search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    புள்ளிப்பட்டியலில் 5-வது இடம்: பிளே ஆப் வாய்ப்பில் நீடிக்கும் டெல்லி
    X

    புள்ளிப்பட்டியலில் 5-வது இடம்: பிளே ஆப் வாய்ப்பில் நீடிக்கும் டெல்லி

    • ஐ.பி.எல். புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின.
    • லக்னோ, மும்பை, பஞ்சாப் அணிகள் நடப்பு தொடரில் இருந்து வெளியேறியுள்ளன.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 62 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன.

    இந்நிலையில், ஐ.பி.எல். புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. இந்த இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் 14 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

    இந்நிலையில், நேற்றைய வெற்றியின் மூலம் டெல்லி அணி 14 புள்ளிகள் பெற்று 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

    பெங்களூரு, லக்னோ அணிகள் தலா 12 புள்ளிகள் பெற்று 6, 7-வது இடங்களில் உள்ளன.

    குஜராத், பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் நடப்பு தொடரில் இருந்து வெளியேறின.

    Next Story
    ×