search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்காளதேசம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஸ்டம்ப்களை பார்க்காமலேயே ஸ்டம்பிங் செய்து விக்கெட்டை எடுத்தார்.
    • வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றதோடு, தொடரையும் கைப்பற்றியது.

    தற்போது இந்த போட்டியின் போது வங்காளதேசம் அணியின் விக்கெட் கீப்பர் எடுத்த ரன் அவுட் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. போட்டியின் இக்கட்டான சூழலில் வங்காளதேசம் அணி விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ், ஸ்டம்ப்களை பார்க்காமலேயே காற்றில் மிதந்த படி ஸ்டம்பிங் செய்தார்.

     


    இதில் இலங்கை அணியின் தசுன் ஷனகா 9 பந்துகளில் 19 ரன்களை எடுத்திருந்த போது தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி ஒன்றில், ஸ்டம்ப்களை பார்க்காமலேயே ஸ்டம்பிங் செய்து விக்கெட்டை எடுத்தார்.

    தற்போது இதே போன்று வங்காளதேச விக்கெட் கீப்பர் ஸ்டம்பிங் செய்து விக்கெட்டை வீழ்த்தியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பலர் தோனி மற்றும் லிட்டன் தாஸ் செய்த ஸ்டம்பிங் வீடியோக்களை இணைத்து வெளியிட்டு வருகின்றனர்.



    • 5-வது ஜூனியர் பெண்கள் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வங்காளதேசத்தில் நடைபெற்றது.
    • நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின.

    டாக்கா:

    5-வது ஜூனியர் பெண்கள் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்றது. லீக் சுற்றின் முடிவில் இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் தகுதி பெற்றன.

    நேற்று நடந்த இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, நடப்பு சாம்பியன் வங்காளதேசத்தை எதிர்கொண்டது.

    மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதனால் போட்டி முடிவை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் முதல் 5 பெனால்டி வாய்ப்புகளையும் இரு அணியினரும் கோலாக மாற்றியதால் 5-5 என்ற கணக்கில் சமநிலை நிலவியது. இதையடுத்து, சடன்டெத் முறை அமலுக்கு வந்தது.

    இதிலும் இரு அணியினரும் வாய்ப்புகளை தவறவிடாமல் கோல் அடித்ததால் பெனால்டி ஷூட்-அவுட் முறை நீடித்துக்கொண்டே போனது. ஒரு கட்டத்தில் 11-11 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தபோது, ஆட்டத்தை நிறுத்திய நடுவர்கள் வெற்றியாளரை முடிவு செய்ய 'டாஸ்' முறையை கொண்டு வந்தனர்.

    டாஸ் போடப்பட்டதில் இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த முடிவை ஏற்றுக்கொள்ளாத வங்காளதேச வீராங்கனைகள் நடுவர்களுடன் வாக்குவாதம் செய்ததுடன், மைதானத்திலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ரசிகர்களும் அவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். சிலர் மைதானத்திற்குள் தண்ணீர் பாட்டில்களை தூக்கி வீசினர். இதனால் அங்கு கூச்சல், குழப்பம் நிலவியது.

    அதன்பின் போட்டி அதிகாரிகள், நடுவர்கள் இருதரப்பினரையும் கலந்து ஆலோசித்து இந்தியா, வங்காளதேசத்தை கூட்டு சாம்பியன்களாக அறிவித்தனர். இரு அணியின் கேப்டன்களும் கோப்பையை கூட்டாகப் பெற்றுக் கொண்டனர்.

    • ஒருங்கிணைந்து பணியாற்றும் முனைப்பில் சீனா அழைப்பு.
    • வங்காளதேசத்துக்கான சீனா தூதரை ஹசன் சந்தித்து இருந்தார்.

    சீனாவுக்கு அலுவல் பூர்வ பயணம் மேற்கொள்ள வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாடு அழைப்பு விடுத்துள்ளது. வங்காளதேசத்தில் புதிய அரசு அமைந்துள்ளதை அடுத்து, அனைத்து துறைகளிலும் ஒருங்கிணைந்து பணியாற்றும் முனைப்பில் சீனா அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    "நாங்கள் பயணத்திற்கு ஏற்ற வகையில், சரியான நேரத்தை தேர்வு செய்கிறோம்," என்று வங்காளதேச வெளியுறவு துறை மந்திரி ஹசன் மஹ்மூத் தெரிவித்து இருக்கிறார். முன்னதாக வங்காளதேசத்துக்கான சீனா தூதரை ஹசன் சந்தித்து இருந்தார்.

