search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை"

    • மேலூர் தொகுதியில் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் 9 புதிய கட்டிடங்களை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் திறந்து வைத்தார்.
    • பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகு திக்கு உட்பட்ட மேலூர், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மதுரை பாரா ளுமன்ற உறுப்பினர் நிதி மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 1 கோடி மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டி டம், ரேசன்கடை, பயணியர் நிழற்குடை கட்டிடங்களை மதுரை பாராளுமன்ற உறுப் பினர் வெங்கடேசன் ரிப் பன் வெட்டி திறந்து வைத் தார்.

    தெற்குதெரு ஊராட்சி டி.தர்மசானப்பட்டியில் 11 லட்சத்தி 97 ஆயிரம் மதிதப் பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டடிமும், அரசப் பன்பட்டி ஊராட்சியில் 15 லட்சம் மதிப்பீட்டில் பொது விநியோகம் (ரேசன் கடை), கோட்டநத்தம்பட்டி ஊராட் சியில் ரூ. 11 லட்சத்தி 97 ஆயிரம் மதிப்பீட்டில் அங் கன்வாடி கட்டிடம், தனியா மங்கலம் ஊராட்சியில் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் பொதுவிநியோகம் (ரேசன் கடை) கட்டிடமும், கொங்கம் பட்டி ஊராட்சியில் உள்ள பன்னிவீரன்பட்டியில் ரூ. 10 லட்சத்து 93 ஆயிரம் மதிப் பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடமும், கொடுக்கம் பட்டி ஊராட்சியில் உள்ள கொன்னப்பட்டியில் ரூ. 10 லட்சத்து 93 ஆயிரம் மதிப் பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம், 5 லட்சம் மதிப் பீட்டில் பயணியர் நிழற் குடை கட்டிடம், கொட்டாம் பட்டி ஊராட்சியில் ரூபாய் 10 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அங்கன் வாடி மைய கட்டிடமும், பட்டூர் ஊராட்சியில் 5 லட்சம் மதிப்பீட்டில் பயணி யர் நிழற்குடை கட்டிடம் திறந்த வைக்கப்பட்டன.

    மேலூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் குமரன், ராஜேந்திர பிரபு, பாலகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் அரசப் பன்பட்டி தலைவர் முரு கேஸ்வரி வெள்ளையன், கோட்ட நத்தம்பட்டி உஷா இளையராஜா, தனியா மங்கலம் குமார், கொங்கம் பட்டி சந்தோஷ், கொடுக்கம் பட்டி ராஜா, கொட்டாம் பட்டி பாலசுப்பிரமணியன், தும்பைபட்டி அயூப் கான், மேலூர் தாசில்தார் செந்தா மரை, மேலூர் வட்ட வழங் கல் அலுவலர் நாகராணி, மேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசந்தர், வேலவன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாநில குழு உறுப்பினர் பாலா, மேலூர் தாலுகா செயலாளர் கண்ணன், மாநில கரும்பு விவசாய சங்க தலைவர் வழக்கறிஞர் பழனிச்சாமி, தாலுகா குழு உறுப்பினர்கள் அடக்கி வீரணன், மணவா ளன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் வருகிற 12-ந்தேதி தொடங்கும் புத்தக கண்காட்சி 10 நாட்கள் நடக்கிறது.
    • சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் நடைபெற உள்ளன.

    மதுரை

    மதுரையில் புத்தக கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. சென்னைக்கு அடுத்த படியாக தமிழகத்தில் மிகப்பெரிய புத்தக கண்காட்சியாக மதுரையில் நடைபெறும் புத்தக கண்காட்சி உள்ளது.

    இந்த ஆண்டு புத்தக கண்காட்சி வருகிற 12ந்தேதி முதல் தமுக்கம் மைதா னத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. 22ந்தேதி முதல் 10 நாட்கள் வரை இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. தென் இந்திய புத்தக பதிப்பா ளர்கள் சங்கம், மதுரை மாவட்ட நிர்வாகம் இணைந்து இந்த கண் காட்சியை நடத்துகின்றன. காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி திறந்திருக்கும். இந்த ஆண்டு பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. இதில் பல்வேறு துறைகள், பதிப்பகங்கள், எழுத்தா ளர்களின் பல்லாயிரக் கணக்கான புத்தகங்கள் இடம்பெற உள்ளன.

