search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Katchatheevu"

    • இந்திரா காந்தி இந்த தேசத்தின் நன்மைக்காக ஒவ்வொரு அடியும் பார்த்து பார்த்து எடுத்து வைத்தார்.
    • கச்சத்தீவு குறித்து பேசுபவர்கள் முதலில் வெஜ் பேங்க் பற்றி பேச வேண்டும்.

    கே.கே. நகர்:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாநகராட்சி, ஊராட்சி தேர்தல்களில் மாவட்ட தலைவர்கள் எவ்வாறு பிரசாரம் மேற்கொள்வார்களோ அதேப்போன்று பிரதமர் மோடி பாராளுமன்றத் தேர்தலுக்காக டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்து போகிறார். தமிழ்நாட்டில் கால் பதிக்க முடியுமா? என முயற்சிக்கிறார். அவரது எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. தமிழக மக்கள், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தையும் பா.ஜ.க.வை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த மண் சமூக விடுதலைக்கான மண் சமூக நீதிக்கான மண். ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு கருத்து ஒரு பார்வை உள்ளது. இந்திரா காந்தி இந்த தேசத்தின் நன்மைக்காக ஒவ்வொரு அடியும் பார்த்து பார்த்து எடுத்து வைத்தார்.

    தற்போது கச்சத்தீவு பேசுபொருளாக இருக்கிறது. ஆனால் வெஜ் பேங்கை இந்திரா காந்தி இந்தியாவுடன் இணைத்தார். அங்கு அது கனிம வளங்கள் அதிகம் உள்ளது. ஆனால் அதுகுறித்து ஏன் மோடி பேசவில்லை? கச்சத்தீவு குறித்து பேசுபவர்கள் முதலில் வெஜ் பேங்க் பற்றி பேச வேண்டும். பிரதமர் மோடி கடந்த பத்தாண்டு காலமாக சர்வாதிகாரி போல தான் செயல்பட்டு வருகிறார். காங்கிரஸ் ஆட்சியில் தான் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. காங்கிரசின் நடவடிக்கையால் மட்டுமே இந்தியா தலைநிமிர்ந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இலங்கையில் இழுவைமடி மீன் பிடி படகு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • கச்சத்தீவை இந்தியாவுக்கு வழங்குவது சாத்தியமற்றது என்றார் இலங்கை மந்திரி.

    கொழும்பு:

    இந்தியாவுக்கு கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது என இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    இலங்கையில் இழுவைமடி மீன் பிடி படகு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்திய மீனவர்கள் இழுவை மீன்பிடி படகுகளை வைத்து இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக மீன் பிடிக்கின்றனர். இந்திய மீனவர்களால் இலங்கையின் கடல் வளம் அழிக்கப்படுகிறது.

    இந்திய மீனவர்களால் இலங்கை மீனவர்களின் கடற்தொழில் உபகரணங்கள் சேதப்படுத்தப்படுகின்றன.

    இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப் பெற்ற கச்சத்தீவை இந்தியாவுக்கு வழங்குவது சாத்தியமற்றது.

    கச்சத்தீவை திரும்ப வழங்குவதாக இருந்தால் இலங்கையின் கடல் வளம் முற்றிலுமாக சூறையாடப்படும் என தெரிவித்தார்.

    • இலங்கைத் தமிழர்கள் வாழ்வு மேம்பட பிரதமர் மோடி செய்துள்ள நலப்பணிகள் ஏராளம்.
    • தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மீனவர்கள் உயிர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை நிலவியது.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே 2 நாள் பயணமாக டெல்லி வர உள்ளதை அடுத்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அந்தக் கடிதம் முழுக்க முழுக்க, கடந்த கால காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஆட்சியின் தவறுகளை எல்லாம் வெளிப்படுத்தும் ஒப்புதல் வாக்குமூலமாகவே இருக்கிறது.

    காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியின் தவறுகளை சரி செய்ய, பிரதமர் மோடியால் மட்டும்தான் முடியும் என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டதற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக பா.ஜ.க. சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இலங்கையில் தமிழ் சகோதர, சகோதரிகள் கொத்துக்கொத்தாக கொலை செய்யப்பட்டபோது, இங்கே காங்கிரஸ் கூட்டணியில் பசையான மத்திய மந்திரி பதவியை வாங்க டெல்லிக்கு பறந்தவர்கள், ஏதோ கடிதங்கள் எழுதியே பிரச்சினைகளை தீர்த்து விட்டதை போல இன்று பெருமையடித்துக் கொண்டிருப்பது நகைக்கத்தக்கது.

