search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "College students"

    • மாணவிகள் சங்கரன்கோவில் வட்டாரத்தில் கிராமப்புற வேளாண் பயிற்சி அனுபவங்களைப் பெற்று வருகின்றனர்.
    • செயலியின் கருவிகளான மானியத் திட்டங்கள், உரங்கள் இருப்பு நிலை, விதை இருப்பு நிலை, வானிலை முன் அறிவிப்பு போன்றவற்றை குறித்து விவரித்தனர்.

    சங்கரன்கோவில்:

    கிள்ளிகுளம் வோளாண்மை கல்லூரி இளங்கலை இறுதியாண்டு மாணவிகள் சங்கரன்கோவில் வட்டாரத்தில் கிராமப்புற வேளாண் பயிற்சி அனுபவங்களைப் பெற்று வருகின்றனர். கல்லூாி முதல்வர் தேரடிமணி தலைமையில் பேராசிாியர்கள் தாமோதரன், செந்தில்நாதன், இணை பேராசிரியர்கள் கோமதி, குமாா் ஆகியோா் மாணவர்களை வழிநடத்தினர். இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக சங்கரன்கோவில் வட்டாரத்தில் புன்னைவனம் கிராமத்தில் விவசாயிகளுக்கு உழவன் செயலி பற்றி செயல் விளக்கம் அளித்தனர். இந்த செயலியின் பயன்பாடுகள் குறித்து, அதில் பதிவு செய்யும் முறை குறித்தும் விவரித்தனர். அந்த செயலியின் கருவிகளான மானியத் திட்டங்கள், உரங்கள் இருப்பு நிலை, விதை இருப்பு நிலை, வானிலை முன் அறிவிப்பு போன்றவற்றை குறித்து விவரித்தனர். இந்த செயலியின் செயல்பாடுகள் பற்றியும், பயன்பாடுகள் பற்றியும் மாணவிகள் ஆலியா, அபின்சா, அன்பரசி, பத்மபிாியா, பானுமதி, தரணி, மாளவிகா, மோகனபிரியா ஆகியோா் விவரித்தனர்.

    • கூடுதல் போதைக்காக கஞ்சாவுடன் மாத்திரைகள் கலந்தனர்.
    • 2 மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் நபர் ஒருவர் 3 பேர் அங்குள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தனர்.

    சூலூர்,

    சூலூர் மற்றும் நீலாம்பூர் பகுதியில் கல்லூரி மாணவர்கள் பலர் தனியாக வாடகை எடுத்து தங்கி உள்ளனர்.

    2 மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் நபர் ஒருவர் 3 பேர் அங்குள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர் ஒருவரின் நண்பர் சென்னையில் இருந்து கோவைக்கு வந்து இந்த அறையில் தங்கினார்.

    சென்னையில் இருந்த வந்த நபர், வரும்போதே கஞ்சா பொட்டலங்களுடன் வந்துள்ளார். இதையடுத்து சென்னை வாலிபரும், அவரது நண்பரும் சேர்ந்து கஞ்சா பிடித்துள்ளனர்.

    இதைபார்த்த அறையில் இருந்த மற்ற 2 பேர் வெளியில் எழுந்து ெசன்று விட்டனர்.

    பின்னர் இரவில் அறைக்கு வந்தனர். அப்போது அங்கு ஏற்கனவே இருந்தவர்களுடன் மேலும் 2 பேர் இருந்ததை கண்டதும் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    உடனே 2 பேரும் நமது அறைக்கு வெளியாட்களை ஏன் அழைத்து வருகிறீர்கள் என கேட்டார். போதையில் இருந்த 4 வாலிபர்களும் ஆத்திரத்தில் கல்லூரி மாணவரையும், அவரது நண்பரையும் சரமாரியாக அடித்து உதைத்தனர்.

    மேலும் சென்னை வாலிபர் தான் கொண்டு வந்த கஞ்சாவை எடுத்து ஒரு பாட்டிலில் போட்டு, அதனுடன் சோடா, கூல்டிரிங்ஸ், மாத்திரைகளை போட்டு பாட்டில் பக்கவாட்டில் ஒரு சிறிய குழாயை சொருகி அதனை உறிஞ்சினர்.