    கண்காட்சி நடைபெறும் நாட்களில் மாலையில் நாள்தோறும் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பிரபல பேச்சாளர்களின் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் நடைபெற உள்ளன.

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச்செல்ல வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். அதன்படி இந்த புத்தக கண்காட்சி நடத்தப் படுகிறது. வாசிப்பை மக்கள் இயக்கமாக மாற்றும் வகையில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் திரளாக இந்த கண்காட்சியை பார்வையிட வேண்டும். சிறப்பான எதிர்கால தலைமுறையை உருவாக்கு வதற்கு புத்தகங்கள் வழி காட்டியாக அமையும் என்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அறிவுப்பூர்வமான, பிடித்தமான புத்தகங்களை வாங்கிக்கொடுத்து அவர் களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் சங்கீதா கேட்டுக்கொண்டுள்ளார்.

    • மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் திருவள்ளுவர் சிலை அருகே மத்திய தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்யப் பட்டதன் நினைவு நாளை கருப்பு தினமாக அனுசரித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் தொ.மு.ச. சார்பில் கருணாநிதி, சி.ஐ.டி.யு. சார்பில் லெனின், எச்.எம்.எஸ். சார்பில் பாதர் வெள்ளை, ஐ.என்.டி.யு.சி. சார்பில் ராஜசேகரன், ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் சேது, எம்.எல்.எப். சார்பில் மகபூப்ஜான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விவசாயிகள் படுகொலைக்கு காரண மானவர் மீது வழக்குபதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மின்சார திருத்த சட்ட மசோதாவை கைவிட வேண்டும், தொழிலாளர் நல சட்டங்களை திருத்தி யதை திரும்பப்பெற வேண் டும், அனைத்து தொழிலா ளர்களுக்கும் குறைந்த பட்ச சம்பளம் ரூ.26 ஆயிரமாக நிர்ணயம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    • இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது என மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.
    • காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    மதுரை

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநகர் மாவட்ட தலைவர் கார்த்தி கேயன், மாணிக்கம் தாகூர் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் மாணிக்கம் தாகூர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள இந்திய கூட்டணி வலுவாக உள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இணைத்து வைத்த இந்த இந்தியா கூட்டணி நிச்சய மாக வெற்றி பெறும். தமிழகத்தில் தி.மு.க .தலைமையில் இந்தியா கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தன்னை முதல்-அமைச்சர் என்று தெரிவிப்பதாக கூறப்ப டுகிறது. அவர் முதலில் அரவக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்று வரட்டும். அதன் பின்பு அது குறித்து பேசலாம்.

    அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி முறிவு என்பது ஒரு நாடகமாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி மத்திய பா.ஜ.க. அரசின் குறைகளை சுட்டிக் காட்டுவதில்லை. அதே போல் இந்த கூட்டணி முறிவு குறித்து பா.ஜ.க. தரப்பில் எந்த அறிவிப்பும் வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் காங்கி ரஸ் நிர்வாகிகள் செய்யது பாபு, கவுன்சிலர் தல்லா குளம் முருகன், துரையரசன், மலர்கண்ணன், பறக்கும் படை பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உலக வெறிநோய் தினத்தையொட்டி தடுப்பூசி முகாம் நடந்தது.
    • தலைமை மருத்துவர் சரவணன் தலைமை தாங்கினார்.

    மதுரை

    உலக வெறிநோய் தினத்தையொட்டி தல்லாகுளம் கால்நடை மருத்துவமனையில் செல்ல பிராணிகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    முகாமை மதுரை மண்டல இணை இயக்குநர் நடராஜகுமார் தொடங்கி வைத்தார். மருத்துவமனை தலைமை மருத்துவர் சரவணன் தலைமை தாங்கினார்.

