search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவ"

    • சுற்றுலா தலங்களை பிரபலப்ப டுத்தவும், பள்ளி மாணவ, மாணவிகளிடையே சுற்றுலா பற்றிய விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் நோக்கோடும் பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
    • இந்த சுற்றுலாவில் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு, மதிய உணவு, இருவேளை ஸ்நாக்ஸ் மற்றும் குடிநீர், வினாடி-வினா போட்டிக்கான பரிசுகள் ஆகியன சுற்றுலாத்துறையின் சார்பில் வழங்கப்படவுள்ளது.

    நாமக்கல்:

    உலக சுற்றுலா தின விழாவினை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களை பிரபலப்ப டுத்தவும், பள்ளி மாணவ, மாணவிகளிடையே சுற்றுலா பற்றிய விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் நோக்கோடும் பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் நடைபெற்றது.

    இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் உமா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த அரசு ஆதி திராவிட பழங்குடியின 50 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் திருச்செங்கோடு காந்தி ஆசிரமம், சேலம் மாவட்டம் சங்ககிரி கோட்டை மற்றும் குரும்பப்பட்டி உயிரியியல் பூங்கா ஆகிய இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டு பார்வையிட உள்ளார்கள்.

    இந்த சுற்றுலாவில் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு, மதிய உணவு, இருவேளை ஸ்நாக்ஸ் மற்றும் குடிநீர், வினாடி-வினா போட்டிக்கான பரிசுகள் ஆகியன சுற்றுலாத்துறையின் சார்பில் வழங்கப்படவுள்ளது.

    • மத்திய கல்வி நிலையங்களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு ஆணையிடப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைகழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ் நாட்டைச்சேர்ந்த பிற்ப டுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாண விகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ, மாணவிகளுக்கு ஒருவருக்கு  ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

    மேற்படி கல்வி உதவித் தொகைக்கு 2023-2024 ஆம் கல்வியாண்டில் புதியது மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் கீழ்க்கண்ட முகவரியிலுள்ள இயக்ககத்தையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவல கத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை அணுகியோ அல்லது https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm# scholarship_schemes என்ற இணையதள முகவரியிலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    மேலும் மேற்படி 2023-2024 ஆம் நிதியாண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பித்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்கவேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நல இயக்ககம், எழிலகம் இணைப்புக் கட்டடம், 2-வது தளம்,சேப்பாக்கம், சென்னை-5, தொலைபேசி எண்:044-29515942, மின்னஞ்சல் முகவரி tngovtiitscholarship@gmail,com என்ற முகவரிக்கு பூர்த்தி செய்த புதுப்பித்தல் விண்ணப்பங்களை 15.12.2023 க்குள் மற்றும் புதியது விண் ணப்பங்களை 15.01.2024-க்குள் அனுப்பி வைக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • விருதுநகரில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலெக்டர் கலந்துரையாடினார்.
    • உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்ப டையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட கலெக்டர் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, 35-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் சிவகாசி, விருதுநகர் மற்றும் சாத்தூர் ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்கி வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும், 36 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள் ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தே கங்களை அகற்றி, வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

    இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் அவர்களுடைய லட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.

    • கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஐஏஎஸ் ஆவது எப்படி? என்பது பற்றி மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
    • மனதார பாராட்டியதுடன் தன் கையொப்பமிட்ட புத்தகங்களை வழங்கினார்.

    ஈரோடு:

    பள்ளி கல்வித்துறையின் சார்பில் பள்ளிகளுக்கு இடையே மாணவ, மாணவிகளின் தனித்திறனை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற பல்வேறு போட்டித் தேர்வுகள் மற்றும் இணைய வழியில் நடைபெறும் வினாடி வினா போன்ற தேர்வுகள் மூலமாக தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளை கொண்டு பெருந்துறை சாலை, பழனிச்சாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாக ஈரோடு மாவட்ட அரசு மாதிரி பள்ளி மேல்நிலை 2-ம் ஆண்டில் 139 மாணவ, மாணவிகள் மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டில் 87 மாணவ, மாணவிகளுடன் செயல்பட்டு வருகின்றது.

    இதனைத்தொடர்ந்து கலெக்டர் இப்பள்ளியின் வளாகத்தை மேற்பார்வையிட்டதோடு பள்ளி நூலகம், ஆசிரியர் களின் எண்ணிக்கை, மாணவர்களின் எண்ணிக்கை, தொழில் நுட்ப வகுப்பறை, மாணவர்களின் ஒழுக்கம், சுற்றுப்புறத்தூய்மை, மாணவ, மாணவிகளின் வருகைப்பதிவேடு, மாணவ, மாணவிகளின் விடுதிகள் மற்றும் உணவகத்தினையும் பார்வையிட்டார்.

