என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dharmapuri Collector"

    • கடந்த மாதம் 2ம் தேதி அதிகாலை, தோட்ட வீட்டுக்குள் புகுந்த, 2 மர்ம நபர்கள் நகை மற்றும் ரூபாயை திருடி சென்றனர்.
    • சேவூர் போலீசார் வழக்கு பதிந்து, திருடர்களை தேடி வந்தனர்.

    அவிநாசி :

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள சேவூர் மங்கரசுவலையபாளையம் ஊராட்சி, லுார்துபுரம், பிள்ளையார் கோவில் தோட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (86). இவரது மனைவி சரஸ்வதி(78) இருவரும் தனியாக தோட்டத்து வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன். இரண்டு மகள்கள். இவர்களது இளைய மகள் சாந்தி, தர்மபுரி மாவட்ட கலெக்டராக உள்ளார்.

    கடந்த மாதம் 2ம் தேதி அதிகாலை, தோட்ட வீட்டுக்குள் புகுந்த, 2 மர்ம நபர்கள், கிருஷ்ணசாமியை இரும்பு கம்பியால் தாக்கி, வீட்டிலிருந்த, 7 பவுன் தங்க நகை மற்றும், 7 ஆயிரம் ரூபாயை திருடி சென்றனர். சேவூர் போலீசார் வழக்கு பதிந்து, திருடர்களை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் அவிநாசி - திருப்பூர் ரோட்டில் உள்ள பேக்கரி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அங்கு நின்றுகொண்டிருந்த கும்பகோணம், ஆவூர் மேட்டு தெருவை சேர்ந்த மணிகண்டன், (44) என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் தனது நண்பருடன் தோட்ட வீட்டில் கொள்ளை அடித்தது தெரியவந்தது. பின்னர் சேவூர் போலீசார், மணிகண்டனை கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.

    • ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்த நிலையில் மதியம் 12 மணி அளவில் நீர்வரத்து 9 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
    • சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட கலெக்டர் சாந்தி தடை விதித்தார்.

    தருமபுரி:

    கர்நாடகா மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ். ஆகிய இரு அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதையடுத்து இன்றுகாலை 8 மணி நிலவரப்படி தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்த நிலையில் மதியம் 12 மணி அளவில் நீர்வரத்து 9 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

    மேலும் தண்ணீர் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட கலெக்டர் சாந்தி தடை விதித்தார். இதனால் அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பிளஸ்-2 மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் 2 பேரையும் 48 மணி நேரத்தில் கைது செய்வோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கலெக்டர் உறுதி அளித்துள்ளார். #DharmapuriGirlStudent #GirlMolested

    கம்பைநல்லூர்:

    பிளஸ்-2 மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டவர்கள் சாலைமறியலுடன் கூடிய உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களிடம் தருமபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது போராட்டக்காரர்களிடம் அவர் கூறியதாவது:

    குற்றவாளிகளான ரமேஷ் மற்றும் சதீஷ் ஆகிய 2 பேரையும் 48 மணிநேரத்தில் கைது செய்வோம். மேலும், அவர்களை கைது செய்து குண்டாஸ் சட்டத்தில் அடைக்கப்படுவார்கள்.


    சவுமியாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீதும், கோட்டப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீதும் துறைரீதியான உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும், இந்த சம்பவம் குறித்து தேசிய எஸ்.சி., எஸ்.டி. விசாரணைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்படும் என்று உறுதி அளித்தார். #DharmapuriGirlStudent #GirlMolested 

    ×