    தி.மு.க. ஆட்சியில், கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டபோது, பா.ஜ.க. தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி அதனை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தமிழகத்தில் அன்று ஆட்சியில் இருந்த தி.மு.க. அந்த வழக்குக்கு தேவையான ஆவணங்களை கூட நீதிமன்றத்தில் வழங்காமல், கச்சத்தீவு, நம் கைவிட்டுச் செல்லக் காரணமாக இருந்தது.

    தி.மு.க. அதன் பின்னர் பல முறை, பல கட்சிகளுடன் சந்தர்ப்பவாத கூட்டணியில் இருந்து, மத்திய அரசில் அங்கம் வகித்தபோதும், கச்சத்தீவை மீட்க உறுதியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கச்சத்தீவைத் தாரை வார்த்த தி.மு.க. கும்பலுக்கு, கச்சத்தீவு பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது?

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். உங்கள் குடும்பத்தினர் மத்திய மந்திரி பதவி வாங்க, தமிழர்களின் நலனை நீங்கள் அடகு வைத்த அதே காலத்தில், அன்றைய குஜராத் முதல்-மந்திரியாக இருந்த பிரதமர் மோடி, இலங்கை தமிழர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அன்றைய காங்கிரஸ் அரசை வலியுறுத்தியவர். உங்களை விட, தமிழ் மக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். இலங்கைத் தமிழர்கள் வாழ்வு மேம்பட பிரதமர் மோடி செய்துள்ள நலப்பணிகள் ஏராளம்.

    இலங்கையில் தமிழர்களுக்கு உரிமை வழங்கும் 13-ம் சட்டத்திருத்தம் கொண்டு வர பிரதமர் மோடி 2 முறை வலியுறுத்தி இருக்கிறார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், கடந்த ஜனவரி மாதம் இலங்கைப் பயணத்தின் போதும் 13-ம் சட்டத் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தி இருக்கிறார். விரைவில் அது அமலுக்கு வரும் என்றும் உறுதி தெரிவித்திருக்கிறார்.

    தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மீனவர்கள் உயிர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை நிலவியது. மத்தியில், தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியின் 10 ஆண்டு கால ஆட்சியில், தமிழகத்தைச் சேர்ந்த 85 மீனவர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான 9 ஆண்டு கால ஆட்சியில், மு.க.ஸ்டாலினால் அப்படி ஒரு நிகழ்வைக் குறிப்பிட முடிந்ததா?

    காங்கிரசுடன் மத்திய கூட்டணி ஆட்சியில் இருந்தபோது வாளாவிருந்துவிட்டு, தற்போது பிரதமர் மோடி, தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி உருவாக்கிய ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வு கொண்டு வரும்போது, வழக்கம் போல தங்கள் 'ஸ்டிக்கரை' ஒட்ட முயற்சிக்கிறது தி.மு.க.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சிங்கள இனவெறியர்கள் மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தில் கச்சத்தீவில் புத்தர் சிலையை நிறுவியுள்ளனர்.
    • கிறிஸ்தவர்களை விரட்டியடிக்கும் நோக்கத்தில் சிங்கள இனவெறியர்கள் மாபெரும் புத்தர் சிலையை அங்கே நிறுவ திட்டமிட்டு உள்ளனர்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    "சிங்கள இனவெறியர்கள் மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தில் கச்சத்தீவில் புத்தர் சிலையை நிறுவியுள்ளனர். தற்போது வரையில் அங்கே அந்தோணியார் ஆலயம் மட்டுமே இருந்தது, ஆண்டுதோறும் அங்கே ஓர் கிறித்தவ திருவிழா நடைபெற்று வருகிறது. கிறிஸ்தவர்களை விரட்டியடிக்கும் நோக்கத்தில் சிங்கள இனவெறியர்கள் மாபெரும் புத்தர் சிலையை அங்கே நிறுவ திட்டமிட்டு உள்ளனர்.

    இது தமிழ்நாட்டு தமிழர்கள் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயல் மட்டுமல்ல அவர்களின் மத உரிமைகளை மீறும் செயலாகும்.

    இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். அச்சிலையை அங்கிருந்து அகற்றி மதநல்லிணக்கத்தை மீட்டெடுக்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டு பாராளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மான மனு அளித்து உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Katchatheevu #TNFishermen
    தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி அவர்களை சிறைபிடிப்பது, தாக்கி விரட்டியடிப்பது போன்ற செயல்களில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு புறப்பட்டனர். நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.



    அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 3 படகுகளையும் சிறைபிடித்து, மீனவர்கள் 13 பேர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Katchatheevu #TNFishermen
    ராமேசுவரம் மீனவர்களை தாக்கி விரட்டியடித்த இலங்கை கடற்படையினர் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தினர். #Rameswaramfishermen
    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி அவர்களை சிறைபிடிப்பது, தாக்கி விரட்டியடிப்பது போன்ற செயல்களில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு புறப்பட்டனர். நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களிடம் இங்கு மீன்பிடிக்க அனுமதி இல்லை. உடனே செல்லுங்கள் இல்லையென்றால் சிறை பிடிக்கப்படுவீர்கள் என்று மிரட்டும் தொனியில் தெரிவித்தனர்.

    மீனவர்கள் தங்கள் வலைகளை எடுத்துக்கொண்டு கரைக்கு திரும்ப ஆயத்தமாகினர். அப்போது இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளில் ஏறி அவர்களை தாக்கி விரட்டியடித்தனர். மேலும் படகில் இருந்த மீன்களை அபகரித்து கொண்ட இலங்கை கடற்படையினர் மீன்பிடி சாதனங்களையும், வலைகளையும் அறுத்து சேதப்படுத்தினர். இதையடுத்து மீனவர்கள் அவசர அவசரமாக கரை திரும்பினர்.

    இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படை தொடர்ந்து மீன் பிடிக்க விடாமல் தடுத்து வருகிறது. ஒவ்வொரு முறையும் ஆயிரக்கணக்கில் செலவு செய்து கடலுக்கு சென்றாலும், இலங்கை கடற்படையின் நடவடிக்கையால் வெறும் கையுடனேயே திரும்புகிறோம். இரு நாட்டு அரசுகளும் பேச்சு வார்த்தை நடத்தும் வரை தீர்வு ஏற்படாது. இதேநிலை நீடித்தால் நாங்கள் மீன்பிடி தொழிலை கைவிடும் சூழ்நிலை ஏற்படும் என தெரிவித்தனர்.

    இதனிடையே நேற்று கச்சத்தீவு பகுதியில் ராமேசுவரத்தை சேர்ந்த முனியராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது வழக்கத்துக்கு மாறாக கடல் கொந்தளிப்பு அதிகமாக இருந்தது. அலையின் சீற்றத்தால் முனியராஜ் படகு தள்ளாடியது.

    இதில் கடல் நீர் புகுந்ததால் படகு மூழ்கத்தொடங்கியது. தண்ணீரை வெளியேற்ற முயன்றும் பலன் இல்லை. இதையடுத்து மீனவர்கள் படகில் இருந்து குதித்து அருகில் இருந்த மற்றொரு படகில் ஏறிக்கொண்டனர். சிறிது நேரத்தில் படகு முற்றிலும் மூழ்கியது. இதன் மதிப்பு ரூ. 15 லட்சம் ஆகும். #Rameswaramfishermen

    கச்சத்தீவு அருகே நாட்டு படகு மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றது. #FishermenArrested
    ராமேசுவரம்:

    ராமேசுவரம், மண்டபம், பாம்பன் பகுதி விசைப்படகு மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும்போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.

    கடந்த சில தினங்களாக புயல் காரணமாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல டோக்கன் வழங்கப்படவில்லை. அதே நேரம் நாட்டு படகு மீனவர்களுக்கு டோக்கன் தேவையில்லை என்பதால் அவர்கள் மட்டுமே கடலுக்கு சென்று வருகின்றனர்.

    நேற்று பாம்பனை சேர்ந்த ஸ்டீபன் தனது நாட்டுப்படகில் மில்டன், அந்தோணி, ஸ்டீபன்ராஜ் உள்பட 8 பேருடன் மீன் பிடிக்க சென்றார்.

    வழக்கமாக கரையோர பகுதிகளில் மீன்பிடிக்கும் இவர்கள் கச்சத்தீவு அருகே சென்று மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 8 பேரையும் படகுடன் சிறைபிடித்து சென்றனர்.

