search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலி இடங்கள்"

    • அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 606 மருத்துவ இடங்களில் சேர்ந்துள்ளனர்.
    • அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தவர்கள் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் சேராமல் இருப்பது வழக்கம்.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு ஆன்லைன் கலந்தாய்வு கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ இடங்கள் மாணவர்களின் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்டன.

    6326 எம்.பி.பி.எஸ். இடங்கள், 1768 பி.டி.எஸ். இடங்களுக்கு நடந்த கலந்தாய்வில் இடஒதுக்கீட்டை பின்பற்றி இடங்கள் நிரப்பப்பட்டன.

    அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 606 மருத்துவ இடங்களில் சேர்ந்துள்ளனர்.

    மருத்துவ கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள் கடந்த 11-ந் தேதி மாலைக்குள் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. கட்டணம் செலுத்துவதற்கு வசதியாக மேலும் 3 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. 14-ந் தேதி மாலைக்குள் கல்லூரிகளில் சேர அவகாசம் கொடுக்கப்பட்டது.

    அதன்படி பெரும்பாலான மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துவிட்டனர். ஒரு சிலர் சேரவில்லை. மருத்துவ கல்லூரிகளில் சேராமல் இருக்கும் மாணவ-மாணவிகளின் பெயர் விவரங்கள், காலி இடங்கள் பற்றிய தகவல்களை மருத்துவ கல்வி ஆணையத்திற்கு தெரிவிக்குமாறு அனைத்து முதல்வர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தவர்கள் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் சேராமல் இருப்பது வழக்கம். அந்த வகையில் உருவாகும் காலி இடங்கள் மற்றும் இடம் கிடைத்தவர்கள் வேறு காரணத்திற்காக மாறி செல்ல வசதியாக அந்த இடத்தை நிராகரித்து விட்டு செல்லவும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. முதல் கட்ட கலந்தாய்வில் இடம் கிடைத்தவர்கள் அதனை தேவையில்லை என்றால் விலகி செல்ல வருகிற 20-ந் தேதி வரை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் 2-வது கட்ட அகில இந்திய கலந்தாய்வு முடிந்து இறுதி முடிவு நாளை வெளியாக உள்ளது. அதில் இடம் பெற்றவர்கள் மூலமும் தமிழகத்தில் மருத்துவ இடங்கள் காலியாக வாய்ப்பு உள்ளது.

    இந்த இடங்களுக்கு 2-வது கட்ட கலந்தாய்வு 22-ந் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரியில் 3 இடங்கள் காலியாக உள்ளன. இதே போல் பிற மருத்துவ கல்லூரிகளிலும் இடங்கள் காலியாக வாய்ப்பு உள்ளது. அதன் முழு விவரம் இன்று மாலை தெரிந்துவிடும்.

    • சென்ட் ஒன்றுக்கு ரூ. 5000 வீதம் முன்பணம் செலுத்தி தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
    • வணிக உபயோகத்திற்கு வெறும் காலி நிலமாக சென்ட் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் முன்பணம் செலுத்தி தங்களது பெயரை முன் பதிவு செய்து கொள்ளலாம்

    உடுமலை:

    உடுமலை நகராட்சி ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உடுமலை நகராட்சிக்கு சொந்தமான தாராபுரம் ரோட்டில் அமைந்துள்ள பழைய குப்பை கிடங்கு உடுமலை கிராம 4 வது எண் 68.69/1 ல் உள்ள 4. 81 ஏக்கர் நிலத்தில் குடியிருப்பு அல்லாத வணிக நோக்கத்திற்காக மட்டும் காலி நிலமாக 21/2 சென்ட் 5 சென்ட் 10, 15 சென்ட் மற்றும் அதற்கு மேல் தேவைப்படும் பரப்பளவுக்கு ஏற்ப சென்ட் ஒன்றுக்கு ரூ. 5000 வீதம் முன்பணம் செலுத்தி தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதேபோல் தாராபுரம் சாலை உள்ள நகராட்சி துவக்க பள்ளிக்கு அருகில் உள்ள காலியிடத்தை முழுவதுமாக வணிக உபயோகத்திற்கு வெறும் காலி நிலமாக சென்ட் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் முன்பணம் செலுத்தி தங்களது பெயரை முன் பதிவு செய்து கொள்ளலாம்.முன்பணம் செலுத்துபவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப முன்னுரிமை அடிப்படையில் இடம் ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் தற்போது செலுத்தப்படும் பணம் முன்பணம் மட்டுமே. வடிவமைப்பிற்கு பிறகு சதுர அடிக்காக நிலவாடகை உரிய விதிகளின்படியும் அரசாணை படியும் தொகை செலுத்திய பிறகு இடம் ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    நகராட்சி ஆணையாளர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில், உடுமலை நகராட்சிக்கு சொந்தமான பழனி சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய கடையில் மற்றும் ராஜேந்திரா சாலையில் உள்ள வாரச்சந்தை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் கடைகளுக்கு முன் ஏலம் நடைபெற உள்ளது .இதற்கும் விருப்பம் உள்ளவர்கள் வைப்புத்தொகை செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

    ×