search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலந்தாய்வு"

    • இடஒதுக்கீடு பெற்ற விண்ணப்பதாரர்கள் 4-ந்தேதி நடைபெறவுள்ள சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • 5000 ரூபாய் 4ந் தேதி அன்றே நேரடியாகவோ அல்லது 7ந் தேதிக்குள் இணையதளம் வாயிலாகவோ செலுத்த வேண்டும்.

    திருப்பூர்,அக். 2-

    தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இணையதள கலந்தாய்வில் கலந்து கொண்டு, இடஒதுக்கீடு பெற்ற விண்ணப்பதாரர்கள் 4-ந்தேதி நடைபெறவுள்ள சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சான்றிதழ் சரிபார்ப்புக்கு முன், விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வு கட்டணமாக 200 ரூபாய், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 100 ரூபாய் செலுத்த வேண்டும். இதில், பங்கேற்க அனைத்து கல்வித்தகுதி சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின் சேர்க்கை கட்டணமாக 5000 ரூபாய் 4ந் தேதி அன்றே நேரடியாகவோ அல்லது 7ந் தேதிக்குள் இணையதளம் வாயிலாகவோ செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட அவகாசத்திற்குள் கட்டணம் செலுத்தவோ, சான்றிதழ் சமர்ப்பிக்கவோ தவறினால் சேர்க்கை ரத்தாகி விடும்.

    மேலும் விபரங்களுக்கு 94886 35077/94864 25076 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • எந்தெந்த கல்லூரிகளில் மாணவர்கள் சேராமல் காலியாக இருக்கின்றன என்ற விவரங்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருகிறது.
    • நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதால் இடங்கள் நிரம்பவில்லை என்று மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 2 கட்டமாக கலந்தாய்வு நடந்து முடிந்து உள்ளது. இது தவிர நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களையும் தமிழக மருத்துவ கல்வி ஆணையம் கலந்தாய்வு மூலம் நிரப்பி வருகிறது.

    அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள் பெரும்பாலானவை நிரம்பிவிட்டன. 2-வது கட்ட கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்த மாணவ-மாணவிகள் கல்லூரிகளில் சேருவதற்கு நேற்று வரை அவகாசம் கொடுக்கப்பட்டது.

    எந்தெந்த கல்லூரிகளில் மாணவர்கள் சேராமல் காலியாக இருக்கின்றன என்ற விவரங்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருகிறது. அந்த இடங்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

    இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 10 நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் 450க்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளன.

    நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் மருத்துவ இடங்களை இந்திய மருத்துவ கல்வி ஆணையம் நிரப்பி வருகிறது. 3 கட்டமாக நடந்து முடிந்துள்ள கலந்தாய்வுக்கு பிறகு இடங்கள் காலியாக உள்ளன. நாடு முழுவதும் உள்ள 51 நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மொத்த மருத்துவ இடங்களை நிரப்ப நடத்தப்பட்ட கலந்தாய்வில் இதுவரை 7922 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரம்பாமல் காலியாக உள்ளன.

    சென்னையில் உள்ள ஸ்ரீ சத்யசாய் மருத்துவ கல்லூரியில் மட்டும் 80 சதவீத இடங்கள் காலியாக உள்ளன. அதாவது 198 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரம்பவில்லை. பாரத் மருத்துவ கல்லூரியில் 58 இடங்களும், பாலாஜி மருத்துவ கல்லூரியில் 47 இடங்களும், ஏ.சி.எஸ். மருத்துவ கல்லூரியில் 51 இடங்களும் காலியாக உள்ளன.

    புதுச்சேரியியில் உள்ள லட்சுமி நாராயணா மருத்துவ கல்லூரியில் 45 இடங்கள், அறுபடை வீடு மருத்துவ கல்லூரியில் 36, மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரியில் 8, சேலம் விநாயகா மிஷன் மருத்துவ கல்லூரியில் 13, காரைக்கால் வினாயகா மிஷன் கல்லூரியில் 25 இடங்கள் நிரம்பாமல் உள்ளன.

    நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதால் இடங்கள் நிரம்பவில்லை என்று மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மருத்துவ கல்வி ஆணைய அதிகாரிகள் கூறும்போது ஒதுக்கப்பட்ட இடங்களில் மாணவ-மாணவிகள் சேராமல் இருந்தால் அந்த இடங்கள் காலியானதாக கருதப்படும். அடுத்து வரும் இறுதிகட்ட கலந்தாய்வில் மொத்தமுள்ள காலி இடங்களும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • உடற்பயிற்சி ஆசிரியர்கள் கூடுதலாக இடங்களுக்கு அறிவிப்பு வெளியிட வேண்டும்
    • நேற்று இரவு முதல் பள்ளியிலேயே தங்கி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள், பணி மாறுதல் செய்யப்பட உள்ளனர். இதையொட்டி திருவள்ளூர் மாவட்டத்திற்கான இடம் மாறுதல் கலந்தாய்வு கூட்டம் திருவள்ளூர் ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று தொடங்கியது.

    இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 47 பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்கள் 72 பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.

    மாவட்டத்தில் கடம்பத்தூர், திருவள்ளூர், பூந்தமல்லி, வில்லிவாக்கம், கும்மிடிப்பூண்டி ஆகிய ஒன்றியங்களில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி இடத்திற்கு தேர்வு செய்யலாம் என அறிவித்து ஏகாட்டூர், திருவூர் பள்ளிக்கு மட்டும் நேற்று இரவு 8 மணியளவில் ஒதுக்கீடு செய்ததாக தெரிகிறது.

    இதனால் குறைவான இடத்திற்கு ஆசிரியர் கலந்தாய்வு நடத்தப்பட்டதாகவும் ஆர்கே பேட்டை, திருத்தணி, பள்ளிப்பட்டு, திருவலங்காடு உள்ளிட்ட ஒன்றியங்களுக்கு பணி மாறுதல் அறிவிப்பு தரவில்லை என்று உடற்கல்வி ஆசிரியர்கள் குற்றம்சாட்டி முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதியை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்தனர்.

    உடற்பயிற்சி ஆசிரியர்கள் கூடுதலாக இடங்களுக்கு அறிவிப்பு வெளியிட வேண்டும் இல்லையென்றால் கலந்தாய்வுக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக கூறி நேற்று இரவு முதல் பள்ளியிலேயே தங்கி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கருத்து வேறுபாடு காரணமாக கோப்பை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார்.
    • ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு மீண்டும் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.

    புதுச்சேரி:

    தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது.

    தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு மருத்துவக்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்து கோப்பை கவர்னருக்கு அனுப்பியது. அப்போதைய கவர்னர் கிரண்பேடி இந்த கோப்புக்கு அனுமதி தரவில்லை.

    கருத்து வேறுபாடு காரணமாக கோப்பை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார். இதனால் உள் ஒதுக்கீட்டிற்கு அனுமதி கிடைக்கவில்லை. அதோடு இந்த கோப்பும் கிடப்பில் போடப்பட்டது.

    புதிதாக பொறுப்பேற்ற முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு மீண்டும் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.

    கடந்த மாதம் கவர்னர் தமிழிசை, அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கும்படி முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை கூடி உள்ஒதுக்கீடு வழங்க தீர்மானம் நிறைவேற்றி கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பியது. கவர்னர் தமிழிசை ஒப்புதல் வழங்கி மத்திய அரசு அனுமதிக்கு அனுப்பினார்.

    இதனிடையே நீட் அல்லாத கலை, அறிவியல், தொழில்படிப்புகளுக்கான 2 கட்ட கவுன்சிலிங் முடிவடைந்து, 3-ம் கட்ட கவுன்சிலிங் நடைபெற உள்ளது. பிற மாநிலங்களில் நீட் மதிப்பெண் அடிப்படையிலான மருத்துவ கவுன்சிலிங் நடத்தப்பட்டு முடிவடையும் நிலையில் உள்ளது. மாணவர்களும் கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர்.

    ஆனால் புதுவையில் மருத்துவ கல்விக்கான கவுன்சிலிங் தொடங்கவில்லை. உள் ஒதுக்கீடு அனுமதிக்காக கவுன்சிலிங் தொடங்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மருத்துவக்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    இதன்மூலம் எம்.பி.பி.எஸ். படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 37 இடங்கள் கிடைக்கும். அரசு மருத்துவக்கல்லூரியில் புதுவைக்கு 10, காரைக்காலுக்கு 2, மாகி 1 என 13 இடங்களும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் பிம்ஸ் 6, மணக்குள விநாயகர், வெங்கடேஸ்வரா கல்லூரிகளில் தலா 9 இடங்களும் கிடைக்கும்.

