search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "robber"

    • ஆனந்த கிருஷ்ணன் அடுத்ததாக ராபர் என்ற திரைப்படத்தின் கதையை எழுதியுள்ளார்
    • இப்படத்தின் நாயகனாக நடித்துள்ள சத்யா ஏற்கெனவே 'மெட்ரோ' படத்தில் நடித்து அனைவராலும் கவனிக்க பட்டவர்.

    2016 ஆம் ஆண்டு ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் ஷிரிஷ், பாபி சிம்ஹா , சென்ராயன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மெட்ரோ. சென்னையில் நடக்கும் செயின் ஸ்னாட்சிங் பற்றியும், இளைஞர்கள் எப்படி இந்த தொழிலுக்கு வருகிறார்கள் எதற்காக இப்படி செய்கின்றனர் என்று பேசிய திரைப்படம், படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    அதைத்தொடர்ந்து ஆனந்த கிருஷ்ணன் அடுத்ததாக ராபர் என்ற திரைப்படத்தின் கதையை எழுதியுள்ளார். . படத்தை சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார். இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா எஸ் தயாரித்துள்ளார். தயாரிப்பில் அவருடன் மெட்ரோ ப்ரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணனும் இணைந்துள்ளார்.

    'ராபர்' படத்துக்கான படப்பிடிப்பு சென்னைக்குள் இருக்கும் தியாகராய நகர், வேளச்சேரி போன்ற இடங்களிலும் சென்னையைச் சுற்றியுள்ள செம்மஞ்சேரி, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை போன்ற பகுதிகளிலும் நடைபெற்றுள்ளது.

    இப்படத்தின் நாயகனாக நடித்துள்ள சத்யா ஏற்கெனவே 'மெட்ரோ' படத்தில் நடித்து அனைவராலும் கவனிக்க பட்டவர். இவர்களுடன் தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்ராயன், டேனி போப் மற்றும் பலர் படத்தில் போட்டி போட்டு நடித்துள்ளனர். இப்படத்திற்கு என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜோகன் சிவனேஷ் இசை அமைத்துள்ளார்.

    இந்த' ராபர்' திரைப்படம் படத்தின்' டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் 'எனப்படும் தலைப்பின் முதல் தோற்றத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். இப்படம் மே மாதம் இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் திரும்பி வந்தபோது மொத்தம் 6 வீடுகளில் கொள்ளை நடந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • மழைவெள்ள பாதிப்பில் உடமைகளை இழந்த மக்களுக்கு இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தாம்பரம்:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.

    தாம்பரம் அடுத்த முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் குடியிருப்புகளை சுற்றி வெள்ள நீர் சூழ்ந்தது. தரை தளத்தில் உள்ள வீடுகள் முழுவதும் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் நின்றதால் பெரும்பாலானோர் வீடுகளை பூட்டுவிட்டு மற்ற பகுதிகளில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர்.

    மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை பேரிடர் மீட்பு குழுவினர் படகுகளில் சென்று மீட்டனர். மேலும் வீட்டின் மாடிகளில் தஞ்சம் அடைந்தவர்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் ஹெலிகாப்டர்களிலும் வழங்கப்பட்டது.

    இந்நிலையில் வெள்ள நீர் வடிந்து உள்ளதால் வீடுகளுக்கு மக்கள் திரும்பி உள்ளனர். அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள்.

    மழை வெள்ளத்தில் மூழ்கிய வீட்டில் இருந்த பெரும்பாலான பொருட்கள் மற்றும் பிரிட்ஜ், டி.வி. உள்ளிட்ட எலெக்ட்ரிக் பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்து உள்ளதை பார்த்து உரிமையாளர்கள் கண்ணீர் வடித்தனர்.