    பின்னர் கல்லூரி மாணவரையும், அவரது நண்பரையும் உறிஞ்சுமாறு அடித்தனர். அவர்கள் என்னவென்று கேட்டபோது, இது கஞ்சா தேவாமிர்தம் என பதில் அளித்துள்ளனர். இதனால் அவர்கள் புகைக்க மறுத்தனர். இதனால் கோபம் கொண்ட 4 பேரும் மீண்டும் அவர்களை தாக்கினர்.

    இதனால் பயந்து போன கல்லூரி மாணவர், அதனை புகைத்தார். இதில் அவர் மயக்கமானார். ஆனால் அவரது நண்பர் ெதாடர்ந்து மறுத்தார். இதனால் போதை தலைக்கேறிய நிலையில் இருந்த 4 வாலிபர்களும் சேர்ந்து கல்லூரி மாணவரின் நண்பரை சரமாரியாக தாக்கியதுடன், அவரது ஆடைகளையும் களைந்து நிர்வாணமாக்கினர்.

    பின்னர் அந்த வாலிபரை பல்வேறு கோணங்களில் புகைப்படமும் எடுத்தனர். மயக்கம் அடைந்த கல்லூரி மாணவரின் கழுத்தில் கிடந்த செயினை பறித்து விட்டு மேலும் பணம் வேண்டும் என கேட்டு மிரட்டினர்.

    பின்னர் அங்கிருந்து 4 பேரும் வெளியில் சென்று விட்டனர்.

    இந்த நிலையில் காயம் அடைந்த கல்லூரி மாணவரும், அவரது நண்பரும் நடந்த சம்பவங்கள் குறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.

    உடனடியாக அவர்கள் இங்கு வந்து, அவர்களுடன் தங்கி மற்ற வாலிபர்களுடன் சேர்ந்து தாக்கிய மற்றொரு கல்லூரி மாணவரை பிடித்து சூலூர் போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் வாலிபரிடம் விசாரணை நடத்தினர். மேலும் அறையில் சோதனை மேற்கொண்டு அங்கிருந்து கஞ்சா மற்றும் தேவாமிர்தத்தின் மிச்சம், மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அரசியல் அமைப்பு நாளையொட்டி புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்டம் என்ற தலைப்பில் வினாடி-வினா போட்டி சட்டப்பணிகள் ஆணைய வளாகத்தில் நடத்தப்பட்டது.
    • வக்கீல் சங்க தலைவர் குமரன், செயலாளர் கதிர்வேல், மூத்த வக்கீல் சிரில் மத்தியாஸ்வின் சென்ட் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

    புதுச்சேரி:

    அரசியல் அமைப்பு நாளையொட்டி புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்டம் என்ற தலைப்பில் வினாடி-வினா போட்டி சட்டப்பணிகள் ஆணைய வளாகத்தில் நடத்தப்பட்டது.

    இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகளை புதுவை பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் நடத்தி வெற்றியாளர்களை தேர்வு செய்தனர். மாலையில் பரிசளிப்பு விழா நடந்தது.

    விழாவில் தலைமை நீதிபதி செல்வநாதன், சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலர் செந்தில் குமார், புதுவை தொழிலாளர் நீதிபதி ஷோபனாதேவி, முதன்மை சார்பு நீதிபதி ராபர்ட் கென்னடி ரமேஷ், வக்கீல் சங்க தலைவர் குமரன், செயலாளர் கதிர்வேல், மூத்த வக்கீல் சிரில் மத்தியாஸ்வின் சென்ட் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

    • பிளாஸ்டிக், தெர்மாகோல் தட்டு மற்றும் குவளைகள், பிளாஸ்டிக் உறிஞ்சி குழாய்கள் ஆகியவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.
    • கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சுவாமிநாதன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    திருப்பூர்:

     தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் திருப்பூர் மாவட்டம் மற்றும் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 இணைந்து பல்லடம் பேருந்து நிலையத்தில் ஒருதடவை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டியும், மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டியும் கலைநிகழ்ச்சி நடத்தினர்.

