது கூட்டாளிகள், இருவருடன் அரசு அதிகாரிகள் 3 பேரும் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் இருந்த போதிலும் இதுவரையில் யார் மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

    இந்த நிலையில் சி.பி.ஐ. அதிகாரிகளின் அடுத்த குறி போலீஸ் அதிகாரிகள்தான் என்றும், விரைவில் இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. குட்கா விவகாரத்தில் இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் உதவி கமி‌ஷனர் மன்னர் மன்னனிடம் இன்னும் விசாரணை நடத்தப்படவில்லை.

    எனவே விரைவில் அவரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. அதன் பின்னரே குட்கா ஊழலில் போலீஸ் அதிகாரிகளுடனான தொடர்பு பற்றி இறுதியாக தெரிய வரும் என்று சி.பி.ஐ. அதிகாரிகள் நம்புகிறார்கள். உதவி ஆணையரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின்னர் குட்கா ஊழலில் போலீஸ் அதிகாரிகளும் அடுத்தடுத்து கைது செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது. #GutkhaScam #CBI

    சி.பி.ஐ. காவலில் உள்ள மாதவராவை குடோனுக்கு அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தியதன் மூலம் குட்கா ஊழலில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #GutkaScam
    சென்னை:

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் இதன் மூலம் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு நடப்பதாகவும் கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து செங்குன்றத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த குட்கா குடோனில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது ரூ.250 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    அரசு துறை அதிகாரிகளுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் ரூ.40 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுத்து குட்கா விற்பனை நடைபெற்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. குட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் மற்றும் 20-க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. குடோனில் கைப்பற்றப்பட்ட டைரி மூலம் இது வெளிச்சத்துக்கு வந்தது.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் ஐகோர்ட்டு குட்கா வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டது. கடந்த 3 மாதங்களாக டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் குட்கா ஊழல் தொடர்பாக அதிரடி விசாரணை நடத்தினர்.

    கடந்த 5-ந்தேதி அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் ஆகியோரது வீடு உள்ளிட்ட 35 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கின. குட்கா ஊழல் தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக குட்கா அதிபர் மாதவராவ், அவரது பங்குதாரர்களான சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்முருகன், கலால் துறை அதிகாரி பாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களை போலீஸ் காவலில் எடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 10-ந்தேதி காலை 11 மணி அளவில் 5 பேரும் ஐகோர்ட்டில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து அழைத்து செல்லப்பட்டனர்.

    நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் வைத்து அவர்களிடம் குட்கா ஊழல் தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த விசாரணையின் போது மாதவராவ் உள்ளிட்ட 5 பேரும் குட்கா ஊழல் தொடர்பாக பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளனர். இதனை குட்கா வழக்கில் முக்கிய ஆதாரங்களாக சி.பி.ஐ. அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.

    2013-ம் ஆண்டு குட்காவுக்கு தடை விதிக்கப்பட்ட பின்னர் அடுத்த ஆண்டே செங்குன்றம் குடோன் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதன் பிறகுதான் குட்கா வியாபாரி மாதவராவிடம் போலீஸ் அதிகாரிகளும், அரசு துறை அதிகாரிகளும் பேரம் பேசி ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து லஞ்சம் வாங்கி வந்ததும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனை அடிப்படையாக வைத்து அடுத்தக்கட்ட விசாரணையை சி.பி.ஐ. முடுக்கி விட்டுள்ளது. உணவு பாதுகாப்பு அதிகாரியான செந்தில்முருகன் ஒவ்வொரு மாதமும் ரூ.2½ லட்சம் லஞ்சம் வாங்கி இருப்பதாக சி.பி.ஐ. அதிகாரிகள் ஐகோர்ட்டில் தெரிவித்து இருந்தனர். இவர் மட்டும் குட்கா ஊழலில் பல கோடிகளை சுருட்டி இருப்பதும் அம்பலமாகி உள்ளது.

    இந்த நிலையில் சி.பி.ஐ. காவலில் உள்ள மாதவராவை இன்று காலை 11.30 மணி அளவில் நுங்கம்பாக்கம் சி.பி.ஐ. அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் வெளியில் அழைத்து வந்தனர். பின்னர் பலத்த பாதுகாப்புடன் அவரை காரில் ஏற்றி செங்குன்றத்தில் உள்ள குட்கா குடோனுக்கு அழைத்து சென்றனர்.



