search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவ-மாணவிகளுக்கு செஸ் விளையாட்டு போட்டி
    X

    பள்ளி மாணவ-மாணவிகளுக்கு செஸ் விளையாட்டு போட்டி

    • ரோடு பன்னீர் செல்வம் பார்க்கில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த செஸ் போட்டியில் ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர்.
    • இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு அந்தியூர் ஏ.ஜி.வெங்கடா சலம் எம்.எல்.ஏ. பரிசு வழங்க உள்ளார்.

    ஈரோடு:

    சென்னை, மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500- க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இதை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ -மாணவிகளுக்கு தனி தனியே செஸ் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதில் மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று வந்தனர்.

    பள்ளிகளுக்கு இடையே நடந்த செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வட்டார அளவிலான போட்டி இன்று நடந்தது. இதில் ஈரோடு பன்னீர் செல்வம் பார்க்கில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த செஸ் போட்டியில் ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர்.

    இதேப்போல் பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த போட்டியில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பர்கூர், தவிட்டுப்பாளையம், அத்தாணி, பச்சாம்பாளையம், சங்கரா பாளையம், எண்ணமங்கலம், சின்னத்தம்பி பாளையம் உள்ளிட்ட 55 அரசு பள்ளியில் பயிலும் 200 மாணவ-மாணவிகள் பங்கு பெறும் சதுரங்க போட்டி இன்று காலை 10 மணி அளவில் நடந்தது.

    இதில் முதன்மை நடுவர் ராமசாமி மேற்பார்வையில் ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன்.பவானி மாவட்ட கல்வி அலுவலர் ராமசாமி, அந்தியூர் வட்டார கல்வி அலுவலர்கள் மாதேஷா முருகன் மற்றும் டி.ஐ. மோகன்குமார் அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார மேற்பார்வையாளர் (பொறுப்பு) லிங்கப்பன்,

    அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பானுமதி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி, உடற்கல்வி ஆசிரியர்கள் திருமா வளவன், ஜெயந்தி மற்றும் உடற்கல்விஆசிரியர் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவி களுக்கு அந்தியூர் ஏ.ஜி.வெங்கடா சலம் எம்.எல்.ஏ. பரிசு வழங்க உள்ளார்.

    நெரிஞ்சிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கோபிசெட்டிபாளையத்தில் வெள்ளாங்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, டி.என்.பாளையத்துக்கு பங்களாபுதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டார செஸ் போட்டி நடந்தது.

    இதேபோல் நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பவானிசாகர் அரசு மேல்நிலைப்பள்ளி, சத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தாளவாடி அரசு மேல்நிலைப்பள்ளி, பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கொடுமுடிக்கு சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சென்னிமலைக்கு ஈங்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் இன்று வட்டார செஸ் போட்டி நடந்தது.

    இதில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகள் வரும் 25-ந் தேதி நடைபெறும் மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர்.

    Next Story
    ×