    முன்னதாக, நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் பிளாஸ்டிக் தவிர்ப்பு பற்றி விரிவாக பொது மக்களுக்கு விளக்கினார். மேலும் பிளாஸ்டிக், தெர்மாகோல் தட்டு மற்றும் குவளைகள், பிளாஸ்டிக் உறிஞ்சி குழாய்கள் ஆகியவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.

    இயற்கையாக கிடைக்கக்கூடிய மற்றும் எளிதில் மக்கக்கூடிய பொருட்களான துணிப்பைகள், வாழை இலை, காகித குவளைகள் போன்றவற்றை பயன்படுத்தவேண்டும்.நெகிழிப் பொருட்கள், மண் வளத்தை கெடுத்து விடும்.பிளாஸ்டிக் மாசில்லா தமிழகத்தை உருவாக்க அனைவரும் சபதம் எடுப்போம் என்று பேசினார். பிறகு மாணவச் செயலர்கள் அருள்குமார், அரவிந்தன், ரமேஷ் ஆகியோர் தலைமையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. பேருந்து நிலையத்தில் இருக்கும் பொது மக்களுக்கு மஞ்சப்பைகள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கி நெகிழி பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துக் கூறினர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் இளம் பொறியாளர்கள், அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சுவாமிநாதன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • உடுமலை அருகே அமராவதி ஆற்றங்கரையில், பழமையான கோவில்கள் ஏராளம் உள்ளது
    • வரலாற்றுத்துறை ஆய்வு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆய்வு பயணம் செய்தனர்

    உடுமலை :

    உடுமலை அருகே அமராவதி ஆற்றங்கரையில், பழமையான கோவில்கள் ஏராளம் உள்ளது. இங்குள்ள கோவில்கள், கல்வெட்டு குறித்து பழனியாண்டவர் பண்பாட்டு கல்லூரி வரலாற்றுத்துறை ஆய்வு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆய்வு பயணம் செய்தனர்.பேராசிரியர்கள் சித்ரா, மேகலா தலைமையில் 30க்கும் மேற்பட்ட வரலாற்று ஆய்வு மாணவர்கள், ஐவர் மலை, மதகடிபுதூர் பாறை ஓவியங்கள், கொழுமம் வீரசோழீஸ்வரர் கோவில், கரிவரதராஜ பெருமாள் கோவில், கணியூர் கோட்டை ஈஸ்வரன் கோவில், கடத்தூர் சித்திரமேழி பெரியநாட்டார் கல்வெட்டு, கொங்கு விடங்கீஸ்வரர் கோவில் மற்றும் மருதீசர் கோவில்களில் அனைத்து கல்வெட்டுகளையும் ஆய்வு செய்தனர்.

    உடுமலை வரலாற்று ஆய்வு நடுவ தலைவர் மதியழகன், ஐவர் மலையில் சமண வழிபாடு குறித்தும், 16 தீர்த்தங்கரர்கள் வாழ்விடம்,திரவுபதி வழிபாடு குறித்தும் விளக்கமாக பேசினார்.வக்கீல் சத்தியவாணி சமணம் சார்ந்து இருந்த அப்பாண்டையர் மலை தற்போது பாண்டவர் மலையாகவும், ஐவர் மலை என வழக்கில் மாறி இருப்பதையும் வீரநாராயணப் பெருவழி குறித்தும் மாணவர்களுக்கு விளக்கிப்பேசினார்.கொமரலிங்கம் கிருஷ்ணமூர்த்தி, சித்திரமேழி ஏர், பாறை ஓவியங்கள் குறித்து பேசினார். மதகடிபுதூர் பாறை ஓவியங்கள் குறித்து முனைவர் விஜயலட்சுமி விளக்கமளித்தார்.கடத்தூரில் உள்ள சித்திரமேழி பெரிய நாட்டார் கல்வெட்டு சிறப்புகளையும், அங்கு கோட்டைகள் இருந்தது, கரை வழி நாட்டு கடத்தூர் சிறப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.கடத்தூர் மருதீசர் கோவிலில் உள்ள 84 கல்வெட்டு மற்றும் அதன் செய்திகள் குறித்து விளக்கி வரலாற்று ஆய்வாளர்கள் பேசினர். உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • மாநகர பஸ்சின் ஜன்னல், படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம் செய்கிறார்கள்.
    • மாணவர்கள் அட்டகாசம் செய்த பஸ்சின் பின்னால் வந்த மற்றொரு பஸ்சில் பயணம் செய்த பயணி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார்.

