search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவிகளுக்கு"

    • மலேரியா நோய் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • அனைவரும் மலேரியா நோய் தடுப்பு உறுதிமொழி எடுத்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் உலக மலேரியா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மலேரியா நோய் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த் உத்தரவுபடி, துப்புரவு அலுவலர் சோழராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், சவுந்தரராஜன் ஆகியோர் ஜெயராம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மலேரியா நோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

    இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு கொசுக்கள் எப்படி உருவாகின்றன என்றும், அவற்றின் வாழ்க்கை சுழற்சி முறை, கொசுக்கள் எவ்வாறு நோய் பரப்பிகளாக செயல்படுகின்றன என்றும்,

    அவைகளை கட்டுப்படுத்த ஒவ்வொரு வீட்டிலும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல், தண்ணீர் தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்துதல்,

    தண்ணீர் தொட்டிகளை வாரம் ஒரு முறை தேய்த்து கழுவி சுத்தம் செய்து தண்ணீர் சேமித்து வைக்க வேண்டும் என்பது போன்ற அறிவுரைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மலேரியா மற்றும் டெங்கு நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களான தேங்காய் சிரட்டைகள், உடைந்த பானைகள்,பழைய டயர்கள், உடைந்த டப்பாக்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டது.

    கொசு புழுக்களையும் பாட்டிலில் அடைத்து வைத்து பள்ளி மாணவர்களும் காண்பித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    பின்னர் அனைவரும் மலேரியா நோய் தடுப்பு உறுதிமொழி எடுத்தனர். இறுதியில் பள்ளி தலைமை ஆசிரியர் நகராட்சி அலுவலர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

    • ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் சார்பில் ஓமலூரில் உள்ள பள்ளிகளில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
    • கிராமங்களில் நடைபெறும் குழந்தை திருமணங்கள் குறித்தும் தகவல் தெரிவிக்கலாம். இந்த தகவல் ரகசியம் காக்கப்பட்டு குழந்தைகள் திருமணம் தடுக்கப்பட்டு பாதுகாக்கப்படுவார்கள்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் சார்பில் ஓமலூரில் உள்ள பள்ளிகளில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. ஓமலூர் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் இந்திரா கலந்துகொண்டு மாணவிகளிடம் பேசினார்.

    மேலும், விளக்க படங்களும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து ஆய்வாளர் இந்திரா பேசும்போது ஓமலூர் காவல் நிலையத்தில் 181 மகளிர் உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மகளிர் உதவி மையம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு 24 மணி நேரமும் உடனடி உதவி, அவசர உதவி, உளவியல் ஆலோசனைகள் மற்றும் உரிமைகள் குறித்த தகவல்களை வழங்கி வருகிறது. இந்த உதவி மையத்தில் பெண்கள் சார்ந்த எந்த பிரச்சனையாக இருந்தாலும், மனம் திறந்து பேசலாம்.

    மேலும், கிராமங்களில் நடைபெறும் குழந்தை திருமணங்கள் குறித்தும் தகவல் தெரிவிக்கலாம். இந்த தகவல் ரகசியம் காக்கப்பட்டு குழந்தைகள் திருமணம் தடுக்கப்பட்டு பாதுகாக்கப்படுவார்கள்.

    அதேபோல வேலை செய்யும் இடத்தில், பாலியல் தொல்லைகள், குடும்பத்தில் கணவர் அல்லது வேறு நபர்களால் தொடர் தொல்லைகள், சிறுமிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தகவல்களை தெரிவித்து பயனடையலாம். இந்த எண்ணில் அழைத்தல் சம்மந்தப்பட்ட இடத்திற்கே போலீசார் வந்து, தேவையான உதவிகளை செய்து கொடுப்பார்கள் என்று தெரிவித்தனர். 

    • கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் உயர்கல்வி பயில வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இந்த படிப்பு படிக்கிறேன் என்று வேலை தேடுவதை விட வேலைக்கேற்ற படிப்பை உயர்கல்வியில் படிக்க வேண்டும்.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் உயர்கல்வி பயில வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக நடைபெற்ற வழிகாட்டு நிகழ்ச்சியை ஈரோடு மாவட்ட கூடுதல் கலெக்டர், திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மதுபாலன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    பவானி கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ முன்னிலை வகித்து பேசும்போது, மாணவர்கள் மத்தியில் சாதிக்க முடியாதது எதுவுமில்லை. முடியாது என்று சொல்லும் மாணவர்கள் ஜெயிக்க முடியாது.

    முடியும் என்று சொல்லும் மாணவர்கள் சாதிக்கலாம். உயர்ந்த பதவியை அடைய கடின உழைப்பு கொடுக்க வேண்டும்.

    கடின உழைப்பு என்றால் படிப்பில் முழு கவனம் செலுத்துதல், கடின உழைப்பை கொடுத்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என கூறினார்.

    பள்ளி படிப்புக்கு பிறகு மேல்படிப்பு என்ன படிக்கலாம் என வழிகாட்டும் நிகழ்ச்சியில் ஜெயபிரகாஷ் காந்தி கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

    அப்போது இந்த படிப்பு படிக்கிறேன் என்று வேலை தேடுவதை விட வேலைக்கேற்ற படிப்பை உயர்கல்வியில் படிக்க வேண்டும் என கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், ஓடத்துறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பி.மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள், கவுந்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பாவா தங்கமணி, ஓய்வு பெற்ற விவசாய ஆசிரியர் மதியழகன், கவுன்சிலர் பரமசிவம், பிரஸ் நந்தகோபால் சதாசிவம், வெள்ளியங்கிரி மற்றும் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.

    • பாவளியை விபத்து இல்லாமல் கொண்டாடுவது பற்றிய விழிப்புணர்வு மற்றும் ஒத்திகை பயிற்சி, திருச்செங்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
    • தீ விபத்து போலி ஒத்திகை பயிற்சி செய்து காண்பிக்கப்பட்டது.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு தீயணைப்பு மீட்பு பணி துறை சார்பில் தீபாவளியை விபத்து இல்லாமல் கொண்டாடுவது பற்றிய விழிப்புணர்வு மற்றும் ஒத்திகை பயிற்சி, திருச்செங்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. உதவி மாவட்ட அலுவலர் தவமணி தலைமை வகித்தார். நிலைய அலுவலர் குணசேகரன் முன்னிலையில் தீ விபத்து போலி ஒத்திகை பயிற்சி செய்து காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து, தீ தடுப்பு விழிப்புணர்வு பற்றிய துண்டு பிரசுரங்கள் புதிய பேருந்து நிலையம், சேலம் ரோடு ஆகிய பகுதிகளில் நிலைய பணியாளர்களால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    • கலெக்டர் அம்ரித் வழங்கினார்.
    • தலா ரூ.50,000 வீதம் ரூ. 2 லட்சத்துக்கான வரைவோலையை வழங்கினாா்.

    ஊட்டி,

    ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினாா்.

    இதில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 100-க்கும் மேற்பட்ட மனுக்களை பொதுமக்கள் வழங்கினா்.

    இதைத் தொடா்ந்து, முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஊட்டி காந்தல் பகுதியைச் சோ்ந்த தாரணி, பந்தலூா் பகுதியைச் சோ்ந்த வி.மோனிஷா, தனசஞ்சய், குன்னூா் உலிக்கல் பகுதியைச் சோ்ந்த காளிராஜ் ஆகிய 4 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக தலா ரூ.50,000 வீதம் ரூ. 2 லட்சத்துக்கான வரைவோலையை வழங்கினாா்.

    பின்னா், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலா்கள் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜெயராமன் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

    • முன்னாள் முதல்- அமைச்சர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி ஈரோ ட்டில் நடத்தப்பட உள்ளது.
    • இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

    ஈரோடு, செப். 11-

    மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி ஈரோ ட்டில் நடத்தப்பட உள்ளது.