    அவர்களை கைது செய்து காரைநகர் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்ற இலங்கை கடற்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  #FishermenArrested

    எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை வீரர்கள் சிறைபிடித்து சென்றனர். மேலும் படகை மூழ்கடித்து மீனவர்களை விரட்டியடித்தனர். #RameswaramFishermen
    ராமேசுவரம்:

    ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு புறப்பட்டனர். இன்று அதிகாலை இவர்களில் ஒரு தரப்பினர் இந்திய கடல் எல்லையையொட்டி உள்ள கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு ரோந்து இலங்கை கடற்படையினர் இந்த பகுதியில் மீன்பிடிக்க உங்களுக்கு அனுமதி இல்லை என எச்சரித்தனர். தொடர்ந்து அவர்கள் மீனவர்களின் படகுகளில் ஏறி வலைகளையும், மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர். ஏற்கனவே பிடித்து வைத்திருந்த மீன்களையும் பறிமுதல் செய்தனர்.

    உடனே இங்கிருந்து செல்லுங்கள் என கூறிய இலங்கை கடற்படையினர் மீனவர்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மீனவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.

    அப்போது கடல் எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம் வேர்க்கோட்டைச் சேர்ந்த வேலாயுதம் என்பவரின் படகில் வந்த ராமு (வயது45), காட்டு ராஜா (50), தங்கவேல் (42), முருகன் (30) ஆகிய 4 மீனவர்களை சிறைபிடித்தனர்.

    தொடர்ந்து வேலாயுதம் படகை ரோந்து கப்பலால் மோதச்செய்து சேதப்படுத்தினர். இதில் படகில் தண்ணீர் புகுந்து மூழ்கியது.



    சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 4 பேரையும் மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.

    ஏற்கனவே தூத்துக்குடியை சேர்ந்த 8 பேரும், ராமேசுவரத்தைச் சேர்ந்த 2 பேரும், புதுக்கோட்டையைச் சேர்ந்த 6 பேர் என 16 பேர் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #RameswaramFishermen

    கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்து படகுகளையும் சேதப்படுத்தினர். #Rameswaramfishermen
    ராமேசுவரம்:

    ராமேசுவரம், பாம்பன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர். இவர்களில் ஒரு பகுதியினர் இந்திய கடல் எல்லையையொட்டி உள்ள கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது 15 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை உடனே இங்கிருந்து சென்று விடுங்கள் என்று எச்சரித்தனர். மேலும் படகுகளில் ஏறிய இலங்கை கடற்படை வீரர்கள் மீன்பிடி சாதனங்களையும், வலைகளையும் சேதப்படுத்தினர்.

    மேலும் ரோந்து கப்பல்கள் மூலம் மீனவர்களின் படகுகள் மீது மோத செய்தனர். இதில் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்பவரின் படகு சேதம் அடைந்தது.

    இதனால் பீதி அடைந்த மீனவர்கள் மீன்பிடிப்பதை விட்டு விட்டு ஏமாற்றத்துடன் கரை திரும்பினர்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையினரின் தாக்குதல் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் எங்களின் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

    கடும் டீசல் விலை உயர்ந்திருந்தாலும் அதையும் பொருட்படுத்தாமல் கடன் வாங்கி கடலுக்கு செல்கிறோம். ஆனாலும் அதற்கேற்ற வருமானம் கிடைப்பதில்லை என வருத்தத்துடன் தெரிவித்தனர். #Rameswaramfishermen

    பதவிக்காக கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தி.மு.க. என்றும், தி.மு.க.வின் அரசியல் வேட்கையினாலும், பதவி வெறியினாலும் தான் இலங்கை தமிழர்கள் இன்னலுக்குள்ளானார்கள் என்பதை மேலும் வெட்ட வெளிச்சமாக்குவோம் என்றும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். #TamilisaiSoundararajan
    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வரலாறு தெரிந்து பேச வேண்டும் என்று தி.மு.க. செய்தித் தொடர்பாளர் கூறியதால் வரலாற்றை திரும்பி பார்த்தேன். அந்த வரலாற்று துளிகளில் சிலவற்றை கூற விரும்புகிறேன். பதவிக்காக கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த தி.மு.க.வின் வரலாறு குறித்து பேசலாமா?. இலங்கையில் பல தமிழர்களைக் கொன்றவர்கள் புலிகள். பிரபாகரன் ஒரு சர்வாதிகார மனப்பான்மை கொண்டவர் என்பதால், புலிகள் என்றாலே புளித்துப்போய்விட்டது என்றும் கருணாநிதி கூறியது உண்மையா இல்லையா?. தமிழீழ தனிநாடு இனி சாத்தியமானது அல்ல. சம உரிமையும் சம அதிகாரமும் கொடுக்குமாறு சிங்களவர்களிடம் வேண்டிக் கொள்ள வேண்டும் என்று கருணாநிதி சொன்னது உண்மையா இல்லையா?.