    குட்கா ஊழலில் பணம் கைமாறியது குறித்து அங்கு வைத்தும் அவரிடம் விசாரணை நடைபெற்றது. தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் எங்கிருந்து எல்லாம் செங்குன்றம் குடோனுக்கு கொண்டு வரப்பட்டது என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது.

    இதன் காரணமாக குட்கா விவகாரம் விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது. மாதவராவ் அளித்த வாக்குமூலத்தில் குட்கா ஊழலில் யார்-யாருக்கு தொடர்பு இருந்தது என்பது பற்றியும், ஒவ்வொரு மாதமும் லஞ்சமாக எத்தனை லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது என்பது பற்றியும் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.

    இதனை மையமாக வைத்தே சி.பி.ஐ. அடுத்தக்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளது. இதன் மூலம் குட்கா ஊழலில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உணவு பாதுகாப்புதுறை அதிகாரி செந்தில்முருகன், கலால் துறை அதிகாரி பாண்டியன் ஆகியோர் மாதவராவிடம் இருந்து வாங்கிய லஞ்சப்பணத்தை தங்களது உயர் அதிகாரிகள் யாருக்கும் பங்கு போட்டு கொடுத்தார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    இதில் அவர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் இந்த துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் சிலரும் விசாரணை வளைத்துக்குள் கொண்டு வரப்பட உள்ளனர்.

    இதன் மூலம் குட்கா ஊழல் வழக்கில் தொடர்புடைய அனைவரையும் இன்னும் சில தினங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #GutkaScam
    குட்கா ஊழல் தொடர்பாக டி.எஸ்.பி. மன்னர் மன்னன் மற்றும் ஆய்வாளர் சம்பத் ஆகியோருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது. #GutkhaScam #CBI
    சென்னை:

    தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பதற்கு போலீஸ் உயர் அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள், கலால் வரித்துறை அதிகாரிகள் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை, செங்குன்றம் அருகே குட்கா குடோன் நடத்தி வரும் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா ஆகியோர் சார்பில் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. மாதவராவ் உதவியாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சிக்கிய 2 டைரிகள் மூலம் இந்த ஊழல் அம்பலத்துக்கு வந்தது.

    மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் இந்த ஊழல் பற்றிய விசாரணை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்திய பிறகு கடந்த 5-ந்தேதி டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் வீடுகள் உள்பட 35 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அதில் சில ஆவணங்கள் சிக்கின.

    இதைத் தொடர்ந்து மறுநாள் (6-ந்தேதி) குட்கா பங்குதாரர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் பி.செந்தில்முருகன், கலால் வரித்துறை அதிகாரி கே.கே.பாண்டியன் ஆகிய 5 பேரையும் சி.பி.ஐ. கைது செய்தது. அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    இதற்காக சி.பி.ஐ. கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்று கைதான 5 பேரிடமும் 4 நாட்கள் விசாரணை நடத்த சி.பி.ஐ. கோர்ட்டு அனுமதி அளித்தது.

    இதையடுத்து கைதான 5 பேரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று காவலில் எடுத்து நுங்கம்பாக்கம் அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். கைதான 5 பேர் பற்றிய முழு தகவல்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே திரட்டி வைத்திருந்தனர். இதுவரை நடந்த விசாரணைகளின் மர்ம முடிச்சுகள் அனைத்தும் இந்த 5 பேரை சுற்றியே வந்திருப்பதையும் சி.பி.ஐ. அதிகாரிகள் அறிந்திருந்தனர்.

    இவற்றின் அடிப்படையில் நூற்றுக்கணக்கான கேள்விகளை சி.பி.ஐ. அதிகாரிகள் தயார் செய்திருந்தனர். நேற்று அந்த கேள்விகளைக் கேட்டு சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது லஞ்சப் பணம் யார்-யாருக்கு எப்படி கை மாறியது என்பது பற்றிய தகவல்கள் ஆதாரங்களுடன் கிடைத்தது.

    குட்கா ஊழலை நிரூபிப்பதற்கு தேவையான அளவுக்கு, அந்த ஆதாரங்கள், வாக்குமூல தகவல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். அடுத்தக்கட்ட விசாரணையை அவர்கள் தீவிரமாக நடத்த தொடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் கைதான 5 பேரிடமும் இன்று (செவ்வாய்க்கிழமை) 2-வது நாளாக விசாரணை நடந்து வருகிறது. இன்று நடந்த விசாரணையின் போது அமைச்சர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுக்கப்பட்டது பற்றிய அதிரடி விசாரணை நடந்தது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தன்று ஒரு உயர் போலீஸ் அதிகாரிக்கு அந்த தரகர் மூலம் எப்படி லஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற கிடுக்கிப்பிடி விசாரணை நடந்தது.

