search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "criminals"

    • குற்றவாளிகளுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாக புகார் போலீஸ் சூப்பிரண்டு பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
    • குற்றவாளிகள் தப்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் போலீசார் செயல்பட்டனர்.

    மதுரை

    மதுரை மானகிரியை சேர்ந்த வக்கீல் செல்வகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருமங்கலம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 12 பேர் கும்பல் தாக்குதலில் ஈடுபட்டது. இது தொடர்பாக திருமங்கலம் நகர் போலீசில் புகார் அளித்தோம். ஆனால் குற்றவாளிகள் தப்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் போலீசார் செயல்பட்டனர். பின்னர் இது தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் 12 பேர் மீதும் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் சாட்சிகளை எதிர்த்தரப்பினர் மிரட்டி வந்தனர். இது தொடர்பாக அந்த சாட்சிகள் போலீசில் புகார் அளித்த போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்டவர்களால் தொடர்ந்து சாட்சிகள் மிரட்டப்பட்டு வந்தனர். மேலும் எதிர் தரப்பினர் அளித்த பொய் புகாரின் பேரில் சம்பவ இடத்தில் இல்லாத என் மீது வழக்குப்பதிவு செய்தனர். எனவே குற்றச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட திருமங்கலம் டவுன் போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு நீதிபதி ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு குறித்து பதில் அளிக்க மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார்.

    • செம்போடை மகாராஜபுரம் கிராமத்தில் நடந்த கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிகளுக்கு 3 வருடம் சிறை தண்டனை விதித்தது.
    • இந்த வழக்கிற்கு தண்டனை பெற்று தர உதவியாக இருந்த கூடுதல் அரசு தரப்பு வழக்கறிஞர் கவுதமனை பலர் பாராட்டினர்.

    நாகப்பட்டினம்:

    வேதாரண்யம் அருகே செம்போடை மகாராஜபுரம் கிராமத்தில் கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு கொலை முயற்சி வழக்கில் ராமசாமி, பாலகுரு, முத்துகிருஷ்ணன், தியாகராஜன் ஆகியோருக்கு 3 வருடம் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் வழங்கி தலைமை குற்றவியல் நீதிபதி கார்த்திகா உத்தரவிட்டார். இதில் ராமசாமி வயது மூப்பின் காரணமாக ஏற்கனவே இறந்து விட்டார்.

    மேலும் இந்த வழக்கிற்கு தண்டனை பெற்று தர உதவியாக இருந்த கூடுதல் அரசு தரப்பு வழக்கறிஞர் கவுதமனை பலர் பாராட்டினர்.

    வாக்குப்பதிவின்போது அசம்பாவிதங்கள், வன்முறை சம்பவங்களை தடுக்க, போலீஸ் பிடியில் சிக்காமல் இருந்துவந்த 1315 பழைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். #LokSabhaElections2019
    சென்னை:

    தமிழகம் முழுவதும் வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    இதையொட்டி மாநிலம் முழுவதும் போலீசார் சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர். இதற்காக குற்ற வழக்குகளில் தொடர்புடைய பழைய ரவுடிகளை போலீசார் வேட்டையாடி கைது செய்து வருகிறார்கள்.

    சென்னையிலும் ஓட்டுப்பதிவின் போது அசம்பாவிதங்களை தடுக்கவும், வன்முறை சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்ளவும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையர்கள் தினகரன், மகேஸ் குமார் அகர்வால் ஆகியோரது மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் தேவையான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையத்துடன் இணைந்து போலீசார் மேற்கொண்டுள்ளனர். இதன்படி பழைய குற்றவாளிகள், ரவுடிகள், பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டவர்களை கைது செய்ய முடிவு செய்யப்பட்டது.

    கடந்த மாதம் 10-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தன. அந்த வகையில் தேர்தல் விதி மீறல்களை கண்காணிக்கும் பணியுடன் ரவுடிகள் வேட்டையும் தீவிரப்படுத்தப்பட்டது.

    இதில் 1555 ரவுடிகள் இதுவரை பிடிபட்டுள்ளனர். சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் போலீசிடம் சிக்கியுள்ள இவர்களிடம் அந்தந்த பகுதி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள், இனி தவறு செய்ய மாட்டேன் என்று எழுதி வாங்கி உள்ளனர்.