    பிரதமரின் பீஜிங் சுற்றுப் பயணத்திற்கு ஏற்ற நேரம் ஒதுக்கி, பயணத்திற்கு வேண்டிய முன்னேற்பாடுகளை செய்வதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா முன்னதாக 2019-ம் ஆண்டு அலுவல்பூர்வ பயணமாக சீனா சென்றிருந்தார்.

    • வங்காளதேசம் சார்பில் தௌஹித் ரிடோய் 74 ரன்களை குவித்தார்.
    • ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக ஆடிய மிட்செல் மார்ஷ் ரன்களை குவித்தார்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டி பூனேவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி களமிறங்கிய வங்காளதேசம் அணி துவக்கம் முதலே நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் இருவரும் முறையே 36 ரன்களை குவித்தனர். அடுத்து வந்த கேப்டன் நஜுமுல் 45 ரன்களையும், தௌஹித் ரிடோய் 74 ரன்களையும் குவித்தார்.

    போட்டி முடிவில் வங்காளதேசம் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஆடம் ஜாம்பா மற்றும் சீன் அபாட் தலா இரண்டு விக்கெட்டுகளையும், மார்கஸ் ஸ்டாயினிஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    307 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு சுமாரான துவக்கமே கிடைத்தது. துவக்க வீரரான டிராவிஸ் ஹெட் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய டேவிட் வார்னர் 53 ரன்களை குவித்தார். அடுத்து வந்த மிட்செல் மார்ச் அதிரடியாக ஆடி 177 ரன்களை குவித்தார். இவருடன் விளையாடிய ஸ்டீவன் ஸ்மித் 63 ரன்களை குவித்தார்.

    இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 44.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 307 ரன்களை குவித்து அபார வெற்றி பெற்றது. வங்காளதேசம் சார்பில் டஸ்கின் அகமது முஸ்தாஃபிசுர் ரகுமான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • வங்காளதேசம் சார்பில் தௌஹித் ரிடோய் 74 ரன்களை குவித்தார்.
    • ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஆடம் ஜாம்பா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டி பூனேவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி களமிங்கிய வங்காளதேசம் அணி துவக்கம் முதலே நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் இருவரும் முறையே 36 ரன்களை குவித்தனர். அடுத்து வந்த கேப்டன் நஜுமுல் 45 ரன்களையும், தௌஹித் ரிடோய் 74 ரன்களையும் குவித்தனர்.

    இவருடன் ஆடிய மஹமதுல்லா 32 ரன்களையும், முஷ்ஃபிகுர் ரஹிம் மற்றும் மெஹிடி முறையே 21 மற்றும் 29 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். போட்டி முடிவில் வங்காளதேசம் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்களை குவித்தது.

    ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஆடம் ஜாம்பா மற்றும் சீன் அபாட் தலா இரண்டு விக்கெட்டுகளையும், மார்கஸ் ஸ்டாயினிஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • வங்காளதேசம் அணியின் லிட்டன் தாஸ் 45 ரன்களை குவித்து அசத்தினார்.
    • பாகிஸ்தான் சார்பில் பஹார் ஜமான் அதிரடியாக விளையாடினார்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 31-வது லீக் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதிய இந்த போட்டியில் வங்காளதேசம் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடியது.

    துவக்க வீரர்களாக களமிறங்கிய தன்சித் ஹசன் ரன் ஏதும் எடுக்காமல், டக் அவுட் ஆகி வெளியேறினார். இவருடன் களமிறங்கிய லிட்டன் தாஸ் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய நஜ்முல் ஹொசைன் 4 ரன்களிலும், முஷ்பிகுர் ரஹீம் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    வங்காளதேசம் அணி 45.1 ஓவர்களில் 204 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஷாகீன் ஷா அஃப்ரிடி மற்றும் முகமது வாசிம் தலா 3 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் ரவுப் 2 விக்கெட்டுகளையும், இஃப்திகார் அகமது மற்றும் உசாமா மிர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    எளிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு, அப்துல்லா ஷபீக் மற்றும் பஹார் ஜமான் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். அப்துல்லா ஷபீக் சிறப்பாக விளையாடி 68 ரன்களை குவித்தார். பஹார் ஜமான் 81 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் 9 ரன்களுக்கு நடையை கட்டினார்.