    மேலும் முந்தைய மாணவர்கள் பங்கு பெற்ற போட்டித்தேர்வுகள், போட்டித்தேர்வுகளில் பங்கு பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை, அதில் வெற்றி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை, மாணவர்கள் தேர்ந்தெடுத்த கல்லூரிகள் ஆகியவை குறித்தும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா மாணாக்களின் பல்வேறு விதமான வினாக்களுக்கு பதில் அளித்ததுடன், "தன்னம்பிக்கை என்பது தன்னை நம்புவது" என்றும், ஐஏஎஸ் ஆவது எப்படி? என்பது பற்றியும் மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

    மாணவர்களிடம் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான இலக்கினை நிர்ணயிக்க வேண்டும். பல புத்தகங்களை படிக்க வேண்டும். தடைகள் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி, அதை தகர்த்து விட்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

    மாணவர்களின் பல்வேறு திறமைகளைப் பாராட்டி அவற்றை மென்மேலும் வளர்த்து அடுத்த வருடம் அனைவரும் சாதனையாளர்களாக மாறி வரும் தலைமுறைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

    மேலும் மாணவ, மாணவி கள் வெளிப்படுத்திய தனித் திறன்களான கவிதை, பாடல், பேச்சு, சித்திரத் தையல் போன்றவற்றை கண்டு மகிழ்ந்து அவர்களை மனதார பாராட்டியதுடன் தன் கையொப்பமிட்ட புத்தகங்களை வழங்கினார்.

    இந்நிகழ்வின்போது உதவி கலெக்டர் (பயிற்சி) வினய்குமார் மீனா, துணை கலெக்டர் (பயிற்சி) காயத்ரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குழந்தைராஜன், உதவி திட்ட அலுலவர் ராதாகிருஷ்ணன், அரசு மாதிரி பள்ளி தலைமை ஆசிரியர் கோபால், ஒருங்கிணைப்பாளர் மாதுனியாள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடைபெற்றது.
    • பேச்சு போட்டியில் 86 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடைபெற்றது.

    பேச்சுப்போட்டிக்கு முதுகலை தமிழாசிரியர்கள் கலைச்செல்வன், கருப்பு சாமி, பட்டதாரி ஆசிரியர் ஷீலாதேவி ஆகியோர் நடுவர்களாகவும், கட்டுரை போட்டிக்கு முதுகலை தமிழாசிரியர்கள் கந்தசாமி, யுவராணி, காயத்ரி தேவி ஆகியோர் நடுவர்களாகவும் பங்கேற்றனர்.

    இந்நிகழ்வில் ஈரோடு மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் ரெஜினா ள்மேரி ஒருங்கிணை ப்பாளராகச் செயல்பட்டார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டியில் 86 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் சி.ஆகாஷ் முதல்பரிசு ரூ.10,000-ம், மீனாட்சி சுந்தரனார் செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி மாணவன் மைந்தன்குமார் 2-ம் பரிசு ரூ.7,000-ம், கலைமகள் கல்வி நிலையம் பெண்கள் மேல்நிலை ப்பள்ளி மாணவி நித்யாஸ்ரீ 3-ம் பரிசு ரூ.5,000-ம் பெற்றனர்.

    பள்ளி மாணவ, மாணவி களுக்கான கட்டுரை போட்டியில் 91 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நல்லாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் ர.விஷால் முதல்பரிசு ரூ.10,000-ம், சென்னிமலை, கொமரப்பா செங்குந்தர் மகளிர் உயர்நிலைப்பள்ளி மாணவி மோனிஷா 2-ம் பரிசு ரூ.7,000-ம், பட்டிமணி யக்காரன் பாளையம் அரசு மாதிரிப்பள்ளி மாணவி லோ.ச.அம்பிகா 3-ம் பரிசு ரூ.5,000-ம் பெற்றுள்ளனர்.

    • தமிழ்நாடு நாளை கொண்டாடும் வகையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு-கட்டுரை போட்டிகள் நடக்கிறது.
    • இந்த தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

    மதுரை

    தாய்த்தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு என அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ம் நாளினைப் பெருமைப் படுத்தும் வகையில் அந்த நாள் "தமிழ்நாடு நாளாகக்" கொண்டாடப்படும் என முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.

    இவ்வறிவிப்பிற்கிணங்க தமிழ்நாடு நாளையொட்டி மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் 12-ந்தேதி முற்பகலில் மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகக் கூட்ட அரங்கில் நடத்தப்பெற உள்ளன. அரசு, தனியார், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இப்பேச்சுப்போட்டிகளில் பங்கேற்கலாம். போட்டிகள் குறித்த விவரங்கள் முதன்மை கல்வி அலுவலர் வாயிலாகப் பள்ளிகளுக்கு அனுப்பப்படும்.