    கால்நடை உதவி மருத்துவர்கள் முத்துராமன், விஜயகுமார், அறிவழகன், முத்துராம், பயிற்சி மருத்துவர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சுதாகரன், சண்முகத்தாய், நிர்மலா, கார்த்திகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மேலும் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவமனைகள், மருந்தகங்களில் வெறிநோய் தடுப்பூசி முகாம்கள் நடந்தன.

    • அன்னை தெரசா மகளிர் பல்கலையில் கதர் ஆடை புரட்சி தினம் கடைபிடிக்கப்பட்டது.
    • குறும்படம் திரையிடப்பட்டது.

    மதுரை

    அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் மதுரை கீழக்குயில்குடி மையத்தில் காந்திஜியின் எளிய கதர் ஆடை அணிதல் புரட்சி தினம் எளிய வாழ்க்கை முறை-உரிய வாழ்க்கை என்ற கருப்பொருளின் அடிப்படையில் அனுசரிக்கப்பட்டது.

    ஆங்கிலத் துறை உதவி பேராசிரியை ராஜலட்சுமி வரவேற்றார். மதுரை மைய இயக்குநர் புஷ்பராணி தலைமையேற்று "எளிய வாழ்க்கை முறை-உன்னதமான வாழ்க்கை முறை" என்ற தலைப்பில் பேசினார்.

    தொடர்ந்து மாணவிகள் சொற்பொழிவு, பாட்டு, நடனம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. "எளிமை, உண்மை, நல்லிணக்கம் மற்றும் மாற்றத்திற்கான காந்திஜியின் பாதை" என்ற கருப்பொருளில் மாணவிகளுக்கு குறும்படத்தை திரையிடப்பட்டது. முடிவில் உதவி பேராசிரியை கீதாஞ்சலி நன்றி கூறினார். 

    • மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அருகே பெருங்கற்காலத்தை சேர்ந்த முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது.
    • வளையம் போன்ற ஆபரணம் வரையப்பட்டுள்ளது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே நல்லமரம் கொட்டாணிபட்டி கிராமத்தில் பெருங்கற்கா லத்தை சேர்ந்த முதுமக்கள் தாழி கண்டெடுக் கப்பட்டது.

    டி.கல்லுப்பட்டி அருகே நல்லமரம் கொட்டணிபட்டி கிராமத்தை சேர்ந்த பண்டியன் என்பவர் தன் வீட்டிற்கு கழிவுநீர் தொட்டி கட்டுவதற்கு குழி தோண்டிய போது பெரிய பாணை இருப்பதாக அவ்வூரே சேர்ந்த கணேசன் என்பவர் தகவலின்படி சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூ ரியின் வரலாற்றுத்துறை பேராசிரியரும், மதுரை பாண்டியநாடு பண்பாட்டு மையம் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து முனீஸ்வரன், ஆய்வாளர் அனந்தகுமரன் ஆய்வு செய்த போது பெருங் கற்காலத்தை சேர்ந்த முது மக்கள் தாழி கண்டறி யப்பட்டது.

    உடனடியாக கிராம நிர்வாக அதிகாரி அய்யனார் பாண்டியராஜ் அவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு நேரடியாக களத்திற்கு வந்து அவர் முதுமக்கள் தாழி கைப்பற்றி கிராம நிர்வாக அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளது. இது குறித்து தொல்லியல் கள ஆய்வாளர் முனீஸ்வரன் கூறியதாவது:-

    இன்றைய தமிழ் சமூகத்தில் இறப்பு சடங்கு முறைக்கு அதிக முக்கியத்து வம் கொடுக்கப்பட்டு வருகின்றோம். குறிப்பாக பெருங்கற்கால ஆரம்பத்தில் இறந்தவர்களின் உடலை தங்கள் வாழ்விடங்களுக்கு வெளியே மலைப்பகுதி களிலும் காட்டுப் பகுதி களிலும் போட்டு விடுவார்கள். அதை நாய், நரி, கழுகு, பறவைகள், மிருகங்கள் இரையாக உண்டப்பின்பு அங்கு கிடக்கும் எலும்புகளை சேகரித்து அதோடு அவர்கள் பயன்படுத்திய மண்பானைகள், தானியங்களையும் உள்ளே வைத்து மூடி வீ வடிவ குழியில் வைத்து அடக்கம் செய்துள்ளனர்.

