search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "college student"

    • விக்னேஷ் தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
    • கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக சாலை நடுவே தடுப்புச் சுவரில் மோதியது.

    நெல்லை:

    நெல்லை டவுன் செண்பகம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் குமாரசாமி. இவரது மகன் விக்னேஷ் (வயது 19).இவர் நெல்லையை அடுத்த சீதபற்பநல்லூர் பகுதியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தினமும் டவுனில் இருந்து மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று வந்தார்.

    இந்நிலையில் நேற்று கல்லூரிக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார். சீதபற்ப நல்லூரை அடுத்த வெள்ளாளங்குளம் அருகே நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே தடுப்புச் சுவரில் மோதியது. இதில் சுமார் 50 அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்ட விக்னேஷ் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    உடனே அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் சீதபற்பநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விக்னேசை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • கல்லூரி மாணவியிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை மிளகரணை சங்கீத் நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் பிருந்தா காமேஷ் (வயது 19). இவர் கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. படித்து வருகிறார். கல்லூரி பகுதியில் நடந்து சென்ற போது அவரின் பின்னால் வந்த 2 மர்ம நபர்கள் மாணவி கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

    இது குறித்து சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்தில் மாணவி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபபதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மாணவியிடம் செல்போனை பறித்தது பொம்மிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 19), ராஜ்குமார் வயது (18) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    • தனது மகனை ராகிங் செய்து தாக்கிய மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்.
    • 20 மாணவர்கள் கும்பலாக சேர்ந்து ராகிங் செய்து தாக்கிய சம்பவம் கோழிக் கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் புள்ளல்லூரை சேர்ந்தவர் முகமது. இவரது மகன் முகமது மிதுலாஜ். இவர் சாத்தமங்கலம் பகுதியில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று மாணவர் முகமது மிதுலாஜ் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றிருக்கிறார். அப்போது அவரை, அதே கல்லூரியில் படிக்கும் 20 மாணவர்கள் சேர்ந்து ராகிங் செய்துள்ளனர். மாணவர் அணிந்திருந்த உடை மற்றும் சிகை அலங்காரத்தை குறிப்பிட்டு கேலி-கிண்டலும் செய்துள்ளனர்.

    மேலும் அவர்கள் கூறியபடி செய்வதற்கு மாணவர் முகமது மிதுலாஜ் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள், முகமது மிதுலாஜை கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மாணவரின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து அவர் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர் முகமது மிதுலாஜ் ராகிங் செய்து கொடூரமாக தாக்கப்பட்டது குறித்து, குன்ன மங்கலம் போலீஸ் நிலையத்தில் அவரது தந்தை புகார் செய்தார்.

    அனர் தனது புகாரில், தனது மகனை 20 மாண வர்கள் கும்பலாக சேர்ந்து ராகிங் செய்தது மட்டு மின்றி, கொடூரமாக தாக்கியுள்ளனர். அதில் எனது மகனுக்கு கண் மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டு உள்ளதாகவும், மூக்கில் எலும்பு சேதமடைந்து இருப்பதாகவும் கூறியுள்ள அவர், தனது மகனை ராகிங் செய்து தாக்கிய மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

    அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் ஒருவரை, 20 மாணவர்கள் கும்பலாக சேர்ந்து ராகிங் செய்து தாக்கிய சம்பவம் கோழிக் கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
    • போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 17 வயதுடைய நபரை கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் படந்தால் பகுதியில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் பக்கத்து கிராமங்களை சேர்ந்த 17 வயதுடைய ஆணும், இளம்பெண்ணும் வேலை பார்த்து வந்தனர். அப்போது அவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.

    பெண்ணின் காதல் குறித்து அவரது குடும்பத்தினருக்கு தெரியவரவே அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் 2 பேரையும் அழைத்து பேசி எச்சரித்தனர்.

    அதன்பின் இளம்பெண் தனது வீட்டிற்கு செல்லாமல் காப்பகத்திற்கு செல்ல விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை காப்பகத்தில் சேர்த்தனர். இந்த நிலையில் அந்த பெண் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் தான் காப்பகத்தில் இருந்த போது காதலன் தனது வீட்டில் யாரும் இல்லை என அழைத்தார்.

    இதையடுத்து நான் அவரது வீட்டிற்கு சென்றேன். அப்போது திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி காதலன் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். தற்போது திருமணம் செய்ய மறுக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.

    இதன் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 17 வயதுடைய நபரை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் தற்போது கல்லூரியில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். சுமனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • இந்த ஆண்டில் மட்டும் 3 வாலிபர்கள் தலக்கோணா நீர்வீழ்ச்சியில் மூழ்கி பலியாகி உள்ளனர்.