    மு.க.ஸ்டாலினுக்கு விடுதலைபுலிகளால் ஆபத்து உள்ளது என்றும் அதனால் அவருக்கு மத்திய அரசின் பாதுகாப்பு வேண்டும் என்றும் கருணாநிதி கேட்டது உண்மையா இல்லையா?. அதனடிப்படையில் தான் இன்றைக்கும் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுக்கொண்டிருப்பது உண்மையா இல்லையா?. தற்போது 7 பேரை விடுதலை செய்ய வேண்டி நாடகம் போடும் மு.க.ஸ்டாலினை கேட்கிறேன், அவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் என்பதை மறந்து விட்டீர்களா? மறைத்து விட்டீர்களா?.


    எல்லாவற்றிற்கும் மேலாக போரை முடித்து வைக்கிறேன் என்று ஒரு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தது, பல லட்சக்கணக்கான தமிழர்களை முடித்து வைக்கத் தான் என்று ராஜபக்சே கூறியதை உங்களால் மறைக்கவும் முடியாது. தமிழர்களால் மறக்கவும் முடியாது. கச்சத்தீவை மீட்க நாடாளுமன்றத்திலும், நீதிமன்றத்திலும் அன்றைக்கே போராடியது பா.ஜ.க.வினர் தான் என்பதை உணருங்கள். ஆனால் அன்றைக்கு பதவி சுகத்திற்காக அமைதி காத்த தி.மு.க.வினர் இன்றைக்கு வரலாறு குறித்து பேசுவது வரலாற்று பிழை.

    1980-ம் ஆண்டு மதுரை மாநாட்டில் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கூறியவர் எங்கள் தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய். பா.ஜ.க. ஆட்சியில் இலங்கைக்கு ஆயுதம் வழங்கவும் மாட்டோம், விற்கவும் மாட்டோம் என்ற கொள்கை முடிவெடுத்தவர்கள் நாங்கள். எதிர்க்கட்சியாக இருக்கும் போது விடுதலைப் புலிகளையும், இலங்கை தமிழர்களையும் தூண்டி விட்டு, ஆளும் கட்சியாக இருக்கும் போது பதவியை காப்பாற்றிக் கொள்ள தாண்டி செல்லும் கொடுங்கோலர்கள் தான் தி.மு.க.வினர் என்பதை உலகறியும்.

    நான் கல்லூரியில் படிக்கும் போதே மாணவியாக இலங்கை தமிழர்களுக்காக களத்தில் இறங்கி போராடியவள். போருக்கு பிறகு இலங்கை தமிழர்களுக்காக வீதி வீதியாக சென்று நிவாரண பொருட்களை திரட்டி அனுப்பியவள். இது நாள் வரையில் அவதியுறும் இலங்கை தமிழர்களை கண்டு ஆறுதல் சொல்லக்கூட செல்ல மனமில்லாத, துணிவில்லாத தமிழக அரசியல்வாதிகள், அவர்களின் துயரத்தில் பங்கு கொள்ளாதவர்கள் ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுததற்கு இணையானவர்கள். ஆனால், நேரடியாக இலங்கை சென்று அங்கே இருக்கும் தமிழர்களின் நிலையை கண்டறிந்து, அவர்களின் தேவைகளை மத்திய அரசின் பார்வைக்கு எடுத்துச் சென்று தமிழின மக்களின் நல்வாழ்விற்கு பங்காற்றியவள் நான் என்பதை மறந்து விடாதீர்கள்.

