search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நியூசிலாந்து"

    • எங்களுக்கு மூன்றாவதாக பிறந்துள்ள இவ்வுலகின் அழகான பெண்ணை நாங்கள் வரவேற்கிறோம்.
    • இவ்வுலகிற்கு பாதுகாப்பாக வருகை வந்து, நீங்கள் அற்புதமான பயணத்தை மேற்கொள்ள இருக்கிறீர்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்

    நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் சாரா ரஹீம் தம்பதிக்கு மூன்றாவது குழந்தையாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு ஏற்கனவே 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் 1 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

    இது தொடர்பாக கேன் வில்லியம்சன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையுடன் கூடிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

    அதில், எங்களுக்கு மூன்றாவதாக பிறந்துள்ள இவ்வுலகின் அழகான பெண்ணை நாங்கள் வரவேற்கிறோம். இவ்வுலகிற்கு பாதுகாப்பாக வருகை வந்து, நீங்கள் அற்புதமான பயணத்தை மேற்கொள்ள இருக்கிறீர்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    தனது குழந்தையின் பிறப்பை ஒட்டி, அண்மையில் நடைபெற்ற நியூசிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான டி20 தொடரில் இருந்து அவர் விலகியிருந்தார்.

    ஆனால் அதற்கு முன்பு நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை கேன் வில்லியம்சன் வெளிப்படுத்தியிருந்தார். இந்த டெஸ்ட் தொடரில் மட்டும் 3 டெஸ்ட் சதங்களை அவர் அடித்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் அனுஷ்கா சர்மாக்கும் அண்மையில் தான் ஆகாய் என்ற ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என நியூசிலாந்து கைப்பற்றியது.
    • இதன்மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் நியூசிலாந்து முதல் இடத்திற்கு முன்னேறியது.

    துபாய்:

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

    இந்நிலையில், இந்த தொடர் முடிவடைந்ததும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டது.

    அதன்படி, புள்ளிப் பட்டியலில் நியூசிலாந்து அணி முதல் இடத்திற்கு முன்னேறியது. அந்த அணி 75 சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளது.

    ஆஸ்திரேலியா (55%) 2வது இடத்திலும், இந்தியா (52.77%) 3வது இடத்திலும், வங்காளதேசம் (50%) 4வது இடத்திலும் உள்ளன.

    பாகிஸ்தான் (36.66%), வெஸ்ட் இண்டீஸ் (33.33%), இங்கிலாந்து (25%), தென் ஆப்பிரிக்கா (25%), இலங்கை (0%) ஆகிய அணிகள் 5 முதல் 9 இடங்களில் உள்ளன.

    • நியூசிலாந்தின் பழங்குடி சமூகத்தினருக்காக தொடர்ந்து போராடி வருகிறார்.
    • இன குழு பெருமையை சொல்ல இந்த வழக்கம் பின்பற்றப்படுகிறது.

    நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினரின் ஆரவார பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 170 ஆண்டுகளில் நியூசிலாந்தின் இளம் பாராளுமன்ற உறுப்பினர் மைபி கிளார்க். 21 வயதான இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எம்.பி. ஆனார். மௌரி இனத்தை சேர்ந்த இவர் நியூசிலாந்தின் பழங்குடி சமூகத்தினருக்காக தொடர்ந்து போராடி வருகிறார்.

    எம்.பி.யாக தேர்வான பிறகு நியூசிலாந்து பாராளுமன்றத்தில் உரையாற்றினார் மைபி கிளார்க். உரையின் போது மௌரி இனத்தின் பாரம்பரிய வழக்கங்களில் ஒன்றான ஹக்கா செய்தது அரங்கத்தை அதிர செய்தது. போர், வெற்றி, ஒற்றுமை, இன குழு பெருமை என எல்லாவற்றையும் சொல்ல இந்த வழக்கம் பின்பற்றப்படுகிறது.

