search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்நாளை நடைபெறுகிறது
    X

    விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்நாளை நடைபெறுகிறது

    • ஒவ்வொரு மாதமும் 3-ம் வெள்ளிக்கிழமை அன்று சிறிய அளவிலான தனியா ர்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும்.
    • 500-க்கும் மேற்பட்ட பணிக் காலியிடங்களை நிரப்ப உள்ளார்கள்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

    விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக தனியார்துறையில் பணிவா ய்ப்பினை பெறவிரும்பும் படித்த இளைஞர்கள் பயன்பெறும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் 3-ம் வெள்ளிக்கிழமை அன்று சிறிய அளவிலான தனியா ர்துறை வேலைவாய்ப்பு முகாமும், ஆண்டிற்கு ஒரு முறை பெரிய அளவிலான மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்களு ம் நடத்தப்பட்டு வருகின்றன.

    ஜூலை 2023-ம் மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 20-க்கும் மேற்பட்ட வேலையளிக்கும் தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட பணிக் காலியிடங்களை நிரப்ப உள்ளார்கள். விழுப்புரம் மாவட்ட த்தைச் சார்ந்த 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை( ஐ.டி.ஐ, டிப்ளமோ, என்ஜினியரிங்/ பி.டெக், நர்சிங், பார்மஸி) போன்ற கல்வித் தகுதியுடைய வேலை தேடும் இளைஞ ர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு வேலைவா ய்ப்பினை பெறலாம். இம்மு காமில் கலந்து கொண்டு தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறும் வேலை நாடு நர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது எனவும் தெரிவிக்க ப்படுகிறது. தனியார்துறையில் பணிவாய்ப்பினை பெறவிரும்பும் பொது மற்றும் மாற்றுத்திறனாளி மனுதாரர்கள் தங்களின் அசல் கல்விச்சான்றுகள் ஆதார் அட்டை மற்றும் சுய விவர குறிப்புகளுடன் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×