    பிற்காலத்தில் தான் மனிதன் இறந்த பிறகு உடலை முதுமக்கள் தாழியில் வைத்து அடக்கம் செய்து அவர்கள் நினைவாக புதைத்த முதுமக்கள் தாழியை சுற்றி கல் அடுக்குகள் வைத்துப் பாதுகாத்துள்ளனர்கள்.

    முதுமக்கள் தாழி பொதுவாக தாய் தெய்வம் போன்ற குறியீடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக தாய் குறியீடு என்பது மனிதன் இறந்த பின் மீண்டும் தாயின் கருவறைக்குள் சென்று பிறக்கிறான் என ஆதிமனிதன் நம்பினார்கள்.ஆகவே தாழியின் நடுவில் அகன்று கருவுற்ற தாயின் வயிற்றை போன்ற அமைக்கப்பட்டிருக்கிறது.

    நல்லமரம் கிராமத்தில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழி மேற்குப்பகுதியில் உடைந்த நிலையில் கிட்டத்தட்ட 7 அடி அழம் குழித் தோண்டும் போது கண்டறியப்பட்டது.முதுமக்கள் தாழியின் கழுத்துப்பகுதியில் வளையம் போன்ற ஆப ரணம் வரையப்பட்டுள்ளது.

    குறிப்பாக முதுமக்கள் தாழியின் உயரம் 2.5 அடி, அகலம் 1.5 அடி , சுற்றளவு 6.1 அடி, விட்டம் 1.5 அடி கொண்டதாகும் .இதன் உள்ளே கருப்பு சிவப்பு நிறத்தில் மெல்லிய தடித்த பானைகள் ஓடுகள், உடைந்து நிலையில் உள்ளது. இவைபானை மேல்பகுதி மெல்லிய பானையால் மூடப்பட்டிருக்கலாம்.

    முதுமக்கள் தாழியின் உட்பகுதியில் மனிதனின் மண்டை ஓடு மேல்பகுதி, கை கால் எலும்புகள் உடைந்த நிலையில் கிடைத்துள்ளன. இப்பகுதியில் பெருங்கற்கால பண்பாடு முறை இருந்தற்கான சான்றாக கண்டறியப்பட் முதுமக்கள் தாழி காணப்படுகின்றது. தற்போது கிராம நிர்வாக அலுவலகத்தில் பாதுகாப்பாக இருக்கின்ற பழமையான முதுமக்கள் தாழியை முறையாக ஆய்வுக்குட்படுத்தி பாதுகாக்க வேண்டும் என்றார்.

    • ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பா.ஜ.க.வின் அடிமையாகி விட்டது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
    • நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்த உள் ளோம்.

    மதுரை

    மதுரை ரிங் ரோடு மஸ் தான்பட்டி அருகே கலைஞர் திடல் பகுதியில் அமைக்கப் பட்டுள்ள முன்னாள் முதல் வர் கருணாநிதியின் திருவு ருவச் சிலையை தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து தி.மு.க. இளைஞ ரணி சார்பாக நடை பெற்ற செயல்வீரர் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

    சேலத்தில் டிசம்பர் 17-ந்தேதி தி.மு.க. இளைஞரணி யின் 2-வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. அதற்கு அழைக்கும் விதமாக தான் இந்த செல்வீரர் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாடு நடத்துவதற்கு முக்கிய காரணம் அமைச்சர் மூர்த்தி தான். மதுரை எப்போதும் தி.மு.க. இளைஞர் அணியின் தாய்வீடு. மதுரை ஜான்சி ராணி பூங்காவில் தான் தி.மு.க. இளைஞர் அணி தொடங்கப்பட்டது.

    இளைஞர் அணியினர் மிக கடுமையாக உழைக்க வேண் டும். நம்முடைய முதல்வர் கொண்டு வந்த திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். உழைத்தால் முன் னேறலாம் என்பதற்கு எடுத் துக்காட்டு, இந்த மேடை யில் அமர்ந்திருப்ப வர்களே சாட்சி. அமைச்சர் மூர்த்தி இதற்கு முன்பு பகுதி செயலா ளராக இருந்து பிறகு ஒன்றிய செயலாளர், அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலா ளர், எம்.எல்.ஏ., தற்போது அமைச்சராக உயர்ந்துள்ளார்.