    இதுதவிர பி.டி.எஸ். 11 சீட், பி.ஏ.எம். 4 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும். மருத்துவ கல்விக்கான உத்தேச தரவரிசை பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு அனுமதி கிடைத்துள்ளதால் அவர்களும் விண்ணப்பிக்க அரசு வாய்ப்பளிக்க வேண்டும்.

    இதற்காக இன்று மாலை 5 மணி வரை அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க சென்டாக் அனுமதி அளித்துள்ளது.

    விண்ணப்பிக்காமல் விடுபட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். இதன்பிறகு மீண்டும் இறுதி தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும். இதன்பிறகு கவுன்சிலிங் நடைபெறும். இதனால் ஓரிருநாளில் மருத்துவ கல்விக்கான சென்டாக் கவுன்சிலிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பிய தமிழக அரசுக்கு ஆசிரியர்கள் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
    • தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 742 தலைமையாசிரியர் பணியி டங்கள் 2 ஆண்டுகளாக காலியாக இருந்து வந்தன.

    நாமக்கல்:

    தமிழகத்தில் கலந்தாய்வு மூலம் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பிய தமிழக அரசுக்கு ஆசிரியர்கள் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து முதுகலை ஆசிரியர்கள் சங்க மாநிலத்த லைவர் ராமு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    வேண்டுகோள்

    தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 742 தலைமையாசிரியர் பணியி டங்கள் 2 ஆண்டுகளாக காலியாக இருந்து வந்தன.

    மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இப்பணியிடங்களை உடன டியாக நிரப்ப நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சருக்கும், அமைச்ச ருக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் வழக்கில் பெறப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் தர வரிசை அடிப்படையில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

    கலந்தாய்வு

    அதனைத் தொடர்ந்து கடந்த 18-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மூத்த முதுகலை ஆசிரியர்களுக்கு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் 742 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு 182 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 637 மூத்த முதுகலை ஆசிரியர்கள் என 819 பேர் கொண்ட முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டது.

    697 பேர்

    இதில் 697 பேர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக தங்களுக்கு விருப்பமான மேல்நிலைப்பள்ளியைத் தேர்ந்தெடுத்தனர். 122 பேர் பதவி உயர்வு வேண்டாம் என்று மறுத்து விட்டனர்.

    இன்னும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 13, திருவண்ணா மலை மாவட்டத்தில் 12, விழுப்புரம் மாவட்டத்தில் 6, நாகப்பட்டினம் மாவட்டத்தில் 5, நீலகிரி மாவட்டத்தில் 5, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3, வேலூர் மாவட்டத்தில் 1 என 45 மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றையும் விரைந்து நிரப்ப பள்ளிக்கல்வித் துறை நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் மூத்த முதுகலை ஆசிரியர்கள், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வில் சென்றுள்ளதால், தற்பொழுது ஏற்பட்டுள்ள 600-க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு துணை பொதுமாறுதல் கலந்தாய்வையும் ஆன்லைன் வழியாக நடத்த பள்ளி கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நன்றி

    மேலும் 3 நாட்களாக நடைபெற்ற மேல்நி லைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு மிகவும் வெளிப்படை தன்மையுடனும் எந்த ஒரு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணி யிடமும் மறைக்கப்படாமலும் நேர்மையாகவும் நடந்தது. இதற்காக தமிழக முதல்-அமைச்சருக்கும், பள்ளி கல்வி அமைச்சருக்கும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். 

    • பொதுப்பிரிவினருக்கான நேரடிக்கலந்தாய்வு 22 மற்றும் 23-ந் தேதியும் நடக்கிறது.
    • மாணவர்கள் தங்களுக்கு வரும் குறுஞ்செய்தியை சரிபார்த்து நேரடி கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.

    கோவை,

    கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பாடத்தில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான நேரடி கலந்தாய்வு நாளை (21-ந் தேதி) நடக்கிறது.

    இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான பொதுப்பிரிவு மற்றும் தொழிற்முறை கல்வி பாடப்பிரிவினருக்கு நேரடி கலந்தாய்வு நாளை (21-ந் தேதி) மதியம் 3 மணி அளவில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அண்ணா அரங்கில் நடக்கிறது.

    மேலும், பொதுப்பிரிவினருக்கான நேரடிக்கலந்தாய்வு 22 மற்றும் 23-ந் தேதியும் நடக்கிறது. நேரடி கலந்தாய்விற்கான கால அட்டவணை பல்கலைக்கழகத்தின் http://tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 7.5 சதவீத இடஒதுக்கீடு பொதுப்பிரிவு, தொழில்முறை கல்வி பாடப்பிரிவினர், பொதுப்பிரிவினர் மாணவர்களுக்கு நேரடி கலந்தாய்வில் பங்கேற்க குறுஞ்செய்தி மாணவர்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.

