search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்பிபிஎஸ்"

    • விழாவில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் மற்றும் கர்நாடக உள்துறை மந்திரி பரமேஸ்வரா உள்ளிட்டோர் பங்கேற்று பட்டம் வழங்கினர்.
    • பிரேதப் பரிசோதனையில் அவரது ரத்த மாதிரிகளில் அதிக அளவு விஷம் இருப்பது தெரியவந்துள்ளது.

    பெங்களூரு:

    பெங்களூருவில் இருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள துமகுருவின் புறநகரில் ஸ்ரீ சித்தார்த்தா மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஆதித் பாலகிருஷ்ணன் (வயது 21) என்பவர் எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். கல்லூரி அருகேயே வீடு எடுத்து ஆதித் வாடகைக்கு தங்கி இருந்தார். நேற்று முன்தினம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் மற்றும் கர்நாடக உள்துறை மந்திரி பரமேஸ்வரா உள்ளிட்டோர் பங்கேற்று பட்டம் வழங்கினர்.

    விழாவில் மாணவர் ஆதித் பாலகிருஷ்ணன் பட்டம் வாங்கிக் கொண்டு இரவு 11 மணியளவில் வீடு திரும்பினார். வீட்டின் அருகில் வாகனம் நிறுத்தும் இடத்திற்கு அருகே வந்தபோது அவரை விஷ பாம்பு கடித்தது. வீட்டின் அருகே பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் இருந்து இந்த விஷ பாம்பு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    பாம்பு கடித்ததை அவர் உணரவில்லை. வீட்டிற்கு வந்ததும் அவர் கீழே சுருண்டு விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டார். திருச்சூரில் இருந்து பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். மாணவனின் தந்தை இத்தாலியில் உள்ளார். அவருக்கு இது பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து துமகூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து ஒரு போலீஸ் அதிகாரி கூறுகையில், மாணவர் ஆதித் பாலகிருஷ்ணன் உடலில் பாம்புக்கடித்தற்கான அடையாளம் காணப்பட்ட நிலையில் பிரேதப் பரிசோதனையில் அவரது ரத்த மாதிரிகளில் அதிக அளவு விஷம் இருப்பது தெரியவந்துள்ளது என்றனர்.

    கல்லூரி துணை முதல்வர் டாக்டர் பிரபாகர ஜி.என் கூறுகையில், ஆதித் சிறந்த மாணவர். அவரை சரியான நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று காப்பாற்ற முடியாமல் போய்விட்டது என்றார்.

    • தமிழகத்தில் மட்டும் 483 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.
    • புதுச்சேரியில் 162 இடங்களும், மகாராஷ்டிராவில் 154 இடங்களும், ராஜஸ்தானில் 121 இடங்களும், கர்நாடகாவில் 118 இடங்களும் காலியாக உள்ளன.

    சென்னை:

    தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள் ஆன்லைன் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. 3 கட்ட கலந்தாய்வு முடிந்து தற்போது இறுதி சுற்று நடைபெற்று வருகிறது.

    மாநில அரசின் எம்.பி.பி.எஸ். ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்தும் நிரம்பி விட்டன. வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான இடங்களில் சேராமல் காலாவதியாகும் 34 இடங்களுக்கு இறுதி சுற்று கலந்தாய்வு இன்று நடக்கிறது. இதற்கான விவரங்கள் மருத்துவ கல்வி இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி வருகிற 30-ந்தேதிக்குள் கலந்தாய்வு முடிக்கப்பட வேண்டும்.

    இந்த நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கும் மத்திய மருத்துவ குழு 3 கட்டமாக கலந்தாய்வை நடத்தி முடித்துள்ளது. இதில் நாடு முழுவதும் 1640 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளன. அதில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் 872 ஆகும்.

    தமிழகத்தில் மட்டும் 483 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள 59 அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பாமல் உள்ளன. மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் 1 டஜன் இடங்கள் நிரம்பவில்லை.

    அகில இந்திய அளவில் காலியாக உள்ள இடங்களை வருகிற 30-ந்தேதிக்குள் திரும்ப பெற வேண்டும் அல்லது சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை தனியார் கல்வி நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன.

