search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Schedule"

    • இளைஞர்களுடைய எதிர்காலத்தைப் பற்றி தி.மு.க. அரசுக்கு அக்கறையில்லை என்பதும் தெள்ளத் தெளிவாகிறது.
    • இளைஞர்களுடைய எதிர்காலத்தைப் பற்றி தி.மு.க. அரசுக்கு அக்கறையில்லை என்பதும் தெள்ளத் தெளிவாகிறது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2021-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது, "அரசுத் துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்" மற்றும் "புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்" என 2 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.

    இந்த சூழ்நிலையில், கடந்த மூன்றாண்டுகளில் வெறும் 60,567 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டு உள்ளதாக அரசு தெரிவித்திருப்பது, காலிப் பணியிடங்களை நிரப்புவதில் தி.மு.க. அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுகிறது என்பதும், இளைஞர்களுடைய எதிர்காலத்தைப் பற்றி தி.மு.க. அரசுக்கு அக்கறையில்லை என்பதும் தெள்ளத் தெளிவாகிறது.

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் துறைகளிலும் கிட்டத்தட்ட 50 சதவீதம் காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், ஒவ்வொரு துறையிலும், பதவி வாரியாக எத்தனை காலிப் பணியிடங்கள் உள்ளன என்ற புள்ளி விவரத்தையும், அந்தப் பணியிடங்கள் அனைத்தும் எப்போது நிரப்பப்படும் என்பதற்கான அட்டவணையையும் உடனடியாக வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு நடத்துவது தொடர்பாக முக்கிய முடிவு.
    • மாணவர்களின் தேவையைக் கண்டறிந்து 12-ம் தேதி பாடப் புத்தகம் வழங்கவும் உத்தரவு.

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிச்சாங் புயலால் கடும் வெள்ள சேதம் ஏற்பட்டது. இந்த மழை வெள்ளத்தால் மக்கள் பெரிய அளவில் சிரமப்பட்டனர். லட்சக்கணக்கானோர் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொருட்கள் அனைத்தையும் இழந்து தவிக்கின்றனர்.

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு நடத்துவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படுவதாகளும், ஆய்வுக்கூட்டம் நடத்திய பிறகு முடிவு அறிவிக்கப்படும் எனவும் கூறினார்.

    இதைதொடர்ந்து, தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்," நாளை அரையாண்டு தேர்வுகள் தொடங்க இருந்த நிலையில் புத்தகங்கள் இல்லாமல் மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக முடியாது என்பதை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் நாளை தொடங்க இருந்த தேர்வுகளை வரும் 13-ம் தேதி தொடங்க வேண்டும்" என கல்வித்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    புதிய கால அட்டவணையை வெளியிடவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மாணவர்களின் தேவையைக் கண்டறிந்து 12-ம் தேதி பாடப் புத்தகம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் 6 முதல் 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு வரும் 13ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ராசிபுரம் வழியாக சேலத்திற்கு மதியம் 1.45 மணிக்கு சென்றடைகிறது.
    • மறு மார்க்கமாக சேலத்தில் இருந்து தினமும் மதியம் 2.05 மணிக்கு புறப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் இருந்து நாமக்கல் வழியாக சேலத்திற்கு நேரடி ரெயில் சேவை ஏற்படுத்தி தரவேண்டும் அனைத்து தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் மயிலாடுதுறை –திருச்சி, திருச்சி- கரூர், கரூர்-சேலம் ஆகிய 3 ரெயில்களின் இணைந்த சேவைக்கான கருத்துரு ஒன்றை தென்னக ரெயில்வே கடந்த பிப்ரவரி மாதத்தில் ரெயில்வே வாரியத்திற்கு அனுப்பியது.

    அதற்கு ரெயில்வே வாரியம் கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது.

    தற்போது இந்த இணைக்க ப்பட்ட ரெயிலுக்கான கால அட்டவணை இறுதி செய்யப்பட்டு நாளை (திங்கட்கிழமை) முதல் மயிலாடுதுறை- சேலம் இடையே கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக நேரடி ரெயில் சேவை இயக்கப்பட உள்ளது.

    மயிலாடுதுறை-சேலம் புதிய விரைவு ரெயில் தினமும் காலை 6.20 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்படும். இந்த ரெயில் குத்தாலம் , நரசிங்கம்பேட்டை, ஆடுதுறை ,திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், கும்பகோணம், தாராசுரம், சுவாமிமலை, சுந்தர பெருமாள் கோவில், பாபநாசம், திட்டை ,பசுபதி கோவில் , தஞ்சை, ஆலக்குடி, பூதலூர் ,திருவெறும்பூர், திருச்சி, கரூர், நாமக்கல், ராசிபுரம் வழியாக சேலத்திற்கு மதியம் 1.45 மணிக்கு சென்றடைகிறது.