    சென்னை:

    சென்னையில் மாநகர பஸ், மின்சார ரெயில் நிலையங்களில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்து வருகிறார்கள். இதுகுறித்து போலீசாரும், பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் எச்சரித்தும் இது தொடர்கதையாக நீடித்து வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கிச்சென்ற மின்சார ரெயிலில் தொங்கியபடி நடைமேடையில் பட்டா கத்தியை உரசியபடி சென்ற மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் 'ரூட்டு தல' பிரச்சினையில் கல்லூரி மாணவர்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. மாநகர பஸ்களில் படிக்கட்டில் தொங்கியபடி சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்தாலும் மாணவர்களின் அட்டகாசம் அடங்கவில்லை. காலை மற்றும் மாலை நேரங்களில் படிக்கட்டு, ஜன்னலில் தொங்கியபடி பயணம் செய்து பயணிகள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது நீடிக்கிறது.

    இந்த நிலையில் பிராட்வேயில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்ற மாநகர பஸ் (எண்15) கல்லூரி மாணவர்கள் சிலர் பஸ்சின் மேற்கூரையில் நின்றும், அமர்ந்தபடி நடனம் ஆடியும் அட்டகாசம் செய்யும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. மேலும் மாநகர பஸ்சின் ஜன்னல், படிக்கட்டில் தொங்கியபடியும் மாணவர்கள் ஆபத்தான பயணம் செய்கிறார்கள். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    இதனை மாணவர்கள் அட்டகாசம் செய்த பஸ்சின் பின்னால் வந்த மற்றொரு பஸ்சில் பயணம் செய்த பயணி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார். கோயம்பேடு மேம்பாலத்தில் செல்லும்போது இந்த வீடியோ எடுக்கப்பட்டு உள்ளது. ஆபத்தை உணராமல் பஸ்சில் ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • அதிர்ச்சி அடைந்த அவர்களது பெற்றோர்கள் மாணவி எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
    • காலையில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் அவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.

    கடலூர்:

    கடலூரை அடுத்த உச்சிமேடு பகுதியை சேர்ந்த 19 வயது தனியார் கல்லூரி முதலாம் ஆண்டு பி.ஏ. படித்து வரும் மாணவி சம்பவத்தன்று வீட்டில் இருந்து திடீர் என மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களது பெற்றோர்கள் மாணவி எங்கு தேடியும் கிடைக்கவில்லை. உடனே மாணவியின் பெற்றோர் இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவியை தேடிவருகின்றனர். இதேபோன்று கடலூரை அடுத்த வெள்ளைக்கரை பகுதியை சேர்ந்த 19 வயது தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவி சம்பவத்தன்று காலையில் வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கல்லூரி மாணவியை எங்கு தெரியும் கிடைக்கவில்லை. இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.

    • செங்கோட்டையை அடுத்த புளியரை அருகே உள்ள கேசவபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அருள் செல்வக்குமார். இவரது மகள் அமுதா(வயது 21).
    • குற்றாலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் படித்து வந்தார்.

    நெல்லை:

    செங்கோட்டையை அடுத்த புளியரை அருகே உள்ள கேசவபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அருள் செல்வக்குமார். இவரது மகள் அமுதா(வயது 21).

