search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அட்டவணை"

    • இளைஞர்களுடைய எதிர்காலத்தைப் பற்றி தி.மு.க. அரசுக்கு அக்கறையில்லை என்பதும் தெள்ளத் தெளிவாகிறது.
    • இளைஞர்களுடைய எதிர்காலத்தைப் பற்றி தி.மு.க. அரசுக்கு அக்கறையில்லை என்பதும் தெள்ளத் தெளிவாகிறது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2021-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது, "அரசுத் துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்" மற்றும் "புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்" என 2 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.

    இந்த சூழ்நிலையில், கடந்த மூன்றாண்டுகளில் வெறும் 60,567 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டு உள்ளதாக அரசு தெரிவித்திருப்பது, காலிப் பணியிடங்களை நிரப்புவதில் தி.மு.க. அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுகிறது என்பதும், இளைஞர்களுடைய எதிர்காலத்தைப் பற்றி தி.மு.க. அரசுக்கு அக்கறையில்லை என்பதும் தெள்ளத் தெளிவாகிறது.

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் துறைகளிலும் கிட்டத்தட்ட 50 சதவீதம் காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், ஒவ்வொரு துறையிலும், பதவி வாரியாக எத்தனை காலிப் பணியிடங்கள் உள்ளன என்ற புள்ளி விவரத்தையும், அந்தப் பணியிடங்கள் அனைத்தும் எப்போது நிரப்பப்படும் என்பதற்கான அட்டவணையையும் உடனடியாக வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு நடத்துவது தொடர்பாக முக்கிய முடிவு.
    • மாணவர்களின் தேவையைக் கண்டறிந்து 12-ம் தேதி பாடப் புத்தகம் வழங்கவும் உத்தரவு.

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிச்சாங் புயலால் கடும் வெள்ள சேதம் ஏற்பட்டது. இந்த மழை வெள்ளத்தால் மக்கள் பெரிய அளவில் சிரமப்பட்டனர். லட்சக்கணக்கானோர் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொருட்கள் அனைத்தையும் இழந்து தவிக்கின்றனர்.

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு நடத்துவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படுவதாகளும், ஆய்வுக்கூட்டம் நடத்திய பிறகு முடிவு அறிவிக்கப்படும் எனவும் கூறினார்.

    இதைதொடர்ந்து, தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்," நாளை அரையாண்டு தேர்வுகள் தொடங்க இருந்த நிலையில் புத்தகங்கள் இல்லாமல் மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக முடியாது என்பதை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் நாளை தொடங்க இருந்த தேர்வுகளை வரும் 13-ம் தேதி தொடங்க வேண்டும்" என கல்வித்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    புதிய கால அட்டவணையை வெளியிடவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மாணவர்களின் தேவையைக் கண்டறிந்து 12-ம் தேதி பாடப் புத்தகம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் 6 முதல் 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு வரும் 13ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பொதுத்தேர்வு நடைபெறும் தேதி குறித்து அறிவிக்கப்படாமல் உள்ளது.
    • ஒரு சில நாட்களில் பொதுத் தேர்வு அட்டவணை வெளியாகும் என அமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

    தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் தேதி குறித்து அறிவிக்கப்படாமல் உள்ளது.

    10,11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியிடப்படும் என தகவவல் வெளியாகியுள்ளது.

    ஒரு சில நாட்களில் 10,11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியாகும் என அமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

    இந்நிலையில், பொதுத்தேர்வுக்கான அட்டவணை நாளை காலை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • காலையில் தாமதமாக எழும் பழக்கம் அன்றைய நாள் முழுவதையும் சீர்குலைக்கிறது.
    • தூங்குவதற்கு சிறந்த நேரம் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை

    அனைத்து உயிரினங்களும் அவசியமான ஒன்று தூக்கம். மனிதர்கள் ஒவ்வொரு நாளும் சரியான அளவில் தூங்குவது உடல் நலத்தையும், மன நலத்தையும் ஆரோக்கியமாக வைக்கும்.

    * முதலில் தூங்குவதற்கு சரியான நேர அட்டவணையை உருவாக்குங்கள்

    * தூங்குவதற்கு சிறந்த நேரம் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை

    * இரவில் தாமதமாக தூங்குவதும், காலையில் தாமதமாக படுக்கையில் இருந்து எழுவதும் நல்ல பழக்கம் அல்ல

    * காலையில் தாமதமாக எழும் பழக்கம் அன்றைய நாள் முழுவதையும் சீர்குலைக்கிறது

    * ஒரு வயது வந்தவர் ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்

    * தூக்கம் மனித செரிமான அமைப்பையும் பாதிக்கிறது. குறைந்த பட்சம் ஆறு மணி நேரமாவது தூங்காதவர்களுக்கு வயிற்று நோய்கள் வரலாம்.

    * சரியான ஓய்வு இல்லாதது கண்களையும் பாதிக்கும். மாணவர்கள் இரவில் தாமதமாகப் படிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும் மாறாக, இரவில் சீக்கிரம் தூங்கச் செல்வதும், அதிகாலையில் எழுந்து படிப்பதும் அதிக பலன் தரும்.