    மேலும் தனியார் கல்வி நிறுவனங்கள் கட்-ஆப் மதிப்பெண்களை 30 வரை குறைக்க மத்திய அரசிடம் வற்புறுத்தி வருகின்றன.

    இதுகுறித்து மருத்துவ கல்வி பயிற்சி நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் ஒருவர் கூறியதாவது:-

    அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள் 872, எய்ம்ஸ், ஜிப்மர், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் 44 இடங்கள் காலியாக உள்ளன. காலியாக உள்ள இடங்களை ஒப்பிடுகையில் ஐந்தில் இரண்டு பங்கு இடங்கள் மட்டுமே நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ளவை. மேலும் 44 இடங்கள் என்.ஆர்.ஐ. பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு நிரப்பப்படாமல் உள்ளன.

    கிட்டதட்ட 50 சதவீத காலி இடங்கள் அரசு கல்லூரிகளில் உள்ளன. முந்தைய சுற்றுகளில் சீட் ஒதுக்கப்பட்ட மாணவர்களுக்கு "இலவச வெளியேறுதல்" மற்றும் ஒத்திவைக்கப்படாத கவுன்சிலிங் செயல்முறை ஆகியவற்றால் காலி இடங்கள் அதிகளவில் உருவாகி உள்ளன.

    புதுச்சேரியில் 162 இடங்களும், மகாராஷ்டிராவில் 154 இடங்களும், ராஜஸ்தானில் 121 இடங்களும், கர்நாடகாவில் 118 இடங்களும் காலியாக உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாணவர்கள் இந்த கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்யாவிட்டால் அல்லது அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் உள்ள கல்லூரிகளில் சேரவில்லை என்றால் இந்த உயர் தேவை இடங்கள் காலியானதாக அறிவிக்கப்படும்.

    மத்திய மற்றும் மாநில கலந்தாய்வில் இடங்கள் தடைபடுவதை தவிர்க்க மாநிலங்கள் கலப்பின கவுன்சிலிங்கிற்கு செல்ல வேண்டும் என்று பெற்றோர்களும், மாணவர்களும் கூறுகின்றனர்.

    • எந்தெந்த கல்லூரிகளில் மாணவர்கள் சேராமல் காலியாக இருக்கின்றன என்ற விவரங்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருகிறது.
    • நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதால் இடங்கள் நிரம்பவில்லை என்று மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 2 கட்டமாக கலந்தாய்வு நடந்து முடிந்து உள்ளது. இது தவிர நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களையும் தமிழக மருத்துவ கல்வி ஆணையம் கலந்தாய்வு மூலம் நிரப்பி வருகிறது.

    அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள் பெரும்பாலானவை நிரம்பிவிட்டன. 2-வது கட்ட கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்த மாணவ-மாணவிகள் கல்லூரிகளில் சேருவதற்கு நேற்று வரை அவகாசம் கொடுக்கப்பட்டது.

    எந்தெந்த கல்லூரிகளில் மாணவர்கள் சேராமல் காலியாக இருக்கின்றன என்ற விவரங்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருகிறது. அந்த இடங்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

    இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 10 நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் 450க்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளன.

    நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் மருத்துவ இடங்களை இந்திய மருத்துவ கல்வி ஆணையம் நிரப்பி வருகிறது. 3 கட்டமாக நடந்து முடிந்துள்ள கலந்தாய்வுக்கு பிறகு இடங்கள் காலியாக உள்ளன. நாடு முழுவதும் உள்ள 51 நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மொத்த மருத்துவ இடங்களை நிரப்ப நடத்தப்பட்ட கலந்தாய்வில் இதுவரை 7922 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரம்பாமல் காலியாக உள்ளன.

    சென்னையில் உள்ள ஸ்ரீ சத்யசாய் மருத்துவ கல்லூரியில் மட்டும் 80 சதவீத இடங்கள் காலியாக உள்ளன. அதாவது 198 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரம்பவில்லை. பாரத் மருத்துவ கல்லூரியில் 58 இடங்களும், பாலாஜி மருத்துவ கல்லூரியில் 47 இடங்களும், ஏ.சி.எஸ். மருத்துவ கல்லூரியில் 51 இடங்களும் காலியாக உள்ளன.

