search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    • பஞ்சாப் அணியில் சாம் கரன் 63 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • ராஜஸ்தான் தரப்பில் ஆவேஷ் கான், சாஹல் 2 விக்கெட்டும் டிரென் போல்ட் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

    அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை குவித்துள்ளது. பஞ்சாப் சார்பில் சிறப்பாக பந்துவீசிய சாம் கர்ரன், ஹர்ஷல் பட்டேல் மற்றும் ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லிஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதனையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக பேர்ஸ்டோ- பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். பிரப்சிம்ரன் சிங் 4 ரன்னில் வெளியேறினார். மிகவும் மோசமான விளையாட்டை வெளிப்படுத்திய பேர்ஸ்டோ 22 பந்தில் 14 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஷசாங் சிங் டக் அவுட் ஆனார். அடுத்து சிறிது நேரத்தில் ரிலீ ரோசோவ் 22 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில் கேப்டன் சாம் கரன் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோர் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர். நிதானமாக விளையாடிய ஜித்தேஷ் 22 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம் கரன் அரை சதம் அடித்து அசத்தினார்.

    இறுதியில் அசுதோஷ் சர்மா - சாம் கரன் இறுதி வரை சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதக்கு அழைத்து சென்றனர். இதனால் பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் ஆவேஷ் கான், சாஹல் 2 விக்கெட்டும் டிரென் போல்ட் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்த தோல்வியின் மூலம் ராஜஸ்தான் அணி கடைசியாக விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது.

    • ரியான் பராக் சிறப்பாக ஆடி 48 ரன்களை குவித்தார்.
    • சாம் கர்ரன், ஹர்ஷல் பட்டேல், ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. கவுகாத்தியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

    அதன்படி பேட்டிங்கை தொடங்கிய ராஜஸ்தான் அணிக்கு சுமாரான துவக்கமே கிடைத்தது. துவக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்களுக்கும், டாம் கோலர் கேட்மோர் 18 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 15 பந்துகளில் 18 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். ரியான் பராக் பொறுப்பாக ஆடினார்.

     


    அடுத்து களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் 28 ரன்களை அடித்து அவுட் ஆனார். துருவ் ஜூரெல் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இவர்களை தொடர்ந்து வந்த ரோவ்மேன் போவெல் 4 ரன்களிலும், டொனோவன் ஃபெரைரா 7 ரன்களிலும் அவுட் ஆகினர். போட்டி முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை குவித்துள்ளது.

    பஞ்சாப் சார்பில் சிறப்பாக பந்துவீசிய சாம் கர்ரன், ஹர்ஷல் பட்டேல் மற்றும் ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லிஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் துவங்குகிறது.
    • அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறுகின்றன.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 2 ஆம் தேதி துவங்குகிறது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் 2024 டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    மேலும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு ஆயத்தமாகும் வகையில், அணிகள் ஒவ்வொன்றாக அமெரிக்கா புறப்பட்டன. சில தினங்களுக்கு முன்பு இலங்கை அணி அமெரிக்கா புறப்பட்டு சென்றது. அந்த வரிசையில், தற்போது ஆசிய நாடுகளில் ஒன்றான வங்காளதேசம் கிரிக்கெட் அணி அமெரிக்கா புறப்பட்டது.

    அமெரிக்கா புறப்படும் முன் வங்காளதேசம் அணி வீரர்கள் அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் நஜ்முல் ஹாசனுடன் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

    • ஹோட்டல் அறையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது பாலியல் புகார் எழுந்தது.
    • 23 வயதான அவர் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

    நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லமிச்சேன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

    2022ம் ஆண்டு ஹோட்டல் அறையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது பாலியல் புகார் எழுந்தது

    இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் அவரை குற்றவாளியாக அறிவித்த காத்மாண்டு நீதிமன்றம் அவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருந்தது

    23 வயதான அவர் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நேபாள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லமிச்சேனை விடுதலை செய்தது

    எதிர்வரும் டி20 உலகக்கோப்பைக்கான நேபாள் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும், மே 25 வரை அணியில் மாற்றம் செய்யலாம் என்பதால் சந்தீப் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • ராஜஸ்தான் அணி ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டது.
    • பஞ்சாப் அணி புள்ளிகள் பட்டியலில் பின்தங்கியுள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. கவுகாத்தியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விட்டது. அந்த வகையில், தொடரின் அடுத்த சுற்றுக்கு வெற்றியுடன் கடக்கும் முனைப்பில் ராஜஸ்தான் அணி களமிறங்குகிறது.

    பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள நிலையில், வெற்றியுடன் தொடரை நிறைவு செய்யும் முனைப்பில் களமிறங்குகிறது. 

    • நான் பேட்டிங் செய்ய வரும் முன்னர் அவரது பந்து வீச்சு வீடியோவை 100 முறை பார்த்து விட்டுதான் பேட்டிங் செய்ய வருவேன்.
    • அவர் ஒரு மிரட்டலான பந்து வீச்சாளராக இருந்தார்.

    இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா துபாயில் உள்ள எப் எம் சேனல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்தார்.

