search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pakistan"

    • பாகிஸ்தான் அணி முதலில் பந்தவீச்சு தேர்வு செய்தது.
    • அயர்லாந்து சார்பில் பேரி மெக்கார்த்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் 36-வது லீக் போட்டி புளோரிடாவில் நடைபெற்றது. இதில் அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்தவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி பேட் செய்த அயர்லாந்து அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறிது. அந்த அணியின் துவக்க வீரர்கள் ரன் குவிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியின் கரெத் டிலானி 19 பந்துகளில் 31 ரன்களை அடித்தார்.

     


    இருடன் ஆடிய மார்க் அடைர் 15 ரன்களையும், ஜோஷ் லிட்டில் 22 ரன்களையும் எடுத்தனர். இதன் காரணமாக அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை எடுத்தது. பாகிஸ்தான் சார்பில் ஷாகீன் ஷா அப்ரிடி மற்றும் இமாத் வாசிம் தலா மூன்று விக்கெட்டுகளையும், முகமது ஆமிர் 2 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் ரவுப் 1 விக்கெட் வீழ்த்தினர்.

    எளிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு துவக்க வீரர்களான முகமது ரிஸ்வான் மற்றும் சயிம் ஆயிப் தலா 17 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் விக்கெட் கொடுக்காமல் ஆடி வந்தார். இவருடன் களமிறங்கிய மற்ற வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.


     

    எனினும், 18.5 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்களை அடித்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் சார்பில் கேப்டன் பாபர் அசாம் 32 ரன்களுடனும் ஷாகீன் ஷா அப்ரிடி 13 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    அயர்லாந்து சார்பில் பேரி மெக்கார்த்தி 3 விக்கெட்டுகளையும், கர்டிஸ் காம்பர் 2 விக்கெட்டுகளையும், மார்க் அடைர் மற்றும் பென் வைட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    • அமெரிக்காவிடம் தோல்வியடைந்ததால் பாகிஸ்தானுக்கு வெளியேறும் நிலை ஏற்பட்டது.
    • ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடம் தோல்வியடைந்து நியூசிலாந்து வெளியேறியது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் அணிகளை தவிர மற்ற அணிகள் மிகப்பெரிய அளவில் அனுபவம் இல்லாத அணிகள்.

    நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து போன்ற அணிகளுக்கு ஓரளவு அனுபவம் உள்ளது.

    கனடா, அமெரிக்கா, நமீபியா, ஓமன், உகாண்டா, பப்புவா நியூ கினியா, நேபாளம் பொன்ற அணிகள் தற்போதுதான் உலகக் கோப்பை தொடரில் விளையாடுகின்றன.

    முன்னணி அணிகளிடம் இந்த கத்துக்குட்டி அணிகள் என்ன பாடுபடப்போகிறதோ என விமர்சகர்கள் தெரிவித்தனர். ஆனால் மிகப்பெரிய அணிகளுக்கு இந்த அணிகள் அதிர்ச்சி அளித்துள்ளது. அத்துடன் முக்கியமான அணிகள் வெளியாக காரணமாக அமைந்தன.

    "ஏ" பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா, அயர்லாந்து அணிகள் இடம் பிடித்திருந்தன. இரண்டு அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியும். இதனால் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் எளிதாக முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தானை அமெரிக்கா சூப்பர் ஓவரில் வீழ்த்தியது. இதனால் பாகிஸ்தான் சூப்பர் 8 வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியது. இதே பிரிவில் சற்று கூடுதல் அனுபவம் வாய்ந்த அயர்லாந்து அணியை கனடா வீழ்த்தியது.

    குரூப் "பி" பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன் அணிகள் இடம் பிடித்துள்ளன. இதில் ஆஸ்திரேலியா அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒருவேளை ஸ்காட்லாந்திடம் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தால் இங்கிலாந்து வெளியேறும் நிலை ஏற்படும். நமீபியாவுக்கு எதிரான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டாலும் இங்கிலாந்து வெளியேறிவிடும்.

    குரூப் "சி"-யில் ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, உகாண்டா, பப்புவா நியூ கினியா அணிகள் இடம் பிடித்துள்ளன. இதில் ஆப்கானிஸ்தான் அணியை குறைத்து மதிப்பிட முடியாது. அதை நிரூபிக்கும் வகையில் நியூசிலாந்தை வீழ்த்தியது. வெஸ்ட் இண்டீஸ் அணியும் நியூசிலாந்தை வீழ்த்தியதால் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.