    இதனை மீறி குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதே போல வழக்கு விசாரணைக்கு சரியாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 1000-க்கும் மேற்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இப்படி போலீஸ் பிடியில் சிக்காமல் டிமிக்கி கொடுத்து கொண்டிருந்த 1315 பழைய குற்றவாளிகளும் பிடிபட்டுள்ளனர்.

    சென்னையில் உள்ள காவல் நிலையங்களில் சட்டம்-ஒழுங்கு போலீசார் ரவுடிகளை தேடிப்பிடித்து கைது செய்து வரும் அதே வேளையில், சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள ரவுடிகள் ஒழிப்பு பிரிவு போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    வருகிற 16-ந்தேதியுடன் பிரசாரம் ஓயும் நிலையில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். சென்னையில் இதுவரையில் தேர்தல் விதி மீறல் தொடர்பாக 629 வழக்குகள் போடப்பட்டுள்ளன. அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதாக 176 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பறக்கும் படை சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநகர பகுதிகளில் மட்டுமே தீவிரமாக நடைபெற்ற இந்த சோதனை கடந்த 2 நாட்களாக புறநகர் பகுதிகளிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    வரும் நாட்களில் இந்த சோதனை மேலும் தீவிரப்படுத்தப்பட உள்ளது. #LokSabhaElections2019
    வேடசந்தூர் அருகே தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கெண்டையகவுண்டனூரைச் சேர்ந்தவர் சவடமுத்து (வயது 45). இவருக்கு பூங்கொடி, லெட்சுமி ஆகிய 2 மனைவிகள் உள்ளனர். இவர்களுக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

    சவடமுத்து தி.மு.க. கிளை பிரதிநிதியாக இருந்து வந்தார். சொந்தமாக வேன், லாரிகள் வைத்து ஓட்டி வந்தார். கடந்த வாரம் தனது அலுவலகத்தில் தூங்கிக் கொண்டு இருந்த சவடமுத்துவை மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அவரது உடலை மீட்டு விசாரித்து வந்தனர். நகை, பணத்துக்காக இந்த கொலை நடந்ததா? என விசாரணை நடத்தப்பட்டது. ஏனெனில் சவடமுத்து கழுத்தில் அணிந்திருந்த தங்க செயின் மாயமாகி இருந்தது.

    அதன் பிறகு அலுவலகத்தில் சோதனை நடத்திய போது அந்த நகையை அவர் அடகு வைத்திருந்தது தெரிய வந்தது. எனவே இந்த கொலை வேறு காரணங்களுக்காக நடந்திருக்கலாம் என போலீசார் தீர்மானித்தனர்.

    சவடமுத்துவுக்கு வேறு பெண்கள் யாருடனாவது தொடர்பு இருந்ததா? என விசாரணை நடத்தப்பட்டது. அவரது செல்போனில் அதிக முறை யாரிடம் பேசினார்? கொலை செய்யப்பட்டதற்கு முன்பாக அவருக்கு ஏதேனும் அழைப்புகள் வந்ததா? என விசாரணை நடத்தப்பட்டது.

    ஆனால் அதில் எவ்வித தடயமும் சிக்க வில்லை. இதனால் கொலையாளியை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    பிளஸ்-2 மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் 2 பேரையும் 48 மணி நேரத்தில் கைது செய்வோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கலெக்டர் உறுதி அளித்துள்ளார். #DharmapuriGirlStudent #GirlMolested

    கம்பைநல்லூர்:

    பிளஸ்-2 மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டவர்கள் சாலைமறியலுடன் கூடிய உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களிடம் தருமபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது போராட்டக்காரர்களிடம் அவர் கூறியதாவது:

    குற்றவாளிகளான ரமேஷ் மற்றும் சதீஷ் ஆகிய 2 பேரையும் 48 மணிநேரத்தில் கைது செய்வோம். மேலும், அவர்களை கைது செய்து குண்டாஸ் சட்டத்தில் அடைக்கப்படுவார்கள்.


    சவுமியாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீதும், கோட்டப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீதும் துறைரீதியான உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும், இந்த சம்பவம் குறித்து தேசிய எஸ்.சி., எஸ்.டி. விசாரணைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்படும் என்று உறுதி அளித்தார். #DharmapuriGirlStudent #GirlMolested 

    குமரி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தலை மறைவு குற்றவாளிகளை கண்காணித்து அவர்களை கைது செய்ய போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தலை மறைவு குற்றவாளிகளை பிடிப்பதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தனிப்படைகள் அமைத்து இருந்தார். அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பல தலைமறைவு குற்றவாளிகளை தனிப்படையினர் கண்காணித்து தொடர்ந்து அவர்களை கைது செய்து வருகின்றனர். 

    இந்த நிலையில் நேற்று பூதப்பாண்டி, திருவட்டார், மணவாளக்குறிச்சி, அருமனை ஆகிய பகுதிகளில் தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் 5 பேரை கைது செய்தனர்.

    பூதப்பாண்டி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் குற்ற செயல்களில் ஈடுபட்ட தலைமறைவு குற்றவாளி ஒருவரை கைது செய்தனர். திருவட்டார் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரு வரும், அருமனை போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் 2 தலைமறைவு குற்றவாளிகளையும், மண வாளக்குறிச்சி பகுதியில் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர்.
    தொடர்ந்து தலைமறைவு குற்றவாளிகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதேபோல் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து வருகின்றனர்.
    3-வது கண்ணாக இருக்கும் கண்காணிப்பு கேமராக்களால் குற்றவாளிகளை பிடிக்க முடிகிறது என்று போலீஸ் கமி‌ஷனர் கூறியுள்ளார்.

    போரூர்:

    போரூர் மங்களாநகர் நலவாழ்வு சங்கம் சார்பில் மங்களா நகரில் மொத்தம் உள்ள 16 தெருக்களிலும் புதிதாக 54 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

    இதற்கான தொடக்க விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி டிக்காராம், போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். கேமராக்களின் செயல் பாட்டினை கமி‌ஷனர் தொடங்கி வைத்தார்.

    வடசென்னை கூடுதல் ஆனையர் தினகரன், மேற்கு மண்டல இனை ஆணையர் விஜயகுமாரி, அம்பத்தூர் துணை கமி‌ஷனர் ஈஸ்வரன், போரூர் உதவி கமி‌ஷனர் சந்திரசேகர்,மாநகராட்சி மண்டல உதவி கமி‌ஷனர் சசிகலா, இன்ஸ்பெக்டர்கள் சங்கரநாராயணன், சீத்தாராமன், மங்களா நகர் நலவாழ்வு சங்க தலைவர் நடராஜன் மற்றும் குடியிருப்புவாசிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் விழாவில் பேசியதாவது :-

    சென்னையில் நடைபெறும் பல்வேறு வகையான குற்றசம்பவங்களில் துப்பு துலக்க போலீசாருக்கு கண்காணிப்பு கேமரா பெரும் உதவியாக உள்ளது. அதன் மூலம் குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க முடிகிறது. சமீபத்தில் கூட வளசரவாக்கம் பகுதியில் முதியவரிடம் செல்போன் பறித்துச் சென்ற குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க கண்காணிப்பு கேமரா பெருமளவு உதவியாக இருந்தது.

    நாம் தூங்கினாலும் தூங்காமல் கண் விழித்து கண்காணிக்கும் மூன்றாவது கண்களாக கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன.

    சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேரை 2 மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.

    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள எடப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ஜபார் (வயது65). ஓய்வுபெற்ற சப்- இன்ஸ்பெக்டர். இவர் கடந்த ஜூன் மாதம் 27-ந் தேதி அந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்றார்.

    பின்னர் நிலத்தை பார்வையிட்டு விட்டு அங்குள்ள மோட்டார் கொட்டகைக்கு வந்தார். அங்கு அப்துல் ஜபாரை மர்ம மனிதர்கள் சிலர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

    பின்னர் அந்த மர்ம மனிதர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து கொலைசெய்யப்பட்ட அப்துல் ஜபாரின் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலை நடந்த இடத்தில் போலீசார் சோதனை செய்தபோது 1 ஜோடி செருப்பு மட்டும் கிடைத்தது. வேறு தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் குற்ற வாளிகளை கண்டு பிடிப்பது போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது.

    விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் குற்றவாளிகளை பிடிக்க உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு வீமராஜ், திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் ஜோகிந்தர், சப்-இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், பிரகாஷ், சிவச்சந்திரன், அகிலன், திருமால் ஆகியோர் கொண்ட 5 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கடந்த 2 மாதங்களாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது ஓய்வு பெற்ற சப்-இன்ஸ் பெக்டர் அப்துல்ஜபார் கொலை செய்யப்பட்ட இடத்தில் கிடைத்த 1 ஜோடி செருப்பை வைத்து விசாரணையை தொடங்கினர். அப்போது அந்த செருப்பு பெங்களூரில் வாங்கப்பட்டது என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பெங்களூரில் குற்றவாளிகள் பதுங்கி இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே தனிப்படை போலீசார் பெங்களூர் சென்றனர்.

    இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஒருவர் அங்கு பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு சென்று பெங்களூர் கே.ஆர்.புரம் பகுதியை சேர்ந்த திலீப்குமார் (வயது 23) என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் ஓய்வு பெற்ற சப்- இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்ட இடத்தில் கிடைத்த செருப்பு திலீப்குமாருடையதுதான் என்று தெரியவந்தது.

    அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், திலீப்குமார் திருவெண்ணை நல்லூர் அருகே உள்ள எடப்பாளையம் பகுதியை சேர்ந்த மோகன் என்பவரின் உறவினர் என்பதும் தெரியவந்தது.

    திருவெண்ணை நல்லூரில் உள்ள பெண்ணையாற்றில் மோகன் திருட்டுத்தனமாக லாரிகளில் மணல் ஏற்றி விற்பனை செய்து வந்தார். இதை ஓய்வு பெற்ற சப்- இன்ஸ் பெக்டர் அப்துல் ஜபார் போலீசாருக்கு தகவல் தெரிவித்து வந்தார். இதனால் அடிக்கடி மோகனின் மணல் லாரிகளை போலீசார் பிடித்து அபராதம் விதித்து வந்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த மோகன் ஓய்வு பெற்ற சப்- இன்ஸ் பெக்டர் அப்துல்ஜபாரை கொலை செய்ய முடிவு செய்தார். பின்னர் மோகன் மற்றும் அவரது தம்பி ரவி, டிரைவர் செல்வம் ஆகிய 3 பேரும் சேர்ந்து திட்டம் தீட்டினர். பின்னர் அப்துல்ஜபாரை கொலை செய்வதற்காக பெங்களூரில் உள்ள தனது உறவினர் திலீப்குமாரை திருவெண்ணை நல்லூருக்கு வரவழைத்தனர். பின்னர் அவர்கள் 4 பேரும் சேர்ந்து மோட்டார் கொட்டகையில் இருந்த அப்துல் ஜாபரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டது விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து திலீப்குமாரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட திலீப்குமார் கூலிப்படை யை சேர்ந்தவர் என்பதும் பெங்களூரில் நடந்த ஒரு கொலை வழக்கில் போலீசாரால் தேடப்படும் குற்றவாளி என்பதும் குறிப்பிடதக்கது.

    இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மோகன், ரவி, செல்வம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    மத்தியப்பிரதேசம் மாநிலம், மன்ட்சவுர் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 7 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட வழக்கில் இரு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. #2mengetdeathsentence #Mandsaurminorgirl
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலம், மன்ட்சவுர் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 26-ம் தேதி மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு அழைத்து செல்லவரும் தந்தைக்காக 7 வயது சிறுமி காத்திருந்தாள்.

    அப்போது, அங்கு வந்த இர்பான்(எ)பய்யு(20), ஆசிப்(24) ஆகியோர் அந்த சிறுமியின் வாயைப்பொத்தி அங்கிருந்து கடத்திச் சென்றனர். அருகாமையில் உள்ள ஒதுக்குப்புறமான இடத்தில் சிறுமியை கற்பழித்தனர். மேலும், கழுத்தை அறுத்து அவளை கொல்லவும் முயன்றனர்.