    அதில், நீங்கள் சந்தித்ததில் கடினமான பந்துவீச்சாளர் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரோகித் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளரை கூறினார்.

    இது குறித்து ரோகித் கூறியதாவது:-

    நான் பேட்டிங் செய்ய வரும் முன்னர் அவர் பந்து வீச்சு வீடியோவை 100 முறை பார்த்து விட்டுதான் பேட்டிங் செய்ய வருவேன். அவர்தான் தென் ஆப்பிரிக்கா வீரர் டேல் ஸ்டெய்ன். அவர் கிரிக்கெட்டின் ஜாம்பவான்.

    மேலும் அவர் தனது வாழ்க்கையில் என்ன சாதித்திருக்கிறார் என்பதை பார்ப்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது. நான் அவரை பலமுறை எதிர்கொண்டேன். அவரது பந்து வீச்சு வேகமாக இருக்கும். அதில் ஸ்விங்கும் செய்வார். அப்படி பந்து வீசுவது மிகவும் கடினமானது.

    அவர் ஒரு மிரட்டலான பந்து வீச்சாளராக இருந்தார். அவர் அனைத்து போட்டி, சீசனிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் விளையாடுவார். அவருக்கு எதிராக விளையாடியதில் மகிழ்ச்சியாக இருந்தது.

    இவ்வாறு ரோகித் கூறினார்.

    • சிறந்த பவுலிங், பேட்டிங் என நல்ல அணியாக பாகிஸ்தான் உள்ளது.
    • ஒரு கிரிக்கெட் வீரராக சவால்களை சந்திக்க வேண்டும் என்பதே எனது ஆசை.

    புதுடெல்லி:

    பாகிஸ்தானுடன் 2012-13-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி நேரடி கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை. ஐ.சி.சி. உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பை போட்டிகளில் மட்டும் பாகிஸ்தானுடன் இந்திய அணி மோதுகிறது. மற்றபடி இரு நாட்டு தொடருக்கு பாதுகாப்பு பிரச்சினையை காரணம் காட்டி மத்திய அரசு அனுமதி மறுக்கிறது.

    நேரடி தொடர் என்று பார்த்தால் பாகிஸ்தான் அணி கடைசியாக 2012-13-ம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்து ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. அதே சமயம் இவ்விரு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சந்தித்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டது.

    இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடக்குமா என்பது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பதில் அளித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்தியா -பாகிஸ்தான் டெஸ்ட் போட்டிகளை மீண்டும் நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் எந்தளவுக்கு உள்ளது என தெரியவில்லை. ஆனால், ஒரு கிரிக்கெட் வீரராக சவால்களை சந்திக்க வேண்டும் என்பதே எனது ஆசை.

    சிறந்த பவுலிங், பேட்டிங் என நல்ல அணியாக பாகிஸ்தான் உள்ளது. இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே மீண்டும் போட்டிகள் நடந்தால் ரசிகர்கள் அதை மிகவும் விரும்புவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஐ.சி.சி. தொடர்களை தவிர்த்து இந்தியா- பாகிஸ்தான் இடையே இரு நாட்டு போட்டிகளும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று விரும்புகிறேன் என்று ரோகித் சர்மா சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 11 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
    • ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு எதிராக விளையாடமாட்டார்.

    தென்ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா. இவர் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார்.

    இவருக்கு காலில் ஏற்பட்ட காயம் (கால் தசையில் தொற்று) காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை சொந்த நாடு திரும்பிவிட்டார். இதனால் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்திலும், 19-ந்தேதி நடைபெறும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்திலும் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஐபிஎல தொடரில் பஞ்சாப் அணிக்காக 11 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    ரபாடாவின் காயம் குறித்து மருத்து குழு மிகவும் நெருக்கமாக கண்காணித்து வருவதாக தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

    டி20 உலகக் கோப்பைக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் ரபாடா இடம் பெறுவது முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனென்றால், 15 பேர் கொண்ட அணியில் அவர் மட்டும்தான் கருப்பின வீரர் ஆவார். இது தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட்டில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தென்ஆப்பிரிக்கா அணியின் கொள்கைப்படி ஆறு வெள்ளை நிற வீரர்களும், இரண்டு கருப்பு நிற வீரர்களும் இடம்பெற வேண்டும். ஆறு வெள்ளை நிற வீரர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர். ஆனால் கருப்பு நிற வீரர்களில் ரபாடா மட்டுமே இடம் பிடித்துள்ளதால் அவர் அனைத்து போட்டிகளிலும் களம் இறங்க வேண்டும் என கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    லுங்கி நிகிடி ரிசர்வ் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அன்ரிச் நோர்ஜே, ஜெரால்டு கோயட்சி, மார்கோ யான்சன், ஓட்டினியல் பார்ட்மேன் ஆகி வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    • தலைமை பயிற்சியாளர் டிராவிட்டின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது.
    • விருப்பம் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை வரும் 27-ம் தேதி வரை அனுப்பலாம் என பிசிசிஐ தெரிவித்தது.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இருந்து வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியுடன் அவரது ஒப்பந்தம் முடிவடைந்தது. ஆனாலும் ஜூன் 1-ம் தேதி தொடங்கும் டி20 உலகக் கோப்பை போட்டியை கருத்தில் கொண்டு அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது.