    குரூப் "டி"-யில் தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், நெதர்லாந்து, நேபாளம், இலங்கை அணிகள் இடம் பிடித்துள்ளன. தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், இலங்கை அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது.

    தென்ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு எதிராக இலங்கை தோல்வியை சந்தித்தது. இதனால் போட்டியில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. வங்காளதேசம் கடைசி போட்டியில் நேபாளத்தை வீழ்த்தினால் எளிதாக அடுத்த சுற்றுக்கு முன்னேறும். அதேவேளையில் தோல்வியடைந்து, இலங்கைக்கு எதிராக நெதர்லாந்து வெற்றி பெற்றால் சிக்கல் ஏற்படும். ரன்ரேட் அடிப்படையில் நெதர்லாந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறே வாய்ப்புள்ளது. இதற்கான வாய்ப்பு குறைவுதான். நேபாளத்திற்கு எதிராக தென்ஆப்பிரிக்கா 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்காவிடம் பாகிஸ்தான் தோற்றதனாலும், ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடம் நியூசிலாந்து தோல்வியடைந்ததாலும், தென்ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு எதிராக இலங்கை அணி தோல்வியடைந்ததாலும் பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை அணிகள் முதல் சுற்றோடு உலக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாபர் அசாம் மீது தொடர் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார்.
    • பாபர் கிங் இல்லை அவர் போலி கிங் என்று தெரிவித்தார்.

    பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அகமது ஷேசாத். நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடி வருவதற்கு அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் மீது தொடர் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார்.

    அந்த வகையில், பாகிஸ்தான் நிகழ்ச்சி ஒன்றில் ஷேசாத் மற்றும் பாபர் என இருவரின் டி20 உலகக் கோப்பை புள்ளி விவரங்கள் கொண்டு ஒப்பீடு செய்யப்பட்டது. இதை வைத்து பார்க்கும் போது பாபர் கிங் இல்லை அவர் போலி கிங் என்று தெரிவித்தார்.

    இது குறித்து பேசிய அவர், "புள்ளி விவரங்களை பார்க்கும் போது, நானே சிறப்பாக செயல்பட்டு இருப்பேன் என்று தோன்றுகிறது. உனது புள்ளி விவரங்கள் என்னைவிட மோசமாகவே இருக்கிறது. டி20 உலகக் கோப்பை தொடர்களில் 205 பந்துகளை எதிர்கொண்டு, நீ ஒரு சிக்ஸ் கூட அடிக்கவில்லை."

    "உள்ளூர் கிரிக்கெட் கட்டமைப்பை நீ அழித்துவிட்டாய். குழுவில் உள்ள உனது நண்பர்களுக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. 22 வயது வீரரான சயிம் ஆயுப் வளர்ச்சியை உறுதிப்படுத்த வேண்டியது உனது கடமை, ஆனால் இளம் வயதிலேயே அவரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது. வெறும் 25 போட்டிகளில் ஆயுப்-ஐ மக்கள் விமர்சிக்கின்றனர்," என தெரிவித்தார். 

    • பக்தர்கள் பயணம் செய்த பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
    • இந்த தாக்குதலில் 9 பேர் பரிதாபமாக இறந்தனர். 40க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம்மீது பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த தாக்குதலில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். தப்பிய பயங்கரவாதிகளை தேடும் பணிகள் டிரோன்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டன. கடந்த மூன்று நாட்களில் 3-வது முறையாக இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

    ஏற்கனவே, கதுவாவில் பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மற்றொரு சம்பவத்தில் பக்தர்கள் பயணம் செய்த பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இந்நிலையில், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தாதவரை ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் முடிவுக்கு வராது என தெரிவித்தார்.

    • பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.யிடம் பரிந்துரை செய்துள்ளது.
    • ஆய்வு செய்ய ஐ.சி.சி. அதிகாரிகள் பலர் பாகிஸ்தான் சென்றுள்ளனர்.

    லாகூர்:

    "மினி உலக கோப்பை" என அழைக்கப்படும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி 1998-ம் ஆண்டு வங்காளதேசத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் தென்ஆப்பிரிக்கா கோப்பையை கைப்பற்றியது. இதுவரை 8 போட்டித் தொடர் நடைபெற்றுள்ளது.