    இவர் குற்றாலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 25-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் திடீரென மண்எண்ணையை எடுத்து தலையில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுதொடர்பாக புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சமீப காலமாக அமுதாவுக்கு உடல்நிலை பாதிப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக அவர் தற்கொலை செய்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • காலை வேளையில் அதாவது (8.30 - 10.30) நேரங்களில் பஸ்களில் கூட்டம் அலைமோதும்.
    • கண்டக்டர், டிரைவர்கள் கூட அவர்களை தட்டி கேட்கவோ, புகார் கொடுக்கவோ அச்சப்படுகிறார்கள்.

    சென்னை :

    பூந்தமல்லி, குன்றத்தூர், பட்டூர் ஆகிய பகுதிகளில் இருந்து பிராட்வே செல்ல போக்குவரத்து துறை மூலம் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் (53இ, 53பி, 53) ஆகிய பஸ்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் காலை வேளையில் அதாவது (8.30 - 10.30) நேரங்களில் பஸ்களில் கூட்டம் அலைமோதும்.

    மேற்கூறிய பஸ்களில் பெண்கள், ஆண்கள் கூட்டத்தைவிட கல்லூரி மாணவர்களின் கூட்டம்தான் அதிகமாக காணப்படுகிறது.

    சென்னைக்கு வரும் கல்லூரி மாணவர்கள் குன்றத்தூர், குமணன்சாவடி, வேலப்பன் சாவடி, வானகரம் ஆகிய பகுதிகளில் இருந்து பஸ்களில் ஏறிக்கொள்கிறார்கள். பஸ்சின் முன் படிக்கட்டுகளிலும் பின் படிக்கட்டுகளிலும் மாணவர்கள் கூட்டம் சேர்ந்ததும் அவர்களின் அரங்கேற்றம் ஆரம்பமாகிறது.

    முதலில் கானா பாடல், பின்பு தாளம், அதன் பின்னர் கூச்சல் கடைசியில் இரைச்சல். அவர்கள் போடும் இரைச்சலில் பஸ்சில் யாரேனும் இதய நோயாளி இருந்தால் பஸ் பிராட்வே செல்வதற்கு பதில் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிடுமோ என்று பயணிகள் நினைக்கும் வண்ணம் மாணவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன.

    அவர்களை யாரும், எதுவும் கேட்க தயங்குகிறார்கள், காரணம் பயம். நேற்று கூட 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மாணவர்களை பார்த்து 'ஏனப்பா? கூச்சல் போடுகிறீர்கள்' என கேட்டதுக்கு அந்த பெண்மணியை ஆபாசமாக வசை பாடியது பஸ் பயணிகள் அனைவரையும் வேதனைப்பட வைத்தது. மேலும் அந்த மாணவர்கள் அனைவரும் முதுகு மற்றும் இடுப்பு பகுதிகளில் கத்தி போன்ற ஆயுதங்கள் வைத்திருப்பதால் கண்டக்டர், டிரைவர்கள் கூட அவர்களை தட்டி கேட்கவோ, புகார் கொடுக்கவோ அச்சப்படுகிறார்கள்.

    குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு செல்லும் சில பெண்கள் இவர்களின் இம்சைகளை தாங்க முடியாமல் கூடுதல் செலவானாலும் பரவாயில்லை என ஆட்டோவில் பயணம் செய்து வருகிறார்கள்.

    ஆசிரியர்கள் கண்டிக்காத பிள்ளை போலீசில் அடி வாங்குவான் என்பது பழைய கூற்று. போலீஸ் தண்டிக்காத மாணவர்கள் கொலைகாரர்களாகவும், கொள்ளைக்காரர்களாவும் மாறுவார்கள் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. இந்த வழித்தடம் மட்டுமல்லாது சென்னையின் முக்கிய பல வழித்தடங்களில் செல்லும் பஸ்களிலும் பயணிகள் இதுபோல் படும் இன்னல்கள் அதிகரித்துகொண்டே வருகிறது. இதுபோன்ற சம்பவங்களை தடுப்பதற்காக இனிவரும் நாட்களில் ஒவ்வொரு மாநகர பஸ்களிலும் போலீசார் மாறுவேடத்தில் சென்று பஸ்களில் எல்லை மீறுபவர்களை பிடித்து பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க வேண்டும்.

