search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jayalalithaa dead probe"

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் சாந்த ஷீலா நாயர் ஆகியோர் ஆஜராகுமாறு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. #Jayalalithaa #Jayalalithaadeath #ApolloHospital

    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி கமி‌ஷன் விசாரணை நடத்தி வருகிறது. இதில் இதுவரை 150-க்கும் மேற்பட்டவர்கள் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    விசாரணை கமி‌ஷனில் வாக்குமூலம் அளித்த பலரும் சசிகலாவுக்கு எதிராகவே கூறியதாக தகவல்கள் வெளிவருகிறது.

    சசிகலா தனது தரப்பு விளக்கத்தை வக்கீல் மூலம் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்துள்ளார். சசிகலா வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்தி வருகிறார்.

    சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமி, அப்பல்லோ டாக்டர்கள், நர்சுகள் என 13 பேர்களிடம் சசிகலாவின் வக்கீல் 3-ந் தேதி குறுக்கு விசாரணை நடத்த உள்ளனர்.

    விசாரணை ஆணையத்தில் திடீர் திருப்பமாக அப்பல்லோ ஆஸ்பத்திரியின் வக்கீல்களும் இப்போது குறுக்கு விசாரணை செய்ய உள்ளனர்.

    ஜெயலலிதாவின் செயலாளராக இருந்த சாந்த ஷீலா நாயர், அரசு ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் வருகிற 2-ந் தேதி அப்பல்லோ வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்த ஆணையத்தில் அனுமதி வாங்கி உள்ளனர்.

    இந்த விசாரணையில் ஆஜராக இருவருக்கும் ஆணையத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ், சுகாதாரத் துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் ஆகியோர்தான் அரசின் முடிவுகள் குறித்து முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் ஆலோசனை நடத்தியவர்கள் என்பதால் இவர்கள் இருவரிடமும் ஆணையம் மீண்டும் சில விளக்கங்களை பெற விரும்புகிறது.

    இதற்காக ராம மோகன ராவ் மற்றும் ராதாகிருஷ்ணன் எதிர் மனுதாரராக சேர்க்க கோரி கமி‌ஷன் வழக்கறிஞர் மனுதாக்கல் செய்துள்ளார்.

    ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிப்பது தொடர்பாக விவாதித்த விசயங்களை ஆணையம் முழுமையாக தெரிந்து கொள்ள விரும்புவதால் இவர்களிடம் ஆணையம் மேலும் சில விளக்கங்களை கேட்ட உள்ளது. #Jayalalithaa #Jayalalithaadeath #ApolloHospital

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தில் பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமி இன்று ஆஜரானார். #JayaDeathProbe
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    இதில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ டாக்டர்கள், எய்ம்ஸ் டாக்டர்கள், சசிகலாவின் உறவினர்கள் என 150 பேர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

    சசிகலாவும், தனது தரப்பு விளக்கத்தை வக்கீல் மூலம் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளார். இதில் 50-க்கும் மேற்பட்டவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தி உள்ளார்.

    தற்போது விசாரணை இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.

    ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பெருமாள்சாமியிடம் மீண்டும் விசாரிக்க ஆணையம் முடிவு செய்திருந்தது.



    இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதை ஏற்று பெருமாள்சாமி இன்று ஆணையத்தில் ஆஜர் ஆனார். அவருடன் அண்ணாநகர் துணை கமி‌ஷனர் சுதாகரும் ஆஜரானார்.

    இதேபோல் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் 3-வது நாளாக மீண்டும் ஆஜரானார்.

    இவர்களிடம் ஆணையத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

    இதன் அடுத்த கட்டமாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்ப உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #JayaDeathProbe
    மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது ஜெயலலிதாவின் உணவுக்கு ரூ.1.17 கோடி செலவு செய்யப்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission #Apollo
    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் எழுந்த சந்தேகங்கள் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதாவின் உதவியாளர்கள், பாதுகாவலர்கள், டிரைவர்கள், அப்பல்லோ டாக்டர்கள், அரசு டாக்டர்கள் என அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

    விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களிடம் சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தி உள்ளார். இன்று முன்னாள் அமைச்சர் பொன்னையன் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது முதல்-அமைச்சர் பொறுப்பில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் நாளை மறுநாள் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    இதற்கிடையே, ஜெயலலிதாவுக்கு 75 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான அறிக்கையை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் உள்ள விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.