    அதேபோல் கோ.தளபதி எம்.எல்.ஏ. முதலில் பகுதி செயலாளராக இருந்து, பின்பு கடுமையாக உழைத்து மாவட்ட செயலாளராக வந்துள்ளார். அதேபோல் சேடப்பட்டி மணிமாறன். அவருடைய தந்தை சேடப் பட்டி முத்தையா முதிர்ந்த அரசியல்வாதி. ஒரு அரசியல் பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்தாலும் மிக கடுமையாக உழைத்து ஒன்றிய செயலாளராக இருந்து தற்போது மாவட்ட செயலாள ராக இருக்கிறார். எனவே கடுமையாக உழைத்தால் நீங்கள் முன்னேறலாம், என் றும் உயர்ந்த பதவிக்கு வர லாம்.

    மாநாட்டு நிதிக்காக ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார். சேலத்தில் டிசம்பர் 17-ந்தேதி இரண்டா வது மாநில மாநாடு நடத்த உள்ளோம். இதனை வெற்றி அடைய வைக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய முடியுமா என ஆர்.பி.உதய குமார் கூறிய கருத்திற்கு நாங்கள் நீட் தேர்வு ரத்து செய்வதற்காக போராடி வருகிறோம். கடந்த மாதம் 20-ந்தேதி உண்ணாவிரத ஆலப்போராட்டம் நடத்தி னோம். கூடிய விரைவில் நீட் தேர்வுக்கு எதிராக கையெ ழுத்து இயக்கம் நடத்த உள் ளோம்.

    அண்ணாவைப் பற்றி தவறாக பேசியவர்கள் மீது தி.மு.க. கொதித்து எழ வேண்டாமா? என செல்லூர் ராஜூ கூறுகிறார். சனாதனம் ஒழிப்பு கூட்டத்தில் பத்து நிமி டம் தான் பேசினேன். தற்போது உலகம் முழுவதும் சனாதனம் குறித்து தவறாக பேசியதாக கூறி வருகின்றனர்.

    பாராளுமன்றத்துக்குள் குடியரசு தலைவரை அழைத் துச் செல்லவில்லை இதுதான் அவர்களது சனாதனம். எப்போது ஜெயலலிதா இறந்தாரோ, அப்போதி லிருந்து பா.ஜ.க.வின் அடிமை யாகி விட்டது அ.தி.மு.க., அது அண்ணா தி.மு.க. அல்ல, அமித்ஷா தி.மு.க. என்றார்.

    சனாதன சேற்றில் இருந்து மக்கள் வெளியேறாதது வேதனையை அளிக்கிறது. மக்கள் இந்த சேற்றை சந்தனம் என்று எடுத்து பூசி கொள்கி றார்கள். இதை, நான் சொல்ல வில்லை, பேரறிஞர் அண்ணா சொன்னது. உங்களுக்கு தெம்பு, திராணி இருந்தால் இந்த வார்த்தையை நீங்கள் சொல்ல முடியுமா செல்லூ ராஜூ அவர்களே.

    ஒன்பது வருடமாக ஆட்சி செய்தீர்களே மோடி, என்ன செய்தீர்கள்? ஒன்பது வரு டங்களுக்கு முன்பு பிரதமர் இந்தியாவை மாற்றி காட்டு கிறேன், வல்லரசு ஆக்குகிறேன் என்று சொன்னார். தற்போது 2024-ல் வல்லரசு ஆக்குகி றேன் என சொல்கிறார்.