    திருப்பதி:

    கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்தவர் சுமன் (வயது 23). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

    திருப்பதி அடுத்த எரவாரி பாலம் பகுதியில் பிரபலமான தலக்கோணா நீர்வீழ்ச்சி உள்ளது. நேற்று முன்தினம் இங்கு சுமன் தனது நண்பர்களுடன் வந்தார்.

    பின்னர் தனது நண்பர்களுடன் நீர்வீழ்ச்சியில் இறங்கி குளித்தனர். சுமன் பாறை மீது ஏறி நின்று நீர்வீழ்ச்சியில் குதிப்பதை வீடியோ எடுக்கும்படி தனது நண்பர்களிடம் கூறினார்.

    சக நண்பர்கள் சுமனை வீடியோ எடுத்த போது பாறையின் மேலிருந்து நீர்வீழ்ச்சியில் குதித்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக நீர்வீழ்ச்சியின் அடியில் இருந்த 2 பாறைகளுக்கு நடுவே சுமன் சிக்கிக்கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் சுமன் வெளியே வராததால் பதற்றம் அடைந்தனர். அவரது நண்பர்கள் இதுகுறித்து போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். சுமனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இரவு நேரம் ஆகிவிட்டதால் நேற்று காலை மீண்டும் சுமனை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதளுக்கு பிறகு பாறைகளுக்கு இடையில் சிக்கிய சுமனை பிணமாக மீட்டனர்.

    பின்னர் பிரேத பரிசோதனைக்காக எரவாரி பாலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சுமன் பாறையின் மீது இருந்து நீர்வீழ்ச்சியில் குதிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

    தலக்கோணா நீர்வீழ்ச்சியில் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்கின்றனர்.

    நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கான எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளையும் வனத்துறையினர் செய்து தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

    இந்த ஆண்டில் மட்டும் 3 வாலிபர்கள் தலக்கோணா நீர்வீழ்ச்சியில் மூழ்கி பலியாகி உள்ளனர். ஆபத்தாக உள்ள பாறைகளை நீக்கி சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக குளித்து விட்டு செல்லும் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். 

    • சுஷ்மிதா புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.எஸ்.சி. நர்சிங் படித்து வருகிறார்.
    • சுஷ்மிதாவின் செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகி உள்ளது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறு பகுதியை சேர்ந்தவர் மனோகர், விவசாயக் கூலி. இவரது மகள் சுஷ்மிதா (வயது 21). இவர் புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.எஸ்.சி. நர்சிங் படித்து வருகிறார். விடுமுறைக்கு காரைக்கால் வந்த சுஷ்மிதா கடந்த 26-ந் தேதி காலை புதுச்சேரி புறப்பட்டு சென்றுள்ளார். புதுச்சேரி சென்றவுடன் தந்தைக்கு போன் செய்து புதுச்சேரி வந்து விட்டதாக கூறியுள்ளார். அதன் பிறகு சுஷ்மிதாவின் செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகி உள்ளது. பல மணி நேரம் முயற்சி செய்த தந்தை, சுஷ்மிதாவின் தோழிகளுக்கு போன் செய்து விசாரித்தார். அப்போது, சுஷ்மிதா கல்லூரிக்கும் மற்றும் ஹாஸ்டலுக்கும் வரவில்லை. என கூறியதாக தெரிகிறது. இதனால் சந்தேகம் அடைந்த மனோகர், திருநள்ளாறு போலீசில் புகார் செய்து, உடனடியாக தனது மகளை கண்டுபிடித்து தருமாறு வலியுறுத்தியுள்ளார்.

    • அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் சாந்தனுவை சுற்றி வளைத்து பிடித்தனர்.
    • படுகாயம் அடைந்த பிரீத்திக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியை சேர்ந்தவர் பிரீத்தி ராம்சந்திரா. கல்லூரி மாணவியான இவர் நேற்று தனது உறவினர் ஒருவருடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். பெருங்கேட் பகுதியில் சென்று கொண்டிருந்த போது இவர்களை அதே பகுதியை சேர்ந்த சாந்தனு லட்சுமன் ஜாதவ் (வயது 22) என்ற வாலிபர் வழிமறித்து தனது கையில் இருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் இருவரையும் தாக்கினார். இதில் பிரீத்தியுடன் வந்த வாலிபர் காயம் அடைந்தார். உடனே அவர் அங்கிருந்து தப்பி ஓடியதும், சாந்தனு, பிரீத்தியை துரத்தி சென்று சரமாரியாக வெட்டினார்.

    இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் சாந்தனுவை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை போலீசில் ஒப்படைத்தனர். படுகாயம் அடைந்த பிரீத்திக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே சாந்தனு ஓட, ஓட விரட்டி பிரீத்தியை தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயனர்கள் கண்டன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • கல்லூரி மாணவரிடம் செல்போன் பறித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    • மதுரையில் உள்ள பாலி டெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடியை அடுத்துள்ள கே.வெள்ளா குளத்தை சேர்ந்தவர் கண் ணன். இவரது மகன் கதிரவன் (வயது 19). இவர் மதுரையில் உள்ள பாலி டெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று கல்லூரி முடிந்து விட்டு ஊருக்கு செல்வதற்காக திருமங்கலம் பஸ் நிலையத் தில் பஸ்சுக்காக கதிரவன் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள், அவசரமாக பேச வேண்டும் என்று கூறி, கதிரவனிடம் செல்போன் கேட்டுள்ளனர்.

    அதற்கு அவரும் தனது செல்போனை அவர்களிடம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் கதிரவனிடம் செல்போனை வாங்கிய மர்ம நபர்கள், பேசுவது போல் நடித்து அங்கிருந்து ைநசாக செல்போனை திருப்பி கொடுக்காமல் சென்று விட்டனர். தன்னிடம் செல்போனை வாங்கிய நபர்களை கதிரவன் தேடினார்.

    ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடிய வில்லை. உதவி கேட்பது போல் நடித்து தனது செல்போனை மர்ம நபர்கள் திருடி சென்றதை அறிந்த கதிரவன், அதுகுறித்து திருமங்கலம் நகர் போலீஸ் நிலையத்திற்கு புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் திருமங்கலத்தை சேர்ந்த அறிவு (59) என்பவரை பணம் கேட்டு மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கி யுள்ளனர். அது தொடர் பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 18,326 பன்னிரு திருமுறை பாடல்களை பண்ணோடு தொடர்ந்து பாடி திருநெறிய தமிழரசி என்ற விருது பெற்றவர்.
    • தமிழ்நாடு அரசு கலை மற்றும் பண்பாடு துறை சார்பில் கலை இளம்மணி விருது பெற்றுள்ளார்.

    உடுமலை :

    புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா புதுடெல்லியில் நடந்தது. இதில் உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து வரும் உமா நந்தினி என்ற மாணவி பங்கேற்றார். தேவார பண்ணிசை பாடுவதற்கு 6 ஓதுவார்களில் ஒருவராக திருவாடுதுறை ஆதீன குரு மகா சன்னிதானங்களில் வேண்டுகோளின்படி கலந்து கொண்டுள்ளார். இவர் தொடர்ந்து 665 நாட்களாக கொரோனா காலத்தில் 18,326 பன்னிரு திருமுறை பாடல்களை பண்ணோடு தொடர்ந்து பாடி நிறைவு செய்து திருநெறிய தமிழரசி என்ற விருது பெற்றவர்.

    முதல் ஏழு திருமுறைகளைகளான திருவாசகம், திருக்கோவையார் ஒன்பதாம் திருமுறை, பத்தாம் திருமுறை திருமூலரின் திருமந்திரம், 11-ம் திருமுறை போன்றவற்றின் எல்லா பாடல்களையும் பாடி நிறைவு செய்து 12-ம் திருமுறை சேக்கிழார் பெருமானின் பெரிய புராணம் என மொத்தம் 18,326 பாடல்களையும் பாடி நிறைவு செய்துள்ளார்.

    தொடர்ந்து அருணகிரிநாதரின் திருப்புகழ், திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய திரு அருட்பா பாடல்களையும் யூடியூப் இணையதளத்தில் பாடி வருகிறார். இந்திய சாதனை புத்தகம், இளம் வயதில் அதிகமான ஆன்மிக பாடல்களை பாடியவர் என்று இவரது சாதனையை பதிவு செய்தது. தமிழ்நாடு அரசு கலை மற்றும் பண்பாடு துறை சார்பில் கலை இளம்மணி விருது பெற்றுள்ளார். திருவாடுதுறை ஆதீன பண்ணிசை வகுப்பு மாணவியான இவர் திருவாடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ 24 வது குரு மகா சன்னிதானங்களின் திருக்கரங்களால் சிறப்பு விருதும் ரூபாய் ஐந்தாயிரத்திற்கான பொற் காசுகளையும் பெற்றுள்ளார்.

    தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜனிடம் திருநெறிய அருள் செல்வி விருது அளித்து மாணவி உமா நந்தினியை கவுரவித்துள்ளார். உடுமலை நாராயணகவி இலக்கிய பேரவை சார்பில் தூண்டில் சிறந்த தூயோர் விருதும், அரிமா சங்கம் சார்பில் பாராட்டு சான்றிதழும் பெற்றுள்ளார்.