    அதில், 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதாவுக்கு மருத்துவ செலவு ரூ.6,85,69,584  என்றும், ஜெயலலிதாவின் உணவுக்கு மட்டும் ரூ. 1.17 கோடி செலவானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மருத்துவ செலவுக்கான பணம், 2016 அக்டோபர் 13-ல் காசோலையாக ரூ.41,13,304 அப்பல்லோவிற்கு வழங்கப்பட்டது என்றும், ஜெயலலிதா இறப்பிற்கு பின், 2017 ஜூன் 15 ம் தேதி அதிமுக சார்பாக காசோலையாக ரூ.6 கோடி வழங்கப்பட்டது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission #Apollo
    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்தில் இன்று அப்பல்லோ டாக்டர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். #JayaDeathProbe #ArumugasamyInquiryCommission
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமி‌ஷன் விசாரணை நடத்தி வருகிறது.

    ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரையும் அழைத்து விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.

    இந்த விசாரணைக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள் முரளிதர், ராஜ கோபால், பார்வதி பத்மநாபன் ஆகியோரை ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.


    இருவரும் தோல் சிகிச்சை நிபுணர்கள் ஆவார்கள். இன்று காலை 10.30 மணியளவில் விசாரணை ஆணையத்துக்கு இருவரும் வந்தனர்.

    நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் அவர்கள் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சைகள் பற்றி தெரிவித்தனர்.

    2 மணி நேரத்துக்கும் மேலாக அவர்களிடம் விசாரணை நடைபெற்றது. #JayaDeathProbe #ArumugasamyInquiryCommission
    ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சி.சி.டி.வி. வீடியோ பதிவுகள் அழிந்து விட்டதாக அப்பல்லோ மருத்துவமனை பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளது. #Apollohospital #Jayalalithadeath

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்காததால் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் கூறப்பட்டது.

    இதையடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய விசாரணை கமி‌ஷனின் காலம் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து மீண்டும் நீட்டிக்கப்பட்டது.

    நீதிபதி ஆறுமுகசாமி ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆம்புலன்ஸ் டிரைவர், அப்பல்லோ ஆஸ்பத்திரி நர்சுகள், பிசியோதெரபிஸ்ட்கள், டாக்டர்கள், எய்ம்ஸ் டாக்டர்கள், ஜெயலலிதாவின் உதவியாளர், செயலாளர் என அனைத்து தரப்பினருக்கும் சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினார். அவர்களது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

    விசாரணை கமி‌ஷனில் சசிகலா சார்பில் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் சாட்சியம் அளித்தும் குறுக்கு விசாரணை நடத்தியும் வருகிறார்.

    அப்பல்லோ ஆஸ்பத்திரி சார்பில் மருத்துவ ஆவணங்கள், சிகிச்சை விவரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. அதன் அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் உள்ள சி.சி.டி.வி. வீடியோ காட்சிகளை வெளியிட வேண்டும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் சி.சி.டி.வி. காட்சிகள் தங்களிடம் இல்லை என்றும், முக்கிய பிரமுகர்கள் சிகிச்சை பெறும் அறைகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் வைப்பது இல்லை என்றும் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் அடிக்கடி கூறி வந்தது.

    இந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது திடீரென்று ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் ஜெயலலிதா ஜூஸ் குடித்துக் கொண்டே டி.வி. பார்ப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருந்தது. இந்த வீடியோவை தினகரன் அணியைச் சேர்ந்த வெற்றிவேல் வெளியிட்டார். இந்த வீடியோ கிராபிக்ஸ் செய்யப்பட்டது என்று சந்தேகம் கிளப்பப்பட்டது. ஆனால் சசிகலாவே எடுத்தார் என்று வெற்றிவேல் கூறியிருந்தார்.

     


    இதையடுத்து ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை விசாரணை ஆணையத்திடம் ஒப்படைக்கு மாறு நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவிட்டார். மேலும் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கும் சி.சி.டி.வி. வீடியோ பதிவுகளை ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறு கடிதம் அனுப்பினார்.