    அடுத்து வந்த முகமது ரிஸ்வான் 26 ரன்களையும், இஃப்திகார் அகமது 17 ரன்களையும் அடித்தனர். போட்டி முடிவில் பாகிஸ்தான் அணி 32.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை குவித்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • வங்காளதேசம் அணியின் லிட்டன் தாஸ் 45 ரன்களை குவித்து அசத்தினார்.
    • பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் ஷா அஃப்ரிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 31-வது லீக் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதிய இந்த போட்டியில் வங்காளதேசம் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடியது.

    துவக்க வீரர்களாக களமிறங்கிய தன்சித் ஹசன் ரன் ஏதும் எடுக்காமல், டக் அவுட் ஆகி வெளியேறினார். இவருடன் களமிறங்கிய லிட்டன் தாஸ் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய நஜ்முல் ஹொசைன் 4 ரன்களிலும், முஷ்பிகுர் ரஹீம் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து வந்த மஹ்மதுல்லா நிதானமாக விளையாடி 56 ரன்களை குவித்தார். இவருடன் ஆடிய கேப்டன் ஷகிப் அல் ஹசன் 43 ரன்களை குவித்தார். அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க வங்காளதேசம் அணி 45.1 ஓவர்களில் 204 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    பாகிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஷாகீன் ஷா அஃப்ரிடி மற்றும் முகமது வாசிம் தலா 3 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் ரவுப் 2 விக்கெட்டுகளையும், இஃப்திகார் அகமது மற்றும் உசாமா மிர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    • புறப்பட்ட சில நிமிடங்களில் மாற்று தண்டவாள பாதைக்காக மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.
    • இந்த விபத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் தடம்புரண்டன.

    வங்காளதேசத்தில் இரண்டு ரெயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமுற்றனர். இந்த விபத்தில் உயிரிழப்புகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    வங்காளதேசத்தின் டாக்கா மாகாணத்தின் கிஷோர்கஞ்ச் மாவடத்தில் இருந்து டாக்கா நோக்கி சென்று கொண்டிருந்த இகரொசிந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில், புறப்பட்ட சில நிமிடங்களில் மாற்று தண்டவாள பாதைக்காக மாற்றப்பட்டு இருந்தது. எக்ஸ்பிரஸ் ரெயில் மெல்ல தண்டவாளம் மாறிக் கொண்டிருந்த போது, திடீரென வேகமாக வந்த சரக்கு ரெயில் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது மோதியது.

    இந்த விபத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் தடம்புரண்டன. இதன் காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தவர்களில் இதுவரை 15 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமுற்றனர். விபத்து குறித்த தகவல் அறிந்ததும், மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    ரெயில் விபத்துக்குள்ளான பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. விபத்து தொடர்பான விசாரணையும் துவங்கி நடைபெற்று வருகிறது.

    • கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
    • இந்திய அணி தொடர்ச்சியாக 4 வெற்றிகளை பதிவுசெய்து புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

    புதுடெல்லி:

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற 17-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, வங்காளதேசத்துடன் மோதின. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது. பின்னர் 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 88 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சுப்மன் கில் அரைசதம் அடித்து 53 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த ஸ்ரேயஸ் ஐயர் 19 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து களமிறங்கிய விராட் கோலி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம் அவருக்கு கே.எல்.ராகுல் பக்கபலமாக இருந்தார். கடைசியில் சிக்சர் அடித்து தனது சதத்தை பூர்த்தி செய்ததுடன், ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துவைத்தார் விராட் கோலி.

    முடிவில் இந்திய அணி 41.3 ஓவர்களில் வெற்றி இலக்கை கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. விராட் கோலி 103 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 34 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர். இந்திய அணி, உலகக்கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 4 வெற்றிகளை பதிவுசெய்து புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. தொடர்ந்து இந்திய அணி, தனது அடுத்த லீக் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள நியூசிலாந்து அணியுடன் வரும் ஞாயிற்றுக்கிழமை மோதுகிறது.