    இதற்கிடையே முடிச்சூர், வரதராஜபுரம் பகுதியில் வெள்ளம் வடிந்த பகுதியில் பொதுமக்கள் திரும்பி வரத்தொடங்கி உள்ளனர். அப்போது வீடுகளில் கொள்ளை நடந்து இருப்பதை கண்டு உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    வரதராஜபுரம் பகுதியில் விஷ்னு என்ற அடுக்கு மாடி குடியிருப்பில் 17 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    கனமழை காரணமாக முடிச்சூர் முழுவதும் மழை நீரால் மூழ்கி போனதால் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு வெளியேறி உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்து இருந்தனர். தற்போது இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் திரும்பி வந்தபோது மொத்தம் 6 வீடுகளில் கொள்ளை நடந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    சரத்குமார் என்பவர் வீட்டில் 17 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம், கண்ணண் என்பவரது வீட்டில் 15 நகை, விஜயலட்சுமி என்பவர் வீட்டில் 7 பவுன் நகை, ரூ. 1 லட்சம் ரொக்கம், கார்த்திக் என்பவர் வீட்டில் 7 பவுன் நகை, அருண் என்பவர் வீட்டில் 15 பவுன் நகை என மொத்தம் 60 பவுன் நகை மற்றும் ரூ. 3 லட்சம் ரொக்கத்தை அள்ளிச் சென்று உள்ளனர்.

    சிறுக சிறுக சேர்த்து வைத்த பணம் மற்றும் வாங்கிய நகைகளை மழை வெள்ளத்தை பயன்படுத்தி கொள்ளையர்கள் சுருட்டி சென்று இருப்பதை கண்டு அதனை பறி கொடுத்தவர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சோமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    முடிச்சூர் பகுதியில் மழை வெள்ளம் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்கள் எதுவும் செயல்படவில்லை. இதனால் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    ஏற்கனவே அதே பகுதியில் 3 மாதத்திற்கு முன்பு 50 பவுன் தங்க நகைகள் கொள்ளை போன நிலையில் குற்றவாளிகள் இதுவரை சிக்கவில்லை தற்போது மீண்டும் கை வரிசை காட்டி உள்ளனர்.

    மழைவெள்ள பாதிப்பில் இருந்து தப்பிக்கும் அவசரத்தில் வீட்டில் இருந்த நகை மற்றும் ரொக்கப்பணத்தை பெரும்பாலானோர் அப்படியே விட்டுச்சென்று இருந்தனர்.

    வெள்ளத்தின் போது பூட்டிகிடக்கும் வீடுகளை நோட்டமிட்ட கொள்ளை கும்பல் நகை-பணத்தை அள்ளிச்சென்று உள்ளனர். மழைவெள்ள பாதிப்பில் உடமைகளை இழந்த மக்களுக்கு இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதேபோல் முடிச்சூர் பகுதியிலும் சில வீடுகளில் கொள்ளை நடந்து உள்ளது. இது தொடர்பாகபோலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மழை பாதிப்பில் சிக்கியவர்களுக்கு உதவுவது போல் நடித்து மனிதாபிமானம் இல்லாமல் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

    • பலசரக்கு வியாபாரி வீட்டில் புகுந்து 32 பவுன் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் பசும்பொன் தெருவில் உள்ள பாரதி தாசன் தெருவை சேர்ந்தவர் ஜெயலட்சுமி(வயது50). இவர் அதே பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவரது மகன் கணேஷ்பாபு கேட்டரிங் தொழில் செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று ஜெயலட்சுமி கடைக்கு சென்றுவிட மகனும் வெளியே சென்று விட்டார். வீட்டில் வயதான மூதாட்டி ஒருவர் தனி அறையில் ஓய்வெடுத்துக் கொண்டி ருந்தார். வீட்டின் கதவு உள் பக்கமாக பூட்டப்படாமல் சாத்தப் பட்டிருந்தது. இதனை அறிந்து கொண்ட மர்ம நபர் வீட்டுக்குள் நைசாக புகுந்து பீரோ சாவியை எடுத்து அதனை திறந்துள்ளார். பின்னர் அதில் இருந்த 32 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்றுள்ளார்.