    கடைசியாக 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் கோப்பையை வென்றது. 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியை 8 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் முதல் தடவையாக 2025-ல் நடத்துகிறது.

    ஒருநாள் போட்டித் தரவரிசையில் டாப் 8 நாடுகள் இதில் பங்கேற்கின்றன. வெஸ்ட்இண்டீஸ், இலங்கை ஆகியவை தகுதிபெறும் வாய்ப்பை இழந்தன.

    இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி போட்டியை பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை கராச்சி, லாகூர், ராவல் பிண்டியில் நடத்த திட்டமிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.யிடம் பரிந்துரை செய்துள்ளது.

    தொடக்க ஆட்டம், அரைஇறுதி உள்பட 3 போட்டிகள் கராச்சியிலும், இறுதிப்போட்டி உள்பட 7ஆட்டங்கள் லாகூரிலும், அரைஇறுதி உள்பட 5 போட்டிகள், ராவல் பிண்டியிலும் நடத்த முடிவு செய்துள்ளது.

    1996 உலக கோப்பைக்கு பிறகு முதல் ஐ.சி.சி. போட்டியை பாகிஸ்தானில் நடைபெறுவதால் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய ஐ.சி.சி. அதிகாரிகள் பலர் பாகிஸ்தான் சென்றுள்ளனர்

    இந்த போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா? என்பது உறுதியில்லை. மத்திய அரசின் அனுமதியை பொறுத்துதான் இருக்கிறது.

    இந்தியா பங்கேற்கும் ஆட்டங்களை லாகூரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா பங்கேற்க மறுத்தால் கடந்ந காலங்களை போல இந்தியா ஆடும் போட்டிகள் வேறு நாட்டுக்கு மாற்றப்படும். 2008-ம் ஆண்டு ஆசிய கோப்பைக்கு பிறகு இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • நியூயார்க்கில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 19-வது லீக் போட்டி நடைபெற்றது
    • ஈகோ கிளாஸை எளிதாக விளக்கும் வகையில் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை இந்த போட்டிக்கு வந்த நபர் ஒருவர் அரங்கேற்றியுள்ளார்.

    டி20 உலகக்கோப்பை 2024 போட்டிகள் அமெரிக்காவில் நடந்து வரும் நிலையில் நியூயார்க்கில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 19-வது லீக் போட்டி நடைபெற்றது. இதில், முதலில் விளையாடிய இந்தியா 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியை காண வந்த பாகிஸ்தானை சேர்ந்த யூடியூபர் ஷாத் அகமத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    கிரிக்கெட்டை விளையாட்டு என்று கருதுவதையும் தாண்டி இரண்டு நாடுகளுக்குமாக ஈகோ கிளாசாக ரசிகர்கள் மாற்றத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அந்த ஈகோ கிளாஸை எளிதாக விளக்கும் வகையில் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை இந்த போட்டிக்கு வந்த நபர் ஒருவர் அரங்கேற்றியுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த ரேசா கான் என்ற அந்த கன்டன்ட் கிரியேட்டர், தனது பாகிஸ்தானிய தந்தையையும், இந்திய மாமனாரையும் போட்டிக்கு அழைத்து வந்து இந்தியா பாகிஸ்தான் அணிகள் விளையாடும்போது அவர்களின் ரியாக்சன்களைப் படம்பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதைத் தொடர்ந்து வீடியோ வைரலாகி வருகிறது.

    மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி நடிப்பில் வெளிவந்த உயிரே படத்தில் இருவேறு சித்தாந்தங்களைக் கொண்ட தகப்பன்கள் மும்பையில் நடக்கும் மதக் கலவரத்தின்போது தங்களுக்குள் உள்ள வித்தியாசங்களையும் பிரிவினையையும் எதிர்கொள்ளும் தருணத்தை சந்திப்பர். இந்த வீடியோ அதை நினைவுபடுத்துவதாக உள்ளது.   

    • நிக்கோலஸ் கிர்டன், ஸ்ரேயஸ் மோவா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
    • முகமது ஆமீர் மற்றும் ஹாரிஸ் ரவுஃப் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    டி20 உலகக் கோப்பையில் நேற்றிரவு நடைபெற்ற 22-வது லீக் போட்டியில் கனடா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த கனடா அணிக்கு துவக்கம் முதலே விக்கெட்டுகள் சரிய துவங்கின.

