search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் அருகே  கல்லூரி மாணவி 2 பேர் மாயம்
    X

    கடலூர் அருகே கல்லூரி மாணவி 2 பேர் மாயம்

    • அதிர்ச்சி அடைந்த அவர்களது பெற்றோர்கள் மாணவி எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
    • காலையில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் அவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.

    கடலூர்:

    கடலூரை அடுத்த உச்சிமேடு பகுதியை சேர்ந்த 19 வயது தனியார் கல்லூரி முதலாம் ஆண்டு பி.ஏ. படித்து வரும் மாணவி சம்பவத்தன்று வீட்டில் இருந்து திடீர் என மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களது பெற்றோர்கள் மாணவி எங்கு தேடியும் கிடைக்கவில்லை. உடனே மாணவியின் பெற்றோர் இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவியை தேடிவருகின்றனர். இதேபோன்று கடலூரை அடுத்த வெள்ளைக்கரை பகுதியை சேர்ந்த 19 வயது தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவி சம்பவத்தன்று காலையில் வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கல்லூரி மாணவியை எங்கு தெரியும் கிடைக்கவில்லை. இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×