search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nirbhaya case"

    • நிலப்பிரச்சனைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக பாலியல் சித்ரவதை நடந்திருப்பது தெரியவந்திருக்கிறது.
    • விசாரணை அறிக்கையை விரைவில் தாக்கல் செய்யும்படி காவல்துறைக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் நிர்பயா சம்பவம் போன்று மீண்டும் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த 36 வயது பெண் ஒருவரை, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    காசியாபாத் ஆசிரமம் சாலையில் சாக்கு மூட்டையில் உயிரோடு பெண் ஒருவர் கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவர் இரண்டு நாட்களாக கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதும், கொடூரமாக சித்ரவதை செய்யபபட்டதும் தெரியவந்தது.

    நந்த் நகரைச் சேர்ந்த அந்த பெண்ணுக்கு சிலருடன் நிலப்பிரச்சனை இருந்ததும், அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த பாலியல் சித்ரவதை நடந்திருப்பதும் தெரியவந்திருக்கிறது.

    கடந்த ஞாயிறு அன்று தன் சகோதரர் பிறந்தநாள் விழாவை கொண்டாட வெளியில் சென்ற அந்த பெண், இரவு 9.30 மணியளவில் வீடு திரும்புவதற்காக பேருந்து நிறுத்தம் வந்துள்ளார். பேருந்துக்காக காத்திருந்த அவரை, 5 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி 2 நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்ததுடன், மர்ம உறுப்பில் இரும்பு கம்பியால் குத்தி சித்ரவதை செய்துள்ளனர். பின்னர் அவரது கை, கால்களை கட்டி சாக்குமூட்டையில் வைத்து சாலையில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

    இந்த விவகாரம் மாநில மகளிர் ஆணையத்திற்கு தெரியவர, பூதாகரமாக உருவெடுத்தது. மகளிர் ஆணையம் அழுத்தம் கொடுத்த நிலையில், காவல்துறை தீவிர விசாரணையில் இறங்கியது. தன்னை சீரழித்த 5 பேர் குறித்த தகவலை பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார். அவர்களில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணை அறிக்கையை விரைவில் தாக்கல் செய்யும்படி காவல்துறைக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    நிர்பயா சம்பவத்தை மீண்டும் நினைவுபடுத்தும் வகையில் இப்போது நடந்துள்ள பாலியல் வன்கொடுமை சம்பவம் பெண்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    நாட்டையே உலுக்கிய ‘நிர்பயா’ வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை உடனே தூக்கில் போட கோரி தாக்கல் செய்த மனு, சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. #Nirbhaya #SupremeCourt #ExecutionDeath
    புதுடெல்லி:

    டெல்லியில் 23 வயதான துணை மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பஸ்சில், கடந்த 2012-ம் ஆண்டு, டிசம்பர் 16-ந் தேதி இரவில், வெறி பிடித்த ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்து சிதைக்கப்பட்டு, நடு ரோட்டில் வீசப்பட்டார். அவருடன் சென்ற அவரது நண்பரும் கடுமையாக தாக்கப்பட்டார்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்த மாணவி, சிங்கப்பூருக்கு உயர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி 13 நாட்கள் கழித்து (டிசம்பர் 29) அவர் மரணம் அடைந்தார். அவர் ‘நிர்பயா’ என்ற பெயரால் அறியப்படுகிறார்.

    இந்த கொடிய சம்பவம், நாட்டையே உலுக்கியது. இதில் குற்றவாளிகளுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும் நடத்தப்பட்டன.

    இந்த கொடிய சம்பவத்தில், டெல்லி போலீசார் கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்‌ஷய் தாக்குர் மற்றும் ஒரு இளம் குற்றவாளி என 6 பேரை கைது செய்தனர்.