    இதுகுறித்து கல்லூரி மாணவி உமா நந்தினி கூறியதாவது:-

    உடுமலையிலுள்ள ஜி.வி.ஜி., விசாலாட்சி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். எனது மழலைப் பருவம் முதலே கா்நாடக இசையை முறைப்படி கற்றறிந்துள்ளேன். நான் 6ம் வகுப்பு பயிலும்போது பன்னிசைப் பயிற்சியை உடுமலையிலுள்ள திருவாவடுதுறை ஆதீனம் பண்ணிசை பயிற்சி மையத்தில் அமைப்பாளா் ராணி கோபால்சாமியின் வழிகாட்டுதலின்படி, ஓதுவாா் சற்குருநாதனிடம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். இதைத்தொடா்ந்து, கரூா், ஈரோடு மற்றும் உடுமலை பகுதிகளுக்கு பொறுப்பாளரான, திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த பேராசிரியரான ஜெய்சிங் லிங்க வாசகத்திடம் பண்ணிசை பாடல்களையும், திருநெறி முறைகளையும் கற்றுக்கொண்டேன். புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவில் தேவாரப்பண்ணிசை பாடுவதற்கு 6 ஓதுவாா்களில் ஒருவராக திருவாவடுதுறை ஆதீன குருமகா சந்நிதானங்களின் அருளாணையின்படி கலந்து கொண்டேன். இந்த சரித்திர நிகழ்வு எனக்கு பெரும் பேறாகவும், பெருமையாகவும் உள்ளது என்றாா்.

    • விருதுநகரில் வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • இதுகுறித்து மாரனேரி, பாண்டியன்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள பச்சேரி பகுதியை சேர்ந்தவர் மருது பாண்டியன். இவரது மகள் பிரியதர்ஷினி(18). திருச்சுழியில் உள்ள கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் எப்போதும் செல்போனிலேயே மூழ்கி இருப்பாராம். இதனை அடிக்கடி தாய் கண்டித்துள்ளார்.

    நேற்று காலையில் கல்லூரிக்கு செல்லும்போது செல்போனை பார்த்தபடி பிரியதர்ஷினி சென்றுள்ளார். இதனால் தாய் அவரை திட்டியுள்ளார். இந்த மாலை வீடு திரும்பிய பிரியதர்ஷினி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு திருச்சுழி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரிபேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி அருகே உள்ள மாரனேரி ஆலங்குளம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் தேவராஜ்(58) இவரது மனைவி செல்வி (52). இவர்களுக்கு காவியா என்ற மகளும், தங்கேசுவரன் என்ற மகனும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. காவியா கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார்.

    வீட்டின் கீழ் பகுதியில் தேவராஜூம், மாடியில் தங்கேசுவரன் தனது மனைவி சங்கீதாவுடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் காவியாவை கணவர் வீட்டுக்கு அனுப்புமாறு செல்வியிடம் சங்கீதா வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த செல்வி அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்று பூச்சி மருந்தை குடித்துள்ளார்.

    அதை பார்த்த காவியா அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே செல்வி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மாரனேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் சத்யசாய் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார்(50). இவர் ராமர் கோவில் எதிரே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராஜ்குமாரின் மகன் பாலமுருகன் கொடுத்த புகாரின்பேரில் பாண்டியன்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிகிச்சை பலன் இன்றி சதீஷ் பரிதாபமாக இறந்தார்.
    • மீஞ்சூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புது நகரை சேர்ந்தவர் சதீஷ் (வயது20). சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் பகுதி நேர வேலையாக கேட்டரிங் சர்வீஸ் சென்டர் ஒன்றில் பணிக்கு சென்று வந்தார்.

    கடந்த 23-ந் தேதி மாணவர் சதீஷ், மீஞ்சூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த ஒரு விசேஷ நிகழ்ச்சியில் கேட்டரிங் வேலைக்கு சென்று இருந்தார். அங்கு ஒரு பாத்திரத்தில் இருந்த உணவை பரிமாறுவதற்காக சதீஷ் மற்ற தொழிலாளர்களுடன் தூக்கிச்சென்றார்.

    அந்த நேரத்தில் அவர் பின்னோக்கி நடந்து சென்றதாக தெரிகிறது. அப்போது அருகில் இருந்த கொதிக்கும் ரசம் அண்டாவுக்கும் சதீஷ் நிலை தடுமாறி உள்ளே விழுந்தார். இதில் உடல் வெந்து அலறி துடித்த அவரை தொழிலாளர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி சதீஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலியானார்.
    திருமங்கலம்
     
    திருமங்கலம் அருகேயுள்ள சாத்தங்குடியை சேர்ந்தவர் விருமாண்டி. அரசுபோக்குவரத்துக்கழக டிரைவர். இவரது மகன் காசிநாதன் (19). உசிலம்பட்டி முத்துராமலிங்கதேவர் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறை நாட்களில் காசிநாதன் மைக்செட் போடுவது வழக்கம்.   

    சாத்தங்குடி கிராமத்தில் புதுமனைபுகுவிழாவிற்கு மைக்செட் மற்றும் சீரியல் செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டார்.  எதிர்பாராவிதமாக மின்சாரம் தாக்கி காசிநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

    இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

    ×