search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுயசரிதை"

    • முக்கிய பதவிகளை வகிக்கும் நபர்கள் பல சவால்களை கடக்க வேண்டியிருக்கும்.
    • இது சம்பந்தமாக எந்த குறிப்பிட்ட நபரையும் நான் குறிவைக்கவில்லை.

    இஸ்ரோ தலைவர் சோம்நாத் "நிலவொளியைக் குடித்த சிங்கங்கள்" என்ற பெயரில் தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தார்.

    இந்நிலையில், சுயசரிதை புத்தகத்தில் முன்னாள் இஸ்ரோ இயக்குனர் கே.சிவன் குறித்து சில விமர்சனக் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிடுவதில் இருந்து விலகுவதாக இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் தெரிவித்துள்ளார்.

    மேலும், சோம்நாத் தனது சுயசரிதையில் தனது முன்னோடியான சிவனைப் பற்றி சில விமர்சனக் கருத்துகள் இருப்பதாகக் கூறப்பட்ட விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார்.

    அப்போது இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், " ஒரு நிறுவனத்தில் உயர் பதவியை அடைவதற்கான பயணத்தின் போது ஒவ்வொரு நபரும் சில வகையான சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

    இதுபோன்ற முக்கிய பதவிகளை வகிக்கும் நபர்கள் பல சவால்களை கடக்க வேண்டியிருக்கும். அவற்றில் ஒன்று ஒரு நிறுவனத்தில் பதவிகளை பெறுவது தொடர்பான சவால்கள். இவை அனைவரும் கடக்க வேண்டிய சவால்கள்.

    அதிகமான நபர்கள் குறிப்பிடத்தக்க பதவிக்கு தகுதியுடையவர்களாக இருக்கலாம். நான் அந்த குறிப்பிட்ட விஷயத்தை வெளியே கொண்டு வர முயற்சித்தேன். இது சம்பந்தமாக எந்த குறிப்பிட்ட நபரையும் நான் குறிவைக்கவில்லை" என்றார்.

    சந்திரயான்-2 விண்கலம் தோல்வியடைந்தது குறித்த அறிவிப்பில் இருந்த தெளிவின்மை குறித்து தனது புத்தகத்தில் குறிப்பிட்டதாக அவர் ஒப்புக்கொண்டார்.

    • எனது வாழ்க்கை கதையை பிறருக்கு எடுத்துரைக்கும் நோக்கில் இது எழுதவில்லை.
    • சந்திரயான்-3 விண்கலத்தின் வரலாற்று வெற்றி சமூகத்தில் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தியது.

    திருவனந்தபுரம்:

    இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைவராக பதவி வகித்து வருபவர், சோம்நாத் (வயது 59). கேரளாவை சேர்ந்த இவரது பதவிக்காலத்தில் இஸ்ரோ பல்வேறு சாதனைகளை ஈட்டி வருகிறது.

    நிலவில் சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கியது, சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-எல்1 விண்கலம் அனுப்பியது, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்ட சோதனை என பல்வேறு சாதனைகள் இவரது தலைமையில் நடந்துள்ளது.

    இந்த பணி நெருக்கடியின் மத்தியிலும் அவர் தனது வாழ்க்கை பயணத்தை புத்தகமாக வெளியிட முடிவு செய்து சுயசரிதை எழுதியுள்ளார். இதை கேரளாவை சேர்ந்த லிபி பதிப்பகம் வெளியிடுகிறது.

    'நிலவு குடிச்ச சிம்ஹங்கள்' என மலையாளத்தில் பெயரிடப்பட்டு உள்ள இந்த புத்தகம் அடுத்த மாதம் (நவம்பர்) வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    உண்மையை சொன்னால், என்ஜினீயரிங் சேர வேண்டுமா? அல்லது பி.எஸ்.சி. படிக்கணுமா? என்று கூட தெரியாத ஒரு சாதாரண கிராமத்து இளைஞரின் கதைதான் இது.

    அவரது குழப்பங்கள், வாழ்க்கையில் அவர் எடுத்த சரியான முடிவுகள் மற்றும் இந்தியா போன்ற ஒரு நாட்டில் அவர் பெற்ற வாய்ப்புகள் பற்றி இதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    எனது வாழ்க்கை கதையை பிறருக்கு எடுத்துரைக்கும் நோக்கில் இது எழுதவில்லை. மாறாக வாழ்க்கையில் துன்பங்களைச் சந்திக்கும்போதும் மக்கள் தங்கள் கனவுகளை எட்டிப்பிடிப்பதற்கு ஊக்குவிப்பதே இதன் ஒரே நோக்கம்.