    • ராசிபுரம் வழியாக சேலத்திற்கு மதியம் 1.45 மணிக்கு சென்றடைகிறது.
    • மறு மார்க்கமாக சேலத்தில் இருந்து தினமும் மதியம் 2.05 மணிக்கு புறப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் இருந்து நாமக்கல் வழியாக சேலத்திற்கு நேரடி ரெயில் சேவை ஏற்படுத்தி தரவேண்டும் அனைத்து தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் மயிலாடுதுறை –திருச்சி, திருச்சி- கரூர், கரூர்-சேலம் ஆகிய 3 ரெயில்களின் இணைந்த சேவைக்கான கருத்துரு ஒன்றை தென்னக ரெயில்வே கடந்த பிப்ரவரி மாதத்தில் ரெயில்வே வாரியத்திற்கு அனுப்பியது.

    அதற்கு ரெயில்வே வாரியம் கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது.

    தற்போது இந்த இணைக்க ப்பட்ட ரெயிலுக்கான கால அட்டவணை இறுதி செய்யப்பட்டு நாளை (திங்கட்கிழமை) முதல் மயிலாடுதுறை- சேலம் இடையே கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக நேரடி ரெயில் சேவை இயக்கப்பட உள்ளது.

    மயிலாடுதுறை-சேலம் புதிய விரைவு ரெயில் தினமும் காலை 6.20 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்படும். இந்த ரெயில் குத்தாலம் , நரசிங்கம்பேட்டை, ஆடுதுறை ,திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், கும்பகோணம், தாராசுரம், சுவாமிமலை, சுந்தர பெருமாள் கோவில், பாபநாசம், திட்டை ,பசுபதி கோவில் , தஞ்சை, ஆலக்குடி, பூதலூர் ,திருவெறும்பூர், திருச்சி, கரூர், நாமக்கல், ராசிபுரம் வழியாக சேலத்திற்கு மதியம் 1.45 மணிக்கு சென்றடைகிறது.

    மறு மார்க்கமாக சேலத்தில் இருந்து தினமும் மதியம் 2.05 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மயிலாடுதுறையை இரவு 9.40 மணிக்கு வந்தடைகிறது.

    தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து முதன் முதலாக நாமக்கல் வழியாக சேலத்திற்கு நேரடி ரெயில் சேவை கிடைத்துள்ளதால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ரெயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்றியதற்காக அனைத்து தரப்பினர் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    • உலக கோப்பை போட்டிக்கான 48 போட்டிகளும் 10 நகரங்களில் நடக்கிறது.
    • கவுகாத்தி, திருவனந்தபுரத்தில் பயிற்சி போட்டிகள் நடத்தப்படுகிறது.

    மும்பை:

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ( 50 ஓவர்) இந்தியா நடத்துகிறது. அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்த போட்டி நடைபெறுகிறது.

    உலக கோப்பை கிரிக்கெட்டில் 10 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து , ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகள் நேரடியாக விளையாடுகின்றன.

    எஞ்சிய 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் தற்போது நடைபெற்று வருகிறது.

    உலக கோப்பை போட்டிக்கான வரைவு அட்டவணை ஏற்கனவே வெளியாகி இருந்தது.

    இதைதொடர்ந்து சென்னை, பெங்களூரில் தாங்கள் விளையாடும் இடங்களை மாற்றுமாறு ஐ.சி.சி. யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் விடுத்து இருந்தது. பாகிஸ்தானின் இந்த கோரிக்கையை ஐ.சி.சி.யும், இந்திய கிரிக்கெட் வாரியமும் நிராகரித்து இருந்தன.

    இதனால் உலககோப்பை போட்டிக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை விரைவில் வெளியாகும் என்று கருதப்பட்டது.

    இந்த நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை இன்று வெளியாகுகிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மும்பையில் உலக கோப்பை போட்டிக்கான அட்டவணையை அறிவிக்கிறது.

    உலக கோப்பை கிரிக்கெட் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19-ந்தேதி வரை நடைபெறுகிறது. அகமதாபாத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8-ந்தேதி சென்னையில் சந்திக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் மோதும் ஆட்டம் அக்டோபர் 15-ந்தேதி அகமதாபாத்தில் நடத்தப்படுகிறது.

    அரைஇறுதி ஆட்டங்கள் நவம்பர் 15 மற்றும் 16-ந் தேதிகளில் நடைபெறுகிறது. ஒரு அரைஇறுதியை சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது அதை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மற்றொரு அரைஇறுதி மும்பை வான்கடே மைதானத்தில் நடத்தப்படுகிறது. இறுதிப்போட்டி நவம்பர் 19-ந்தேதி அகமதாபாத்தில் நடக்கிறது.

    உலக கோப்பை போட்டிக்கான 48 போட்டிகளும் 10 நகரங்களில் நடக்கிறது. அகமதாபாத், டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர், ஐதராபாத், தர்மசாலா, லக்னோ, புனே ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. கவுகாத்தி, திருவனந்தபுரத்தில் பயிற்சி போட்டிகள் நடத்தப்படுகிறது.

