search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமராவதி ஆற்றங்கரை"

    • உடுமலை அருகே அமராவதி ஆற்றங்கரையில், பழமையான கோவில்கள் ஏராளம் உள்ளது
    • வரலாற்றுத்துறை ஆய்வு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆய்வு பயணம் செய்தனர்

    உடுமலை :

    உடுமலை அருகே அமராவதி ஆற்றங்கரையில், பழமையான கோவில்கள் ஏராளம் உள்ளது. இங்குள்ள கோவில்கள், கல்வெட்டு குறித்து பழனியாண்டவர் பண்பாட்டு கல்லூரி வரலாற்றுத்துறை ஆய்வு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆய்வு பயணம் செய்தனர்.பேராசிரியர்கள் சித்ரா, மேகலா தலைமையில் 30க்கும் மேற்பட்ட வரலாற்று ஆய்வு மாணவர்கள், ஐவர் மலை, மதகடிபுதூர் பாறை ஓவியங்கள், கொழுமம் வீரசோழீஸ்வரர் கோவில், கரிவரதராஜ பெருமாள் கோவில், கணியூர் கோட்டை ஈஸ்வரன் கோவில், கடத்தூர் சித்திரமேழி பெரியநாட்டார் கல்வெட்டு, கொங்கு விடங்கீஸ்வரர் கோவில் மற்றும் மருதீசர் கோவில்களில் அனைத்து கல்வெட்டுகளையும் ஆய்வு செய்தனர்.

    உடுமலை வரலாற்று ஆய்வு நடுவ தலைவர் மதியழகன், ஐவர் மலையில் சமண வழிபாடு குறித்தும், 16 தீர்த்தங்கரர்கள் வாழ்விடம்,திரவுபதி வழிபாடு குறித்தும் விளக்கமாக பேசினார்.வக்கீல் சத்தியவாணி சமணம் சார்ந்து இருந்த அப்பாண்டையர் மலை தற்போது பாண்டவர் மலையாகவும், ஐவர் மலை என வழக்கில் மாறி இருப்பதையும் வீரநாராயணப் பெருவழி குறித்தும் மாணவர்களுக்கு விளக்கிப்பேசினார்.கொமரலிங்கம் கிருஷ்ணமூர்த்தி, சித்திரமேழி ஏர், பாறை ஓவியங்கள் குறித்து பேசினார். மதகடிபுதூர் பாறை ஓவியங்கள் குறித்து முனைவர் விஜயலட்சுமி விளக்கமளித்தார்.கடத்தூரில் உள்ள சித்திரமேழி பெரிய நாட்டார் கல்வெட்டு சிறப்புகளையும், அங்கு கோட்டைகள் இருந்தது, கரை வழி நாட்டு கடத்தூர் சிறப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.கடத்தூர் மருதீசர் கோவிலில் உள்ள 84 கல்வெட்டு மற்றும் அதன் செய்திகள் குறித்து விளக்கி வரலாற்று ஆய்வாளர்கள் பேசினர். உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • ஆற்றில் குளிப்பவர்களும் பாதிக்கின்றனர்.
    • கழிவுகளை கொட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    மடத்துக்குளம் :

    மடத்துக்குளம் தாலுகா கொழுமம் கொமரலிங்கம் பகுதியில் அமராவதி ஆற்றங்கரையை ஒட்டி, அதிகளவு குடியிருப்புகள் உள்ளன.மேலும் கொழுமம் ஆற்றுப்பாலத்தை ஒட்டி ஆற்றில் சடங்குகள், செய்ய, நாள்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர்.இவ்வாறு வருபவர்கள் ஆற்று நீரில், பழைய துணி உள்ளிட்ட கழிவுகளை நேரடியாக வீசிவிடுகின்றனர். இதனால் தரை மட்ட பாலம் உள்ளிட்ட இடங்களில் இத்தகைய கழிவுகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. ஆற்று நீரும் மாசுபடுகிறது.ஆற்றில் குளிப்பவர்களும் பாதிக்கின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வாக சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் சார்பில், ஆற்றின் கரையில் ஆங்காங்கே சேகரிப்பு தொட்டிகள் வைத்து அதில் கழிவுகளை கொட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×