    அதற்கு அப்பல்லோ ஆஸ்பத்திரி சார்பில் கடந்த 11-ந்தேதி சுருக்கமான பதில் அனுப்பப்பட்டது. அதில் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சி.சி. டி.வி. வீடியோ பதிவுகள் அழிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதில் மேலும் கூறியிருப்பதாவது:-

    அப்பல்லோ ஆஸ்பத்திரியில் உள்ள சி.சி.டி.வி. சர்வர்களில் ஒரு மாத பதிவுகள் மட்டுமே சேமித்து வைக்க முடியும். அதற்கு மேல் சேமிக்க முடியாது. புதிதாக பதிவுகள் சேரும்போது பழைய பதிவுகள் தானாகவே அழிந்து விடும். எனவே வீடியோ பதிவுகளை தாக்கல் செய்யவில்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    இதுபற்றி அப்பல்லோ ஆஸ்பத்திரி வக்கீல் மைமூனா பாஷா கூறுகையில், அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் ஜெயலலிதா சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட சி.சி. டி.வி. வீடியோ பதிவுகளை விசாரணை ஆணையம் கேட்டு இருந்தது. அதற்கு உரிய விளக்கம் அளித்து இருக்கிறோம். அதில் தங்களால் வீடியோ பதிவுகளை சமர்ப்பிக்க முடியவில்லை என்பதை தெரிவித்து இருக்கிறோம். முக்கியமான சில இடங்களில் உள்ள சி.சி. டி.வி. பதிவுகளை 30 நாட்களுக்கு மட்டுமே சர்வரில் சேமிக்க முடியும். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போதும் இந்த நிலைமைதான் இருந்தது என்றார்.

    இதற்கிடையே அப்பல்லோ ஆஸ்பத்திரி சி.சி.டி.வி. பதிவு சர்வரை நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்து அதில் பழைய பதிவுகள் இருக்கிறதா? என்று கண்டுபிடிக்க ஆணையம் முடிவு செய்துள்ளது.

    மேலும் முக்கிய பிரமுகர்கள் சிகிச்சை பெறும் பகுதிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் வைப்பதில்லை என்று அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறியிருந்தது. இது தொடர்பாக மருத்துவ ஆய்வகங்களிடம் விளக்கம் கேட்டு இருப்பதாக ஆணைய வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

    அப்பல்லோ ஆஸ்பத்திரியின் முதன்மை செயல் அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் விசாரணை கமி‌ஷன் முன் ஆஜராகி ஏற்கனவே விளக்கம் அளித்துள்ள நிலையில் வருகிற 25-ந்தேதி அவர் மீண்டும் ஆஜராகிறார்.

    அப்போது அவரிடம் சசிகலா வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை செய்கிறார்.

    ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி கமி‌ஷனின் விசாரணை இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. அடுத்த மாதம் (அக்டோபர்) அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது. #Apollohospital #Jayalalithadeath

    ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் முன்னாளர் கவர்னர் வித்யாசாகர் ராவின் செயலாளர் ரமேஷ்சந்த் மீனா இன்று ஆஜரானார். #JayaDeathProbe
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.

    சசிகலா உறவினர்கள், போலீஸ் அதிகாரிகள், அப்பல்லோ டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்டோர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அவர்களிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி தகவல்களை சேகரித்து வருகிறார்.

    ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டபோது கவர்னராக வித்யாசாகர் ராவ் இருந்தார். அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றியும் சிகிச்சை குறித்தும் டாக்டரிடம் கேட்டார்.

    இந்த நிலையில் வித்யாசாகர் ராவின் செயலாளர் ரமேஷ்சந்த் மீனாவுக்கு விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. இதையேற்று ரமேஷ்சந்த் மீனா இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜர்ஆனார்.

    அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார். ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது வித்யாசாகர் ராவ் நேரில் பார்த்தாரா, என்பது போன்ற கேள்விகளை கேட்டார். இதேபோல் அப்பல்லோ டாக்டர் ராஜ்பிரசன்னா ஆஜரானார். #JayaDeathProbe #Jayalalithaa #JusticeArumugaswamy
    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஆஜராக வந்த ஜார்ஜ் ஒரு நிமிடத்தில் திரும்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. #George #JayaDeathprobe
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.