    மாலையில் வீடு திரும்பிய ஜெயலட்சுமி பீரோ கதவு திறக்கப்பட்டு நகை, பணம் கொள்ளை யடிக்கப்பட்டி ருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருமங்கலம் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர்.

    கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • கடந்த 34 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.
    • தனது திருட்டு வாழ்க்கை மற்றும் சிறை வாழ்க்கை பற்றி அனைத்தையும் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருவங்காடு பகுதியை சேர்ந்தவர் சித்திக். சிறுவயதிலேயே திருட்டு சம்பவங்களில் ஈடுபட தொடங்கிய இவர், தற்போது வரை 500-க்கும் மேற்பட்ட கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது 219 திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனால் கடந்த 34 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.

    இனியாவது கொள்ளையில் ஈடுபடாமல் திருந்தி குடும்ப வாழ்க்கை வாழ முடிவு செய்திருக்கும் அவர், கண்ணூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த மாத இறுதியில் ஜெயிலில் இருந்து விடுதலையாகிறார். தனது வாழ்வின் பெரும் பகுதியை சிறையிலேயே கழித்துள்ள அவர், தன்னை பற்றி சுயசரிதை எழுதியிருக்கிறார். கள்ளந்தோ ஆத்மகதா (ஒரு திருடனின் சுயசரிதை) என்ற தலைப்பில் எழுதியிருக்கும் சுயசரிதையில் தனது திருட்டு வாழ்க்கை மற்றும் சிறை வாழ்க்கை பற்றி அனைத்தையும் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

    சித்திக் தனது 14 வயது வயதில் தனது சகோதரியின் மகனின் தங்க மோதிரத்தை திருடி தனது முதல் திருட்டை தொடங்கியிருக்கிறார். பின்பு ரேசன்கடையில் தனது மாமாவின் பணத்தை திருடியது, தாயின் தங்க செயினை திருடியது என்று அடுத்தடுத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு கைதாகி சிறை தண்டனையை அனுபவித்து வந்திருக்கிறார்.

    1989-ம் ஆண்டு கண்ணூர் மத்திய சிறையில் இருந்தபோது, சிறைத்தோழர் ஒருவரிடம் பூட்டு உடைக்கும் கலையை கற்றுக்கொண்டு, பின்பு சிறையை விட்டு வெளியே வந்ததும் பூட்டியிருக்கும் வீடுகளில் கொள்ளையடிக்க தொடங்கினார். கொள்ளையடித்த பணத்தை சில நேரங்களில் அனாதை இல்லங்களுக்கும் கொடுத்திருக்கிறார். இதுபோன்ற தனது வாழ்வில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் தனது சுயசரிதையில் சித்திக் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது.

    • மண்ணடி தனியார் தங்கும் விடுதியில் கொள்ளையர்கள் இருப்பது தெரியவந்தது.
    • கோர்ட்டில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    மாதவரம்:

    சென்னை மாதவரத்தை அடுத்த பொன்னியம்மன் மேடு ஸ்ரீராம் நகர் பகுதியை சேர்ந்தவர் கவிதா ( 36). கடந்த மாதம் 14-ந் தேதி தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது 3 பேர் கொண்ட மர்மகும்பல் இரு சக்கர வாகனத்தில் வந்து, கவிதா கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறித்து சென்றனர். இதுகுறித்து கவிதா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர். 200-க்கும் மேற்பட்ட கண்கணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் சென்னை மண்ணடி தனியார் தங்கும் விடுதியில் கொள்ளையர்கள் இருப்பது தெரியவந்தது.

    அங்கு விரைந்து சென்ற போலீசார் மகேந்திரகுமார், என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வட மாநிலத்தினர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது அவர்களை பிடிக்க துணை கமிஷனர் சக்திவேல் உத்தரவிட்டார்.