    இதில் 13 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டரும், மாணவிகளுக்கு 10 கிலோ மீட்டரும், 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டரும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டரும் போட்டி நடத்தப்படுகிறது.

    இதில் பங்கேற்க விரும்பும் மாணவ-மாணவிகள் இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த போட்டி வருகிற 15-ந் தேதி காலை 7 மணிக்கு நடக்கிறது.

    ஈரோடு பெருந்துறை ரோடு வீரப்பம்பாளையம் பிரிவில் இருந்து தொடங்கி நந்தா கலை அறிவியல் கல்லூரி வரை சென்று விட்டு மீண்டும் வீரப்பம் பாளையம் பிரிவுக்கு வரவேண்டும்.

    இந்த போட்டியில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறும் மாணவ-மாணவி களுக்கு தலா ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் வீதமும், 4-வது முதல் 10-வது இடம் வரை வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.250 பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரியை தொடர்பு கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ -மாணவிகள் தங்களது பள்ளியில் இருந்து வயது சான்றிதழ் பெற்று வரவேண்டும்.

    இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

    • ரோடு பன்னீர் செல்வம் பார்க்கில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த செஸ் போட்டியில் ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர்.
    • இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு அந்தியூர் ஏ.ஜி.வெங்கடா சலம் எம்.எல்.ஏ. பரிசு வழங்க உள்ளார்.

    ஈரோடு:

    சென்னை, மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500- க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இதை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ -மாணவிகளுக்கு தனி தனியே செஸ் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதில் மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று வந்தனர்.

    பள்ளிகளுக்கு இடையே நடந்த செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வட்டார அளவிலான போட்டி இன்று நடந்தது. இதில் ஈரோடு பன்னீர் செல்வம் பார்க்கில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த செஸ் போட்டியில் ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர்.

    இதேப்போல் பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த போட்டியில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பர்கூர், தவிட்டுப்பாளையம், அத்தாணி, பச்சாம்பாளையம், சங்கரா பாளையம், எண்ணமங்கலம், சின்னத்தம்பி பாளையம் உள்ளிட்ட 55 அரசு பள்ளியில் பயிலும் 200 மாணவ-மாணவிகள் பங்கு பெறும் சதுரங்க போட்டி இன்று காலை 10 மணி அளவில் நடந்தது.

    இதில் முதன்மை நடுவர் ராமசாமி மேற்பார்வையில் ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன்.பவானி மாவட்ட கல்வி அலுவலர் ராமசாமி, அந்தியூர் வட்டார கல்வி அலுவலர்கள் மாதேஷா முருகன் மற்றும் டி.ஐ. மோகன்குமார் அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார மேற்பார்வையாளர் (பொறுப்பு) லிங்கப்பன்,

    அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பானுமதி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி, உடற்கல்வி ஆசிரியர்கள் திருமா வளவன், ஜெயந்தி மற்றும் உடற்கல்விஆசிரியர் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவி களுக்கு அந்தியூர் ஏ.ஜி.வெங்கடா சலம் எம்.எல்.ஏ. பரிசு வழங்க உள்ளார்.

     நெரிஞ்சிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கோபிசெட்டிபாளையத்தில் வெள்ளாங்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, டி.என்.பாளையத்துக்கு பங்களாபுதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டார செஸ் போட்டி நடந்தது.

    இதேபோல் நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பவானிசாகர் அரசு மேல்நிலைப்பள்ளி, சத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தாளவாடி அரசு மேல்நிலைப்பள்ளி, பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கொடுமுடிக்கு சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சென்னிமலைக்கு ஈங்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் இன்று வட்டார செஸ் போட்டி நடந்தது.

    இதில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகள் வரும் 25-ந் தேதி நடைபெறும் மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர்.

    ×