    ''தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்தமிழறிஞர் கலைஞரின் சுவடுகள்" என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும், "தமிழ்த் திரை உலகத்தைப் புரட்டிப்போட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் எழுதுகோல்" என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி யும் நடைபெற வுள்ளது.

    மாவட்ட அளவில் ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.7ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.5ஆயிரம் என்ற வீதத்தில் வழங்கப்பட உள்ளன. மாவட்ட அளவி லான போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவர்கள் மட்டும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளப் பரிந்துரை செய்யப்பெறுவர்.

    மாநில அளவிலான போட்டிகளுக்கு முதல் பரிசாக ரூ.50ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.30ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.20ஆயிரம் வீதம் வழங்கப் பெறும்.எனவே பள்ளி மாணவ- மாணவிகள் இப்போட்டி களில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

    • 100-க்கும் மேற்பட்ட மாணவ , மாணவிகள் உளுந்தூர்பேட்டைக்கு சென்று கல்வி பயின்று செல்கின்றனர்.
    • தங்கள் கிராமத்திற்கு என்று தனி அரசு பஸ் பள்ளி நேரத்தில் வந்து செல்ல வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை அருகே ஊ செல்லூர் கிராமத்தில் சுமார் 1000-திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திலிருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ , மாணவிகள் உளுந்தூர்பேட்டைக்கு சென்று கல்வி பயின்று செல்கின்றனர். தடம் எண் 35 அரசு பஸ்சில் மாணவர்கள் எந்தவித சிரமமும் இன்றி பள்ளிக்குச் சென்று வந்தனர். 

    இந்நிலையில் சில நாட்களாக குறிப்பிட்ட அரசு பஸ் அந்த ஊருக்கு செல்லவில்லை என தெரிகிறது. இது குறித்து அந்த கிராம மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஊ செல்லூர் கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் இன்று அரசு பஸ்ஸை சிறை பிடித்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கிராமத்திற்கு என்று தனி அரசு பஸ் பள்ளி நேரத்தில் வந்து செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஒரு வாரத்தில் தனி அரசு பஸ் ஏற்பாடு செய்வதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மறியலை அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • மாணவ-மாணவிகள் விளையாட்டிலும் சாதனை படைக்க வேண்டும் என்று அமைச்சர்கள் பேசினர்.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    விருதுநகர்

    விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலைய ரங்கத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டி களில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் நவாஸ்கனி, தனுஷ்குமார் எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்கபாண்டியன், ரகு ராமன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.

    அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். அப்போது அவர்கள் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக மாணவ-மாணவிகளின் கல்வி தரத்தை உயர்த்துவது மட்டுமின்றி அவர்களை விளையாட்டு துறையிலும் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

    விளையாட்டு துறையில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் விளை யாட்டு போட்டிகளில் பங்கேற்று சிறந்து விளங்கு கின்றனர்.

    விருதுநகர் மாவட்டமும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்குகிறது. மாணவ-மாணவிகள் விளையாட்டிலும் சாதனை படைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    • சர்வதேச யோகா தினத்தையொட்டி நடந்தது.
    • கோட்டாறு டி.வி.டி பள்ளி வளாகத்தில் நடந்த யோகா பயிற்சியில் பெண்கள், ஆண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும், நாகர்கோவில் மாநகர பகுதியில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

    கோட்டாறு டி.வி.டி பள்ளி வளாகத்தில் நடந்த யோகா பயிற்சியில் பெண்கள், ஆண்கள் என பலரும் கலந்து கொண்டனர். மூச்சுப் பயிற்சி, பத்மாசனம் உள்ளிட்ட பல்வேறு யோகா பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. நெசவாளர் காலனி சமுதாய நலக்கூடம், தம்பத்து கோணம் பகுதியிலும் யோகா நிகழ்ச்சி இன்று நடந்தது.

    நாகர்கோவில் நகரப் பகுதியில் உள்ள பள்ளிக் கூடங்களிலும் இன்று மாணவ-மாணவிகள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடந்த யோகா பயிற்சியில் மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜேஷ் கலந்து கொண்டார். விளையாட்டு வீரர்கள்-வீராங்கனைகள், பொதுமக்கள் யோகா பயிற்சியில் பங்கேற்றனர்.

    நாகர்கோவில் கோர்ட்டு வளாகத்தில் நடந்த யோகா நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி அருள் முருகன், கூடுதல் மாவட்ட நீதிபதி ஜோசப் ஜாய் மற்றும் நீதிபதிகள், கோர்ட்டு ஊழியர்கள் கலந்து கொண்டனர். நாகர்கோவில் கோணம் கேந்திர வித்யாலயா பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்வேல் தலைமையில் மாணவ-மாணவிகள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இதுபோல் தோவாளை, அகஸ்தீஸ்வரம், ராஜாக்க மங்கலம், குளச்சல், தக்கலை, திருவட்டார், மேல்புறம், குழித்துறை, முன்சிறை, கிள்ளியூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் யோகா பயிற்சி இன்று நடந்தது. மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளிலும் மாணவ- மாணவிகள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

    • அன்றைய வாழ்க்கை பயணம் என்பது போக்குவரத்து இல்லாத சாலை போன்று இருந்தது.
    • சமூக வலைதளம், தொலைக்காட்சி என மாணவர்களுக்கு பல்வேறு இடையூறுகள் உள்ளன.