    இதற்கெல்லாம் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பதிலடி கொடுக்க நமது மக்கள் தயாராக வேண்டும். அதற்காக இளைஞர் அணியி னர் கடுமையாக பாடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி, கோ.தளபதி எம்.எல்.ஏ., சேடப்பட்டி மணிமா றன் ஆகியோர் தலைமை தாங்கினர். இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் கள் ஜி.பி. ராஜா, இன்பா ரகு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் விமல் சௌந்தரராஜன், அழகு பாண்டி, இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இளங்கோ, வைகை மருது, கவுன்சிலர் காளிதாஸ், ராம் பிரசாத் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

    அவைத்தலைவர்கள் பாலசுப்பிரமணியன், ஒச்சுப் பாலு, பொருளாளர் சோம சுந்தர பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம், முன்னாள் மேயர் குழந்தை வேலு, வேலுச்சாமி, பகுதி செயலாளர்கள் மருதுபாண்டி சசிகுமார், கிருஷ்ண பாண்டி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    • மதுரையில் பா.ஜனதா மாவட்ட துணைத்தலைவர், இளைஞரணி தலைவர் திடீரென விலகி செல்லூர்ராஜூ முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்தனர்.
    • அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா மாவட்ட துணை தலைவர் ஜெயவேல், மதுரை மாநகர் பா.ஜனதா இளைஞரணி தலைவர் பாரி மற்றும் ஆதரவாளர்கள், பல்வேறு கட்சிகளை சேர்ந் தவர்கள் 50 பேர் இன்று மதுரை பனகல் ரோட்டில் உள்ள மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை சந்தித்து சால்வை அணிவித்து அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

    அப்போது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஜெயவேல், பாரி ஆதரவாளர்கள் மாவட்ட நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்தனர். அப்போது பட்டாசு வெடித்து தொண்டர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து பா.ஜனதாவில் இருந்து விலகிய ஜெயவேல் கூறிய தாவது:-

    எனது வளர்த்து ஆளாக் கிய தாய்க் கழகத்தில் என்னை மீண்டும் இணைத்து கொண்ட அண்ணன் செல் லூர் ராஜூ அவர்களுக்கு மனமார்ந்த நன்றிதனை தெரிவித்துக் கொள்கிறேன்.இப்போது தான் எனது மனது ஆறுதல் அடைந்துள் ளது. கழகத்தின் பொதுச் செயலாளர், வருங்கால முதலமைச்சர் எடப்பாடியா ரின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் களப்பணியை ஆற்றுவேன்.

    இவ்வாறு அவர் தெரி வித்தார்.

    மதுரையில் பா.ஜனதா வில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி அ.தி.மு.க.வில் இணைந்திருப்பது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மதுரை மாநகர பகுதிகளில் மீட்கப்பட்ட 253 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
    • மாயமான 253 செல்போன்கள் மீட்கப்பட்டன.

    மதுரை

    மதுரை மாநகர காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் காணாமல் போன 253 செல்போன்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதைய டுத்து மதுரை மாநகர சைபர் கிரைம் போலீசாரின் அதி ரடி நடவடிக்கை மூலம் மாயமான 253 செல்போன் களும் மீட்கப்பட்டன.

    இதில் கோவில் சரகத்தில் 12, தெற்கு வாசல் சரகத்தில் 13, திடீர் நகர் சரகத்தில் 73, திலகர் திடல் சரகத்தில் 5, அவனியாபுரம் சரகத்தில் 87, செல்லூர் சரகத்தில் 17, அண்ணாநகர் சரகத்தில் 31 செல்போன்களும் அடங்கும். மீட்கப்பட்ட செல்போன் களை அதன் உரிமையாளர்க ளிடம் இன்று காலை ஒப்ப டைக்கப்பட்டது.

    மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் டாக்டர் லோகநாதன், துணை கமிஷனர்கள் பிரதீப் (தெற்கு), சினேகபிரியா (வடக்கு), மங்களேஸ்வரன் (தலைமையிடம்) மற்றும் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் செல்போன்கள் ஒப்படைக் கப்பட்டன.

    மேலும், ரூ.1 கோடியே 11 லட்சத்து 60 ஆயிரம் மதிப் புள்ள சுமார் 279 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் மதிப்பிலான 4 இருசக்கர வாகனங்கள், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 2 லேப்டாப்புகள் ஆகியவையும் மீட்கப்பட்டு கோர்ட்டு மூலம் விரைவில் ஒப்படைக்கப்பட உள்ளது. இவைகளின் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 14 லட்சத்து 10 ஆயிரம் ஆகும்.