    உதவி கமிஷனர் ஆதி மூலம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், ஜெயப்பிரகாஷ் ஆகி யோர் கொண்ட தனிப்படை போலீசார், ராஜஸ்தான் சென்றனர். அங்கு செல்போன் சிக்னலை வைத்து கொள்ளையர்களை 'தீரன்' பட பாணியில் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து கைது செய்தனர். அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் மர்வார் கிராமத்தை சேர்ந்த தினேஷ் புஜ்ஜாரா (28), ரமேஷ் பஞ்சாரா (28) ஆகிய 2 கொள்ளையர்கள் மீதும் அந்த மாநிலத்தில் உள்ள காவல் நிலையங்களில் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

    அவர்களிடம் இருந்து 8 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டியனை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
    • மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி அவரை 10-வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்து உத்தரவிட்டார்.

    சேலம்:

    சேலம் பள்ளப்பட்டி சினிமா நகரை சேர்ந்தவர் பாண்டியன் (35), இவர் கடந்த மே மாதம் 28-ந்தேதி சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்து சென்ற வீராணத்தை சேர்ந்த முருகன் என்பவரை வழி மறித்து மிரட்டி ரூ.450-ஐ பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டியனை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், செவ்வாய்ப்பேட்டை, அன்னதானப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் வீடுகளில் புகுந்து திருடுதல், மோட்டார் சைக்கிள்கள் திருட்டு உள்பட தொடர் குற்றங்களில் ஈடுபட்டதும், பாண்டியன்மீது சேலம் மாநகர போலீஸ் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதும் இதனால் 9 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதும் தெரிய வந்தது.

    இந்நிலையில் பாண்டியன் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என டவுன் போலீசார் சேலம் மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர்.

    இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி அவரை 10-வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்து உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு சேலம் சிறையில் உள்ள அவரிடம் வழங்கப்பட்டது.

    • வியாபாரி வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
    • கண்காணிப்பு காமிராக்கள் உதவியுடன் திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திரு மங்கலம் முகமதுஷாபுரம் 4-வது தெருவை சேர்ந்தவர் முத்துபால்பாண்டி(வயது 39). இவர் மதுரையில் கண்கண்ணாடி கடை வைத்துள்ளார். இவரது மனைவி புவனேஸ்வரி.

    நேற்று முத்துபால் பாண்டிக்கு பிறந்தநாள் என்பதால் மனைவி புவனேஸ்வரி, தாய் கமலம் மற்றும் குடும்பத்தினருடன் திருமங்கலத்தில் உள்ள ஓட்டலுக்கு சென்று கொண் டாட முத்துபால்பாண்டி முடிவு செய்தார். இதற்காக இரவு 9.30 மணிக்கு தனது வீட்டை பூட்டிவிட்டு ஓட்டலுக்கு சென்றனர்.

    இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் இவரது வீட்டின் கதவை உடைத்து பீரோவை உடைத்து அதிலிருந்த 20 பவுன் நகைகளை திருடி சென்ற னர். நகைபெட்டிகளை அருகேயுள்ள முட்புதர்களில் வீசி சென்றனர்.

    பிறந்தநாள் கொண்டாடத்தினை முடித்துவிட்டு இரவு 10.45 மணிக்கு முத்துபால்பாண்டி குடும்பத்தினருடன் வீடு திரும்பினர்.வீடு திறந்து கிடக்கவே உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் தங்க நகைகள் திருட்டு போனது தெரியவந்தது.

    இது குறித்து திருமங்கலம் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. திருமங்கலம் டி.எஸ்.பி. வசந்தகுமார் தலைமையில் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகைநிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.

    சம்பவம் நடைபெற்ற வீடு மதுரை - விருதுநகர் நான்குவழிச்சாலையை ஒட்டி அமைந்துள்ளதால் திருட்டு சம்பவத்தில் ஈடு பட்டவர்கள் முத்துபால் பாண்டி வீட்டில் திருடிய பின்பு நான்குவழிச்சாலை வழியாக தப்பி சென்றி ருக்கலாம் என்ற கோணத்தில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்கள் உதவியுடன் திருமங்கலம் டவுன் போலீசார் விசா ரணை நடத்திவருகின்றனர்.