    புதுச்சேரியியில் உள்ள லட்சுமி நாராயணா மருத்துவ கல்லூரியில் 45 இடங்கள், அறுபடை வீடு மருத்துவ கல்லூரியில் 36, மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரியில் 8, சேலம் விநாயகா மிஷன் மருத்துவ கல்லூரியில் 13, காரைக்கால் வினாயகா மிஷன் கல்லூரியில் 25 இடங்கள் நிரம்பாமல் உள்ளன.

    நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதால் இடங்கள் நிரம்பவில்லை என்று மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மருத்துவ கல்வி ஆணைய அதிகாரிகள் கூறும்போது ஒதுக்கப்பட்ட இடங்களில் மாணவ-மாணவிகள் சேராமல் இருந்தால் அந்த இடங்கள் காலியானதாக கருதப்படும். அடுத்து வரும் இறுதிகட்ட கலந்தாய்வில் மொத்தமுள்ள காலி இடங்களும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • 24-ந்தேதி காலை 10 மணி முதல் 28-ந்தேதி மாலை 5 மணி வரை இடங்களை தேர்வு செய்ய வேண்டும்.
    • செப்டம்பர் 1-ந்தேதி முதல் 4-ந்தேதி மாலை 5 மணி வரை கல்லூரிகளில் சேருவதற்கான ஆணையை இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு இடங்கள் மற்றும் நிர்வாக இடங்களுக்கு முதல்கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்து உள்ளது.

    முதல் சுற்று கலந்தாய்வுக்கு பிறகு அரசு ஒதுக்கீட்டில் 119 எம்.பி.பி.எஸ்., 85 பி.டி.எஸ். இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 648 எம்.பி.பி.எஸ்., 767 பி.டி.எஸ். இடங்களும் காலியாக உள்ளன. மொத்தம் 1670 மருத்துவ இடங்கள் இருக்கின்றன.

    அந்த இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வுக்கு தகுதியானவர்கள் இன்றும் நாளையும் இணையதளங்களில் பதிவு செய்ய வேண்டும். நாளை மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம்.

    24-ந்தேதி காலை 10 மணி முதல் 28-ந்தேதி மாலை 5 மணி வரை இடங்களை தேர்வு செய்ய வேண்டும். வருகிற 29, 30-ந்தேதிகளில் தர வரிசைப்பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

    தொடர்ந்து வரும் 31-ந் தேதி இடங்கள் குறித்த விண்ணப்பங்கள் இணைய தளத்தில் வெளியிடப்படும்.

    செப்டம்பர் 1-ந்தேதி முதல் 4-ந்தேதி மாலை 5 மணி வரை கல்லூரிகளில் சேருவதற்கான ஆணையை இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். செப்டம்பர் 4-ந்தேதி மாலை 5 மணிக்குள் இட ஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் மாணவர்கள் சேர வேண்டும் என்று மருத்துவ கல்வி தேர்வுக்குழும செயலர் டாக்டர் முத்துசெல்வன் தெரிவித்தார்.

    • வருகிற 24-ந் தேதி காலை 10 மணி முதல் 28-ந் தேதி மாலை 5 மணி வரை இடங்களைத் தோ்வு செய்ய வேண்டும்.
    • வருகிற 31-ந் தேதி இடங்கள் ஒதுக்கீடு குறித்த விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்படும்.

    சென்னை:

    தமிழகத்தில் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு 2023-24 கல்வியாண்டு மாணவா் சோ்க்கைகான முதல் சுற்று கலந்தாய்வு அண்மையில் நிறைவடைந்தது.

    அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு, விளையாட்டு வீரா், முன்னாள் ராணுவத்தினா் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகளுக்கான உள் ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு சென்னை, கிண்டியில் உள்ள கலைஞா் நூற்றாண்டு நினைவு உயா் சிறப்பு மருத்துவமனையில் நேரடியாக நடைபெற்றது. பொதுப்பிரிவு கலந்தாய்வு இணைய வழியே நடைபெற்றது. முதல் சுற்று கலந்தாய்வுக்குப் பிறகு அரசு ஒதுக்கீட்டில் 119 எம்.பி.பி.எஸ்., 85 பி.டி.எஸ். இடங்களும், நிா்வாக ஒதுக்கீட்டில் 648 எம்.பி.பி.எஸ், 818 பி.டி.எஸ். இடங்களும் காலியாக உள்ளன. இந்த நிலையில், அந்த இடங்களை நிரப்புவதற்கான 2-ம் சுற்று கலந்தாய்வு இணைய வழியே நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தேதி தொடங்குகிறது.