    டிராவிட்டின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பதற்கான வேலையை பி.சி.சி.ஐ. தற்போது தொடங்கியது.

    இதற்கிடையே, தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை வரும் 27-ம் தேதி வரை அனுப்பலாம் என பி.சி.சி.ஐ. நேற்று தெரிவித்தது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 60 வயதிற்கு உட்பட்டவர்களாகவும், குறைந்தபட்சம் 30 டெஸ்ட் அல்லது 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கவேண்டும் என்ற நிபந்தனையும் விதித்துள்ளது.

    புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுபவர் ஜூலை 1 முதல் பொறுப்பேற்பார் என்றும், அவரது பதவிக்காலம் டிசம்பர் 31, 2027 அன்று முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அல்லது நியூசிலாந்து முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் ஆகியோரில் ஒருவருக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

    • நடப்பு ஐ.பி.எல். தொடரில் சிக்சர் மழை அதிகளவில் பொழியப்பட்டுள்ளது.
    • நேற்றைய 64-வது போட்டிக்கு பிறகு 1125 சிக்சர்கள் இது அடிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் 17-வது தொடரில் சிக்சர் மழை அதிக அளவில் பொழியப்பட்டுள்ளது.

    நேற்றைய 64-வது லீக் போட்டிக்குப் பிறகு நடப்பு தொடரில் இதுவரை 1,125 சிக்சர்கள் அடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு போட்டியை தாண்டி சிக்சர்களில் புதிய சாதனை நிகழ்த்தப்பட்டது. இன்னும் 6 லீக் உள்பட 10 ஆட்டங்கள் இருப்பதால் சிக்சர்களின் எண்ணிக்கை அதிகமாக உயரும்.

    கடந்த ஐ.பி.ல். தொடரில் 1,124 சிக்சர்கள் எடுக்கப்பட்டது. 2022-ல் 1,062 சிக்சர்களும், 2018-ல் 872 சிக்சர்களும், 2019-ல் 784 சிக்சர்களும் அடிக்கப்பட்டன.

    நடப்பு சீசனில் ஐதராபாத் அணி அதிகபட்சமாக 12 ஆட்டத்தில் 146 சிக்சர்களை விளாசியுள்ளது. அந்த அணி ஏற்கனவே ஒரு ஆட்டத்தில் அதிக சிக்சர்களை அடித்து சாதனை படைத்து இருந்தது.

    அதைத்தொடர்ந்து, பெங்களூரு அணி 13 போட்டிகளில் 141 சிக்சர்களையும், டெல்லி கேப்பிடல்ஸ் 135 சிக்சர்களையும் அடித்துள்ளன.

    கொல்கத்தா (125 சிக்சர்கள்), மும்பை (122), பஞ்சாப் (102), ராஜஸ்தான் (100) சென்னை (99), லக்னோ (88), குஜராத் (67) ஆகிய அணிகள் அதற்கு அடுத்த நிலைகளில் உள்ளன.

    ஐதராபாத் வீரர் அபிஷேக் சர்மா 35 சிக்சர்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். பெங்களூருவின் விராட் கோலி 33 சிக்சர்களுடன் 2-வது இடத்திலும், கொல்கத்தாவின் சுனில் நரேன் 32 சிக்சர்களுடன் 3-வது இடத்திலும், டிராவிஸ் ஹெட், கிளாசன் (இருவரும் ஐதராபாத்) தலா 31 சிக்சர்களுடன் 4-வது, 5-வது இடங்களில் உள்ளனர்.

    • பாகிஸ்தானின் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் அரை சதமடித்தனர்.
    • 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது.

    டப்ளின்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. முதல் இரு ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என சமனில் இருந்தது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி மற்ரும் 3-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்தது. விக்கெட் கீப்பர் லோர்கன் டக்கர் அதிரடியாக ஆடி 73 ரன்கள் குவித்தார்.

    பாகிஸ்தான் சார்பில் ஷாஹீன் அப்ரிடி 3 விக்கெட்டும், அப்பாஸ் அப்ரிடி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. பாபர் அசாம் (75 ரன்), முகமது ரிஸ்வான் (56 ரன்) அரைசதம் அடித்து அசத்தினர்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி 17 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 181 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியது.

    • ஐ.பி.எல். புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின.
    • லக்னோ, மும்பை, பஞ்சாப் அணிகள் நடப்பு தொடரில் இருந்து வெளியேறியுள்ளன.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 62 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன.

    இந்நிலையில், ஐ.பி.எல். புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. இந்த இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் 14 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

    இந்நிலையில், நேற்றைய வெற்றியின் மூலம் டெல்லி அணி 14 புள்ளிகள் பெற்று 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

    பெங்களூரு, லக்னோ அணிகள் தலா 12 புள்ளிகள் பெற்று 6, 7-வது இடங்களில் உள்ளன.

    குஜராத், பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் நடப்பு தொடரில் இருந்து வெளியேறின.

    ×