search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நீட் தேர்வில் உயர் மதிப்பெண் பெற்றவர்கள் அதிகரிப்பு- எம்.பி.பி.எஸ். கட்-ஆப் மார்க் 5 முதல் 10 வரை உயர வாய்ப்பு
    X

    நீட் தேர்வில் உயர் மதிப்பெண் பெற்றவர்கள் அதிகரிப்பு- எம்.பி.பி.எஸ். கட்-ஆப் மார்க் 5 முதல் 10 வரை உயர வாய்ப்பு

    • கடந்த ஆண்டு 500 மதிப்பெண்ணுக்கு மேல் 80 ஆயிரம் மாணவர்கள் பெற்றனர்.
    • கூடுதல் இடங்கள் வரவில்லை என்றால் 8 முதல் 10 மதிப்பெண் வரை அதிகரிக்கும்.

    சென்னை:

    நாடு முழுவதும் கடந்த மாதம் நடந்த நீட் தேர்வை சுமார் 20 லட்சம் பேர் எழுதினார்கள். தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்து 47 ஆயிரம் மாணவ - மாணவிகள் எழுதினர். தேர்வு எழுதியவர்களில் 11 லட்சத்து 45 ஆயிரத்து 976 பேர் தேர்ச்சி பெற்றனர்.

    தமிழகத்தில் தேர்வு எழுதியவர்களில் 78 ஆயிரத்து 693 பேர் வெற்றி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 54.55 சதவீதமாகும். கடந்த ஆண்டைவிட ஒப்பிடும் போது தமிழகத்தில் தேர்ச்சி விகிதம் குறைந்து உள்ளது.

    கடந்த ஆண்டை ஒப்பிடும்போது தேர்ச்சி விகிதம் குறைந்த போதிலும் உயர் மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அகில இந்திய அளவில் 600 மார்க்கிற்கு மேல் பெற்றவர்கள் கடந்த வருடம் 26 ஆயிரம் பேர் இருந்தனர். இந்த ஆண்டு 28 ஆயிரம் பேர் பெற்றுள்ளனர்.

    இதேபோல கடந்த ஆண்டு 500 மதிப்பெண்ணுக்கு மேல் 80 ஆயிரம் மாணவர்கள் பெற்றனர். இந்த ஆண்டு இது 1 லட்சத்து 5 ஆயிரமாக உயர்ந்து உள்ளது. 25 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக உயர் மதிப்பெண் பெற்று இருக்கிறார்கள். இதனால் மருத்துவ கட்-ஆப் மதிப்பெண் 5 முதல் 10 வரை உயர வாய்ப்பு உள்ளது.

    இதுகுறித்து கல்வியாளர் சேலம் ஜெயபிரகாஷ் காந்தி கூறியதாவது:-

    இந்த வருடம் நீட் தேர்வில் உயர் மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகம் இருப்பதால் எம்.பி.பி.எஸ். கட் ஆப் மார்க் 5 முதல் 10 வரை உயர வாய்ப்பு உள்ளது.

    மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் வரும் பட்சத்தில் கட்-ஆப் மதிப் பெண் 3 முதல் 5 வரை உயரக் கூடும். கூடுதல் இடங்கள் வரவில்லை என்றால் 8 முதல் 10 மதிப்பெண் வரை அதிகரிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×