    இந்த விசாரணையில் லஞ்சம் கை மாறியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உயர் போலீஸ் அதிகாரிகள் நேரடியாக லஞ்ச பணத்தை வாங்காமல், கீழ்மட்ட ஊழியர்களை பயன்படுத்தி லஞ்சம் பெற்றதாக தெரிய வந்துள்ளது. எனவே இந்த ஊழல் வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    கைதான 5 பேரிடமும் நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்கள் விசாரணை நடத்த அவகாசம் உள்ளது. இந்த 2 நாளில் மேலும் தகவல்களை சி.பி.ஐ. அதிகாரிகள் பெற்று விடுவார்கள் என்று தெரிகிறது.

    குட்கா பங்குதாரர்கள் 3 பேரும் அரசு தரப்பு சாட்சிகளாக மாறி விட்டதாக கூறப்படுகிறது. எனவே அவர்கள் கொடுக்கும் வாக்கு மூலங்களும், ஆதாரங்களும் லஞ்சம் பெற்றவர்களுக்கு மாபெரும் இடியாக மாறும் என்று சி.பி.ஐ. வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    இதற்கிடையே சி.பி.ஐ. அதிகாரிகளின் மற்றொரு குழு, குட்கா ஊழலில் தொடர்புடையவர்களாக கருதப்படுபவர்களுக்கு சம்மன் அனுப்பி, நுங்கம்பாக்கம் அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதன்படி நேற்று 6 பேர் சம்மன் அனுப்பி வரவழைக்கப்பட்டிருந்தனர்.

    அந்த 6 பேரில் 4 பேர் குட்கா பங்குதாரர் மாதவராவ் அலுவலகத்தில் பணியாற்றி வருபவர்கள். மற்ற 2 பேர் மாதவராவின் உறவினர்கள் என்று கூறப்படுகிறது. இவர்களில் சிலர் புரோக்கர்களாக செயல்பட்டவர்கள் என்று தெரிகிறது.

    தடை செய்யப்பட்ட குட்காவை தங்குதடையின்றி விற்பதற்கு ஒவ்வொரு துறை அதிகாரிகளுக்கும் இவர்கள் மூலம்தான் லஞ்சம் கை மாறியதாக சி.பி.ஐ. அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். இதை உறுதிப்படுத்த, டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள், அவர்கள் 6 பேரையும் தனி, தனி அறைகளில் வைத்து விசாரித்தனர்.

    நேற்று காலை தொடங்கி மாலை வரை இடைவெளி இல்லாமல் பல மணி நேரத்துக்கு இந்த விசாரணை நீடித்தது. அப்போது 6 பேரும் கொடுத்த தகவல்கள் அனைத்தும் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டன.

    இன்று வேறு சிலர் நுங்கம்பாக்கம் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இந்த விசாரணைகள் மூலம் ரூ.100 கோடிக்கு மேல் லஞ்சம் கொடுக்கப்பட்டிருக்கும் திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான பிடி இறுகி வருகிறது.


    குட்கா ஊழல் வழக்கை பொறுத்தவரை லஞ்சம் கொடுத்தது யார்? என்பது தெரிந்து விட்டது. லஞ்சம் கொடுத்ததை அவர்கள் ஒத்துக்கொண்டனர். அந்த லஞ்ச பணம் புரோக்கர்கள் மூலம் கைமாறி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. அந்த புரோக்கர்களும் சி.பி.ஐ. வளையத்துக்குள் வந்து விட்டனர்.

    அடுத்து லஞ்ச பணத்தை வாங்கியது யார்-யார் என்பது மட்டுமே உறுதி செய்யப்பட வேண்டியதுள்ளது. எனவே டைரியில் உள்ள தகவல்களின் அடிப்படையில் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    அதன்படி போலீஸ் அதிகாரிகள் மன்னர் மன்னன், சம்பத் ஆகிய இருவருக்கும் சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர். மன்னர்மன்னன் புழல் உதவி கமி‌ஷனராக இருந்தவர். தற்போது மன்னர்மன்னன் மதுரையில் ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார்.