    இதுதொடா்பாக மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்ககத்தின் தோ்வுக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    2-ம் சுற்று கலந்தாய்வுக்கு தகுதியானவா்கள் வருகிற 21-ந் தேதி காலை 10 மணி முதல் 22-ந் தேதி மாலை 5 மணி வரை இணையதளங்களில் பதிவு செய்யலாம்.

    வருகிற 24-ந் தேதி காலை 10 மணி முதல் 28-ந் தேதி மாலை 5 மணி வரை இடங்களைத் தோ்வு செய்ய வேண்டும். ஆகஸ்ட் 29, 30 ஆகிய தேதிகளில் தரவரிசைப்பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

    இதைத் தொடா்ந்து வருகிற 31-ந் தேதி இடங்கள் ஒதுக்கீடு குறித்த விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்படும். செப்டம்பா் 1-ந் தேதி முதல் 4-ந் தேதி மாலை 5 மணி வரை கல்லூரிகளில் சேருவதற்கான ஆணையை இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செப்டம்பா் 4-ந் தேதி மாலை 5 மணிக்குள் இட ஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 606 மருத்துவ இடங்களில் சேர்ந்துள்ளனர்.
    • அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தவர்கள் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் சேராமல் இருப்பது வழக்கம்.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு ஆன்லைன் கலந்தாய்வு கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ இடங்கள் மாணவர்களின் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்டன.

    6326 எம்.பி.பி.எஸ். இடங்கள், 1768 பி.டி.எஸ். இடங்களுக்கு நடந்த கலந்தாய்வில் இடஒதுக்கீட்டை பின்பற்றி இடங்கள் நிரப்பப்பட்டன.

    அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 606 மருத்துவ இடங்களில் சேர்ந்துள்ளனர்.

    மருத்துவ கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள் கடந்த 11-ந் தேதி மாலைக்குள் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. கட்டணம் செலுத்துவதற்கு வசதியாக மேலும் 3 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. 14-ந் தேதி மாலைக்குள் கல்லூரிகளில் சேர அவகாசம் கொடுக்கப்பட்டது.

    அதன்படி பெரும்பாலான மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துவிட்டனர். ஒரு சிலர் சேரவில்லை. மருத்துவ கல்லூரிகளில் சேராமல் இருக்கும் மாணவ-மாணவிகளின் பெயர் விவரங்கள், காலி இடங்கள் பற்றிய தகவல்களை மருத்துவ கல்வி ஆணையத்திற்கு தெரிவிக்குமாறு அனைத்து முதல்வர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தவர்கள் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் சேராமல் இருப்பது வழக்கம். அந்த வகையில் உருவாகும் காலி இடங்கள் மற்றும் இடம் கிடைத்தவர்கள் வேறு காரணத்திற்காக மாறி செல்ல வசதியாக அந்த இடத்தை நிராகரித்து விட்டு செல்லவும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. முதல் கட்ட கலந்தாய்வில் இடம் கிடைத்தவர்கள் அதனை தேவையில்லை என்றால் விலகி செல்ல வருகிற 20-ந் தேதி வரை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் 2-வது கட்ட அகில இந்திய கலந்தாய்வு முடிந்து இறுதி முடிவு நாளை வெளியாக உள்ளது. அதில் இடம் பெற்றவர்கள் மூலமும் தமிழகத்தில் மருத்துவ இடங்கள் காலியாக வாய்ப்பு உள்ளது.

    இந்த இடங்களுக்கு 2-வது கட்ட கலந்தாய்வு 22-ந் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரியில் 3 இடங்கள் காலியாக உள்ளன. இதே போல் பிற மருத்துவ கல்லூரிகளிலும் இடங்கள் காலியாக வாய்ப்பு உள்ளது. அதன் முழு விவரம் இன்று மாலை தெரிந்துவிடும்.

    • மாணவா்கள் மற்றும் பெற்றோரின் கோரிக்கையை ஏற்று, மருத்துவ மாணவா்கள் கல்லூரிகளில் சோ்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • கல்விக் கட்டணம் செலுத்த அவகாசம் வேண்டும் என பெற்றோா் கோரிக்கை வைத்தனா்.