    மேற்கண்ட அதிரடி நட வடிக்கைகளை திறம்பட செய்த தனிப்படையினரை மாநகர போலீஸ் கமிஷனர் டாக்டர் லோகநாதன் பாராட்டினார்.

    • குகைக்குள்ளே ஏற்கனவே இன்னும் பலர் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.
    • தேவசேனா தேவியைத் திருமணம் செய்த நாள் பங்குனி உத்திர நன்னாள்.

    திருமுருகன் சீரலை வாயில் சூரபத்மனையும், அசுரர்களையும் அழித்துத் தேவர்களின் துயரைத் துடைத்தார்.

    துயர் நீங்கப் பெற்ற தேவர் தலைவன் இந்திரன் அதற்கு நன்றி செலுத்தும் வகையில் தன் புதல்வியாகிய தேவசேனா தேவியை முருகப் பெருமானுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பினான்.

    திருமாலின் இரு கண்களிலிருந்து தோன்றிய அமிர்தவல்லி, சுந்தரவல்லி என்ற இரு பெண்கள், திருமுருகனது அழகில் மயங்கி அவனையே அடைய வேண்டுமெனத் தவமிருந்தார்கள்.

    அவர்களுள் அமிர்தவல்லி இந்திரனின் மகளாக தேவசேனை என்ற பெயரில் வளர்ந்தாள்.

    தேவர்கள் சேனைக்கு அதிபதியான செந்தமிழ் முருகன் தேவசேனையைத் திருப்பரங்குன்றத்தில் வைத்துத் திருமணம் முடித்துக் கொண்டார்.

    தேவசேனைக்குத் திருமணம் நடந்த இத்திருத்தலத்தில் மற்றொரு அற்புதத்தையும் நிகழ்த்திக் காட்டியிருக்கின்றான் திருமுருகன்.

    பெரும்புலவர் நக்கீரர் தலயாத்திரை செய்து வருகின்ற போது திருப்பரங்குன்றத்தில் ஒரு குளக்கரையில் உட்கார்ந்து நித்ய பூஜா அனுஷ்டானங்களை செய்து கொண்டிருந்தார்.

    குளக் கரையிலிருந்த அரசமரத்து இலை ஒன்று உதிர்ந்து பாதி நீரிலும் பாதி தரையிலும் விழுந்தது.

    நீரில் விழுந்த பகுதி மீனாகவும், தரையில் விபந்த பகுதி பறவையாகவும் மாறின.

    ஒன்றையன்று இழுத்துக் கொள்ள ஆரம்பித்தன.

    இந்த சலசலப்பால் நக்கீரனது அனுஷ்டானம் கலைந்து போயிற்று.

    உடனே கற்கிமுகி என்ற பூதம் நக்கீரரை மலைக்குகை ஒன்றில் சிறை வைத்தது.

    குகைக்குள்ளே ஏற்கனவே இன்னும் பலர் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

    ஆயிரம் பேர் சிறையில் சேரக் காத்திருந்த கற்கிமுகி ஒருசேர அத்தனை பேரையும் விழுங்கிப் பசியாறக் காத்திருந்ததாம்.

    நக்கீரர் திருமுருகனை மனத்திலிருந்து திருமுருகாற்றுப் படையைப் பாடியவுடன் அக்குகையைப் பிளந்து அத்துணை பேருக்கும் விடுதலை நல்கி, பூதத்தையும் திருமுருகன் அழித்ததாகத் திருமுருகாற்றுப்படையில் பதிவு செய்துள்ளார் நக்கீரர்.

    திருப்பரங்குன்றத்துப் பதியிலே நடந்த தேவசேனா தேவியின் திருமணத்திற்கு பிரம்மா திருமணச் சடங்குகளை முன்னின்று நடத்தவும், சூரியனும், சந்திரனும், ரத்தின தீபங்கள் தாங்கி நிற்கவும்,

    உமையம்மையும், தென்னவர்கோன் பரமேசுவரனும் இணையாக நின்று வாழ்த்திக் களிக்கவும், ஆயிரங் கண்ணுடைய இந்திரன் தகப்பனார் கடமையாக தாரை நீர் வார்த்துக் கொடுக்கவும், தேவியைக் கரம் பிடித்தான் பரகுன்றத்துக் குமரன்.

