search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "apollo doctors appear"

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ டாக்டர்கள் இன்று ஆஜரானார்கள்.
    சென்னை:

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. ஆணையத்தில் ஆஜராகுமாறு பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

    இதில் ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா, சசிகலா உறவினர்கள், அரசு அதிகாரிகள், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள், ஜெயலலிதாவின் உதவியாளர் உள்ளிட்டோர் ஆஜரானார்கள். அவர்களிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி தகவல்களை பதிவு செய்தார்.

    இந்த நிலையில் இன்று விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் ஜெயஸ்ரீ கோபால், சாந்தாராம் ஆகியோர் ஆஜர் ஆனார்கள். இவர்கள் ஏற்கனவே விசாரணை ஆணையத்தில் ஆஜராகி இருந்தனர். தற்போது மீண்டும் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது.

    டாக்டர்கள் இருவரிடமும் நீதிபதி ஆறுமுகசாமி தனது சந்தேகங்களையும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் விசாரித்தார்.

    இதே போல் ஜெயலலிதாவின் தனி செயலாளராக இருந்த ராமலிங்கம், ஸ்டெல்லா மேரீஸ் கிளை இந்தியன் ஓவர்சிஸ் வங்கி மேலாளர் மகாலட்சுமி ஆகியோரும் இன்று ஆஜரானார்கள். சசிகலா தரப்பில் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் ஆஜராகி குறுக்கு விசாரணை நடத்தினார். #Jayalalithaa
    ×