    சென்னை:

    தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டுக்கான முதல்கட்ட மாணவா் சோ்க்கை நிறைவடைந்து உள்ளது. இதில், சிறப்பு ஒதுக்கீட்டு இடங்கள் தவிர, மற்ற இடங்கள் இணைய வழியில் நடைபெற்றது. அதன்படி, அனைத்து இடங்களும் தகுதியான மாணவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மருத்துவ இடங்கள் பெற்று சோ்க்கை ஆணை பெற்றவா்கள் நேற்று மாலைக்குள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் சேர வேண்டும். அவ்வாறு சேராத இடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டு, 2-ம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, மாணவா்கள் மற்றும் பெற்றோரின் கோரிக்கையை ஏற்று, மருத்துவ மாணவா்கள் கல்லூரிகளில் சோ்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மருத்துவ மாணவா் தோ்வுக்குழு செயலா் முத்துசெல்வன் கூறுகையில், கல்விக் கட்டணம் செலுத்த அவகாசம் வேண்டும் என பெற்றோா் கோரிக்கை வைத்தனா்.

    அதை ஏற்று, மருத்துவ இடங்களைப் பெற்ற மாணவா்கள் கல்லூரிகளில் சேருவதற்கான கால அவகாசம் வருகிற 14-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்பின், கல்லூரிகளில் சேராதவா்களின் இடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டு, 2-ம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும் என்றாா்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீட் மார்க் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் அவர்கள் விரும்பிய கல்லூரிகளை தேர்வு செய்தனர்.
    • முதல்கட்ட கலந்தாய்வில் 80 முதல் 90 சதவீத இடங்கள் நிரம்பி விட்டதாக மருத்துவ சேர்க்கை செயலாளர் டாக்டர் முத்து செல்வன் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீடு கொண்ட சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள 6226 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும், பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள 1767 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கைக்காக கடந்த 25-ந் தேதி முதல் கட்ட கலந்தாய்வு தொடங்கியது. ஆன்லைன் வழியாக நடந்த இக்கலந்தாய்வில் 40 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர்.

    அரசின் சிறப்பு பிரிவு ஒதுக்கீட்டின் கீழ் முதலில் இடங்கள் ஒதுக்கப்பட்டன. பொது கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்து லாக் செய்தனர். நீட் மார்க் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் அவர்கள் விரும்பிய கல்லூரிகளை தேர்வு செய்தனர். அவர்களுக்கு நேற்று இடங்கள் ஒதுக்கப்பட்டன.

    அதனை தொடர்ந்து ஒதுக்கீட்டு கடிதத்தை பதிவிறக்கம் செய்து அந்தந்த கல்லூரிகளில் சேர வேண்டும். கல்லூரிகளில் சேருவதற்கு 11-ந் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் முதல்கட்ட கலந்தாய்வில் 80 முதல் 90 சதவீத இடங்கள் நிரம்பி விட்டதாக மருத்துவ சேர்க்கை செயலாளர் டாக்டர் முத்து செல்வன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:-

    அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அனைத்து அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களும் நிரம்பி விட்டன. அதே போல் அரசு கல்லூரிகளில் உள்ள பி.டி.எஸ். இடங்களும் நிரம்பின. சுயநிதி கல்லூரிகளில் பி.டி.எஸ். இடங்கள் கொஞ்சம் காலியாக உள்ளன.

    என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் சுயநிதி கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரம்பவில்லை. 11-ந் தேதி மாலைவரை கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது.

    அதன் பிறகு தான் எத்தனை பேர் கல்லூரிகளில் சேரவில்லை என முழுமையாக தெரியவரும்.

    அதில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழக மாணவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரியை தேர்வு செய்துள்ளார். இது போல் ஏற்படும் காலி இடங்கள் பட்டியல் எடுக்கப்பட்டு 2-வது கட்ட கலந்தாய்வு நடத்தப்படும் மொத்தம் 4 கட்டமாக கலந்தாய்வு நடத்தி முடிக்கப்படும்.

    இந்த மாதம் இறுதிக்குள் பெரும்பாலான மருத்துவ இடங்கள் நிரம்பி விடும். செப்டம்பர் 1-ந் தேதி முதல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு பள்ளியில் படித்த 606 மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
    • மருத்துவ படிப்பில் சேரும் மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற தகுதி உடையவர்கள்.