    உங்களின் தூண்டுதலாலும், அரசியல் வேட்கையினாலும், பதவி வெறியினாலும் தான் இலங்கை தமிழர்கள் இன்னலுக்குள்ளானார்கள் என்பதை மேலும் வெட்ட வெளிச்சமாக்குவோம். வரலாறு குறித்து எங்களுக்கு பாடம் தேவையில்லை. உண்மையான வரலாறு குறித்த பாடத்தை உங்களுக்கு பா.ஜ.க. புகட்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TamilisaiSoundararajan #Karunanidhi #MKStalin #DMK #Katchatheevu
    கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை குவிக்கப்பட்டதால் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்காமல் பாதியிலேயே கரை திரும்பினர். #Fishermen #SriLankaNavy

    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும்போது கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படை அவர்களை சிறைபிடிப்பதும், தாக்கி விரட்டியடிப்பதும் தொடர் கதையாக நடந்து வருகிறது.

    தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதை தடுக்க இலங்கை அரசு கடும் சட்டங்களை இயற்றி உள்ளது. இலங்கை கடற்படையின் அச்சுறுத்தல் காரணமாக மீனவர்கள் உயிர் பயத்துடனேயே தொழில் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று ராமேசுவரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    அவர்கள் இந்திய கடல் எல்லையை ஒட்டியுள்ள கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையினர் அதிக அளவில் ரோந்து பணியில் இருந்தனர். இதனால் மீனவர்கள் தொடர்ந்து செல்ல முடியாமல் பல மணி நேரம் ஒரே இடத்திலேயே நின்று கொண்டிருந்தனர்.

    ஆனாலும் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அந்த பகுதியில் முகாமிட்டு இருந்தனர். இதனால் சிறை பிடிக்கப்படுவோமோ என்று அஞ்சிய ராமேசுவரம் மீனவர்கள் மீன் பிடிப்பதை கைவிட்டு விட்டு ஏமாற்றத்துடன் பாதியிலேயே கரை திரும்பினர்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தற்போது டீசல் விலை உயர்ந்த நிலையிலும் கடன் வாங்கி கொண்டு மீன்பிடிக்க செல்கிறோம். ஒவ்வொரு முறை கடலுக்கு செல்லும்போது டீசலுக்கு ரூ.50 ஆயிரத்துக்கு மேல் செலவாகிறது.

    ஆனாலும் மீன் பிடிக்கவிடாமல் இலங்கை கடற் படையினர் அச்சுறுத்தி வருகின்றனர். தமிழக மீனவர்களின் வாழ்வா தாரத்தை சீர்குலைக்கவே இதுபோன்ற செயல்களில் இலங்கை கடற்படை ஈடுபடுகிறது.

    இந்த முறை கடலுக்கு செல்லும்போது சர்வதேச கடல் எல்லையில் இலங்கை கடற்படை குவிக்கப்பட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றனர்.

    கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 1200 பேரை இலங்கை கடற்படை விரட்டியடித்தது. #Fishermen #SriLankaNavy

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 1200 மீனவர்கள் 265 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 10-க்கும் மேற்பட்ட ரோந்து படகுகளில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர்.

    தமிழக மீனவர்களிடம் “நீங்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள். உடனே இங்கிருந்து செல்லுங்கள்” என்று எச்சரித்தனர்.

    அச்சத்தில் நடுங்கிய மீனவர்கள் படகுகளை திருப்பிக்கொண்டு கரைக்கு திரும்ப ஆயத்தமானார்கள். அப்போது இலங்கை கடற்படையினர் திடீரென்று ராமேசுவரம் மீனவர்களின் மீன்பிடி வலைகளை அறுத் தெறிந்தனர். படகுகளையும் சேதப்படுத்தினர்.

    “வலைகளை அறுத்து எங்கள் பிழைப்பை கெடுக்காதீர்கள்” என்று கெஞ்சினர். ஆனால் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து வலைகளை சேதப்படுத்தினர். பின்னர் உடனே இடத்தை காலி செய்யுங்கள் என்று விரட்டியடித்தனர்.

    ராமேசுவரம் மீனவர்களும் உயிர் பிழைத்தால் போதும் என நினைத்து படகுகளை திருப்பிக் கொண்டு இன்று அதிகாலை கரை திரும்பினர்.

    இலங்கை கடற்படையின் நடவடிக்கையால் தங்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விட்டது எனறு மீனவர்கள் தங்கள் வேதனையை தெரிவித்தனர். #Fishermen #SriLankaNavy

    ×