    சந்திரயான்-3 விண்கலத்தின் வரலாற்று வெற்றி சமூகத்தில் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தியது. அதன் வெற்றியால் ஏராளமானோர், குறிப்பாக எண்ணற்ற குழந்தைகள் உத்வேகம் அடைந்துள்ளனர் என்பதைக் காண முடிந்தது. இந்தியாவும் இந்தியர்களும் இவ்வளவு பெரிய செயல்களைச் செய்ய முடியும் என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர்.

    இந்த வரலாற்று வெற்றிதான் என்னை புத்தகம் எழுத தூண்டியது.

    பல திறமையானவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் நம்பிக்கையின்மையும் ஒன்றாகும். இதை அவர்களுக்கு வெளிப்படுத்துவதே இந்த புத்தகத்தின் நோக்கம் ஆகும்.

    ஏனெனில் நானும் அத்தகைய சூழலை எதிர்கொண்டவன். அதை பல்வேறு நிகழ்வுகள் வழியாக புத்தகத்தில் விவரித்து இருக்கிறேன்.

    இவ்வாறு சோம்நாத் கூறினார்.

    சுயசரிதையை ஏன் மலையாளத்தில் எழுதினீர்கள்? என்ற கேள்விக்கு, 'நான் ஒரு மலையாளி. அத்துடன் தாய்மொழியில் எழுதுவது வசதியாக உள்ளது' என்று சோம்நாத் பதிலளித்தார்.

    இந்த புத்தகத்தில் சோம்நாத்தின் தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமின்றி, இஸ்ரோவின் ராக்கெட் தயாரிப்பு, பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3, சந்திரயான்-3 போன்றவற்றின் கதைகளும் விவரிக்கப்பட்டு உள்ளன.

    • கடந்த 34 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.
    • தனது திருட்டு வாழ்க்கை மற்றும் சிறை வாழ்க்கை பற்றி அனைத்தையும் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருவங்காடு பகுதியை சேர்ந்தவர் சித்திக். சிறுவயதிலேயே திருட்டு சம்பவங்களில் ஈடுபட தொடங்கிய இவர், தற்போது வரை 500-க்கும் மேற்பட்ட கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது 219 திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனால் கடந்த 34 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.

    இனியாவது கொள்ளையில் ஈடுபடாமல் திருந்தி குடும்ப வாழ்க்கை வாழ முடிவு செய்திருக்கும் அவர், கண்ணூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த மாத இறுதியில் ஜெயிலில் இருந்து விடுதலையாகிறார். தனது வாழ்வின் பெரும் பகுதியை சிறையிலேயே கழித்துள்ள அவர், தன்னை பற்றி சுயசரிதை எழுதியிருக்கிறார். கள்ளந்தோ ஆத்மகதா (ஒரு திருடனின் சுயசரிதை) என்ற தலைப்பில் எழுதியிருக்கும் சுயசரிதையில் தனது திருட்டு வாழ்க்கை மற்றும் சிறை வாழ்க்கை பற்றி அனைத்தையும் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

    சித்திக் தனது 14 வயது வயதில் தனது சகோதரியின் மகனின் தங்க மோதிரத்தை திருடி தனது முதல் திருட்டை தொடங்கியிருக்கிறார். பின்பு ரேசன்கடையில் தனது மாமாவின் பணத்தை திருடியது, தாயின் தங்க செயினை திருடியது என்று அடுத்தடுத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு கைதாகி சிறை தண்டனையை அனுபவித்து வந்திருக்கிறார்.

    1989-ம் ஆண்டு கண்ணூர் மத்திய சிறையில் இருந்தபோது, சிறைத்தோழர் ஒருவரிடம் பூட்டு உடைக்கும் கலையை கற்றுக்கொண்டு, பின்பு சிறையை விட்டு வெளியே வந்ததும் பூட்டியிருக்கும் வீடுகளில் கொள்ளையடிக்க தொடங்கினார். கொள்ளையடித்த பணத்தை சில நேரங்களில் அனாதை இல்லங்களுக்கும் கொடுத்திருக்கிறார். இதுபோன்ற தனது வாழ்வில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் தனது சுயசரிதையில் சித்திக் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது.

    ×