    எனவே, மாணவர்கள் தங்களுக்கு வரும் குறுஞ்செய்தியை சரிபார்த்து நேரடி கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும். கலந்து கொள்ள தவறியவர்களுக்கு மறு பரீசிலனை செய்யப்ப டாது. இவ்வாறு அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

    • கலந்தாய்வு வருகிற 22-ந்தேதி வரை https://adm.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் நடைபெறுகிறது.
    • செப்டம்பர் 8-ந்தேதிக்குள் தேர்வு செய்த கல்லூரிகளில் மாணவர் சேர வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் 5½ ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பி.வி.எஸ்.சி., ஏ.எச்) 660 இடங்கள் இருக்கின்றன.

    இதைத் தவிர திருவள்ளூர் மாவட்டம் கோடுவெளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்களும், ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின் உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்களும் உள்ளன. இந்த 3 பட்டப்படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டவை. இப்படிப்புகளுக்கு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஏற்கனவே நிறைவடைந்து விட்டது. இதைத் தொடர்ந்த பி.வி.எஸ்.சி.-ஏ.எச் படிப்புக்கு பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து கலந்தாய்வு வருகிற 22-ந்தேதி வரை https://adm.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் நடைபெறுகிறது. கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் பதிவு செய்து கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

    தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் சேர்க்கை கடிதத்தை வருகிற 25-ந்தேதி முதல் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செப்டம்பர் 8-ந்தேதிக்குள் தேர்வு செய்த கல்லூரிகளில் மாணவர் சேர வேண்டும்.

    இவ்வாறு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது.

    • அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 606 மருத்துவ இடங்களில் சேர்ந்துள்ளனர்.
    • அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தவர்கள் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் சேராமல் இருப்பது வழக்கம்.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு ஆன்லைன் கலந்தாய்வு கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ இடங்கள் மாணவர்களின் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்டன.

    6326 எம்.பி.பி.எஸ். இடங்கள், 1768 பி.டி.எஸ். இடங்களுக்கு நடந்த கலந்தாய்வில் இடஒதுக்கீட்டை பின்பற்றி இடங்கள் நிரப்பப்பட்டன.

    அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 606 மருத்துவ இடங்களில் சேர்ந்துள்ளனர்.

    மருத்துவ கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள் கடந்த 11-ந் தேதி மாலைக்குள் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. கட்டணம் செலுத்துவதற்கு வசதியாக மேலும் 3 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. 14-ந் தேதி மாலைக்குள் கல்லூரிகளில் சேர அவகாசம் கொடுக்கப்பட்டது.

    அதன்படி பெரும்பாலான மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துவிட்டனர். ஒரு சிலர் சேரவில்லை. மருத்துவ கல்லூரிகளில் சேராமல் இருக்கும் மாணவ-மாணவிகளின் பெயர் விவரங்கள், காலி இடங்கள் பற்றிய தகவல்களை மருத்துவ கல்வி ஆணையத்திற்கு தெரிவிக்குமாறு அனைத்து முதல்வர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தவர்கள் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் சேராமல் இருப்பது வழக்கம். அந்த வகையில் உருவாகும் காலி இடங்கள் மற்றும் இடம் கிடைத்தவர்கள் வேறு காரணத்திற்காக மாறி செல்ல வசதியாக அந்த இடத்தை நிராகரித்து விட்டு செல்லவும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. முதல் கட்ட கலந்தாய்வில் இடம் கிடைத்தவர்கள் அதனை தேவையில்லை என்றால் விலகி செல்ல வருகிற 20-ந் தேதி வரை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் 2-வது கட்ட அகில இந்திய கலந்தாய்வு முடிந்து இறுதி முடிவு நாளை வெளியாக உள்ளது. அதில் இடம் பெற்றவர்கள் மூலமும் தமிழகத்தில் மருத்துவ இடங்கள் காலியாக வாய்ப்பு உள்ளது.

    இந்த இடங்களுக்கு 2-வது கட்ட கலந்தாய்வு 22-ந் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரியில் 3 இடங்கள் காலியாக உள்ளன. இதே போல் பிற மருத்துவ கல்லூரிகளிலும் இடங்கள் காலியாக வாய்ப்பு உள்ளது. அதன் முழு விவரம் இன்று மாலை தெரிந்துவிடும்.

    • பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இளநிலை பட்டப்படிபுக ளுக்கான கலந்தாய்வுகள் ஆகஸ்ட் 9ந் தேதி முதல் 11ந் தேதி வரை நடைபெற உள்ளது.
    • பங்கேற்ற தகுதியுள்ள மாணவர்களுக்கான அழைப்பு, எஸ்.எம்.எஸ்., இ-மெயில் மூலமாக விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    சின்னாளபட்டி:

    காந்தி கிராம பல்கலை க்கழகத்தில் 2023-24ம் கல்வி ஆண்டில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்க உள்ளது.

    பல்வேறு கால கட்டங்க ளில் நடத்த இதற்கான கலந்தாய்வு பட்டியலிட ப்பட்டுள்ளது. இது குறித்து பல்கலைக்கழகம் வெளி யிட்டுள்ள அறிக்கையில், இளநிலை பட்டப்படிபுக ளுக்கான கலந்தாய்வுகள் ஆகஸ்ட் 9ந் தேதி முதல் 11ந் தேதி வரை நடைபெற உள்ளது. முதுநிலை படிப்பு களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16, 17ந் தேதிகளில் நடக்க உள்ளது.

    பங்கேற்ற தகுதியுள்ள மாணவர்களுக்கான அழைப்பு, எஸ்.எம்.எஸ்., இ-மெயில் மூலமாக விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அழைப்பு கிடைக்கப்பெற்ற மாணவர்கள் மட்டும் கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மாணவர்கள் சேர்க்கை முடிவுறும் நிலையில் இருப்பதால் காலியிடங்கள் உள்ள அனைத்து பாடபிரிவுகளுக்கும் சேர்க்கை நடைபெறுகிறது.
    • வருகிற 31-ந் தேதி (திங்கட்கிழமை) மீதமுள்ள காலி யிடங்களுக்கும் சேர்க்கை நடைபெறும்.

    தருமபுரி 

    தருமபுரியில் செயல்பட்டு வரும் அரசு கலைக் கல்லூரியில் தற்போது இளநிலை பட்டப்படிப் பிற்கான முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கான 4-ம் கட்டமாக கலந்தாய்வு நடைபெற்று மாணவர்கள் சேர்த்து கொள்ளப்பட்டனர்.

    இந்த நிலையில் நாளை (27-ந் தேதி) மற்றும் 28-ந் தேதியும், 31-ந் தேதியும் 3 நாட்களுக்கு இளநிலை பட்டப்படிப்புகான 5-ம் கட்ட கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.

    இதுகுறித்து அரசு கலைக்கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

    தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை முடிவுறும் நிலையில் இருப்பதால் காலியிடங்கள் உள்ள அனைத்து பாடபிரிவுகளுக்கும் சேர்க்கை நடைபெறுகிறது.

    நாளை (27-ந்தேதி) இயற்பியல், வேதியியல், கணிதவியல், விலங்கியல், தாவரவியல். கணினி அறிவியல், கணினி பயன்பாடு, மின்னணுவியல், காட்சிவழித் தொடர்பியல், உளவியல், ஆடை வடிவமைப்பியல், புள்ளியியல் ஆகிய பாட பிரிவுகளுக்கும்,

    நாளை மறுநாளான்று (28-ந் தேதி) மொழிப் பாடங்களான தமிழ் மற்றும் ஆங்கிலம், வரலாறு, அரசியல் அறிவியல், பொருளியல், சமூகப்பணி, வணிகவியல், வணிகவியல் (கூட்டுறவு), வணிக நிர்வாகவியல் ஆகிய பாடபிரிவுகளுக்கும், வருகிற 31-ந் தேதி (திங்கட்கிழமை) மீதமுள்ள காலி யிடங்களுக்கும் சேர்க்கை நடைபெறும்.