     


    அந்த வகையில் நியூசிலாந்தின் இளம் பெண் எம்.பி. வெற்றி முழக்கமிட்டு பேசியது பாராளுமன்றத்தை அதிர வைத்தது. தொடர்ந்து பேசிய அவர், "நான் உங்களுக்காக எனது உயிரையும் கொடுப்பேன்.. ஆனாலும் நான் உங்களுக்காகவே வாழ்வேன்," என்று தெரிவித்தார்.

    ஆக்லாந்து மற்றும் ஹாமில்டன் இடையே உள்ள ஹன்ட்லி என்ற சிறு நகரத்தில் வசிக்கும் மைபி கிளார்க் தனது மௌரி இனத்தின் லூனார் காலண்டரின் படி குழந்தைகளுக்கு தோட்டத்துறை சார்ந்த கல்வியை கற்பித்து வருகிறார். எம்.பி. என்ற பதவியை தாண்டி இவர் தன்னை மௌரி மொழியை காப்பாற்றவும், அதனை உலகறிய செய்யவும் நோக்கமாக கொண்டிருக்கிறார்.




    • கிரிபேட்டியை தொடர்ந்து நியூசிலாந்தில் 2024 வருடத்தின் ஆங்கில புத்தாண்டு பிறந்தது.
    • நியூசிலாந்ததில் புத்தாண்டு களைகட்டி வருகிறது.

    நியூசிலாந்தில், இந்திய நேரப்படி சரியாக இன்று மாலை 4.30 மணியளவில் புத்தாண்டு பிறந்தது.

    உலகிலேயே முதலில் பசிபிக் கடலில் உள்ள கிறிஸ்துமஸ் தீவு என்ற கிரிபேட்டியில் இன்று மதியம் 3.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.

    கிரிபேட்டியை தொடர்ந்து நியூசிலாந்தில் 2024 வருட ஆங்கில புத்தாண்டு பிறந்தது.

    இந்நிலையில், வாணவேடிக்கையுடன் நியூசிலாந்து மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். மேலும், பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டி, ஆட்டம் பாட்டம் என புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். இதனால், நியூசிலாந்ததில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டி வருகிறது.

    • விராட் கோலி 117 ரன்களில் தனது விக்கெட்டை பறிக் கொடுத்தார்.
    • நியூசிலாந்து சார்பில் டிம் சௌதீ 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி சிறப்பான துவக்கத்தை கொடுத்தது. ரோகித் சர்மா 29 பந்துகளில் 47 ரன்களை விளாசி அவுட் ஆனார். இதில் 4 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும்.

    இவருடன் ஆடிய சுப்மன் கில் 65 பந்துகளில் 79 ரன்களை குவித்த நிலையில், காயம் காரணமாக களத்தை விட்டு வெளியேறினார். அடுத்து வந்த விராட் கோலி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 50-வது சதத்தை அடித்த விராட் கோலி 117 ரன்களில் தனது விக்கெட்டை பறிக் கொடுத்தார். 

    ஷ்ரேயஸ் அய்யர் தன் பங்கிற்கு 105 ரன்களையும், கே.எல். ராகுல் 39 ரன்களையும் குவிக்க, இந்திய அணி போட்டி முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்களை குவித்துள்ளது. நியூசிலாந்து சார்பில் டிம் சௌதீ 3 விக்கெட்டுகளையும், போல்ட் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

    • உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டிகளில் இந்தியா தோல்வியை சந்திக்கவில்லை.
    • நியூசிலாந்து அணி விளையாடிய 9 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்று இருக்கிறது.

    உலகக் கோப்பை 2023 தொடரின் அரையிறுதி போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நவம்பர் 19-ம் தேதி நடைபெறும் இறுதி போட்டிக்கு தகுதி பெற முடியும்.

    நடப்பு உலகக் கோப்பை தொடரில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி இன்றைய போட்டியிலும் வெற்றிநடையை தொடருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்-ஐ தேர்வு செய்து இருக்கிறது. 

    • ரச்சின் ரவீந்திரா 108 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
    • ஃபகர் ஜமான் 81 பந்துகளில் 126 ரன்களை குவித்தார்.

