search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிர்பயா வழக்கில் மரண தண்டனையில் இருந்து குற்றவாளிகள் தப்புவார்களா?- உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு
    X

    நிர்பயா வழக்கில் மரண தண்டனையில் இருந்து குற்றவாளிகள் தப்புவார்களா?- உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

    நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லியில், கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி இரவு, ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழித்துக் கொல்லப்பட்டார். குற்றவாளிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர். ஒருவன், சிறுவன் என்பதால் குறைந்தபட்ச தண்டனையுடன் தப்பினான். முக்கிய குற்றவாளி ராம்சிங், சிறையில் தற்கொலை செய்துகொண்டான்.

    மற்ற குற்றவாளிகளான முகேஷ், பவன், வினய், அக்‌ஷய் ஆகியோருக்கு டெல்லி ஐகோர்ட்டு மரண தண்டனை விதித்தது. பின்னர் மேல்முறையீட்டில் இந்த தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. அதன்பின்னர் முகேஷ், பவன், வினய் ஆகியோர், மரண தண்டனையை மறுஆய்வு செய்யக்கோரும் மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அக்‌ஷய் மனு தாக்கல் செய்யவில்லை. 3 பேரின் மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு, கடந்த மே 4-ந் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதி அசோக் பூஷன், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்று அந்த மனுக்கள் மீது தீர்ப்பு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #NirbhayaCase #Nirbhaya
    Next Story
    ×