    இந்நிலையில் வங்காளதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "மற்றொரு விதிவிலக்கான போட்டி..! வங்கதேசத்துக்கு எதிரான அபார வெற்றியால் எங்கள் கிரிக்கெட் அணிக்கு பெருமை. உலகக் கோப்பையில் தற்போது எங்கள் அணி சிறப்பான பார்மில் உள்ளது. அடுத்த போட்டிக்கு வாழ்த்துக்கள்" என்று அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

    • ஜடேஜா, சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
    • இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா 48 ரன்களை எடுத்தார்.

    உலகக் கோப்பை 2023 தொடரில் இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் இடையேயான போட்டி புனேவில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    வங்காளதேசம் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய தன்சித் ஹாசன் மற்றும் லிட்டன் தாஸ் ஜோடி சிறப்பான துவக்கம் கொடுத்தது. இருவரும் முறையே 51 மற்றும் 66 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய நஜ்முல் ஹூசைன் மற்றும் மெஹிடி ஹாசன் முறையே 8 மற்றும் 3 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.

    போட்டி முடிவில் வங்காளதேசம் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்களை குவித்தது. இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஷர்துல் தாக்கூர் மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இந்திய அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் நல்ல துவக்கம் கொடுத்தனர். இருவரும் முறையே 48 மற்றும் 53 ரன்களை குவித்தனர். அடுத்து களமிறங்கிய விராட் கோலி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தார். இவருடன் விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த கே.எல். ராகுல் பொறுப்பாக ஆடினார். இதன் காரணமாக இந்திய அணி 41.3 ஓவர்கள் முடிவில் 261 ரன்களை குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராட் கோலி 97 பந்துகளில் 103 ரன்களை அடிக்க, கே.எல். ராகுல் 34 ரன்களுடன் களத்தில் இருந்தார். 

    • முஷ்ஃபிகுர் ரஹிம் 38 ரன்களை குவித்து பெவிலியன் திரும்பினார்.
    • ஜடேஜா, சிராஜ், பும்ரா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    உலகக் கோப்பை 2023 தொடரில் இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் இடையேயான போட்டி புனேவில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    வங்காளதேசம் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய தன்சித் ஹாசன் மற்றும் லிட்டன் தாஸ் ஜோடி சிறப்பான துவக்கம் கொடுத்தது. இருவரும் முறையே 51 மற்றும் 66 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய நஜ்முல் ஹூசைன் மற்றும் மெஹிடி ஹாசன் முறையே 8 மற்றும் 3 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.

     

    இவர்களை தொடர்ந்து வந்த தௌஹித் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் ஆடி வந்த முஷ்ஃபிகுர் ரஹிம் 38 ரன்களை குவித்து பெவிலியன் திரும்பினார். மஹ்மதுல்லா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 36 பந்துகளில் 46 ரன்களை குவித்தார். போட்டி முடிவில் வங்காளதேசம் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்களை குவித்தது.

    இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஷர்துல் தாக்கூர் மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • துவக்க வீரரான லிட்டன் தாஸ் ரன் ஏதும் அடிக்காமல் பெவிலியன் திரும்பினார்.
    • கேப்டன் கேன் வில்லியம்சன் நிதானமாக விளையாடி 79 ரன்களை குவித்தார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    வங்காளதேச அணியின் துவக்க வீரரான லிட்டன் தாஸ் ரன் ஏதும் அடிக்காமல் பெவிலியன் திரும்பினார். இவருடன் ஆடிய தன்சித் ஹசன் தமீம் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய மெஹிதி ஹசன் மிராஸ் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஷகிப் அல் ஹாசன் 40 ரன்களையும், முஷ்ஃபிகுர் ரஹிம் 66 ரன்களையும் குவித்தனர்.

    போட்டி முடிவில் 50 ஓவர்கள் முடிவில் வங்காளதேசம் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்களை குவித்தது. நியூசிலாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசிய லோக்கி பெர்குசன் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவரை தவிர டிரெண்ட் போல்ட், மேட் ஹெண்ரி தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். மிட்சென் சாண்ட்னர் மற்றும் கிலென் பிலிப்ஸ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

    இதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டெவன் கான்வே சிறப்பாக ஆடி 45 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் நிதானமாக விளையாடி 79 ரன்களை குவித்தார். டேரில் மிட்செல் சிறப்பாக விளையாடி 89 ரன்களை குவித்தார்.

    இதன் மூலம் நியூசிலாந்து அணி 42.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 248 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. போட்டி முடிவில் டேரில் மிட்செல் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

    ×