    அந்த அணியின் துவக்க வீரர் நவ்நீத் தலிவால் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய பிரஜத் சிங், நிக்கோலஸ் கிர்டன், ஸ்ரேயஸ் மோவா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும், மற்றொரு துவக்க வீரரான ஆரோன் ஜான்சன் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். இதனால் கனடா அணியின் ஸ்கோர் சற்று அதிகரித்தது. 20 ஓவர்கள் முடிவில் கனடா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை சேர்த்தது.

    பாகிஸ்தான் சார்பில் முகமது ஆமீர் மற்றும் ஹாரிஸ் ரவுஃப் தலா 2 விக்கெட்டுகளையும், நசீம் ஷா மற்றும் ஷாஹீன் ஷா அப்ரிடி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    எளிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு முகமது ரிஸ்வான் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார். இவருடன் களமிறங்கிய சைம் ஆயுப் 6 ரன்களிலும் அடுத்து வந்த ஃபகர் ஜமான் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் பாபர் அசாம் 33 ரன்களை சேர்த்தார்.

    இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 107 ரன்களை சேர்த்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • கனடா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் எடுத்தது.
    • பாகிஸ்தான் தரப்பில் முகமது அமீர், ஹரிஸ் ராஃப் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    நியூயார்க்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 22-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, கனடாவை சந்திக்கிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி கனடா அணியின் தொடக்க வீரர்களாக ஜான்சன் - நவ்நீத் தலிவால் களமிறங்கினர். நவ்நீத் தலிவால் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பர்கத் சிங் 2 , நிக்கோலஸ் கிர்டன் 1, ஷ்ரேயாஸ் மொவ்வா 2, ரவீந்தர்பால் சிங் 0, சாத் பின் ஜாபர் 10 என அடுத்தடுத்து வெளியேறினர்.

    ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் ஒரு முனையில் சிறப்பாக ஆடி வந்த ஜான்சன் அரை சதம் விளாசினார். அவர் 52 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதனால் இறுதியில் கனடா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் முகமது அமீர், ஹரிஸ் ராஃப் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • பாகிஸ்தான் அடுத்து வரும் இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும்.
    • அமெரிக்க அணி எஞ்சிய 2 போட்டியிலும் தோல்வியடையந்தால் மட்டுமே பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்றில் இடம் பெறும்.

    நியூயார்க்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 22-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, கனடாவை சந்திக்கிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் தோற்றது. இந்தியாவுக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் 120 ரன் இலக்கை கூட எடுக்க முடியாமல் தோல்வியடைந்தது.

    இதனால் பாகிஸ்தான் அடுத்து வரும் இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும். அதுமட்டுமல்லாமல் அமெரிக்க அணி எஞ்சிய 2 போட்டியிலும் தோல்வியடைய வேண்டும். மேலும் ரன்ரேட் அதிகமாக இருக்க வேண்டும். இது நடந்தால் மட்டுமே பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்றில் இடம் பெறும். 

    • இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்காத பாகிஸ்தானுக்கு சூப்பர் 8 சுற்று வாய்ப்பு கணிசமாக குறைந்துள்ளது.
    • பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் தோற்றது.

    நியூயார்க்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், நியூயார்க்கில் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு அரங்கேறும் 22-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, கனடாவை (ஏ பிரிவு) சந்திக்கிறது.

    பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் தோற்றது. இந்தியாவுக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் 120 ரன் இலக்கை கூட எடுக்க முடியாமல் தோல்வியடைந்தது.

    இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்காத பாகிஸ்தானுக்கு சூப்பர் 8 சுற்று வாய்ப்பு கணிசமாக குறைந்துள்ளது. முதலில் பாகிஸ்தான் எஞ்சிய இரு ஆட்டங்களிலும் கட்டாயம் வென்றாக வேண்டும். இன்னொரு பக்கம் அமெரிக்கா தனது கடைசி இரு லீக்கில் (இந்தியா மற்றும் அயர்லாந்துக்கு எதிராக) தோற்க வேண்டும். இவ்வாறு நடந்து ரன்ரேட்டிலும் உயர்ந்த நிலையில் இருந்தால் மட்டுமே பாகிஸ்தானுக்கு சூப்பர்8 கதவு திறக்கும்.

