search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dialogue"

    • “ஆழி சூழ் உலகு” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004-ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
    • நான் எனது நிலத்துக்கான மக்களுக்கான பணிகளை செய்வதை பெருமையாகவும், சந்தோஷமாகவும் கருதுகிறேன்.

    நெல்லை:

    குடியரசு தினத்தையொட்டி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி பத்ம விபூஷன் விருது 5 பேருக்கும், பத்ம பூஷன் விருது 17 பேருக்கும், பத்மஸ்ரீ விருது 110 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நெல்லை மாவட்டம் உவரியை சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஜோ டி குரூஸ் கல்வி மற்றும் இலக்கியப் பிரிவில் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    உவரி கிராமத்தில் பிறந்து வளர்ந்து பாளை புனித சவேரியார் பள்ளியில் அவர் தனது உயர்கல்வியை முடித்தார். இடையன்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் விஞ்ஞான பாடம் படித்த இவர், சென்னை லயோலா கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலையும், திருச்சி வளனார் கல்லூரியில் ஆய்வறிஞர் பட்டமும் பெற்றவர்.

    தமிழ் நெய்தல் குடிகளின் வாழ்வை இலக்கியத்தில் பதிவுசெய்த குறிப்பிடத்தக்க எழுத்தாளர் ஆவார். சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சரக்குக் கப்பல் நிறுவனங்களில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தலைமைப் பொறுப்பில் இவர் பணியாற்றினார். இவர் கொற்கை, ஆழிசூழ் உலகு உள்ளிட்ட பல நாவல்களையும், புலம்பல்கள் என்ற கவிதையையும், விடியாத பொழுதுகள் உள்ளிட்ட ஏராளமான ஆவண படங்களையும் வெளியிட்டுள்ளார்.

    இவரது கொற்கை என்ற புதினத்திற்காக 2013-ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இவர் எழுதிய "ஆழி சூழ் உலகு" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004-ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. கடந்த 2013-ம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் பரத் பாலா இயக்கிய மரியான் திரைப்படத்துக்கு வசனங்களை இவர் எழுதி உள்ளார்.

    இந்நிலையில் அவருக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பத்மஸ்ரீ விருது குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:-

    கடற்கரை மக்களுக்கான அங்கீகாரமாக இதனை நான் பார்க்கிறேன். எனக்கு தனிப்பட்ட முறையில் எதுவும் இல்லை.

    நான் எனது நிலத்துக்கான மக்களுக்கான பணிகளை செய்வதை பெருமையாகவும், சந்தோஷமாகவும் கருதுகிறேன். அந்த வகையில் அதனை மத்திய அரசு அங்கீகரித்திருப்பதில், கடலோர மக்களை அரசு மதிக்கிறது என்பதில் எனக்கு சந்தோஷம் என்றார்.

    அமைதிப்பேச்சு நடத்த இந்தியாவுக்கு பாகிஸ்தான் புதிய பிரதமர் இம்ரான்கான் அழைப்பு விடுத்து உள்ளார். முன்னேற்றப்பாதையில் செல்வதற்கு இது அவசியம் என அவர் கூறி இருக்கிறார். #India #Pakistan #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    இந்தியாவுடன் ஒரு பக்கம் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இன்னொரு பக்கம் எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்களை முந்தைய நவாஸ் ஷெரீப் அரசு ஊக்குவித்ததால், அந்த நாட்டுடனான அமைதி பேச்சுவார்த்தையை இந்தியா நிறுத்திக்கொண்டது.

    இந்த நிலையில் அங்கு தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இதுவரை அங்கு பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்), பாகிஸ்தான் மக்கள் கட்சி என இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த நிலை மாறி, இம்ரான்கான் தலைமையில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி ஆட்சிக்கு வந்து உள்ளது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் புதிய பிரதமர் இம்ரான்கான், இந்தியாவும், பாகிஸ்தானும் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்து உள்ளார்.

    இது தொடர்பாக நேற்று அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “இந்தியாவும், பாகிஸ்தானும் முன்னேற்றப்பாதையில் செல்வதற்கு கண்டிப்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். காஷ்மீர் உள்ளிட்ட மோதல்களை தீர்த்துக்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

    மேலும், “வறுமையை ஒழித்துக்கட்டி விட்டு, துணைக்கண்டத்தில் உள்ள மக்களை முன்னேற்றம் அடையச்செய்வதற்கு நமது கருத்து வேறுபாடுகளை தீர்த்துக்கொண்டு, வர்த்தகத்தை தொடங்குவதுதான் சிறந்த வழி” என்றும் கூறி உள்ளார்.

