search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "JK Assembly"

    ஜம்மு காஷ்மீர் சட்டசபையை ஆளுநர் கலைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #JKAssembly #SupremeCourt
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீரில் பாஜக-பிடிபி கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஜூன் மாதம் பாஜக தனது ஆதரவை விலக்கிக்கொண்டது. ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால் முதல்வர் மெகபூபா முப்தி ராஜினாமா செய்தார். அதன்பிறகு எந்த கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோராததால் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

    ஆளுநர் ஆட்சி டிசம்பர் 18-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், கடந்த மாதம் பிடிபி,  தேசிய மாநாட்டுக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க முயற்சி செய்தது. இதேபோல் 2 உறுப்பினர்களை மட்டுமே கொண்ட மக்கள் மாநாட்டுக் கட்சி, பாஜக மற்றும் பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கியது.


    இந்த பரபரப்பான சூழ்நிலையில், நவம்பர் 21-ம் தேதி சட்டசபையை கலைத்து ஆளுநர் சத்ய பால் மாலிக் உத்தரவு பிறப்பித்தார். இதனை எதிர்த்து பாஜக தலைவர் ககன் பாகத் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இவர் சட்டசபை கலைப்புக்கு முன்பாக, எம்எல்ஏவாக இருந்தவர்.

    ககன் பாகத்தின் வழக்கு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆளுநரின் முடிவில் தலையிட முடியாது என்று கூறிய நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்தனர். #JKAssembly #SupremeCourt
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டசபையை உடனே கலைத்துவிட்டு தேர்தலை நடத்த வேண்டும் என தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் உமர் அப்துல்லா வலியுறுத்தினார். #BJPDumpsPDP #JKGovernorRule #JKOmar
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மூன்று ஆண்டுகளாக ஆளும் கூட்டணியில் இருந்த பா.ஜ.க. நேற்று திடீரென கூட்டணியில் இருந்து விலகியது. இதனால் பெரும்பான்மை இழந்ததையடுத்து முதல்வர் மெகபூபா முப்தி பதவியை ராஜினாமா செய்தார். வேறு எந்த கட்சியும் ஆட்சியமைக்க முயற்சிக்கவில்லை. புதிய ஆட்சி அமையும் சூழ்நிலை இல்லாததால் இன்று முதல் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் சட்டசபையை உடனடியாக கலைத்துவிட்டு புதிதாக தேர்தலை நடத்த வேண்டும் என முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவருமான உமர் அப்துல்லா வலியுறுத்தி உள்ளார். ஆட்சியமைப்பதற்காக பா.ஜ.க. குதிரைபேரத்தில் ஈடுபடாது என்பதை நம்ப முடியாது என்றும் அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.



    ஜம்மு காஷ்மீரில் புதிய அரசு விரைவில் அமையாது, ஆனால் நாங்கள் ஒரு காரியத்தில் ஈடுபட்டுள்ளோம். அது மக்களுக்கு நன்கு தெரியும் என பா.ஜ.க. தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான கவிந்தர் குப்தா கூறியிருந்தார்.

    இதனை சுட்டிக் காட்டிய உமர் அப்துல்லா, “ஏதோ ஒரு காரியத்தில் ஈடுபடுகிறோம் என்றால் என்ன அர்த்தம்? அது மற்ற கட்சிகளை உடைத்து, பா.ஜ.க. ஆட்சி அமைக்க தேவையான உறுப்பினர்களை திரட்டுவதாகத் தான் இருக்கும். இந்த ரகசியத்தை அவரே வெளியிட்டுவிட்டாரா?” என்று தெரிவித்துள்ளார். #BJPDumpsPDP #JKGovernorRule #JKOmar
    ×