    சாத் பின் ஜாபர் தலைமையிலான கனடாவை சாதாரணமாக எடுத்து விட முடியாது. அமெரிக்காவுக்கு எதிராக 194 ரன்கள் குவித்து தோல்வி அடைந்த கனடா, அயர்லாந்துக்கு எதிராக 12 ரன்னில் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. எனவே பாகிஸ்தானுக்கு கடும் சோதனை அளிக்க கனடா வீரர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள்.

    • டி20 உலகக் கோப்பை தொடரில் நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
    • முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கம்ரான் அக்மலை வன்மையாக கண்டித்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

    டி20 உலகக் கோப்பை தொடரில் நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

    இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரான கம்ரன் அக்மல் டி20 போட்டி நடக்கும் போது நேரலை நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரரான அர்ஷ்தீப் சிங்கை ஒரு சீக்கியர் என்பதால் அவரை அவதூராக பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

    முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கம்ரான் அக்மலை வன்மையாக கண்டித்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அதில் "நீங்கள் சீக்கியர்களை பற்றி விமர்சிக்கும் பொழுது அவர்களை பற்றியும் அவர்களது வரலாற்றை பற்றியும் தெரிந்துக் கொண்டு பேசுங்கள். உங்களின் தாய்மார்கள் மற்றும் சகோதிரிகள் கடத்தப்பட்ட போது நேரம் காலம் பார்க்காமல் சீக்கியர்கள் காப்பாற்றினார்கள். அதனால் பேசும் பொழுது வார்த்தையை பார்த்து பேசுங்கள். உங்களை நினைக்கும் போது வெட்க கேடாக இருக்கிறது," என்று பதிவு செய்துள்ளார்.

    இதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டு கம்ரன் அக்மல் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "நான் சமீபத்தில் சொன்ன கருத்தை நினைத்து வேதனை அடைகிறேன். என்னை மன்னித்து விடுங்கள். என்னுடைய வார்த்தை மரியாதை தக்கதல்ல. எனக்கும் உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்கள் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. நான் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் அவ்வாறு பேசவில்லை," என கூறியிருக்கிறார்.

    • ரிஷப் பண்ட் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்.
    • அறுவை சிகிச்சை முடிந்ததும் கடினமான விக்கெட் கீப்பிங்கை இவ்வளவு வேகமாக செய்வது உங்களுடைய கடின உழைப்புக்கான பரிசாகும்.

    டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 119 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 43, அக்சர் படேல் 20 ரன்கள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 113 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

    ஐ.சி.சி. தொடர்களில் ஒவ்வொரு போட்டியிலும் சிறந்து விளங்கும் இந்திய பீல்டருக்கு பி.சி.சி.ஐ. விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் சிறந்த பீல்டர் விருதை விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தட்டிச்சென்றார். அந்த ஸ்பெஷல் விருதை முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அவருக்கு வழங்கினார்.

    இந்நிலையில் ரிஷப் பண்ட் விபத்து செய்தியை கேட்டு கண் கலங்கியதாக ரவி சாஸ்திரி உருக்கத்துடன் கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ரிஷப் பண்ட் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். அவருடைய விபத்து செய்தியை கேட்ட போது கண் கலங்கினேன். அவரை மருத்துவமனையில் பார்த்த போது நிலைமையும் மேலும் மோசமானது. இருப்பினும் அங்கிருந்து கம்பேக் கொடுத்த அவர் இன்று இந்தியா -பாகிஸ்தான் என்ற மிகப்பெரிய போட்டியில் விளையாடியது இதயத்தை தொடுகிறது.

    அவருடைய பேட்டிங் பற்றி அனைவருக்கும் தெரியும். அவரிடம் துருப்பச்சீட்டு இருக்கிறது. ஆனால் அறுவை சிகிச்சை முடிந்ததும் கடினமான விக்கெட் கீப்பிங்கை இவ்வளவு வேகமாக செய்வது உங்களுடைய கடின உழைப்புக்கான பரிசாகும். இது உங்களுக்கு மட்டுமல்லாமல் உலக அளவில் இருக்கும் லட்சக்கணக்கானவர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கக்கூடியது. இந்த வேலையை தொடருங்கள்.

    என்று ரவி சாஸ்திரி கூறினார். 

    ×