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 35-வது லீக் போட்டி பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது. இதில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    இதனால் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆட களமிறங்கியது. அந்த அணியின் துவக்க வீரர்களாக கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர். இந்த ஜோடி 68 ரன்களை சேர்த்த போது, கான்வே 35 ரன்களில் அவுட் ஆனார்.

    இதைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பிறகு ரச்சின் ரவீந்திராவுடன் இணைந்து கொண்ட வில்லியம்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த இருவரும் அரைசதம் அடித்தனர். கேன் வில்லியம்சம் 95 ரன்களில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

    ரச்சின் ரவீந்திரா 108 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய டேரில் மிட்செல் மற்றும் மார்க் சாப்மென் முறையே 29 மற்றும் 39 ரன்களை எடுத்தனர். இதன் மூலம் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 401 ரன்களை குவித்தது. இதை அடுத்து 402 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை பாகிஸ்தான் துரத்தியது.

    பாகிஸ்தான் அணியின் துவக்க வீரரான அப்துல்லா ஷஃபிக் 4 ரன்களில் அவுட் ஆக, இவருடன் களமிறங்கிய ஜமான் 81 பந்துகளில் 126 ரன்களை குவித்தார். இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய கேப்டன் பாபர் அசாம் 66 ரன்களை எடுத்தார். 25.3 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை குவித்த நிலையில், மழை குறிக்கிட்டது.

    தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. எனினும், டி.எல்.எஸ். விதிகளின் படி பாகிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • இரு அணிகளும் 8 புள்ளிகளை பெற்றுள்ளன.
    • இரு அணிகளும் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. நாளை மதியம் 2.00 மணிக்கு இந்த போட்டி துவங்குகிறது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகள் முறையே முதல் இரு இடங்களில் உள்ளன.

    இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இந்த தொடரில் இதுவரை நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளும் இந்த நான்கு போட்டிகளிலும் வெற்று பெற்றுள்ளன. அந்த வகையில், இரு அணிகளும் 8 புள்ளிகளை பெற்றுள்ளன. இந்தியா நெட் ரன்ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

    இரு அணிகளும் இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை. அந்த வகையில், இந்த நிலை நாளை மாறவிருக்கிறது. நாளை இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையேயான போட்டி தர்மசாலாவில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்க உள்ளன.

    • நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    • நியூசிலாந்து அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

    உலகக் கோப்பை 2023 லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு போட்டியிலும் நம்ப முடியாத சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. லீக் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

    இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்களை குவித்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 34.4 ஓவர்களில் வெறும் 139 ரன்களை மட்டுமே எடுத்து, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

     

    இன்றைய வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி உலகக் கோப்பை 2023 புள்ளி பட்டியலில் இந்தியாவை இரண்டாவது இடத்திற்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி இருக்கும் நியூசிலாந்து அணி, இவை அனைத்திலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளை பெற்றுள்ளது. இதன் காரணமாக நியூசிலாந்து அணி தற்போது முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறது. நியூசிலாந்து அணியின் நெட் ரன்ரேட் தற்போது 1.923 ஆக இருக்கிறது.

    மூன்று போட்டிகளில் விளையாடி இருக்கும் இந்திய அணி அனைத்திலும் வெற்றி பெற்று, 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்திய அணியின் நெட் ரன் ரேட் 1.821 ஆக இருக்கிறது. இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் தென் ஆப்பிரிக்கா அணி மூன்றாவது இடத்திலும், பாகிஸ்தான் அணி நான்காவது இடத்திலும் உள்ளன.

    தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா 4 புள்ளிகளை பெற்றுள்ளன. இவைகளின் நெட் ரன் ரேட் முறையே 1.385 மற்றும் -0.137 ஆக இருக்கிறது. புள்ளி பட்டியலில் இங்கிலாந்து அணி 5-வது இடத்தில் உள்ளது. வங்காளதேசம், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

    • சிறப்பாக ஆடிய வில் யங் அரை சதம் விளாசினார்.
    • நவீன் உல் ஹக், அஸ்மத்துல்லா உமர்சாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 16-வது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி நியூசிலாந்து அணி தொடக்க ஆட்டக்காரர்களாக கான்வே -வில் யங் களமிறங்கினர். கான்வே 20 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா மற்றும் வில் யங் ஜோடி நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். சிறப்பாக ஆடிய வில் யங் அரை சதம் விளாசினார்.

