search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாதவரம் பகுதியில் வழிப்பறி: ராஜஸ்தான் கொள்ளையர்களிடம் 8 பவுன் நகைகள் பறிமுதல்
    X

    மாதவரம் பகுதியில் வழிப்பறி: ராஜஸ்தான் கொள்ளையர்களிடம் 8 பவுன் நகைகள் பறிமுதல்

    • மண்ணடி தனியார் தங்கும் விடுதியில் கொள்ளையர்கள் இருப்பது தெரியவந்தது.
    • கோர்ட்டில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    மாதவரம்:

    சென்னை மாதவரத்தை அடுத்த பொன்னியம்மன் மேடு ஸ்ரீராம் நகர் பகுதியை சேர்ந்தவர் கவிதா ( 36). கடந்த மாதம் 14-ந் தேதி தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது 3 பேர் கொண்ட மர்மகும்பல் இரு சக்கர வாகனத்தில் வந்து, கவிதா கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறித்து சென்றனர். இதுகுறித்து கவிதா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர். 200-க்கும் மேற்பட்ட கண்கணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் சென்னை மண்ணடி தனியார் தங்கும் விடுதியில் கொள்ளையர்கள் இருப்பது தெரியவந்தது.

    அங்கு விரைந்து சென்ற போலீசார் மகேந்திரகுமார், என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வட மாநிலத்தினர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது அவர்களை பிடிக்க துணை கமிஷனர் சக்திவேல் உத்தரவிட்டார்.

    உதவி கமிஷனர் ஆதி மூலம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், ஜெயப்பிரகாஷ் ஆகி யோர் கொண்ட தனிப்படை போலீசார், ராஜஸ்தான் சென்றனர். அங்கு செல்போன் சிக்னலை வைத்து கொள்ளையர்களை 'தீரன்' பட பாணியில் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து கைது செய்தனர். அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் மர்வார் கிராமத்தை சேர்ந்த தினேஷ் புஜ்ஜாரா (28), ரமேஷ் பஞ்சாரா (28) ஆகிய 2 கொள்ளையர்கள் மீதும் அந்த மாநிலத்தில் உள்ள காவல் நிலையங்களில் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

    அவர்களிடம் இருந்து 8 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×