search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "George"

    குட்கா ஊழல் தொடர்பாக மாதவராவ் உள்பட 6 பேர் சிக்கி உள்ள நிலையில் சி.பி.ஐ. மீண்டும் அதிரடி விசாரணை நடத்தி வருவதால் போலீஸ் அதிகாரிகளும் கைது ஆகலாம் என தெரிகிறது. #GutkhaScam #CBI

    சென்னை:

    குட்கா ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ. அதிகாரிகள், குட்கா வியாபாரி மாதவராவ் உள்பட 6 பேரை இதுவரை கைது செய்துள்ளனர்.

    செங்குன்றம் அருகே உள்ள குட்கா குடோன் உரிமையாளரான மாதவராவ், பங்குதாரர்கள் சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, மத்திய கலால் துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்பு துறை அதிகாரியான செந்தில் முருகன் ஆகியோர் கடந்த 6-ந்தேதி கைதானார்கள். இவர்களை சி.பி.ஐ. அதிகாரிகள் காவலில் எடுத்தும் விசாரணை நடத்தினர்.

    செங்குன்றம் குட்கா குடோனில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. இதில் குட்கா தயாரிக்க பயன் படுத்தப்பட்ட எந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    குட்கா ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகளான டி,ஜி.பி. டி.கே. ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ், மற்றும் உதவி கமி‌ஷனர் மன்னர் மன்னன், இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. இவர்களில் மன்னர்மன்னன் சம்பத் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் சம்பத் மட்டும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். விசாரணைக்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். இதோடு குட்கா விவகாரம் முடிவுக்கு வந்து விட்டதாகவே கூறப்பட்டது.

    இந்த நிலையில் குட்கா வழக்கில் சி.பி.ஐ. தனது அடுத்த அதிரடியை தொடங்கியுள்ளது. உணவு பாதுகாப்பு துறையில் திருவள்ளூர் மாவட்ட ஆய்வாளராக இருக்கும் சிவக்குமார், நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். குட்கா வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் இவர்தான் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    ஆனால் அதனை ஏற்க கோர்ட்டு மறுத்திருந்தது. இந்த நிலையில்தான் அதிகாரி சிவகுமாரை சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்த சி.பி.ஐ. அதிகாரிகள் கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து குட்கா வழக்கில் போலீஸ் அதிகாரிகளையும் கைது செய்ய சி.பி.ஐ. மீண்டும் வேகம் காட்டுவதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

    குட்கா ஊழலை பொறுத்தவரையில் குடோன் உரிமையாளரான மாதவ ராவ் மற்றும் அவரது கூட்டாளிகள், இருவருடன் அரசு அதிகாரிகள் 3 பேரும் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் இருந்த போதிலும் இதுவரையில் யார் மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

    இந்த நிலையில் சி.பி.ஐ. அதிகாரிகளின் அடுத்த குறி போலீஸ் அதிகாரிகள்தான் என்றும், விரைவில் இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. குட்கா விவகாரத்தில் இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் உதவி கமி‌ஷனர் மன்னர் மன்னனிடம் இன்னும் விசாரணை நடத்தப்படவில்லை.

    எனவே விரைவில் அவரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. அதன் பின்னரே குட்கா ஊழலில் போலீஸ் அதிகாரிகளுடனான தொடர்பு பற்றி இறுதியாக தெரிய வரும் என்று சி.பி.ஐ. அதிகாரிகள் நம்புகிறார்கள். உதவி ஆணையரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின்னர் குட்கா ஊழலில் போலீஸ் அதிகாரிகளும் அடுத்தடுத்து கைது செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது. #GutkhaScam #CBI

    குட்கா ஊழல் தொடர்பாக சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் கூறிய குற்றச்சாட்டுக்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார். #GutkhaScam #George #Jayakumar
    விழுப்புரம்:

    குட்கா விற்க ரூ. 40 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக வந்த புகாரில் சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் சிக்கினார். அதன்பேரில் சென்னை நொளம்பூரில் உள்ள அவரது வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    இதுதொடர்பாக ஜார்ஜ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர், சென்னையில் துணை கமி‌ஷனராக இருந்த ஜெயக்குமார் மீது பல்வேறு குற்றசாட்டுகளை கூறினார். ஜெயக்குமார் பணியில் இருந்தபோது குட்கா, ஊழல் போன்ற சட்ட விரோத செயல்கள் நடந்தது. அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த ஊழல் தொடர்பான தகவல்களை ஜெயக்குமார் என்னிடம் தரவில்லை. ஊழல் விவகாரம் தொடர்பான அனைத்து விவரங்களும் ஜெயக்குமாருக்கு தெரியும். அவர் பணியில் சரியாக செயல்படவில்லை என்று கூறினார்.