    • அங்க முத்து (வயது 80). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மனைவி மேனாவுடன் வசித்து வருகிறார்.
    • அதிகாலை 2 மணிக்கு புகுந்த மர்ம நபர்கள், பீரோவை உடைத்து 12 பவுன் நகைகள், ரூ.92 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளை அடித்து சென்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கெங்க வல்லி அருகே உள்ள நடுவ லூரை சேர்ந்தவர் அங்க முத்து (வயது 80). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மனைவி மேனாவுடன் வசித்து வருகிறார்.

    இவரது வீட்டில் கடந்த 1-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு புகுந்த மர்ம நபர்கள், பீரோவை உடைத்து 12 பவுன் நகைகள், ரூ.92 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளை அடித்து சென்ற னர். இதுகுறித்து கெங்க வல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். அதில் ஆத்தூர் அருகே உள்ள அம்மா பா ளையத்தை சேர்ந்த வெங்க டேஷ் (29), கொள்ளை யடித்தது தெரிய வந்தது. அவரிடம் நகைகளை மீட்டு தொடர்ந்து விசாரித்தனர்.

    இதில், அவர் மீது சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், புதுக் கோட்டை, திருச்சி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மாவட் டங்களில் 65 திருட்டு வழக் குகள் இருப்பது தெரியவந் தது. இதையடுத்து வெங்க டேசை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • வேலை பார்த்து கிடைத்த பணத்தை சிறுக சிறுக சேர்த்து தனது சகோதரிகள் சிலருக்கு திருமணம் செய்து வைத்தார்.
    • இன்னும் சில சகோதரிகளுக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள திம்மநாயக்கன் பாளையம் சிவசக்தி நகரை சேர்ந்தவர் வடிவேல் (வயது40).

    சம்பவத்தன்று இவர் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது மர்ம ஆசாமி ஒருவன் வீட்டுக்குள் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து திருடன்... திருடன்... என வடிவேல் கூச்சலிடவே, அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதையடுத்து வீட்டின் கதவை இழுத்து பூட்டினர். மேலும் ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கதவை பூட்டியதால் உள்ளே சிக்கிய திருடன் என்னசெய்வதென்று தெரியாமல் தவித்தான். பொதுமக்களிடமிருந்து தப்பிக்க வீட்டில் இருந்த சேலையை எடுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்றான்.

    இதனிடையே அங்கு விரைந்து வந்த ஊத்துக்குளி போலீசார் திருடனை மடக்கி பிடித்தனர். அவனிடம் விசாரணை நடத்திய போது திருப்பூர் பலவஞ்சிபாளையத்தைச்சேர்ந்த முஸ்தபா மகன் இஸ்மாயில் (30) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது இஸ்மாயில் கொள்ளையில் ஈடுபட்டதற்கான காரணங்கள் குறித்து வாக்குமூலம் அளித்தார்.

    கைதான இஸ்மாயிலுக்கு உடன்பிறந்த சகோதரிகள் 9 பேர் உள்ளனர். இவர்களில் சிலர் திருமணமாகி திருப்பூர் மற்றும் அருகில் உள்ள ஊர்களில் வசித்து வருகின்றனர். சகோதரிகள் சிலருக்கு திருமணமாகவில்லை. இஸ்மாயில் ஒரே மகன் என்பதால் அவர்தான் குடும்பத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்காக திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ஆனால் அதில் கிடைக்கும் பணத்தை வைத்து குடும்பத்தை நடத்த முடியவில்லை.

    இருப்பினும் வேலை பார்த்து கிடைத்த பணத்தை சிறுக சிறுக சேர்த்து தனது சகோதரிகள் சிலருக்கு திருமணம் செய்து வைத்தார். இன்னும் சில சகோதரிகளுக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். ஆனால் எவ்வளவோ முயன்றும் சகோதரிகளின் திருமண செலவுக்கான பணத்தை சேர்க்க முடியவில்லை.