    • சிறுவன் ஒதுக்கி உள்ள நேரங்கள் பார்வையாளர்களுக்கு சிரிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
    • காலை எழும் நேரத்தில் இருந்து இரவு தூங்குவது வரையிலான செயல்களுக்கு சிறுவன் ஒதுக்கும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

    6 வயது சிறுவனின் அட்டவணை டுவிட்டரில் வைரலாகி வருகிறது. லைபா என்பவர் பகிர்ந்துள்ள டுவிட்டர் பதிவில், தனது உறவினர் ஒருவரின் 6 வயது மகனின் தினசரி கால அட்டவணையை பகிர்ந்துள்ளார். அதில், அந்த சிறுவனின் தினசரி வழக்கங்கள் அட்டவணையில் நேர்த்தியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. நேரத்தை நிர்வகிப்பதற்காக சிறுவனின் முயற்சி பாராட்டை பெற்றுள்ளது. ஆனாலும் அதில் சிறுவன் ஒதுக்கி உள்ள நேரங்கள் பார்வையாளர்களுக்கு சிரிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    அதாவது, காலை எழும் நேரத்தில் இருந்து இரவு தூங்குவது வரையிலான செயல்களுக்கு சிறுவன் ஒதுக்கும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், படிப்பதற்காக மதியம் 2.30 மணி முதல் 2.45 மணி வரை என வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கி உள்ளான். ஆனால் காலை 11.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை சண்டையிடுவதற்கான நேரம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போன்று தாத்தா, பாட்டியுடன் மாம்பழம் சாப்பிடுவதற்கு மற்றும் சில வேடிக்கையான விஷயங்களுக்காகவும் நேரத்தை குறிப்பிட்டுள்ளான். இந்த பதிவு 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. அதை பார்த்த பயனர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • சி.எஸ்.ஐ.ஆர் (யு.ஜி.சி) நெட் தேர்வு -ஜூன் 2022 அறிவிப்பு 11.08.2022 -ல் இந்திய அரசின் தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.
    • நெட் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு வருகிற 16 -ந்தேதி காலை 9 முதல் மதியம் 12 வரை நடக்கிறது.

    சேலம்:

    சி.எஸ்.ஐ.ஆர் (யு.ஜி.சி) நெட் தேர்வு -ஜூன் 2022 அறிவிப்பு 11.08.2022 -ல் இந்திய அரசின் தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் (JRF) மற்றும்

    விரிவுரையாளர் (LS), துணைப் பேராசிரியர் உள்ளிட்ட தகுதி பெற கணினி அடிப்படையில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

    இதையடுத்து, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து முதுநிலை அறிவியல் பட்டதாரிகள் ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் சி.எஸ்.ஐ.ஆர் நெட் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

    தேர்வு வருகிற 16 -ந்தேதி காலை 9 முதல் மதியம் 12 வரை நடக்கிறது. 16-ந்தேதி பூமி, வளிமண்டலம், பெருங்கடல்

    மற்றும் கிரக அறிவியல்

    இயற்பியல் அறிவியல் கணித அறிவியல்

    17-ந்தேதி உயிர் அறிவியல், வாழ்க்கை அறிவியல்

    18-ந்தேதி ரசாயன அறிவியல் நடக்கிறது.

    பரீட்சை சம்பந்தமான அட்மிட் கார்டுகள்

    10 -ம் தேதியில் இருந்து என்.டி.ஏ. இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பிளாஸ்டிக் பயன்பாட்டின் மாற்றுப் பொருட்களின் அட்டவணையை கலெக்டர் வெளியிட்டார்
    • தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டின் மாற்றுப் பொருட்களின் அட்டவணைகளை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, வெளியிட்டார்.தமிழகத்தில் பிளாஸ்டிக் கேரிபேக்குகள், உணவு பொட்டலமிட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட தேநீர் கோப்கைள் மற்றும் பிளாஸ்டிக் டம்பளர், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள், பிளாஸ்டிக் கொடிகள் போன்ற ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எரியப்படும் பிளாஸ்டிக்குகள் சுற்றுச் சூழல் மற்றும் சுகாதார கேடு விளைவிக்க காரணமாக இருப்பதால் பிளாஸ்டிக் பயன்பாட்டின் மாற்று பொருட்களை பயன்படுத்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அந்த வகையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களான சணல்பை, துணிப்பை, காகித பைகள், பாக்கு மட்டைத்தட்டுகள், தென்னை, மரத்தலான கோப்பைகள், மரக்கரண்டிகள், பனை ஓலைகளால் ஆன பூஜை தட்டுகள் மற்றும் மண்பாண்டங்களால் தயாரிக்கப்பட்ட தண்ணீர் குடுவைகள், அகல்விளக்குகள், மண் சாடிகள், மண்சட்டி ஆகிய பிளாஜ்டிக் பயன்பாட்டின் மாற்றுப் பொருட்களின் அட்டவணைகள் தயாரிக்கப்பட்டு கலெக்டர் ரமண சரஸ்வதி, வெளியிட்டார்.

    ×