    சென்னையில் துணை கமி‌ஷனராக பணியாற்றிய ஜெயக்குமார் தற்போது விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார்.

    கோப்புப்படம்

    ஜார்ஜின் குற்றசாட்டுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    குட்கா ஊழல் தொடர்பாக தற்போதைக்கு எந்த கருத்தையும் நான் சொல்ல விரும்பவில்லை. என் நேர்மையை சென்னை மக்கள் நன்கு அறிவர்.

    உழைப்பது என் கடைமை என்றாலும் இந்த குற்றசாட்டு தொடர்பாக பதில் சொல்ல வேண்டியது அவசியமாகி உள்ளது.

    முன்னாள் கமி‌ஷனர் ஜார்ஜ் தான் குற்றம் அற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும். அதை விடுத்து பிற அதிகாரிகள் மீது பழிபோடக்கூடாது.

    பழிவாங்கும் நோக்கத்துடன் என் மீது ஜார்ஜ் குற்றம்சாட்டுகிறார். அவதூறு பரப்பி வருகிறார்.

    என் மீது எந்த குற்றமும் இல்லை. நான் இதை எங்கே நிரூபிக்கவேண்டுமோ அங்கு நிரூபிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #GutkhaScam #George #Jayakumar
    தமிழகத்தில் குட்கா ஊழல் தொடர்பான விசாரணை சூடுபிடித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகளிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. #GutkhaScam #EDProbe
    சென்னை:

    தமிழகத்தில் குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. புகாரில் சிக்கியுள்ள அமைச்சர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த, முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், குட்கா ஊழல் நடந்தபோது உள்ள அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் விவரங்களை வெளியிட்டார்.


    அந்த விவரங்களை தருமாறு ஜார்ஜிடம் அமலாக்கத்துறை கேட்டுள்ளது. 2011 முதல் 2015 வரையிலான கால கட்டத்தில் பணிபுரிந்ததாக பல்வேறு அதிகாரிகளின் பெயர்களை ஜார்ஜ் வெளியிட்டுள்ளார். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. #GutkhaScam #EDProbe
    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஆஜராக வந்த ஜார்ஜ் ஒரு நிமிடத்தில் திரும்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. #George #JayaDeathprobe
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.

    இதில் சசிகலா- உறவினர்கள், போலீஸ் அதிகாரிகள், அப்பல்லோ டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட பலருக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி விசாரித்து உள்ளது.

    இதேபோல் முன்னாள் சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜுக்கும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. அவர் இன்று ஆஜராகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று காலை ஜார்ஜ் விசாரணை ஆணையத்தில் ஆஜராக வந்தார். ஆனால் அவரிடம், இன்று ஆஜராக வேண்டியதில்லை என்றும் வேறு தேதியில் ஆஜராகும்படி இ-மெயில் ஒன்று அனுப்பப்பட்டு உள்ளதாக விசாரணை ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த இ-மெயிலை அவர் பார்க்காததால் ஆஜராக வந்துவிட்டார்.

    இதையடுத்து ஜார்ஜ் வந்த வேகத்தில் ஒரு நிமிடத்திலேயே அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றார்.

    குட்கா ஊழல் தொடர்பாக ஜார்ஜ் வீட்டில் சி.பி.ஐ. நேற்று விடிய விடிய சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. #George #JayaDeathprobe
    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆணையத்தில் முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் இன்று மீண்டும் ஆஜராகி விளக்கம் அளிக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #JayalalithaaDeath #ArumugasamyCommission
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக ஜார்ஜ் பணியில் இருந்தார். இதனால், அப்பல்லோ மருத்துவமனையில் நடந்தது குறித்து அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது என்ற அடிப்படையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், நேற்று ஆணையம் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஜார்ஜுக்கு சம்மன் அனுப்பியது. அதனை ஏற்று நேற்று பிற்பகல் 2.10 மணிக்கு ஆணையத்துக்கு ஜார்ஜ் வருகை தந்தார்.