    இதில் சசிகலா- உறவினர்கள், போலீஸ் அதிகாரிகள், அப்பல்லோ டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட பலருக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி விசாரித்து உள்ளது.

    இதேபோல் முன்னாள் சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜுக்கும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. அவர் இன்று ஆஜராகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று காலை ஜார்ஜ் விசாரணை ஆணையத்தில் ஆஜராக வந்தார். ஆனால் அவரிடம், இன்று ஆஜராக வேண்டியதில்லை என்றும் வேறு தேதியில் ஆஜராகும்படி இ-மெயில் ஒன்று அனுப்பப்பட்டு உள்ளதாக விசாரணை ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த இ-மெயிலை அவர் பார்க்காததால் ஆஜராக வந்துவிட்டார்.

    இதையடுத்து ஜார்ஜ் வந்த வேகத்தில் ஒரு நிமிடத்திலேயே அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றார்.

    குட்கா ஊழல் தொடர்பாக ஜார்ஜ் வீட்டில் சி.பி.ஐ. நேற்று விடிய விடிய சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. #George #JayaDeathprobe
    ஜெயலலிதா மரணம் தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்டால் விசாரணை கமிஷன் முன்பு எடப்பாடியும், பன்னீர் செல்வமும் ஆஜர் ஆவார்கள் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் புதிய பஸ் நிலையத்துக்கு இன்று மதியம் அமைச்சர் சி.வி.சண்முகம் வந்தார்.

    பின்பு அவர் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கும், விழுப்புரத்தில் இருந்து திருச்சி மற்றும் சேலத்துக்கும் இடைநில்லா பஸ்களை இயக்கி வைத்தார்.

    அதன் பின்னர் அவரிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-

    கேள்வி:- தமிழகத்துக்கு வந்திருந்த பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, அடுத்த தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க. காணாமல் போய்விடும் என்று கூறியுள்ளாராரே?

    பதில்:- அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.

    கே:- சென்னை- சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு அதிகம் எதிர்ப்பு உள்ளதே?

    ப:- இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவதூறாக கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். அரசும் இதை கண்காணித்து வருகிறது.


    கே:- டி.டி.வி.தினகரன், ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை கமி‌ஷன் முன்பு, இ.பி.எஸ்சும், ஓ.பி.எஸ்.சும் ஆஜராவார்களா என்று கேட்டுள்ளாரே?

    ப:- சம்மன் அனுப்பப்பட்டால் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஆஜராவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #Jayalalithaa #Edappadipalanisamy #opanneerselvam
    மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ டாக்டர்கள் இன்று ஆஜரானார்கள்.
    சென்னை:

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. ஆணையத்தில் ஆஜராகுமாறு பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

    இதில் ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா, சசிகலா உறவினர்கள், அரசு அதிகாரிகள், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள், ஜெயலலிதாவின் உதவியாளர் உள்ளிட்டோர் ஆஜரானார்கள். அவர்களிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி தகவல்களை பதிவு செய்தார்.

    இந்த நிலையில் இன்று விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் ஜெயஸ்ரீ கோபால், சாந்தாராம் ஆகியோர் ஆஜர் ஆனார்கள். இவர்கள் ஏற்கனவே விசாரணை ஆணையத்தில் ஆஜராகி இருந்தனர். தற்போது மீண்டும் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது.

    டாக்டர்கள் இருவரிடமும் நீதிபதி ஆறுமுகசாமி தனது சந்தேகங்களையும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் விசாரித்தார்.

    இதே போல் ஜெயலலிதாவின் தனி செயலாளராக இருந்த ராமலிங்கம், ஸ்டெல்லா மேரீஸ் கிளை இந்தியன் ஓவர்சிஸ் வங்கி மேலாளர் மகாலட்சுமி ஆகியோரும் இன்று ஆஜரானார்கள். சசிகலா தரப்பில் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் ஆஜராகி குறுக்கு விசாரணை நடத்தினார். #Jayalalithaa
    ×