    சென்னை:

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கியது. பொது கலந்தாய்வில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் விருப்ப இடங்களை தேர்வு செய்தனர். 20 ஆயிரத்து 83 பேர் மருத்துவ இடங்களை தேர்வு செய்தனர்.

    இட ஒதுக்கீடு இறுதி முடிவு நாளை வெளியிடப்பட உள்ளது. இடங்களை தேர்வு செய்தவர்கள் ஒதுக்கீட்டு ஆணை நாளை (6-ந்தேதி) முதல் பதிவிறக்கம் செய்யலாம்.

    ஒதுக்கீட்டு கடிதம் பெற்ற மாணவ-மாணவிகள் 11-ந் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அரசு பள்ளியில் படித்த 606 மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள் பெற்றுள்ள 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு மாணவ-மாணவிகளிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கக்கூடாது என அரசு அறிவித்துள்ளது.

    அதனை அனைத்து மருத்துவக் கல்லூரி டீன்கள் மற்றும் முதல்வர்கள் பின்பற்ற வேண்டும் என தற்போது அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் டாக்டர் சாந்தி மலர் அனைத்து அரசு, சுயநிதி மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    7.5 சதவீத அரசு சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் இடங்களை பெற்றுள்ள மாணவ-மாணவிகளிடம் கல்வி கட்டணம், சிறப்பு கட்டணம், விடுதி, உணவு கட்டணம், புத்தகம், வெள்ளை கோட், ஸ்டெதஸ்கோப், பல்கலைக்கழக பதிவு கட்டணம், இன்சூரன்ஸ் கட்டணம் உள்பட எவ்வித கட்டணமும் வசூலிக்கக்கூடாது.

    கடந்த ஆண்டை போலவே இந்த வருடமும் பின்பற்ற வேண்டும்.

    மருத்துவ படிப்பில் சேரும் மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற தகுதி உடையவர்கள். அதனால் அவர்களது விண்ணப்பத்தை உயர்கல்வி துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    மேலும் அரசு பள்ளி மாணவர்கள் கல்வி கற்பிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களிடம் எவ்வித கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் அந்த கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பொது கலந்தாய்வில் விருப்ப இடங்களை தேர்வு செய்வதற்கான அவகாசம் நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது.
    • இடஒதுக்கீடு இறுதி முடிவு நாளை வெளியிடப்பட உள்ளது.

    சென்னை:

    2023-24-ம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த மாதம் (ஜூலை) 25-ந் தேதி தொடங்கியது.

    பொது கலந்தாய்வில் விருப்ப இடங்களை தேர்வு செய்வதற்கான அவகாசம் நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது. கலந்தாய்வில் பங்குபெற்று விருப்ப இடங்களை 20 ஆயிரத்து 83 மாணவ-மாணவிகள் தேர்வு செய்து இருக்கின்றனர்.

    இடஒதுக்கீடு இறுதி முடிவு நாளை (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் அந்த கல்லூரிகளில் இடங்கள் பெற்றவர்களின் நிலை கேள்விக் குறியாகி உள்ளது.
    • சேர்வதற்கு வாய்ப்பு உள்ளதா, இல்லையா? எனத் தெரியாமல் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் இருவேறு தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்கை நடத்த தேசிய மருத்துவ ஆணையம் (என்.எம்.சி.) தடை விதித்து உள்ளது. நடப்பாண்டில் 400 எம்.பி.பி.எஸ். இடங்களை நிரப்ப முடியாத நிலை எழுந்து உள்ளது.

