என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஊட்டியில் 4 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை
- கலெக்டர் அம்ரித் வழங்கினார்.
- தலா ரூ.50,000 வீதம் ரூ. 2 லட்சத்துக்கான வரைவோலையை வழங்கினாா்.
ஊட்டி,
ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினாா்.
இதில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 100-க்கும் மேற்பட்ட மனுக்களை பொதுமக்கள் வழங்கினா்.
இதைத் தொடா்ந்து, முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஊட்டி காந்தல் பகுதியைச் சோ்ந்த தாரணி, பந்தலூா் பகுதியைச் சோ்ந்த வி.மோனிஷா, தனசஞ்சய், குன்னூா் உலிக்கல் பகுதியைச் சோ்ந்த காளிராஜ் ஆகிய 4 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக தலா ரூ.50,000 வீதம் ரூ. 2 லட்சத்துக்கான வரைவோலையை வழங்கினாா்.
பின்னா், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலா்கள் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜெயராமன் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்