    மறு மார்க்கமாக சேலத்தில் இருந்து தினமும் மதியம் 2.05 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மயிலாடுதுறையை இரவு 9.40 மணிக்கு வந்தடைகிறது.

    தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து முதன் முதலாக நாமக்கல் வழியாக சேலத்திற்கு நேரடி ரெயில் சேவை கிடைத்துள்ளதால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ரெயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்றியதற்காக அனைத்து தரப்பினர் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    • உலக கோப்பை போட்டிக்கான 48 போட்டிகளும் 10 நகரங்களில் நடக்கிறது.
    • கவுகாத்தி, திருவனந்தபுரத்தில் பயிற்சி போட்டிகள் நடத்தப்படுகிறது.

    மும்பை:

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ( 50 ஓவர்) இந்தியா நடத்துகிறது. அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்த போட்டி நடைபெறுகிறது.

    உலக கோப்பை கிரிக்கெட்டில் 10 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து , ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகள் நேரடியாக விளையாடுகின்றன.

    எஞ்சிய 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் தற்போது நடைபெற்று வருகிறது.

    உலக கோப்பை போட்டிக்கான வரைவு அட்டவணை ஏற்கனவே வெளியாகி இருந்தது.

    இதைதொடர்ந்து சென்னை, பெங்களூரில் தாங்கள் விளையாடும் இடங்களை மாற்றுமாறு ஐ.சி.சி. யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் விடுத்து இருந்தது. பாகிஸ்தானின் இந்த கோரிக்கையை ஐ.சி.சி.யும், இந்திய கிரிக்கெட் வாரியமும் நிராகரித்து இருந்தன.

    இதனால் உலககோப்பை போட்டிக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை விரைவில் வெளியாகும் என்று கருதப்பட்டது.

    இந்த நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை இன்று வெளியாகுகிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மும்பையில் உலக கோப்பை போட்டிக்கான அட்டவணையை அறிவிக்கிறது.

    உலக கோப்பை கிரிக்கெட் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19-ந்தேதி வரை நடைபெறுகிறது. அகமதாபாத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8-ந்தேதி சென்னையில் சந்திக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் மோதும் ஆட்டம் அக்டோபர் 15-ந்தேதி அகமதாபாத்தில் நடத்தப்படுகிறது.

    அரைஇறுதி ஆட்டங்கள் நவம்பர் 15 மற்றும் 16-ந் தேதிகளில் நடைபெறுகிறது. ஒரு அரைஇறுதியை சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது அதை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மற்றொரு அரைஇறுதி மும்பை வான்கடே மைதானத்தில் நடத்தப்படுகிறது. இறுதிப்போட்டி நவம்பர் 19-ந்தேதி அகமதாபாத்தில் நடக்கிறது.

    உலக கோப்பை போட்டிக்கான 48 போட்டிகளும் 10 நகரங்களில் நடக்கிறது. அகமதாபாத், டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர், ஐதராபாத், தர்மசாலா, லக்னோ, புனே ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. கவுகாத்தி, திருவனந்தபுரத்தில் பயிற்சி போட்டிகள் நடத்தப்படுகிறது.

    • நெல்லை-தென்காசி மார்க்கத்தில் செல்லும் ரெயில்கள் 110 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
    • பாலருவி விரைவு ரெயில் நெல்லையில் இருந்து வ 11.30-க்கு புறப்படுகிறது.

    தென்காசி:

    நெல்லை-கொல்லம் இடையே கடந்த சில மாதங்களாக மின்மயமாக்கல் பணி நடைபெற்று வருகிறது. இதில் நெல்லை-செங்கோட்டை இடையே பணிகள் நிறைவு பெற்றுவிட்டது.

    இதையடுத்து இந்த வழித்தடத்தில் நெல்லை-தென்காசி மார்க்கத்தில் செல்லும் ரெயில்கள் 70 கிலோமீட்டரில் இருந்து 110 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாளை முதல் ரெயில்களின் கால அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. அதன்படி நெல்லை - பாலக்காடு இடையே இயக்கப்படும் பாலருவி விரைவு ரெயில்(16791) நெல்லையில் இருந்து வழக்கமான நேரமான 11.20-க்கு பதிலாக 11.30-க்கு புறப்படுகிறது. தென்காசிக்கு வழக்கமான நேரமான 12.35 மணிக்கு செல்லும். பாலக்காடு - நெல்லை விரைவு ரெயில்(16792) செங்கோட்டைக்கு வழக்கமான நேரமான அதிகாலை 3 மணிக்கு பதிலாக 2.45 மணிக்கு புறப்பட்டு, நெல்லைக்கு 10 நிமிடங்களுக்கு முன்பாக 4.40 மணிக்கு வந்தடைகிறது.