    இதனால் என்னசெய்வதென்று யோசித்துள்ளார். அப்போது அதிக பணம் வேண்டுமென்றால் திருட்டில்தான் ஈடுபட வேண்டும் என்று எண்ணிய அவர் திருடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அதன்படி கடந்த 2021ம் ஆண்டு அவினாசியில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்து திருட முயற்சித்துள்ளார். ஆனால் அவரை அப்பகுதி பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து 6 மாத சிறை தண்டனைக்கு பிறகு வெளியே வந்த அவர், எப்படியாவது பணத்தை புரட்டி விட வேண்டும் என்பதற்காக மீண்டும் 2022-ம் ஆண்டு பெருமாநல்லூர் பகுதியில் உள்ள வீட்டில் திருட முயன்றுள்ளார். அப்போதும் அவர் பொதுமக்கள் பிடியில் சிக்கி கொண்டார்.

    நேற்று முன்தினம் ஊத்துக்குளி அருகே உள்ள திம்மநாயக்கன் பாளையம் சிவசக்தி நகரை சேர்ந்த வடிவேல் என்பவரது வீட்டிற்குள் புகுந்து திருட முயற்சித்துள்ளார். அங்கேயும் அவர் சிக்கிக்கொண்டார். இஸ்மாயிலை வீட்டிற்குள் வைத்து பூட்டியதால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த அவர் அவமானமும் அடைந்தார். மேலும் தனது சகோதரிகளின் திருமண செலவுக்காக 3 முறை முயற்சி செய்தும் தனது கொள்ளை திட்டம் நிறைவேறாததால் மிகவும் வருத்தமடைந்தார்.

    வெளியே சென்றாலும் யாரிடமும் தலை காட்ட முடியாது என்று எண்ணிய அவர், வடிவேல் வீட்டின் பீரோவில் இருந்த சேலையை எடுத்து அங்கிருந்த கொக்கியில் மாட்டி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் போலீசார் வந்து இஸ்மாயிலை மீட்டனர்.

    மேலும் இஸ்மாயில் போலீசாரிடம் கூறுகையில், 3 முறை முயன்றும் என்னால் கொள்ளையடிக்க முடியவில்லை. எனவே எனக்கு திருடுவதற்கு சரியான பயிற்சி இல்லை. அதனால்தான் பொதுமக்களிடம் சிக்கினேன் என தெரிவித்துள்ளார். உடன் பிறந்த 9 சகோதரிகளின் திருமண செலவுக்காக பனியன் தொழிலாளி கொள்ளையனாக மாறிய சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து வீட்டின் கதவை இழுத்து பூட்டினர்.
    • விரைந்து வந்த ஊத்துக்குளி போலீசார் திருடனை மடக்கி பிடித்தனர்.

    ஊத்துக்குளி:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள திம்மநாயக்கன் பாளையம் சிவசக்தி நகரை சேர்ந்தவர் வடிவேல் (வயது40). இவர் தனது மனைவி காயத்ரி, தாயார் நாகம்மாள் (60) மற்றும் 2 குழந்தைகளுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். வடிவேல் மற்றும் காயத்ரி இருவரும் பனியன் நிறுவனத்தில் தொழிலாளிகளாக பணிபுரிந்து வருகின்றனர்.

    நாகம்மாள் அப்பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று வடிவேல் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து உள்ளார். மாலை வேலைக்கு சென்ற தனது தாயாரை அழைத்து வருவதற்காக வீட்டை பூட்டிவிட்டு மோட்டார்சைக்கிளில் சென்றுள்ளார்.பின்னர் தனது தாயாருடன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது மர்ம ஆசாமி ஒருவன் வீட்டுக்குள் இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து திருடன்... திருடன்... என வடிவேல் கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதையடுத்து வீட்டின் கதவை இழுத்து பூட்டினர். மேலும் ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கதவை பூட்டியதால் உள்ளே சிக்கிய திருடன் என்னசெய்வதென்று தெரியாமல் தவித்தான். பொதுமக்களிடமிருந்து தப்பிக்க வீட்டில் இருந்த சேலையை எடுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்றான்.

