search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரி மாணவரிடம் செல்போன் பறித்த மர்ம நபர்கள்
    X

    கல்லூரி மாணவரிடம் செல்போன் பறித்த மர்ம நபர்கள்

    • கல்லூரி மாணவரிடம் செல்போன் பறித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    • மதுரையில் உள்ள பாலி டெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடியை அடுத்துள்ள கே.வெள்ளா குளத்தை சேர்ந்தவர் கண் ணன். இவரது மகன் கதிரவன் (வயது 19). இவர் மதுரையில் உள்ள பாலி டெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று கல்லூரி முடிந்து விட்டு ஊருக்கு செல்வதற்காக திருமங்கலம் பஸ் நிலையத் தில் பஸ்சுக்காக கதிரவன் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள், அவசரமாக பேச வேண்டும் என்று கூறி, கதிரவனிடம் செல்போன் கேட்டுள்ளனர்.

    அதற்கு அவரும் தனது செல்போனை அவர்களிடம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் கதிரவனிடம் செல்போனை வாங்கிய மர்ம நபர்கள், பேசுவது போல் நடித்து அங்கிருந்து ைநசாக செல்போனை திருப்பி கொடுக்காமல் சென்று விட்டனர். தன்னிடம் செல்போனை வாங்கிய நபர்களை கதிரவன் தேடினார்.

    ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடிய வில்லை. உதவி கேட்பது போல் நடித்து தனது செல்போனை மர்ம நபர்கள் திருடி சென்றதை அறிந்த கதிரவன், அதுகுறித்து திருமங்கலம் நகர் போலீஸ் நிலையத்திற்கு புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் திருமங்கலத்தை சேர்ந்த அறிவு (59) என்பவரை பணம் கேட்டு மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கி யுள்ளனர். அது தொடர் பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×