    பல்லடம் :

    திருப்பூர் அருகே அருள்புரத்தில் ஜெயந்தி பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு போதை பொருள் ஒழிப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    பள்ளி தாளாளர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் விஜயராகவன் வரவேற்றார். பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன் மற்றும் பிரவீன் பானு ஆகியோர் பேசுகையில் "அன்றைய வாழ்க்கை பயணம் என்பது போக்குவரத்து இல்லாத சாலை போன்று இருந்தது. இன்று சமூக வலைதளம், தொலைக்காட்சி என மாணவர்களுக்கு பல்வேறு இடையூறுகள் உள்ளன. இன்றைய சமுதாயத்திற்கு தொலைபேசி மிகப்பெரிய சவாலாக உள்ளது. அடுத்ததாக மாணவர்களின் சமுதாயத்தை சீரழிப்பதாக போதைப்பொருள் பழக்கம் உள்ளது. மிகவும் கவனமாக இருந்தால் மட்டுமே இடையூறுகளை தாண்டி உங்களது இலக்கை நோக்கி செல்ல முடியும். போதை பழக்கம் குறித்து விழிப்புணர்வு இல்லாமலேயே மாணவர்கள் அதில் சிக்கிக்கொண்டு தங்களது வாழ்க்கையை இழக்கின்றனர். புதிதாக சந்தைக்கு வரும் சாக்லேட் குறித்து தெரியாமல் வாங்காதீர்கள். ஏனெனில் அதில் போதைப்பொருள் சிறிய அளவில் சேர்க்கப்படுவதால் அதனை சாப்பிட்டு நாளடைவில் அதற்கு அடிமையாகி விடும் அவலம் உள்ளது. மாணவர்களாகிய உங்களை நம்பியே இந்த சமுதாயம் உள்ளது '' என்றனர்.

    • துபாய், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.
    • சர்வதேச யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து நாட்டின் பாங்காங் நகரில் நடைபெற்றது.

    திருப்பூர் :

    சர்வதேச யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து நாட்டின் பாங்காங் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங், இலங்கை, தாய்லாந்து, தென்னாப்பிரிக்கா, துபாய், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். காமன் ஈவென்ட் போட்டி பிரிவில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கிரிவாசன் 13 வயது முதல் 16 வயதுக்குட்பட்டோர் பிரிவிலும், தருண் 6 வயது முதல் 8 வயதுக்குட்பட்டோர் பிரிவிலும் முதல் இடத்தையும், சஷ்டிகா 9 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் முதலிடத்தையும், ரம்யா 26 வயது முதல் 35 வயதுக்குட்பட்டோர் பிரிவு மற்றும் தேவி 36 வயது முதல் 40 வயது வரைக்கு உட்பட்டோர் பிரிவில் 2-வது இடமும் பெற்றனர்.

    ரிதமிக் ஈவென்ட் போட்டியில் ஜெயப்ரீத்தா 17 வயது முதல் 25 வய–துக்கு உட்பட்டோர் பிரிவில் முதல் இடத்தையும், சாம்பியன்ஷிப் ஈவென்ட் போட்டியில் திஷாந்த் 9 வயது முதல் 12 வயதுக்குட்பட்டோர் பிரிவிலும், கிரஷிகா 13 வயது முதல் 16 வயதுக்குட்பட்டோர் பிரிவிலும் முதலிடம் பெற்று வென்றனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் கலெக்டர் கிறிஸ்துராஜை சந்தித்து வாழ்த்து பெற்றார்கள். யோகா ஆசிரியர் ஜாவித்தை கலெக்டர் பாராட்டினார்.

    • புனித அடைக்கல அன்னை ஆலய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டது.
    • சாயர்புரம் பேரூராட்சி மன்றத் தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமை தாங்கினார்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட நடுவைகுறிச்சி பகுதியில் உள்ள புனித அடைக்கல அன்னை ஆலய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு சாயர்புரம் பேரூராட்சி மன்றத் தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    பேரூராட்சி துணைத் தலைவர் பிரியா மேரி மற்றும் 13-வது வார்டு கவுன்சிலரும், சாயர்புரம் நகர தி.மு.க. செயலாளருமான கண்ணன், சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அறவாழி முன்னிலை வகித்தனர்.

    இதில் பள்ளி தலைமை ஆசிரியர் அல்போன்ஸ் ஷா மேரி வரவேற்றார். பள்ளி ஆசிரியை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×