search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்வே பணியாளர்கள்"

    காலி பணியிடங்களை நிரப்பதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகத்தில் ரெயில்வே பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சேலம்:

    சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகத்தில் எஸ்.ஆர்.எம்.யூ. சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் கோட்ட செயலாளர் கோவிந்தன் தலைமை தாங்கி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். 

    ரெயில்வே துறையில் ஆட்குறைப்பு செய்ய வேண்டாம், காலியிடங்களை குறைக்கக் கூடாது, தெற்கு ரெயில்வே முழுவதும் உள்ள 20 ஆயிரம் காலியிடங்களை நிரப்பி வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் கிளை செயலாளர்கள் ஜெகன், நெடுஞ்செழியன், அருண், ஜோன் நவீன்,  முத்து சுப்பிரமணி, எல்.ஆர்.எஸ் கோட்ட செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட எஸ்ஆர்எம்யூ  தொழிற்சங்கத்தை சேர்ந்த ெரயில்வே தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×