    இதனிடையே அங்கு விரைந்து வந்த ஊத்துக்குளி போலீசார் திருடனை மடக்கி பிடித்தனர். அவனிடம் விசாரணை நடத்திய போது திருப்பூர் பலவஞ்சிபாளையத்தைச்சேர்ந்த முஸ்தபா மகன் இஸ்மாயில் (30) என்பது தெரியவந்தது.அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கொள்ளையில் ஈடுபட முயன்ற வாலிபர் பொதுமக்கள் பிடியில் இருந்து தப்பிக்க தூக்கு ப்போட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • கத்தியை காட்டி வழிப்பறி செய்த வாலிபரை கைது செய்தனர்.
    • எதற்காக கத்தியுடன் சுற்றித்திரிந்தார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை செல்லூர்அருள்தாஸ்புரத்தை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 55).இவர் செல்லூர் 50 அடி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்லபாண்டியிடம் இருந்து ரூ. 1300- ஐ பறித்து சென்றார்.

    இந்த சம்பவம் குறித்து செல்லப்பாண்டி செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட செல்லூர் குலமங்கலம் மெயின் ரோடு அன்னை சத்யா நகரை சேர்ந்த ஜெயம் மகன் கழுவ நாதன் என்ற ரஞ்சித் குமாரை (27) கைது செய்தனர்.

    சுப்பிரமணியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் ரகுநாத் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது முத்துப்பட்டி பகுதியில் கத்தியுடன் பதுங்கியிருந்த சதீஷ்குமார்(32) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் எதற்காக கத்தியுடன் சுற்றித்திரிந்தார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சி.சி.டி.வி. கேமராவில் விபூதியை அள்ளி வீசி கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் துணைக்கோவிலாக காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. திருப்பரங்குன்றம் மலை மேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த கோவிலுக்கு செல்ல பழைய படிக்கட்டு பாதை மற்றும் புதிய படிக்கட்டு பாதை என 2 வழிகள் உள்ளன. இங்கு நேற்று முன்தினம் சித்ரா பவுர்ணமியையொட்டி வழக்கத்துக்கு அதிகமாக பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து சென்றனர். இதைத்தொடர்ந்து இரவு கோவிலை பூட்டி சென்றனர்.

    நேற்று காலை கோவிலை திறப்பதற்காக கோவில் குருக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் சென்றனர். அப்போது கோவிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன.

    மேலும் கோவிலுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பூஜை பொருட்கள், பித்தளை வேல் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கோவில் குருக்கள் மற்றும் பணியாளர்கள் உடனடியாக கோவில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். யாரோ மர்மநபர்கள் கோவிலுக்குள் புகுந்து பொருட்களை திருடி உள்ளனர். அவர்கள் அங்கிருந்த சி.சி.டி.வி. காமிராவின் ஹார்டு டிஸ்க்கையும் திருடிச்ெசன்றி ருக்கிறார்கள்.

    மேலும் சி.சி.டி.வி. காமிராவில் கொள்ளை சம்பவம் பதிவாகி விடக்கூடாது என்பதற்காக திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்கள் காமிரா மீது விபூதியை அள்ளி வீசி கைவரிசை காட்டியுள்ளனர்.

    கோவில் கதவை உடைத்து பூஜை பொருட்களை திருடிய சம்பவம் திருப்பரங் குன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மலைக்கு செல்லும் படிக்கட்டு பாதை பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் எதுவும் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர். காசி விசுவநாதர் கோவிலில் கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் கண்காணிப்பு காமிரா அமைக்கப்பட்டு ள்ளது. இந்தநிலையில் தான் கோவிலில் திருட்டு நடந்திருக்கிறது. திருட்டில் ஈடுபட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ×