என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Vacancies"
- இளைஞர்களுடைய எதிர்காலத்தைப் பற்றி தி.மு.க. அரசுக்கு அக்கறையில்லை என்பதும் தெள்ளத் தெளிவாகிறது.
- இளைஞர்களுடைய எதிர்காலத்தைப் பற்றி தி.மு.க. அரசுக்கு அக்கறையில்லை என்பதும் தெள்ளத் தெளிவாகிறது.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2021-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது, "அரசுத் துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்" மற்றும் "புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்" என 2 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.
இந்த சூழ்நிலையில், கடந்த மூன்றாண்டுகளில் வெறும் 60,567 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டு உள்ளதாக அரசு தெரிவித்திருப்பது, காலிப் பணியிடங்களை நிரப்புவதில் தி.மு.க. அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுகிறது என்பதும், இளைஞர்களுடைய எதிர்காலத்தைப் பற்றி தி.மு.க. அரசுக்கு அக்கறையில்லை என்பதும் தெள்ளத் தெளிவாகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் துறைகளிலும் கிட்டத்தட்ட 50 சதவீதம் காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், ஒவ்வொரு துறையிலும், பதவி வாரியாக எத்தனை காலிப் பணியிடங்கள் உள்ளன என்ற புள்ளி விவரத்தையும், அந்தப் பணியிடங்கள் அனைத்தும் எப்போது நிரப்பப்படும் என்பதற்கான அட்டவணையையும் உடனடியாக வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- தெற்கு ரெயில்வேயில் சுமார் 10000 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
- தற்பொழுது மதுரைக் கோட்டக் காலியிடங்கள் திருவனந்தபுரம் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளது.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கடந்த 2-ந்தேதி ஒன்றிய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ரெயில்வே தேர்வு வாரியங்கள் மூலம் 1.5 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்து, அதற்கான கால அட்டவணையை வெளியிட்டார்.
இதன்படி தெற்கு ரெயில்வேயில் சுமார் 10000 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதில் மதுரைக் கோட்டத்தில் உள்ள 750 காலி பணியிடங்களும் அடங்கும்.
ஆனால் தற்பொழுது மதுரைக் கோட்டக் காலியிடங்கள் திருவனந்தபுரம் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளது.
ரெயில்வே நிர்வாகத்தின் இந்த தவறான முடிவினால் தமிழக இளைஞர் மற்றும் இளம் பெண்களுக்கு கிடைக்க வேண்டிய 750 காலி பணியிடங்கள் கேரள மாநிலத்திற்கு செல்ல உள்ளது.
இதனால் கேரளத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தமிழகத்தில் பணியமர்த்தப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது தமிழக இளைஞர்களுக்கு செய்யப்படும் அநீதியாகும்.
1990 காலகட்டங்களில் ஜாபர் ஷெரீப் ஒன்றிய ரெயில்வே அமைச்சராக இருந்பொழுதுதான் மொழி வாரி மாநிலங்களின் அடிப்படையில் ரெயில்வே தேர்வு வாரியங்கள் உருவாக்கப்பட்டது. மேலும் சில உதாரணங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.
முன்பு கர்நாடக மாநிலம் ஹுப்பிலி கோட்டமானது செகந்திராபாத்தை தலைமை இடமாகக் கொண்ட தெற்கு மத்திய ரெயில்வேயின் கீழ் இருந்தது. ஆனால் அந்தக் கோட்டத்தின் காலியிடங்கள் முன்பு தெற்கு ரெயில்வேயில் இருந்த பெங்களூரு தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்பட்டு வந்தது.
அதேபோல ஆந்திராவைச் சேர்ந்த விசாகப்பட்டினம் கோட்டம் புவனேஸ்வரத்தை தலைமையிடமாகக் கொண்ட கிழக்கு கடற்கரை ரெயில்வேயில் கீழ் வருகிறது. புவனேஸ்வரத்தில் ஒரு ரெயில்வே தேர்வு வாரியம் உள்ளது ஆனாலும் ஆந்திர இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாக அங்கு ஏற்படும் காலியிடங்களை தெற்கு மத்திய ரயில்வேயில் உள்ள செகந்திராபாத் தேர்வு வாரியம் மூலமாகவே இன்றும் நிரப்பப்பட்டு வருகிறது. ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு ஒரு நீதி தமிழகத்திற்கு ஒரு நீதி என்று வகுத்து வைத்துள்ளது பெரும் கண்டனத்திற்கு உரியது. தமிழகத்தில் ஏற்படும் வேலை வாய்ப்பு கேரள இளைஞர்களுக்குச் செல்லும் விதமாக உள்ள தற்போதைய நடமுறையை மாற்றி, மதுரைக் கோட்ட காலியிடங்களை சென்னை தேர்வு வாரியம் மூலம் தான் நிரப்பப்பட வேண்டும். இதற்கான உத்தரவினை ஒன்றிய ரெயில்வே அமைச்சர் உடனடியாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தேர்வுக்கு ஆன்லைன் வழியாக பிப்ரவரி மாதம் 28-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
- பல்வேறு துறைகளில் உள்ள மொத்த காலி பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.
சென்னை:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணி இடங்களுக்கு போட்டித் தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து கொடுக்கிறது.
அந்த வகையில் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பினை இன்று வெளியிட்டுள்ளது. 6,244 காலி பணியிடங்களுக்கான தேர்வு ஜூன் மாதம் 9-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு ஆன்லைன் வழியாக பிப்ரவரி மாதம் 28-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கிராம நிர்வாக அலுவலர்-108, இளநிலை உதவியாளர் 2442 உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள மொத்த காலி பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.
விண்ணப்பத்தினை அளிப்பதற்கு மார்ச் 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. நீதித்துறையில் சுருக்கெழுத்து தட்டச்சர் 441 பணியிடங்கள், தட்டச்சர்-1653, வனக் காவலர்-526, பல்வேறு துறை பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்படுகிறது.
கிராம நிர்வாக அலுவலர், வனக்காப்பாளர், ஓட்டுனர் உரிமத்துடன் கூடிய காவலர் மற்றும் வனக்காவலர் (பழங்குடியின இளைஞர்) ஆகிய பதவிகளை தவிர மற்ற அனைத்து பதவிகளுக்கும் தேர்வர்கள் 1.7.2024 அன்று 18 வயது நிரம்பியதாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனகள் விதிக்கப்பட்டுள்ளன.
- தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு தேர்தல் பணி அலுவலர்களுக்கும் பணிச்சுமை அதிகமாகும்.
- தேர்தல் நடவடிக்கைகள் நிறைவடையும் காலமான ஜூன் 30 வரை கூடுதலான பணியிடங்களை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பணிக்காக 93 கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி தேர்தலுக்காக மாவட்ட வருவாய் அதிகாரி, துணை ஆட்சியர், தாசில்தார், துணை தாசில்தார், அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர் என 93 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதில் இளநிலை உதவியாளர் டைப்பிஸ்டு, எழுத்தர், அலுவலக உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு அரசின் வழக்கமான ஊதியத்தை வழங்கலாம் என்று தேர்தல் துறை அனுமதித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு:-
பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசின் தேர்தல் துறையில் பணியாற்ற கூடுதல் ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள். தேர்தலின்போது பல் வேறு வகையான பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டி உள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு தேர்தல் பணி அலுவலர்களுக்கும் பணிச்சுமை அதிகமாகும். அதிலும் வாக்குப்பதிவு முடிவடைந்து ஓட்டு எண்ணி முடிக்கப்படும் வரை வேலைகள் மிக அதிகமாகிவிடும்.
இதை கருத்தில் கொண்டு பாராளுமன்ற தேர்தல் நடவடிக்கைகள் நிறைவடையும் காலமான ஜூன் 30 வரை கூடுதலான பணியிடங்களை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக 93 பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் சில பணியிடங்களுக்கு அரசின் ஊதியத்தை நியமிக்க முடியாத பட்சத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமித்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
- ஒவ்வொரு மின் அலுவலகத்திலும், ஆயிரக்கணக்கான மின் இணைப்புகள் உள்ளன.
- உதவி மின் பொறியாளர் அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும்
திருப்பூர்
மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி, கோவை மண்டல மின் வாரிய தலைமை பொறியாளரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர், வீரபாண்டி மின் உப கோட்டத்துக்கு உட்பட்டு ஆண்டிபாளையம் உதவி மின் பொறியாளர் அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலக உதவி மின் பொறியாளர், 15 கி.மீ., தூரத்தில் உள்ள முதலிபாளையம், காசிபாளையம் மின் அலுவலகத்தை கூடுதல் பொறுப்பாக கவனிக்கிறார்.
இடுவம்பாளையம் மின் அலுவலக உதவி மின் பொறியாளர், சின்னக்கரை மற்றும் கூடுதலாக சில மின் அலுவலகங்களை கவனிக்கவேண்டியுள்ளது. முருகம்பாளையம் உதவி மின் பொறியாளர், கரைப்புதூர் உட்பட துணை மின்நிலையங்களையும் கூடுதலாக கவனிக்கிறார்.
ஒவ்வொரு மின் அலுவலகத்திலும், ஆயிரக்கணக்கான மின் இணைப்புகள் உள்ளன. கூடுதல் அலுவலகங்களை கவனிக்கவேண்டியுள்ளதால், மின் வாரிய அதிகாரிகளுக்கு பணிச்சுமை ஏற்படுகிறது. மின் கணக்கீட்டாளர், பணம் வசூலிப்போரும் குறைவாகவே உள்ளனர். இதனால் மின் நுகர்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர்.
வீரபாண்டி மின் உப கோட்டத்துக்கு உட்பட்ட உதவி மின் பொறியாளர் அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும் என கூறியிருந்தனர்.
- அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 606 மருத்துவ இடங்களில் சேர்ந்துள்ளனர்.
- அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தவர்கள் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் சேராமல் இருப்பது வழக்கம்.
சென்னை:
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு ஆன்லைன் கலந்தாய்வு கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ இடங்கள் மாணவர்களின் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்டன.
6326 எம்.பி.பி.எஸ். இடங்கள், 1768 பி.டி.எஸ். இடங்களுக்கு நடந்த கலந்தாய்வில் இடஒதுக்கீட்டை பின்பற்றி இடங்கள் நிரப்பப்பட்டன.
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 606 மருத்துவ இடங்களில் சேர்ந்துள்ளனர்.
மருத்துவ கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள் கடந்த 11-ந் தேதி மாலைக்குள் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. கட்டணம் செலுத்துவதற்கு வசதியாக மேலும் 3 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. 14-ந் தேதி மாலைக்குள் கல்லூரிகளில் சேர அவகாசம் கொடுக்கப்பட்டது.
அதன்படி பெரும்பாலான மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துவிட்டனர். ஒரு சிலர் சேரவில்லை. மருத்துவ கல்லூரிகளில் சேராமல் இருக்கும் மாணவ-மாணவிகளின் பெயர் விவரங்கள், காலி இடங்கள் பற்றிய தகவல்களை மருத்துவ கல்வி ஆணையத்திற்கு தெரிவிக்குமாறு அனைத்து முதல்வர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தவர்கள் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் சேராமல் இருப்பது வழக்கம். அந்த வகையில் உருவாகும் காலி இடங்கள் மற்றும் இடம் கிடைத்தவர்கள் வேறு காரணத்திற்காக மாறி செல்ல வசதியாக அந்த இடத்தை நிராகரித்து விட்டு செல்லவும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. முதல் கட்ட கலந்தாய்வில் இடம் கிடைத்தவர்கள் அதனை தேவையில்லை என்றால் விலகி செல்ல வருகிற 20-ந் தேதி வரை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் 2-வது கட்ட அகில இந்திய கலந்தாய்வு முடிந்து இறுதி முடிவு நாளை வெளியாக உள்ளது. அதில் இடம் பெற்றவர்கள் மூலமும் தமிழகத்தில் மருத்துவ இடங்கள் காலியாக வாய்ப்பு உள்ளது.
இந்த இடங்களுக்கு 2-வது கட்ட கலந்தாய்வு 22-ந் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரியில் 3 இடங்கள் காலியாக உள்ளன. இதே போல் பிற மருத்துவ கல்லூரிகளிலும் இடங்கள் காலியாக வாய்ப்பு உள்ளது. அதன் முழு விவரம் இன்று மாலை தெரிந்துவிடும்.
- மாநில அளவிலான நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் தவளக்குப்பம் தலைமை அலுவலகத்தில் நடந்தது.
- துணை செயலாளர் அருணாசலம், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
ஒருங்கிணைந்த ஆதி திராவிடர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநில அளவிலான நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் தவளக்குப்பம் தலைமை அலுவலகத்தில் நடந்தது.
மாநில அளவிலான நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் தவளக்குப்பம் தலைமை அலுவலகத்தில் நடந்தது. பொதுச்செயலாளர் கலைமணி, பேரவை தலைவர் முருகையன், கவுரவத் தலைவர் திருமால், நகரத்தலைவர் ஆதிகேசவன், முதன்மை செயலாளர் பாலக்கிருஷ்ணன், சட்ட ஆலோசகர் ராம்விலாஸ் பஸ்வான், ஒருங்கிணைப்பா ளர் மகேந்திரவேலன், பொருளாளர் வேல்முருகன், தலைமை நிலைய செயலாளர் இளவயதன் மற்றும் மாணவர் அணி தலைவர், இளைஞர் அணி தலைவர் மாயகிருஷ்ணன், கொள்கை பரப்பு செயலா ளர் பரமசிவம், அமைப்பாளர் சுப்ரமணி, மாநில செயலாளர் ரகோத்த மன், நகர செயலாளர் முனியன், துணை செயலாளர் அருணாசலம், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஆதிதிராவிடர் நலத்துறை யில் காலியாக உள்ள விடுதி காப்பாளர், நல அதிகாரி, நல ஆய்வாளர், உதவியாளர், பல்நோக்கு ஊழியர் போன்ற பதவிகள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளதை உடனடியாக நிரப்ப வேண்டும்.