    பிற்பகல் 2.30 மணி அளவில் தொடங்கிய விசாரணையின் போது, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி முன்பு ஜார்ஜ் ஆஜரானார். அவரிடம் வக்கீல்கள் மதுரை எஸ்.பார்த்தசாரதி மற்றும் நிரஞ்சன் ஆகியோர் குறுக்கு விசாரணை நடத்தினார்கள். மாலை 4.30 மணி வரை அதாவது 2 மணி நேரம் விசாரணை நடந்தது.

    பின்னர் விசாரணை முடிந்து ஜார்ஜ் ஆணையத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது நிருபர்கள் ஆணையம் முன்பு தங்களிடம் என்ன கேள்விகள் கேட்கப்பட்டன? அதற்கு நீங்கள் என்ன பதிலளித்தீர்கள்? என்பது குறித்து பல கேள்விகளை கேட்டனர். ஆனால் அவர் எதற்கும் பதிலளிக்காமல் மவுனமாக காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

    ஜார்ஜிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது:-

    ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜுக்கு ஜெயலலிதா மரணம் தொடர்பாக தகவல்கள் தெரிந்திருக்கும் என்ற கோணத்தில் விசாரணைக்கு அழைத்திருந்தோம். அதன்படி அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2011-ம் ஆண்டு போயஸ் கார்டனில் இருந்து சசிகலா வெளியேற்றப்பட்ட போது, போலீஸ் சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்தேன். ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சசிகலா வெளியேற்றப்பட்டார் என்று அப்போது தெரிந்துகொண்டேன். அதேபோல் கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் கால்பந்தாட்ட போட்டி நடந்தது. இதில் அம்பானி குடும்பத்தைச் சேர்ந்த முகேஷ் அம்பானி, நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் ஆகியோர் பார்வையாளர்களாக பங்கேற்றனர். இந்த தகவலை அப்போது முதல்-அமைச்சரிடம் தெரிவிக்கவில்லை என்ற காரணத்தால், நான் மாநகர போலீஸ் கமிஷனர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டேன் என்று தெரிந்துகொண்டேன்.

    அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற நாட்களில் தினமும் மருத்துவமனைக்கு சென்று வருவேன். ஆனால் ஜெயலலிதாவை ஒரு நாளும் நேரில் பார்க்கவில்லை. கண்ணாடி வழியாக வி.ஐ.பி.க்கள் பார்த்ததாக நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டு இருக்கிறேன். 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4-ந் தேதி மாலை 6 மணியளவில் ஜெயலலிதா உடல்நிலை முடியாததை போலீஸ் வட்டாரங்கள் மூலமாக தெரிந்துகொண்டேன். உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றேன். இருப்பினும் அப்பல்லோ மருத்துவர்களிடம் நேரடியாக ஜெயலலிதா உடல்நிலை குறித்து விசாரிக்கவில்லை.

    ஜெயலலிதா சிகிச்சை பெற்ற நாட்களில் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில் அது தொடர்பான விசாரணை செய்யவில்லை. மேலும் தீபா, ஜெயலலிதாவின் ரத்த சொந்தம் என்று அப்போது எனக்கு தெரியாது. அப்போதைய தமிழக கவர்னர் வித்யாசாகர்ராவ் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தபோது, அவரை அழைத்து சென்றேன்.



    இவ்வாறு வாக்குமூலத்தில் ஜார்ஜ் கூறி உள்ளார்.

    தொடர்ந்து அவரிடம், சசிகலாவை சந்தித்து பேசினீர்களா? என்று வக்கீல்கள் கேள்வி எழுப்பியபோது, சசிகலாவை பார்க்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அப்படி இருக்கும்போது நான் ஏன் அவரை சந்திக்க வேண்டும் என்று ஜார்ஜ் பதிலளித்தார்.

    தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு யார், யார் வந்து சிகிச்சை அளித்தார்கள்?, அவரை அமைச்சர்கள் சந்தித்தார்களா?, ஜெயலலிதா மரணம் குறித்து வேறு ஏதாவது தகவல்கள் தெரியுமா? என்பது குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

    மேலும் ஜார்ஜிடம் வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் நாளை (இன்று) பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் ஆஜராக விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    அதேபோன்று சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவகுமாரிடம் இதற்கு முன்பு நடத்திய விசாரணையின் போது, அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, அங்கு டாக்டராக பணியாற்றி வரும் திவாகரனின் மகள் டாக்டர் ராஜமாதங்கி (பொதுமருத்துவம்), ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த மருத்துவ குறிப்புகளை எடுத்திருந்தார் என்று கூறினார்.