    காலை 7 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் நெல்லை - செங்கோட்டை ரெயில் செங்கோட்டையை 10 நிமிடங்களுக்கு முன்பாக 9.05-க்கு சென்றடையும். காலை 9.10-க்கு புறப்பட வேண்டிய ெரயில் 9.45 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டையை மதியம் 11.50-க்கு சென்றடையும்.

    இதேபோல் மதியம் 1.50 மணிக்கு புறப்படும் ரெயில் செங்கோட்டைக்கு வழக்கமான மணியை விட 5 நிமிடங்களுக்கு முன்பாகவும், மாலை 6.15 மணிக்கு புறப்படும் ரெயில் செங்கோட்டைக்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவும் சென்றடைகிறது. மறுமார்க்கமாக காலை 6.40 மணிக்கு செங்கோட்டையில் புறப்படும் ரெயில் நெல்லை டவுன் வரை வேகம் அதிகரிக்கப்பட்டு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தை அதே நேரமான 8.50 மணிக்கு வந்தடையும்.

    காலை 10.05 மணிக்கு புறப்படும் ரெயில் நெல்லைக்கு 10 நிமிடங்களுக்கு முன்பாக இரவு 12.15 மணிக்கும், மதியம் 2.55-க்கு புறப்படும் ரெயில் 20 நிமிடங்களுக்கு முன்பாகவும், மாலை 5.50 மணிக்கு புறப்படும் ரெயில் நெல்லைக்கு 5 நிமிடங்களுக்கு முன்பாகவும், மதியம் 11.50 மணிக்கு செங்கோட்டையில் புறப்படும் செங்கோட்டை - மதுரை ரெயில் 11.50 மணிக்கு பதிலாக 12.10 மணிக்கு புறப்பட்டு 15 நிமிடங்கள் வேகம் அதிகரிக்கப்பட்டு மாலை 3.40 மணிக்கு மதுரையை சென்றடைகிறது. இந்த மாற்றம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

    • சாலையோர வியாபாரிகள் 5 பயனாளிகளுக்கு கடனுதவி பெறுவதற்கு அனுமதி வழங்கும் கடிதத்தினை வழங்கினார்.
    • இத்திட்டத்தின் மூலம் பெறும் கடன் தொ கையினை முறையாக தவணை தவறாமல் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

    தஞ்சாவூர்:

    பட்டுக்கோட்டை நகராட்சியில், சாலையோர வியாபாரிகளுக்கு, தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ் புதிய சாலையோர வியாபாரிகளின் கணக்கெடுப்பு பணி 2022-23 திட்டத்தின்கீழ் வங்கிகள் மூலம் பிரதி புதன்கிழமை தோறும் சாலையோர வியாபாரிகள் தினத்தில் கடனுதவி வழங்கும் முகாம் நாடிமுத்து நகர் ஆர்ச் சாலை பகுதியில் நடைபெற்றது.

    மேற்படி சாலையோர வியாபாரிகளின் கணக்கெடுப்பு பணி துவக்க விழா மற்றும் கடனுதவி வழங்கும் முகாமிற்கு, நகராட்சி தலைவர். சண்முகப்பிரியா செந்தில்குமார் தலைமை ஏற்று இத்திட்டம் குறித்து விளக்கினார். சுரேஷ், நகராட்சி துணைத் தலைவர் மற்றும் நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன் ஆகியோர் முன்னிலையில் சாலையோர வியாபாரிகள் 5 பயனாளிகளுக்கு கடனுதவி பெறுவதற்கு அனுமதி வழங்கும் கடிதத்தினை வழங்கினார்.

    சாலையோர வியாபாரி களின் கணக்கெடுப்பு பணி துவக்க விழாவில் இத்திட்டத்தின் நன்மைகள் குறித்து சாலையோர வியாபாரிகளுக்கு எடுத்து கூறினர். மேலும் ஒவ்வொரு கடைக்கும் நேரில் சென்று புதிய கணக்கெடுப்பு பணியினை துவக்கி வைத்தனர். சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பின் போது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களை வழங்கிட கேட்டுக்கொள்ளப்பட்டது.

    மேலும் இத்திட்டத்தின் மூலம் பெறும் கடன் தொ கையினை முறையாக தவணை தவறாமல் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. விழாவில் சுகாதார அலுவலர் நெடுமாறன், நகரமைப்பு ஆய்வாளர் கருப்பையன், வருவாய் ஆய்வாளர்கள் முருகேசன், குப்புசாமி, சண்முகம், நகர்மன்ற உறுப்பினர்கள் பொண்மணி ராஜேந்திரன் மகா லெட்சுமி உலகநாதன், சுரேஷ், கலையசி, சமுதாய அமைப்பாளர்கள் பிரவீனா, சரண்யா, ராஜப்பிரியா, சமூக ஆர்வலர் மணிமுத்து. சாலையோர வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.

    முடிவில் நகரமைப்பு ஆய்வாளர் கருப்பையன் நன்றி கூறினார்.

    ×