    இரு கல்லூரிகளுமே நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்தில் உள்ளதால் மாநில ஒதுக்கீட்டு இடங்கள் ஏதும் அதில் இல்லை. அதே வேளையில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் அந்த கல்லூரிகளில் இடங்கள் பெற்றவர்களின் நிலை கேள்விக் குறியாகி உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் உள்ள வேல்ஸ் மருத்துவ கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. கடந்த ஆண்டில் 100 இடங்களுக்கு மட்டுமே என்.எம்.சி. அனுமதி அளித்தது. ஆனால் 150 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடை பெற்றதாகவும் அதனால் நடப்பாண்டில் அங்கு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் என்.எம்.சி. இணையப்பக்கத்தில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    அதே போல் காஞ்சிபுரம் ஏனாத்தூரில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரிக்கும் நடப்பாண்டில் தேசிய மருத்துவ ஆணையம் அங்கீகாரம் வழங்கவில்லை. அந்த கல்லூரியில் 250 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. தற்போது அங்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படாது என்றும் அகில இந்திய கலந்தாய்வில் மாணவர்கள் அந்த கல்லூரியை தேர்வு செய்ய வேண்டாம் என்றும் மத்திய மருத்துவ கலந்தாய்வுக் குழு அண்மையில் அறிக்கை வெளியிட்டது.

    ஏற்கனவே அங்கு இடங்களை தேர்வு செய்திருந்தாலும் அவர்களுக்கு மாற்று தேர்வு இடங்கள் வழங்கப்படும் என்றும் கூறி இருந்தது. இதன் காரணமாக அகில இந்திய ஒதுக்கீட்டின் முதல் சுற்று கலந்தாய்வில் மீனாட்சி மருத்துவ கல்லூரியின் எம்.பி.பி.எஸ். இடங்கள் எந்த மாணவருக்கும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

    அதே வேளையில் என்.எம்.சி.யின் அறிக்கை வெளியாவதற்கு முன்பே கலந்தாய்வில் வேல்ஸ் கல்லூரியில் சில மாணவர்கள் எம்.பி.பி.எஸ். இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தெரிகிறது.

    இதனால் அங்கு சேர்வதற்கு வாய்ப்பு உள்ளதா, இல்லையா? எனத் தெரியாமல் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில சுகாதார அமைச்சகங்களுக்கு மாணவர்கள் தரப்பில் இருந்து விளக்கம் கோரி கடிதங்கள் அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    • நிர்வாக ஒதுக்கீட்டில் நீட் மார்க் 715 முதல் 107 வரை உள்ள மாணவர்கள் முதல் சுற்றில் பங்கேற்க தகுதி உடையவர்கள்.
    • சனி, ஞாயிறு விடுமுறை நாட்களாக இருப்பதால் வங்கி வரைவோலை எடுப்பதில் சிரமம் உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ இடங்கள் ஆன்லைன் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

    இதற்கான முதல்கட்ட பொது கலந்தாய்வு கடந்த 25-ந்தேதி தொடங்கியது. 27-ந்தேதி சிறப்பு பிரிவு மாணவ-மாணவிகளுக்கு சென்னையில் நேரடி கலந்தாய்வு நடத்தப்பட்டது.

    பொது கலந்தாய்வில் பங்கேற்கின்ற மாணவ-மாணவிகள் 25-ந்தேதி காலை 10 மணி முதல் 31-ந்தேதி வரை மாலை 5 மணி வரை இடங்களை தேர்வு செய்து லாக் செய்வதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

    அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரேங்க் பட்டியலில் 1-ல் இருந்து 25,856 வரை உள்ள நீட் மார்க் 720-ல் இருந்து 107 வரை உள்ள மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

    இதேபோல நிர்வாக ஒதுக்கீட்டில் நீட் மார்க் 715 முதல் 107 வரை உள்ள மாணவர்கள் முதல் சுற்றில் பங்கேற்க தகுதி உடையவர்கள்.

    இந்த நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு முடிவு தாமதம் ஆகிறது. இன்று வரவேண்டிய முடிவு தள்ளிப்போவதால் அதில் இடம் கிடைக்காதவர்கள் தமிழக மாநில ஒதுக்கீட்டு இடங்களை பெற வரக்கூடும்.

    அதனால் தமிழக மாணவர்களின் நலன் கருதி இடங்களை தேர்வு செய்வற்கு மேலும் 3 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    31-ந்தேதி மாலை வரை இடங்களை தேர்வு செய்ய கொடுக்கப்பட்ட வாய்ப்பு ஆகஸ்டு 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    3-ந்தேதி மாலை 5 மணி வரை கூடுதலாக அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களாக இருப்பதால் வங்கி வரைவோலை எடுப்பதில் சிரமம் உள்ளது. அதனை கருத்தில் கொண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் முத்துசெல்வன் தெரிவித்துள்ளார்.

    ×