    இவர்களில் ராம்சிங், திகார் சிறையில் 2013-ம் ஆண்டு, மார்ச் மாதம் 11-ந் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ‘நிர்பயா’ வழக்கை விரைவு கோர்ட்டு துரிதமாக விசாரித்தது. இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சீர்திருத்த சிறையில் அடைக்கப்பட்டார்.

    முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்‌ஷய் தாக்குர் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்து 2013-ம் ஆண்டு செப்டம்பரில் விரைவு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    இந்த தீர்ப்பை டெல்லி ஐகோர்ட்டு 2014-ம் ஆண்டும், சுப்ரீம் கோர்ட்டு 2017-ம் ஆண்டும் உறுதி செய்தன.

    பின்னர் முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா ஆகிய 3 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த மனுக்களும் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஜூலை மாதம் 9-ந் தேதி தள்ளுபடி செய்யப்பட்டன. அக்‌ஷய் தாக்குர் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யவில்லை.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் அலக் அலோக் ஸ்ரீவஸ்தவா என்ற வக்கீல் ஒரு பொது நல மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனுவில், “நிர்பயா வழக்கில் 3 குற்றவாளிகளின் மறு ஆய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 4½ மாதங்கள் ஆகி விட்டன. ஆனாலும் அவர்கள் மீதான மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. இந்த வழக்கில் மரண தண்டனையை நிறைவேற்றுவதை தாமதப்படுத்துவது மோசமான முன் உதாரணமாக அமைந்து விடும். தினந்தோறும் கற்பழிப்பு சம்பவங்கள் பற்றிய செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. எனவே அவர்களை உடனே தூக்கில் போட உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

    மேலும், “பெண்கள் கற்பழித்து கொல்லப்படுகிற வழக்குகளில், குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விரைவாக நிறைவேற்றுவதற்கு சுப்ரீம் கோர்ட்டு விதிமுறைகளை வகுத்து அளிக்க வேண்டும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த மனு, நீதிபதிகள் மதன் பி லோகுர், தீபக் குப்தா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், மனுதாரரை நோக்கி, “மரண தண்டனை என்பது தடுப்பு நடவடிக்கையாக செயல்படுகிறதா? இத்தகைய வழக்குகளை தாக்கல் செய்யாதீர்கள். இல்லாவிட்டால், இப்படிப்பட்ட வழக்குகளை ஏற்காதீர்கள் என்று நாங்கள் பதிவாளருக்கு கூற வேண்டியது வரும்” என கூறினர்.

    மேலும், “ நாங்கள் டெல்லிக்கு போய் இவர்களை தூக்கில் போட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? என்ன விதமான முறையீட்டை நீங்கள் எங்கள் முன் வைத்திருக்கிறீர்கள்? நீங்கள் இந்த கோர்ட்டை தமாஷ் ஆக்குகிறீர்கள்” என கண்டித்ததுடன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.   #Nirbhaya #SupremeCourt #ExecutionDeath
    நிர்பயா வழக்கில் 4 குற்றவாளிகளின் மரண தண்டனையை உடனே நிறைவேற்றக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் நேற்று பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #Nirbhaya #SupremeCourt
    புதுடெல்லி:

    கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி இரவு, டெல்லியில், ஓடும் பஸ்சில் ‘நிர்பயா’ (கற்பனை பெயர்) என்ற மருத்துவ மாணவி, கற்பழித்து கொல்லப்பட்டார். இதுதொடர்பாக, முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக்‌ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை கடந்த ஜூலை 9-ந் தேதி, சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.

    இருப்பினும், 4 பேருக்கும் இன்னும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. அதை உடனே நிறைவேற்ற உத்தரவிடக்கோரி, அலக் அலோக் ஸ்ரீவஸ்தவா என்ற வக்கீல், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று பொதுநல மனு தாக்கல் செய்தார்.  #Nirbhaya #SupremeCourt
    மரண தண்டனையை எதிர்த்து டெல்லி நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 3 பேர் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்துள்ள சுப்ரீம் கோர்ட் அவர்களின் மரண தண்டனையை உறுதி செய்துள்ளது. #NirbhayaVerdict
    புதுடெல்லி:

    டெல்லியில், கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி இரவு, ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழித்துக் கொல்லப்பட்டார். குற்றவாளிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர். ஒருவன், சிறுவன் என்பதால் குறைந்தபட்ச தண்டனையுடன் தப்பினான். முக்கிய குற்றவாளி ராம்சிங், சிறையில் தற்கொலை செய்துகொண்டான்.

