search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயிலாடுதுறை- சேலம் இடையே நேரடி ரெயில் சேவை
    X

    மயிலாடுதுறை- சேலம் இடையே நேரடி ரெயில் சேவை

    • ராசிபுரம் வழியாக சேலத்திற்கு மதியம் 1.45 மணிக்கு சென்றடைகிறது.
    • மறு மார்க்கமாக சேலத்தில் இருந்து தினமும் மதியம் 2.05 மணிக்கு புறப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் இருந்து நாமக்கல் வழியாக சேலத்திற்கு நேரடி ரெயில் சேவை ஏற்படுத்தி தரவேண்டும் அனைத்து தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் மயிலாடுதுறை –திருச்சி, திருச்சி- கரூர், கரூர்-சேலம் ஆகிய 3 ரெயில்களின் இணைந்த சேவைக்கான கருத்துரு ஒன்றை தென்னக ரெயில்வே கடந்த பிப்ரவரி மாதத்தில் ரெயில்வே வாரியத்திற்கு அனுப்பியது.

    அதற்கு ரெயில்வே வாரியம் கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது.

    தற்போது இந்த இணைக்க ப்பட்ட ரெயிலுக்கான கால அட்டவணை இறுதி செய்யப்பட்டு நாளை (திங்கட்கிழமை) முதல் மயிலாடுதுறை- சேலம் இடையே கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக நேரடி ரெயில் சேவை இயக்கப்பட உள்ளது.

    மயிலாடுதுறை-சேலம் புதிய விரைவு ரெயில் தினமும் காலை 6.20 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்படும். இந்த ரெயில் குத்தாலம் , நரசிங்கம்பேட்டை, ஆடுதுறை ,திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், கும்பகோணம், தாராசுரம், சுவாமிமலை, சுந்தர பெருமாள் கோவில், பாபநாசம், திட்டை ,பசுபதி கோவில் , தஞ்சை, ஆலக்குடி, பூதலூர் ,திருவெறும்பூர், திருச்சி, கரூர், நாமக்கல், ராசிபுரம் வழியாக சேலத்திற்கு மதியம் 1.45 மணிக்கு சென்றடைகிறது.

    மறு மார்க்கமாக சேலத்தில் இருந்து தினமும் மதியம் 2.05 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மயிலாடுதுறையை இரவு 9.40 மணிக்கு வந்தடைகிறது.

    தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து முதன் முதலாக நாமக்கல் வழியாக சேலத்திற்கு நேரடி ரெயில் சேவை கிடைத்துள்ளதால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ரெயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்றியதற்காக அனைத்து தரப்பினர் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    Next Story
    ×