    உயிருக்கு போராடி, கதறிய சிறுமியின் கூச்சலை கேட்டு அப்பகுதியை கடந்துசென்ற சிலர் உதவிக்கு ஓடிவந்தனர். இதை கண்டதும் அந்த இரு காமுகர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

    இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பிறப்புறுப்பு உள்ளிட்ட உடலின் பல பாகங்களில் படுகாயங்களுடன் கிடந்த சிறுமியை இந்தூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இன்னும் அவள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இவ்வழக்கை விரைந்து விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி நிஷா குப்தா, குற்றவாளிகள் இருவருக்கும் (சமீபத்தில் அமலுக்கு வந்த 12 வயதுக்கும் குறைவான சிறார்-சிறுமியர் கற்பழிப்பு தண்டனை சட்டத்தின்கீழ்) மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தார். #2mengetdeathsentence  #Mandsaurminorgirl   
    நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லியில், கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி இரவு, ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழித்துக் கொல்லப்பட்டார். குற்றவாளிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர். ஒருவன், சிறுவன் என்பதால் குறைந்தபட்ச தண்டனையுடன் தப்பினான். முக்கிய குற்றவாளி ராம்சிங், சிறையில் தற்கொலை செய்துகொண்டான்.

    மற்ற குற்றவாளிகளான முகேஷ், பவன், வினய், அக்‌ஷய் ஆகியோருக்கு டெல்லி ஐகோர்ட்டு மரண தண்டனை விதித்தது. பின்னர் மேல்முறையீட்டில் இந்த தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. அதன்பின்னர் முகேஷ், பவன், வினய் ஆகியோர், மரண தண்டனையை மறுஆய்வு செய்யக்கோரும் மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அக்‌ஷய் மனு தாக்கல் செய்யவில்லை. 3 பேரின் மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு, கடந்த மே 4-ந் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதி அசோக் பூஷன், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்று அந்த மனுக்கள் மீது தீர்ப்பு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #NirbhayaCase #Nirbhaya
    உத்திரப்பிரதேச மாநிலத்தில் பல்வேறு குற்றவழக்குகளில் தேடப்பட்டு வந்த 2 குற்றவாளிகள் போலீசார் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
    லக்னோ:

    உத்திரப்பிரதேச மாநிலம் ராம்நகர் பகுதியில் 17 குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த முஷிர் மற்றும் இப்ராகிம் ஆகிய 2 குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அதிகாலை குற்றவாளிகள் பதுங்கி இருக்கும் இடத்தை போலீசார் சுற்றி வளைத்தனர்.

    போலீசாரை கண்ட முஷிர் மற்றும் இப்ராகிம் அங்கிருந்து தப்பிப்பதற்காக போலீசாரை துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காவல்துறையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 குற்றவாளிகளும் கொல்லப்பட்டனர். இதுகுறித்து எஸ்.பி. ஸ்ரீவசதாவ் கூறுகையில், 'அவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 3 காவலர்கள் காயமடைந்தனர். தற்காப்புக்காக நாங்கள் சுட்டதில் முஷிர் மற்றும் இப்ராகிம் கொல்லப்பட்டனர்' என தெரிவித்துள்ளார்.

    முஷிர் மற்றும் இப்ராகிமை பிடித்துக்கொடுக்க 50 ஆயிரம் ரூபாய் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
    மானாமதுரை அருகே நடைபெற்ற வாகன சோதனையில் தலைமறைவு குற்றவாளிகள் 3 பேர் சிக்கினர்.

    சிவகங்கை:

    மானாமதுரை அருகே உள்ள மாங்குடி விலக்கில் சிப்காட் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது 3 வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தனர். அவர்களை நிற்குமாறு போலீசார் சைகை காட்டினர்.

    ஆனால் அவர்கள் நிற்காமல் வேகமாகச் சென்றனர். எனவே போலீசார் அவர்களை தங்கள் ஜீப்பில் விரட்டினர்.

    சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிளை மடக்கி 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பெரிய கோட்டையைச் சேர்ந்த பிரதாப் (வயது 29), வைரம் பட்டியைச் சேர்ந்த கனிராஜா (26), சிவகங் கையைச் சேர்ந்த சசிகுமார் (21) என்பது தெரியவந்தது.

    மேலும் இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி உள்ளதும், ஜாமீனில் வெளி வந்த இவர்கள் அதன் பின்னர் தலைமறைவானதும் தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    ×