    நிதானமாக விளையாடிய ரச்சின் 32 ரன்னில் ஆட்டமிழந்தார். அவர் அவுட் ஆன சிறிது நேரத்திலேயே வில் யங் வெளியேறினார். அதே ஓவரில் மிட்செல் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 4 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் சேர்த்திருந்தது.

    போட்டி முடிவில் நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீன் உல் ஹக், அஸ்மத்துல்லா உமர்சாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு சுமாரான துவக்கமே கிடைத்தது. அந்த அணியின் குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் முறையே 11 மற்றும் 14 ரன்களில் பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த ரகமத் ஷா பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 62 பந்துகளில் 36 ரன்களை எடுத்த போது ஆட்டமிழந்தார்.

    கேப்டன் ஹஷ்மதுள்ளா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி 34.4 ஓவர்கள் முடிவில் 139 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    நியூசிலாந்து அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய சான்ட்னர் மற்றும் ஃபெர்குசன் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். டிரெண்ட் போல்ட் இரண்டு விக்கெட்டுகளையும், மேட் ஹென்ரி, ரச்சின் ரவீந்திரா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • துவக்க வீரரான லிட்டன் தாஸ் ரன் ஏதும் அடிக்காமல் பெவிலியன் திரும்பினார்.
    • கேப்டன் கேன் வில்லியம்சன் நிதானமாக விளையாடி 79 ரன்களை குவித்தார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    வங்காளதேச அணியின் துவக்க வீரரான லிட்டன் தாஸ் ரன் ஏதும் அடிக்காமல் பெவிலியன் திரும்பினார். இவருடன் ஆடிய தன்சித் ஹசன் தமீம் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய மெஹிதி ஹசன் மிராஸ் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஷகிப் அல் ஹாசன் 40 ரன்களையும், முஷ்ஃபிகுர் ரஹிம் 66 ரன்களையும் குவித்தனர்.

    போட்டி முடிவில் 50 ஓவர்கள் முடிவில் வங்காளதேசம் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்களை குவித்தது. நியூசிலாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசிய லோக்கி பெர்குசன் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவரை தவிர டிரெண்ட் போல்ட், மேட் ஹெண்ரி தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். மிட்சென் சாண்ட்னர் மற்றும் கிலென் பிலிப்ஸ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

    இதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டெவன் கான்வே சிறப்பாக ஆடி 45 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் நிதானமாக விளையாடி 79 ரன்களை குவித்தார். டேரில் மிட்செல் சிறப்பாக விளையாடி 89 ரன்களை குவித்தார்.

    இதன் மூலம் நியூசிலாந்து அணி 42.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 248 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. போட்டி முடிவில் டேரில் மிட்செல் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

    • துவக்க வீரரான லிட்டன் தாஸ் ரன் ஏதும் அடிக்காமல் பெவிலியன் திரும்பினார்.
    • சிறப்பாக பந்துவீசிய லோக்கி பெர்குசன் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    வங்காளதேச அணியின் துவக்க வீரரான லிட்டன் தாஸ் ரன் ஏதும் அடிக்காமல் பெவிலியன் திரும்பினார். இவருடன் ஆடிய தன்சித் ஹசன் தமீம் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய மெஹிதி ஹசன் மிராஸ் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஷகிப் அல் ஹாசன் 40 ரன்களையும், முஷ்ஃபிகுர் ரஹிம் 66 ரன்களையும் குவித்தனர்.

     

    போட்டி முடிவில் வங்காளதேசம் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்களை குவித்துள்ளது. நியூசிலாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசிய லோக்கி பெர்குசன் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவரை தவிர டிரெண்ட் போல்ட், மேட் ஹெண்ரி தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். மிட்செல் சாண்ட்னர் மற்றும் கிலென் பிலிப்ஸ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். 

    ×