    மற்ற குற்றவாளிகளான முகேஷ், பவன், வினய், அக்‌ஷய் ஆகியோருக்கு டெல்லி ஐகோர்ட்டு மரண தண்டனை விதித்தது. பின்னர், மேல்முறையீட்டில் இந்த தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. அதன்பின்னர் முகேஷ், பவன், வினய் ஆகியோர், மரண தண்டனையை மறுஆய்வு செய்யக்கோரும் மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அக்‌ஷய் மனு தாக்கல் செய்யவில்லை. 3 பேரின் மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு, கடந்த மே 4-ந் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதி அசோக் பூஷன், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு, அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதனால், அவர்களின் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தவறை கண்டறிவதில் குற்றவாளிகள் தோல்வியடைந்து விட்டனர். தண்டனையை எதிர்த்து குற்றவாளிகளால் மேல்முறையீடு செய்ய முடியுமே தவிர, தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோர முடியாது என தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். #NirbhayaVerdict 
    நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லியில், கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி இரவு, ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழித்துக் கொல்லப்பட்டார். குற்றவாளிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர். ஒருவன், சிறுவன் என்பதால் குறைந்தபட்ச தண்டனையுடன் தப்பினான். முக்கிய குற்றவாளி ராம்சிங், சிறையில் தற்கொலை செய்துகொண்டான்.

    மற்ற குற்றவாளிகளான முகேஷ், பவன், வினய், அக்‌ஷய் ஆகியோருக்கு டெல்லி ஐகோர்ட்டு மரண தண்டனை விதித்தது. பின்னர் மேல்முறையீட்டில் இந்த தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. அதன்பின்னர் முகேஷ், பவன், வினய் ஆகியோர், மரண தண்டனையை மறுஆய்வு செய்யக்கோரும் மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அக்‌ஷய் மனு தாக்கல் செய்யவில்லை. 3 பேரின் மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு, கடந்த மே 4-ந் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதி அசோக் பூஷன், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்று அந்த மனுக்கள் மீது தீர்ப்பு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #NirbhayaCase #Nirbhaya
    ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் மறுஆய்வு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு அளிக்கிறது. #Nirbhaya #MedicalStudent
    புதுடெல்லி:

    டெல்லியில், கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி இரவு, ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி ஒருவர் (நிர்பயா என்ற கற்பனை பெயர்) 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழித்துக்கொல்லப்பட்டார். 6 பேரும் கைது செய்யப்பட்டனர். ஒருவன், சிறுவன் என்பதால் குறைந்தபட்ச தண்டனையுடன் தப்பினான். முக்கிய குற்றவாளி ராம்சிங், சிறையில் தற்கொலை செய்துகொண்டான்.



    மற்ற 4 பேர்களான முகேஷ், பவன், வினய், அக்‌ஷய் ஆகியோருக்கு டெல்லி ஐகோர்ட்டு மரண தண்டனை விதித்தது. அதை மேல்முறையீட்டில் சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. முகேஷ், பவன், வினய் ஆகியோர், மரண தண்டனையை மறுஆய்வு செய்யக்கோரும் மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இம்மனுக்கள் மீது கடந்த மே 4-ந் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.



    இந்நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, நாளை (திங்கட்கிழமை) அந்த மனுக்கள் மீது தீர்ப்பு அளிக்கிறது. #Nirbhaya #MedicalStudent #tamilnews 
    ×