    குட்கா ஊழலில் இவர் பெயர் கூறப்பட்டதை தொடர்ந்து கடந்த 5-ந்தேதி இவரது வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி ஆதாரங்களை கைப்பற்றி இருந்தனர். அதன் அடிப்படையில் மன்னர்மன்னனுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர்.

    சம்மன் அனுப்பப்பட்டுள்ள மற்றொரு போலீஸ் அதிகாரியான சம்பத் செங்குன்றத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர். தற்போது தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

    குட்கா ஊழலில் இவர் பெயரும் அடிபட்டதை தொடர்ந்து ஆறுமுகநேரியில் உள்ள அவரது வீட்டில் சி.பி.ஐ. கடந்த 5-ந்தேதி சோதனை நடத்தி இருந்தது. அடுத்தக்கட்டமாக அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.

    மன்னர்மன்னன், சம்பத் இருவரிடமும் விசாரணை நடந்த பிறகு உயர் போலீஸ் அதிகாரிகளை நோக்கி சி.பி.ஐ.யின் பார்வை திரும்பும் என்றும் கூறப்படுகிறது.

    சி.பி.ஐ.யின் இந்த அதிரடிக்கு இடையே 2 மற்றும் 3-ம் நிலையில் உள்ள காவல் துறை, சுகாதார துறை ஊழியர்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் குறி வைத்து காய்களை நகர்த்தி வருகிறார்கள். இன்னும் ஓரிரு நாட்களில் அந்த அதிகாரிகளும் விசாரிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

    அவர்கள் கொடுக்கும் தகவல்களையும் வைத்துக் கொண்டு உயர் போலீஸ் அதிகாரிகளை சுற்றி வளைக்க சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது. எனவே குட்கா ஊழலில் அடுத்தடுத்து பூகம்பம் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #GutkhaScam #CBI
    குட்கா ஊழல் தொடர்பான ஆவணங்களை வழங்குமாறு லஞ்ச ஒழிப்பு துறைக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருந்த நிலையில் அனைத்து ஆவணங்களையும் சி.பி.ஐ.க்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #GutkaScam
    சென்னை:

    சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் குட்கா புகையிலை பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனால் தடையை மீறி குட்கா விற்பனை நடைபெற்றது.

    இந்த நிலையில் வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரித்துறையினர் செங்குன்றத்தில் சில குடோன்களில் சோதனையிட்டபோது அங்கு ரகசியமாக குட்கா போதை பொருள் தயாரித்து பொட்டலங்களாக மாற்றப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

    உயர் போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு குட்கா விற்பனைக்கு அனுமதி அளித்தது தெரியவந்தது. மேலும் குடோனில் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் யார்- யாருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற பட்டியல் இடம் பெற்று இருந்தது.

    இந்த விவகாரத்தை தி.மு.க. சட்டசபையில் கிளப்பியது. இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.

    வழக்கு தொடர்பான ஆவணங்களையும் சேகரித்தது. அதில் குட்கா ஊழலில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் பெயர்கள் இடம் பெற்று இருந்தன.

    இதற்கிடையே குட்கா ஊழலில் உயர் போலீஸ் அதிகாரிகள் மீது புகார் கூறப்படுவதால் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. வழக்கு தொடர்ந்தது. இதை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட்டது.

    இதையடுத்து வழக்கு விசாரணை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் ஒப்படைத்தனர்.

    இதற்கிடையே குட்கா ஊழலில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கப்பிரிவு தனியாக விசாரணை நடத்தி வருகிறது.

    வழக்கு தொடர்பான ஆவணங்களை தங்களுக்கு வழங்குமாறு லஞ்ச ஒழிப்பு துறைக்கு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கடிதம் எழுதினர். ஆனால் வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கனவே சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்து விட்டதாகவும், தங்களிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை என்றும் லஞ்ச ஒழிப்பு துறை மறுத்துவிட்டது.

    இதுபற்றி மாநில லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கூறும்போது, வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சி.பி.ஐ.க்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது. மத்திய அரசின் ஒரு விசாரணை அமைப்புக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்பு 2-வது விசாரணை அமைப்புக்கு அனுப்பி வைக்க தேவையில்லை என்றனர்.

    இதை மறுத்த மத்திய விசாரணை அதிகாரிகள் அதுபோன்ற விதிகளோ, தகவல் பரிமாற்ற வழிமுறைகளோ எதுவும் கிடையாது என்றனர்.  #GutkaScam
    ×