    இம்ரான்கான் பதவி ஏற்பு விழாவில் அவரது முன்னாள் நண்பரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பஞ்சாப் மாநில சுற்றுலாத்துறை மந்திரியுமான நவ்ஜோத் சிங் சித்து கலந்து கொண்டதும், பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வாவை தழுவிக்கொண்டதும் இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் விழாவில் சித்து கலந்து கொண்டதற்கு இம்ரான்கான் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

    இது தொடர்பாக அவர் டுவிட்டரில் குறிப்பிடுகையில், “சித்து அமைதித் தூதர். பாகிஸ்தான் மக்கள் அவர்மீது மிகுந்த அன்பையும், நேசத்தையும் வாரி வழங்கினர். இந்தியாவில் அவரை குறி வைத்து விமர்சிப்பவர்கள், துணைக்கண்டத்தில் அமைதி ஏற்படுவதற்கு மிகப்பெரிய தீங்கு செய்கிறார்கள்” என்று கூறி உள்ளார்.

    பாகிஸ்தானின் புதிய வெளியுறவு மந்திரி ஷா மக்மூத் குரேஷி, “இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், சாகச செயல்களை நிறுத்துவதற்கு நாம் ஒன்றுபடுவது அவசியம். பிரச்சினைகள் கடுமையானவை என்பதையும், ஒரே நாளில் தீர்க்க முடியாது என்பதையும் அறிவோம். அதே நேரத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்” என ஏற்கனவே கூறியது நினைவுகூரத்தக்கது.  #India #Pakistan #ImranKhan
    பாகிஸ்தான் உடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என மோடி வாழ்த்து கடிதத்தில் கூறியிருந்ததாக பேசிய பாகிஸ்தான் மந்திரி தெரிவித்த நிலையில், தற்போது மோடி அப்படி கூறவில்லை என மறுத்துள்ளது. #Pakistan #PMModi
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான புதிய அரசு சமீபத்தில் பதவியேற்றது. இம்ரான் கானுக்கு வாழ்த்து தெரிவித்து இந்திய பிரதமர் மோடி கடிதம் எழுதியிருந்தார்.

    பாகிஸ்தான் அரசை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமைதி பேச்சுக்கு அழைத்ததாக, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முன்னர் கூறியிருந்தார். 

    ஆனால், தற்போது அதிலிருந்து பின்வாங்கியுள்ளது பாகிஸ்தான். தங்கள் அமைச்சர் அப்படி ஏதும் கூறவில்லை என்று, ஊடகங்களில் பரவி வரும் தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது பாகிஸ்தான்.

    பிரதமர் மோடி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்துக்கு அனுப்பியதாக சொல்லப்பட்ட கடிதத்தில் “ இரு நாடுகளுக்கும் இடையே நல்ல உறவு முறை நீடிக்க வேண்டும்” என எழுதி இருந்ததாக தகவல்கள் கூறின.

    இந்திய அரசு தரப்பில் இந்த விஷயத்தில் தெளிவாக இருக்கிறது. தீவிரவாதமும், அமைதிப் பேச்சும் ஒரே நேரத்தில் நடக்க முடியாது என்ற இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று இந்திய அரசு தகவல்கள் கூறுகின்றன. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு தொலைபேசி மூலம் பேசிய பிரதமர் மோடி “ அமைதி மற்றும் வளத்தை பெருக்குவதன் மூலம், தீவரவாதத்தை கட்டுப்படுத்தி, முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவோம்” என்று கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.

    பிரதமர் மோடி அனுப்பியதாக கூறப்பட்ட அந்த கடிதம் பற்றி பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி “வெளியுறவு செயலாளர், இந்திய பிரதமர் இம்ரான் கானுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளதாகவும், அதில் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்றும் என்னிடம் கூறினார்” எனத் தெரிவித்திருந்தார்.

    ஆனால், இன்று பாகிஸ்தான் இதற்கு விளக்கம் அளித்துள்ளது அதில் “ எங்கள் வெளியுறவு அமைச்சர், இந்திய பிரதமர் பேச்சு வார்த்தைக்கு அழைத்ததாக கூறவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய ஊடகங்களால் தேவை இல்லாமல் கிளப்பி விடப்பட்ட வதந்தி என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், மோடி, இம்ரான் கானுக்கு எழுதிய கடிதத்தில், “இரு நாடுகளின் பங்களிப்பு தான், முன்னோக்கி செல்ல வாய்ப்பு” என்ற தொணியில் எழுதியிருந்ததாக, குரேஷி முன்னதாக விளக்கியதாகவும், பாகிஸ்தான் கூறி மறுத்துள்ளது.

    முன்னதாக இந்தியாவுடன் நட்புறவில் ஈடுபட தயாராக இருப்பதாக இம்ரான் கான் தெரிவித்திருந்தார். இந்தியா எங்களுடன் பேச ஒரு அடி எடுத்து வைத்தால், பாகிஸ்தான் இரண்டு அடி எடுத்து வைக்கும் என்றும் இம்ரான் கான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
    ×