    அதன்படி டாக்டர் ராஜமாதங்கி, திவாகரனின் மருமகன் டாக்டர் விக்ரம் ஆகியோர் நாளை (இன்று) ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. அத்துடன் ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன், ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமலிங்கம் ஆகியோரிடம் மறு விசாரணை நடத்துவதற்காக வரும் 16-ந் தேதி ஆஜராகவும் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மேலும், ஆணையம் ஏற்கனவே விசாரணை நடத்திய ஜெயலலிதாவின் வங்கி கணக்கு இருந்து வந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஸ்டெல்லா மேரீஸ் கிளை முன்னாள் மேலாளர் மகாலட்சுமி, அப்பல்லோ மருத்துவர்கள் ஜெயஸ்ரீகோபால், சாந்தாராம், சர்க்கரை நோய் தடுப்பு மருத்துவர் ராமச்சந்திரன் ஆகியோரிடம் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்வதற்காக 16-ந் தேதி அவர்கள் அனைவரும் ஆஜராக ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    இவ்வாறு ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. #JayalalithaaDeath ##ArumugasamyCommission
    காளி ரங்கசாமி இயக்கத்தில் மாஸ்டர் தினேஷ் - மனிஷா யாதவ் நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஒரு குப்பைக் கதை' படத்தின் விமர்சனம். #OruKuppaiKathai #Dinesh #ManishaYadav
    தான் கொலை ஒன்று செய்துவிட்டதாக போலீசில் சரணடைகிறார் மாஸ்டர் தினேஷ். கொலை பற்றி போலீசார் அவரிடம் விசாரிக்க நடந்தவகளை ஒவ்வொன்றாக யோசிக்க அவரது முந்தைய வாழ்க்கை ஆரம்பமாகிறது.

    அதில், மாநகராட்சியில் குப்பை அள்ளும் தொழிலாளியாக வேலை பார்க்கிறார் தினேஷ், சென்னையில் குப்பம் ஒன்றில் தனது அம்மாவுடன் வசித்து வருகிறார். இவருடன் குப்பை அள்ளும் தொழிலாளியாக யோகி பாபு வருகிறார். தினேஷுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவரது அம்மா பல இடங்களில் பெண் பார்த்தும் ஏதுவும் அமையவில்லை. எந்த ஒரு கெட்ட பழக்கமும் இன்றி பண்பானவனாக, நேர்மையானவனாக இருக்கும் அவருக்கு, செய்யும் தொழிலால் பெண் கொடுக்க மறுக்கின்றனர். 

    இந்த நிலையில், தனது நண்பர் ஒருவர் மூலம் மனிஷா யாதவ்வை பெண் பார்க்க செல்கின்றனர். மனிஷா வீட்டில் மாப்பிள்ளை ஒரு கம்பெனியில் கிளார்க்காக பணிபுரிவதாக பொய் சொல்லச் சொல்கின்றனர். ஆனால் பொய் சொல்ல மனமில்லாமல், மனிஷாவின் அப்பாவான ஜார்ஜிடம் தான் குப்பை அள்ளும் தொழிலாளி என்கிற உண்மையை தினேஷ் சொல்கிறார். ஜார்ஜக்கு அவரது நேர்மை பிடித்துப்போக தனது பெண்ணை அவருக்கே கொடுக்க சம்மதிக்கிறார். 



    மேலும் மனிஷாவிடம், தினேஷன் தொழில் குறித்து சொல்ல வேண்டாம் என்றும் ஜார்ஜ் கேட்டுக் கொள்கிறார். இதையடுத்து மாஸ்டர் தினேஷுக்கும், மனிஷாவுக்கும் திருமணம் நடக்கிறது. மனிஷா கர்ப்பமாகியிருக்கும் நிலையில், தினேஷ் குப்பை அள்ளும் தொழிலாளி என்பது தெரிந்து விடுகிறது. இதையடுத்து தினேஷை வெறுக்க ஆரம்பிக்கும் மனிஷா, குழந்தை பெற்றுக் கொள்ள பிறந்த வீட்டுக்கு செல்கிறாள். குழந்தை பிறந்த பிறகு, தன்னால் மீண்டும் அந்த குப்பத்திற்கு வர முடியாது என்று மனிஷா கூறிவிடுகிறாள். இதையடுத்து அடுக்குமாடிக் குடியிறுப்புக்கு குடிபெயர்கின்றனர். 

