என் மலர்
நீங்கள் தேடியது "மரியான்"
- மாதவிடாய் எனக்கூறியும் உடை மாற்ற அனுமதிக்கவில்லை
- நயன்தாரா ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டை முன்வைக்கமாட்டார்
மரியான் படப்பிடிப்பின்போது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை நடிகை பார்வதி திருவோத்து நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். இது தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. 'இன்னும் கொஞ்ச நேரம்' பாடல் காட்சிக்காக கடலில் நீண்ட நேரம் நனைந்தபடி நடித்தபோது, உடை மாற்ற அனுமதிக்கப்படவில்லை என்றும், அந்தச் சமயத்தில் தான் மாதவிடாய் காலத்தில் இருந்ததால் மிகுந்த அவதிக்குள்ளானதாகவும் அவர் கூறியுள்ளார்.
அந்தப் படப்பிடிப்பு தளத்தில் மூன்றே பெண்கள் மட்டுமே இருந்ததாகவும், மாதவிடாய் எனக்கூறியும் உதவியற்ற நிலையில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 'மலையாள படப்பிடிப்பு தளத்திலும் இப்படித்தான் இருக்கும். குறைவான அளவே பெண்கள் இருப்பார்கள். அதனால் எந்த படப்பிடிப்பு தளத்திலாவது பெண்களை அதிகம் பார்த்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துவிடுவேன்' என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தனது ஆவணப்படத்திற்காக தனுஷிடம் இருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் குறித்து நயன்தாரா வெளியிட்ட திறந்த கடிதத்திற்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்த நடிகைகளில் முக்கியமான ஒருவர் பார்வதி திருவோத்து. இந்த ஆதரவு தொடர்பாக அவரிடம் கேள்வி முன்வைக்கப்பட்டபோது நயன்தாராவைப் போன்ற ஒரு சுய ஆளுமை திறன்கொண்டவர்கள் ஆதாரமின்றி இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்க மாட்டார் என்றும் தெரிவித்தார்.
தனுஷ், பார்வதி திருவோத்து நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான படம் மரியான். பரத் பாலா இப்படத்தை இயக்கியிருந்தார்.
- இயக்குனர் பரத்பாலா இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'மரியான்'.
- இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமத்திருந்தார்.
இயக்குனர் பரத்பாலா இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மரியான்'. இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக பார்வதி நடித்திருந்தார். மேலும், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

மீனவர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த தனுஷ் தனது சிறந்த நடிப்பை இப்படத்தில் வெளிப்படுத்தியிருப்பார். இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. அதில், 'நேற்று அவள் இருந்தால்', 'கொம்பன் சூறா', 'சோனா பரியா' போன்ற பாடல்கள் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.

இந்நிலையில், 'மரியான்' திரைப்படம் வெளியாகி பத்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக ஏ.ஆர்.ரகுமான், தனுஷ், பார்வதி, பரத்பாலா ஆகியோர் சமூக வலைதளத்தில் லைவ் செய்து மகிழ்ந்தனர். இந்த லைவ்விற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து கொண்டாடினர்.
இந்த லைவ் வீடியோவிற்கு முன்பு மரியான் புகைப்படத்தை பகிர்ந்து இன்று லைவ் போலாமா நமது சிந்தனனைகளை பகிர்ந்துகொள்ள என ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- “ஆழி சூழ் உலகு” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004-ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
- நான் எனது நிலத்துக்கான மக்களுக்கான பணிகளை செய்வதை பெருமையாகவும், சந்தோஷமாகவும் கருதுகிறேன்.
நெல்லை:
குடியரசு தினத்தையொட்டி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி பத்ம விபூஷன் விருது 5 பேருக்கும், பத்ம பூஷன் விருது 17 பேருக்கும், பத்மஸ்ரீ விருது 110 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நெல்லை மாவட்டம் உவரியை சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஜோ டி குரூஸ் கல்வி மற்றும் இலக்கியப் பிரிவில் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உவரி கிராமத்தில் பிறந்து வளர்ந்து பாளை புனித சவேரியார் பள்ளியில் அவர் தனது உயர்கல்வியை முடித்தார். இடையன்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் விஞ்ஞான பாடம் படித்த இவர், சென்னை லயோலா கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலையும், திருச்சி வளனார் கல்லூரியில் ஆய்வறிஞர் பட்டமும் பெற்றவர்.
தமிழ் நெய்தல் குடிகளின் வாழ்வை இலக்கியத்தில் பதிவுசெய்த குறிப்பிடத்தக்க எழுத்தாளர் ஆவார். சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சரக்குக் கப்பல் நிறுவனங்களில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தலைமைப் பொறுப்பில் இவர் பணியாற்றினார். இவர் கொற்கை, ஆழிசூழ் உலகு உள்ளிட்ட பல நாவல்களையும், புலம்பல்கள் என்ற கவிதையையும், விடியாத பொழுதுகள் உள்ளிட்ட ஏராளமான ஆவண படங்களையும் வெளியிட்டுள்ளார்.
இவரது கொற்கை என்ற புதினத்திற்காக 2013-ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவர் எழுதிய "ஆழி சூழ் உலகு" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004-ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. கடந்த 2013-ம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் பரத் பாலா இயக்கிய மரியான் திரைப்படத்துக்கு வசனங்களை இவர் எழுதி உள்ளார்.
இந்நிலையில் அவருக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பத்மஸ்ரீ விருது குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:-
கடற்கரை மக்களுக்கான அங்கீகாரமாக இதனை நான் பார்க்கிறேன். எனக்கு தனிப்பட்ட முறையில் எதுவும் இல்லை.
நான் எனது நிலத்துக்கான மக்களுக்கான பணிகளை செய்வதை பெருமையாகவும், சந்தோஷமாகவும் கருதுகிறேன். அந்த வகையில் அதனை மத்திய அரசு அங்கீகரித்திருப்பதில், கடலோர மக்களை அரசு மதிக்கிறது என்பதில் எனக்கு சந்தோஷம் என்றார்.