    பயணிகள் ஒவ்வொருவரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே பஸ்சில் பயணம் செய்து வருகிறார்கள், இதற்கிடையில் புது பிரச்சினையாக மாணவர்களின் கேலி, கிண்டல் உருவெடுத்திருப்பதால் அவை பயணிகளின் நிம்மதியை முழுவதுமாக சிதைத்து விடுகிறது.

    • கலெக்டர் அம்ரித் வழங்கினார்.
    • தலா ரூ.50,000 வீதம் ரூ. 2 லட்சத்துக்கான வரைவோலையை வழங்கினாா்.

    ஊட்டி,

    ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினாா்.

    இதில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 100-க்கும் மேற்பட்ட மனுக்களை பொதுமக்கள் வழங்கினா்.

    இதைத் தொடா்ந்து, முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஊட்டி காந்தல் பகுதியைச் சோ்ந்த தாரணி, பந்தலூா் பகுதியைச் சோ்ந்த வி.மோனிஷா, தனசஞ்சய், குன்னூா் உலிக்கல் பகுதியைச் சோ்ந்த காளிராஜ் ஆகிய 4 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக தலா ரூ.50,000 வீதம் ரூ. 2 லட்சத்துக்கான வரைவோலையை வழங்கினாா்.

    பின்னா், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலா்கள் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜெயராமன் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

    • ஈரோடு மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்த நாளான வரும் 15 மற்றும் 17-ந் தேதி பேச்சு போட்டிகள் நடக்கிறது.
    • மாணவர்கள் பேச்சு போட்டி களுக்கான விண்ணப்ப படிவங்களை பள்ளித் தலைமையாசிரியர்- கல்லூரி முதல்வரிடம் இருந்து பெற்று கொள்ளலாம்.

    ஈரோடு:

    தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க பட உள்ளன.

    இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்த நாளான வரும் 15 மற்றும் 17-ந் தேதி பேச்சு போட்டிகள் நடக்கிறது.

    பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் காலை 10 மணிக்கும், கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் மதியம் 3 மணிக்கும் நடக்கிறது.

    மாணவர்கள் பேச்சு போட்டி களுக்கான விண்ணப்ப படிவங்களை பள்ளித் தலைமையாசிரியர்- கல்லூரி முதல்வரிடம் இருந்து பெற்று கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ண ப்பங்களை முதல்வர்- தலைமை யாசிரியர் கையெழுத்து பெற்று, போட்டி நாளன்று தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநரிடம் நேரில் அளிக்க வேண்டும்.

    மாவட்ட அளவில் பள்ளி- கல்லூரி போட்டி யில் வெற்றி பெறும் மாண வர்களுக்கு முதல் பரிசாக ரூ.5ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம், வழங்கப்படும்.

    மேலும் பள்ளி மாணவர்களுக்கு நடந்த பேச்சு போட்டியில் மட்டும் பங்கேற்ற அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரை தேர்வு ரூ.2 ஆயிரம சிறப்புப் பரிசுத் தொகை வழங்க ப்படும் என ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ண னுண்ணி தெரிவித்துள்ளார்.

    • சமூக நல மருத்துவா் யாகசுந்தரம் விளக்கவுரையாற்றினாா்.
    • வாழ்வியல் முறைகள், உணவுப் பழக்க வழக்கங்கள், மூலிகைகள் அவசியம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

    திருப்பூர் :

    சேவூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செயல்படும் ஆயுஷ் நல மையம் சாா்பில் அரசு கல்லூரி மாணவா்களுக்கு சித்த மருத்துவம் குறித்த விழிப்புணா்வுப் பயிற்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், சமூக நல மருத்துவா் யாக சுந்தரம் விளக்கவுரையாற்றினாா்.

    இதில் சித்த மருத்துவம், தொற்று நோய்களைத் தவிா்க்க சித்தா்களின் வாழ்வியல் முறைகள், உணவுப் பழக்க வழக்கங்கள், மூலிகைகள் வளா்ப்பதன் அவசியம் உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது.இப்பயிற்சியில் கல்லூரி மாணவா்கள், பின்னாலாடை தொழிலாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    ×