search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ் பேச்சு போட்டி"

    • ஈரோடு மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்த நாளான வரும் 15 மற்றும் 17-ந் தேதி பேச்சு போட்டிகள் நடக்கிறது.
    • மாணவர்கள் பேச்சு போட்டி களுக்கான விண்ணப்ப படிவங்களை பள்ளித் தலைமையாசிரியர்- கல்லூரி முதல்வரிடம் இருந்து பெற்று கொள்ளலாம்.

    ஈரோடு:

    தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க பட உள்ளன.

    இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்த நாளான வரும் 15 மற்றும் 17-ந் தேதி பேச்சு போட்டிகள் நடக்கிறது.

    பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் காலை 10 மணிக்கும், கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் மதியம் 3 மணிக்கும் நடக்கிறது.

    மாணவர்கள் பேச்சு போட்டி களுக்கான விண்ணப்ப படிவங்களை பள்ளித் தலைமையாசிரியர்- கல்லூரி முதல்வரிடம் இருந்து பெற்று கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ண ப்பங்களை முதல்வர்- தலைமை யாசிரியர் கையெழுத்து பெற்று, போட்டி நாளன்று தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநரிடம் நேரில் அளிக்க வேண்டும்.

    மாவட்ட அளவில் பள்ளி- கல்லூரி போட்டி யில் வெற்றி பெறும் மாண வர்களுக்கு முதல் பரிசாக ரூ.5ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம், வழங்கப்படும்.

    மேலும் பள்ளி மாணவர்களுக்கு நடந்த பேச்சு போட்டியில் மட்டும் பங்கேற்ற அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரை தேர்வு ரூ.2 ஆயிரம சிறப்புப் பரிசுத் தொகை வழங்க ப்படும் என ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ண னுண்ணி தெரிவித்துள்ளார்.

    ×