    சேர்க்கையின் போது மாணவர்கள் விண்ணப்பப் படிவம், அசல் மாற்றுச் சான்றிதழ், அசல் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மதிப்பெண்கள் பட்டியல், சாதிசான்றிதழ் அசல் மற்றும் நகல், ஆதார் அட்டை அசல் மற்றும் நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல், 6 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, கலை மற்றும் வணிகவியல் பாடபிரிவுகளுக்கு ரூ.2980-யையும், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு ரூ.3 ஆயிரத்தையும், பி.காம் (சி.ஏ)., பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.சி.ஏ. பாடபிரிவுகளுக்கு ரூ.2100-யையும் சேர்க்கை கட்டணமும் எடுத்து வரவேண்டும். மேலும் விவரங்களுக்கு www.gacdpi.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

    சேர்க்கைக்காக இணையதளம் மூலம் விண்ணப்பித்து இடம் கிடைக்காத மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடபிரிவுகளை தேர்வு செய்ய அறிவிக்கப்பட்ட நாட்களில் காலை 10 மணி முதல் 11மணிக்குள் அசல் மற்றும் நகல் சான்றுடன் நேரில் வந்து கலந்தாய்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • பாதாள சாக்கடை திட்டம் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
    • ஜமாஅத் நிர்வாகிகள் பலர் தங்களது கருத்துக்க ளையும், சந்தேகங்களையும் கேட்டு தெளிவுபடுத்தி கொண்டனர்.

    கீழக்கரை

    கீழக்கரை நகராட்சியில் உள்ள பொதுமக்கள் பல ஆண்டுகளாக பாதாள சாக் கடை திட்டத்தினை அமுல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் தி.மு.க. கட்சி சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல் வாக் குறுதி அளித்தனர்.

    இந்த நிலையில் கீழக்கரை நகராட்சி கூட்ட அரங்கில் அனைத்து ஜமாஅத்தார்கள், நகர்மன்ற தலைவர், துணை தலைவர், நகர் மன்ற உறுப் பினர்கள், மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்ட பாதாள சாக்கடை திட்டம் பற்றிய கருத்து கேட்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

    இதில் நகராட்சி சார்பில் நகரிலுள்ள 21 வார்டுகள் முழுவதும் வெளியேறும் கழிவு நீரை கடற்கரை வரை கொண்டு சென்று அங்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்ட கட்டிடத்தில் செப்டிக் டேங்க் மற்றும் மின் மோட் டார் அறைகள் அமைத்து சுமார் ரூ. 13 கோடி அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய அரசு தயாராக உள்ளதாகவும், அதற்கு 3 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது என்றும், காணொலி மூலம் விளக்கி கூறப்பட்டது.மேலும் கீழக்கரை கடற் கரை பகுதியில் அரசு புறம் போக்கு நிலம் ஏதும் இல்லை என்பதால் செல்வந்தர்கள் மற்றும் சங்கங்கள் ஜமா அத்திற்கு உட்பட்ட இடங்கள் இருப்பின் யாரேனும் தான மாக தர முன்வந்தால் இத் திட்டம் அமுல்படுத்தப்பட்டு விரைவில் நடைமுறைக்கு வரும் என்ற தகவலுடன் கோரிக்கையும் வைக்கப் பட்டது. ஜமாஅத் நிர்வாகி கள் பலர் தங்களது கருத்துக்களையும், சந்தேகங்களையும் கேட்டு தெளிவுபடுத்தி கொண்டனர்.

    மேலும் இது குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் நகராட்சி பொறி யாளர் அவர்களிடம் விளக் கம் பெறலாம் என அறிவிக்கப்பட்டது.

    • தொழில்முறைக் கல்வி பாடப்பிரிவினருக்கான இணையவழி கலந்தாய்வு நேற்று தொடங்கியது.
    • கலந்தாய்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுடைய மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

    கோவை,

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடப்பாண்டு இளம் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கான இணையதள வழி கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகள் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.

    7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின்படி, அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது.

    தொழில்முறைக் கல்வி பாடப்பிரிவினருக்கான இணையவழி கலந்தாய்வு நேற்று தொடங்கியது. நாளை (16-ம் தேதி) வரை நடக்கிறது. இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 18-ம் தேதி நடக்கிறது. பொதுப்பிரிவினருக்கான இணையவழி முதல்கட்ட கலந்தாய்வு வரும் 17-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை நடக்கிறது.

    கலந்தாய்வில் பங்கேற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 20-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடக்கிறது. பொதுப்பிரினருக்கான நகர்வு முறை மற்றும் இணையதள வழி 2-ம் கட்ட கலந்தாய்வு வரும் 26-ம் தேதி மற்றும் 27-ம் தேதிகளில் நடக்கிறது.

    பொதுப்பிரிவில் இணையதள வழி இரண்டாம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொண்டவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 28-ம் தேதி மற்றும் 29-ம் தேதி நடக்கிறது. இணையதள வழி கலந்தாய்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுடைய மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×