    அங்கு அவர்களது வீட்டிற்கு அருகில் இருக்கும் ஐ.டி. ஊழியர் ஒருவருக்கும், மனிஷாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு, ஒருகட்டத்தில் மனிஷா அவருடன் ஓடிவிடுகிறார். இதனால் கடும் மனவேதனைக்கு உள்ளாகும் தினேஷ், மனிஷா அவள் இஷ்டப்படி விட்டுவிட்டு, தனது குழந்தையை மட்டும் தன்னிடம் அழைத்த வர முடிவு செய்து மனிஷாவை தேடிச் செல்கிறார். 



    கடைசியில், தினேஷ் தனது குழந்தையை தன்னுடன் அழைத்து வந்தாரா? தினேஷ் ஏன் போலீசில் சரணடைந்தார்? அங்கு கொலை செய்யப்பட்டது யார்? மனிஷா என்ன ஆனார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

    முதல் படத்திலேயே முன்னணி கதாபாத்திரத்தில் எதார்த்தமான நடிப்பின் மூலம் கவர்கிறார் மாஸ்டர் தினேஷ். ஒரு குப்பை அள்ளும் தொழிலாளியாகவே வந்து மனதில் நிற்கிறார். மனிஷா யாதவ் இதுவரை நடித்த கதாபாத்திரங்களில் பெரும்பாலும் கவர்ச்சி வேடங்களில் நடித்து கவர்ந்திருந்தாலும், இந்த படத்தில் குடும்ப பெண்ணாக, குழந்தைக்கு அம்மாவாக அவரது கதபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார். கிடைத்த வாய்ப்பை நல்ல பயன்படுத்தியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். 

    யோகி பாபு காமெடியுடன் குணசித்திர கதாபாத்திரத்திலும் கலக்கியிருக்கிறார். ஜார்ஜ், அதிரா, கோவை பானு. செந்தில், லலிதா என சின்ன சின்ன கதாபாத்திரங்களும் வாய்ப்பை பயன்படுத்தி நடித்திருக்கின்றனர்.  



    குப்பை அள்ளுவதை விரும்பி செய்யும் ஒருவருக்கு, அந்த தொழிலால் ஏற்படும் அவமானங்கள், அவர் சந்திக்கும் பிரச்சனைகள் என அனைத்தையும் எதார்த்தமாக, உணர்ச்சிப்பூர்வமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் காளி ரங்கசாமி. 

    படத்தில் கதாபாத்திரத்தின் உயரம் குறைவாக இருந்தாலும், மனதால் அந்த கதாபாத்திரங்கள் உயர்ந்த காட்டியிருக்கிறார். நமது சமூகத்தில் ஒரு குடும்பத்தில் கள்ளத் தொடர்பால் ஏற்படும் பிளவு, அதனால் இருவரது வாழ்க்கையும் எந்தளவுக்கு பாதிக்கப்படுகிறது  என்பதை காட்டியிருக்கிறார். தற்போதைய இளைஞர்கள் தான் தவறாக நடந்து கொள்கிறார்கள் என்றால், இளம் பெண்களும் பொழுதுபோக்குக்கு ஆசைப்பட்டு விபரீதத்தை பொறுட்படுத்தாமல் வீணாவது என பலவற்றை அலசியிருக்கிறார். 



    குப்பை அள்ளுபவன், உள்ளத்தால் சுத்தமாக இருக்கிறான். நாகரீகமாக இருப்பவர்கள், உள்ளத்தால் குப்பையாக இருக்கிறார்கள் என்பதை மறைமுகமாக காட்டியிருக்கிறார். படத்தின் திரைக்கதையும், வசனமும் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. ஒரு குப்பைக் கதை படம் மூலம் ஒரு நல்ல கதை கொடுத்த இயக்குநர் என்ற பெயரை பிடிப்பார். 

    ஜோஸ்வா ஸ்ரீதரின் பின்னணி இசை அலட்டல் இல்லாமல் சிறப்பாக வந்திருக்கிறது. பாடல்களும் கேட்கும் ரகம் தான். மகேஷ் முத்துச்சுவாமியின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது. 

    மொத்தத்தில் `ஒரு குப்பைக் கதை' தூய்மையானது. #OruKuppaiKathai #MasterDinesh #ManishaYadav

    ×