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் சிறப்பு கூறு நிதியிலிருந்து 22 துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதை வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை எனில் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. முடிவில் துணை ஒருங்கிணைப்பாளர் ரஜினி குமார் நன்றி கூறினார்.
- ஒவ்வொரு மாதமும் 3-ம் வெள்ளிக்கிழமை அன்று சிறிய அளவிலான தனியா ர்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும்.
- 500-க்கும் மேற்பட்ட பணிக் காலியிடங்களை நிரப்ப உள்ளார்கள்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக தனியார்துறையில் பணிவா ய்ப்பினை பெறவிரும்பும் படித்த இளைஞர்கள் பயன்பெறும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் 3-ம் வெள்ளிக்கிழமை அன்று சிறிய அளவிலான தனியா ர்துறை வேலைவாய்ப்பு முகாமும், ஆண்டிற்கு ஒரு முறை பெரிய அளவிலான மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்களு ம் நடத்தப்பட்டு வருகின்றன.
ஜூலை 2023-ம் மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 20-க்கும் மேற்பட்ட வேலையளிக்கும் தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட பணிக் காலியிடங்களை நிரப்ப உள்ளார்கள். விழுப்புரம் மாவட்ட த்தைச் சார்ந்த 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை( ஐ.டி.ஐ, டிப்ளமோ, என்ஜினியரிங்/ பி.டெக், நர்சிங், பார்மஸி) போன்ற கல்வித் தகுதியுடைய வேலை தேடும் இளைஞ ர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு வேலைவா ய்ப்பினை பெறலாம். இம்மு காமில் கலந்து கொண்டு தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறும் வேலை நாடு நர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது எனவும் தெரிவிக்க ப்படுகிறது. தனியார்துறையில் பணிவாய்ப்பினை பெறவிரும்பும் பொது மற்றும் மாற்றுத்திறனாளி மனுதாரர்கள் தங்களின் அசல் கல்விச்சான்றுகள் ஆதார் அட்டை மற்றும் சுய விவர குறிப்புகளுடன் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
- கிராம சுகாதார செவிலியர்களுக்கு எந்த பணப்பயன்களும் வழங்கப்படாமல் உள்ளது.
- கோரிக்கைகளை வலியுறுத்தி 24-ந் தேதி மாவட்டம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் கீதா தலைமை தாங்கினார்.
மாவட்ட இணை செயலாளர்கள் ஜெயசுதா, மணிமேகலை, மாவட்டத் துணைத் தலைவர் தாமரைச்செல்வி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் இந்திரா கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், கிராம சுகாதார செவிலியர்கள், துணை செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள்,
சமுதாய சுகாதார செவிலியர்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், 4 ஆண்டுகளாக கிராம சுகாதார செவிலியர்களுக்கு எந்த பணப்பயன்களும் வழங்கப்படாமல் உள்ளதை வழங்க வேண்டும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 24-ந் தேதி(திங்கட்கிழமை) மாவட்டம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மதுரை
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மற்றும் தமிழ்நாடு அனைத்து துறை 4-ம் பிரிவு ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் மதுரையில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஓய்வு பெற்ற பணியாளர் களுக்கென தனி கேண்டீன் ஒதுக்க வேண்டும், ஓய்வூதியர் நிதியை ரூ. 2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், அனைத்து துறைகளிலும் அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் பணியாளர் களின் தினக்கூலியை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- வரவேற்பாளா் மற்றும் தட்டச்சா், அலுவலக பணியாளா் பணியிடங்கள் காலியாகவுள்ளன.
- தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) பாலு தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- திருப்பூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் லீக் எய்ட் டிபென்ஸ் கவுன்சில் சிஸ்டம் பிரிவில் அலுவலக உதவியாளா் 3 போ், தலா ஒரு வரவேற்பாளா் மற்றும் தட்டச்சா், அலுவலக பணியாளா் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இப்பணியிடங்களை தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம்.மேற்கண்ட பணியிடங்களுக்கான தகுதி, தோ்வுமுறை, விண்ணப்பம், விண்ணப்பிப்பதற்கான கால அவசகாம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் திருப்பூா் மாவட்ட நீதிமன்ற இணையதளத்தை பாா்வையிட்டு தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்