கல்லூரி மாணவா்களுக்கு சித்த மருத்துவம் குறித்த விழிப்புணா்வு பயிற்சி

சமூக நல மருத்துவா் யாகசுந்தரம் விளக்கவுரையாற்றினாா்.வாழ்வியல் முறைகள், உணவுப் பழக்க வழக்கங்கள், மூலிகைகள் அவசியம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

சேவூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செயல்படும் ஆயுஷ் நல மையம் சாா்பில் அரசு கல்லூரி மாணவா்களுக்கு சித்த மருத்துவம் குறித்த விழிப்புணா்வுப் பயிற்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், சமூக நல மருத்துவா் யாக சுந்தரம் விளக்கவுரையாற்றினாா்.

இதில் சித்த மருத்துவம், தொற்று நோய்களைத் தவிா்க்க சித்தா்களின் வாழ்வியல் முறைகள், உணவுப் பழக்க வழக்கங்கள், மூலிகைகள் வளா்ப்பதன் அவசியம் உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது.இப்பயிற்சியில் கல்லூரி மாணவா்கள், பின்னாலாடை தொழிலாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X

Maalai Malar
www.maalaimalar.com