    திருமுருகன் திருப்பரங்குன்றத்தில் தேவசேனா தேவியைத் திருமணம் செய்த நாள் பங்குனி உத்திர நன்னாள்.

    எனவேதான் இவ்விழாவைப் பெரிய திருவிழாவாக, பிரமோத்சவமாக இன்றும் கொண்டாடி மகிழ்கின்றனர்.

    • திருப்பரங்குன்றத்தின் அடிவாரத்தில் சரவணப் பொய்கை அமைந்துள்ளது.
    • பொய்கை முருகப் பெருமான் திருக்கரத்து வேலினால் உண்டாக்கப்பட்டது என்று கூறுவர்.

    பொய்கையில் வழிந்தோடும் நீர் நிலைகள் அருவியும் சுனையும் மிகுந்து இயற்கைப் பொலிவோடு அன்றைய திருப்பரங்குன்றம் விளங்கியது.

    திருப்பரங்குன்றத்தில் கோவில் கொண்டு எழுந்தருளியுள்ள குமரப் பெருமான் போகத்துக்குரிய மாலையாகிய கடம்பினையும், வீரத்திற்குரிய மாலையாகிய காந்தளையும் அணிந்து விளங்குவதாகத் திருமுருகாற்றுப் படையில் ஒரு செய்தி வருகிறது.

    சீரலைவாய் போரில் திருமுருகன் சூரபத்மனை அழித்து ஆட்கொண்டு "பணிப்பகை மயிலும் சேவற் பதாகையும்" போலே கந்தவேளின் வாகனமான மயிலாகவும் கொடியில் நிமிர்ந்து நிற்கும் சேவலாகவும் கொண்டு, தனது தொண்டனாக ஏற்றுக் கொண்டான்.

    பிறகு திருச்செந்தூரிலிருந்து திருப்பரங்குன்றம் வந்தமர்ந்தான் குமரன்.

    குன்றின் வட பாகத்தில் குமரப் பெருமானது திருக்கோவில் அமைந்துள்ளது.

    திருக்கோவிலின் நுழைவு வாயில் உள்ள ஆஸ்தான மண்டபம் சுந்தர பாண்டியன் கட்டியது.

    அறுபத்தாறு கற் தூண்களைக் கொண்ட பெரிய மண்டபம்.

    மண்டபத்தின் தூண்களில் நுண்ணிய வேலைப்பாடு அமைந்த யாளிகள் & குதிரை வீரர்கள் & சிவனாரின் திரிபுரத கற்பக விநாயகருக்கருகில் உள்ள குடைவரைக் கோவிலில் சத்யகிரீசுவரர் என்னும் சிவபெருமான் சிவலிங்கத் திருமேனியாகத் திருக்காட்சி தருகின்றனார்.

    இக்கோவிலின் உட்புறச் சுவர்களில் சோமாஸ்கந்தரின் உருவமும், வெளிப்புறச் சுவரில் சிவபெருமான் பார்வதி உருவங்களும் காட்சியளிக்கின்றன.

    அர்த்த மண்டபத்தின் கிழக்குப் பக்கத்தில் உள்ள குகைக் கோவிலில் அன்னபூரண தேவி தன் பரிவாரங்களுடன் காட்சி தருகின்றாள்.

    திருமணக் கோலம் கொண்ட திருமுருகன் உயர்ந்த இடத்தில் எல்லா தெய்வங்களும் புடைசூழத் திருக்காட்சியளிப்பது ஓர் அற்புதக் காட்சி.

    அந்த அருட்காட்சியைக் காண ஆயிரம் கண்கள் போதாது.

    திருப்பரங்குன்றத்தின் அடிவாரத்தின் கீழ்த்திசையில் சரவணப் பொய்கை அமைந்துள்ளது.

    இந்தப் பொய்கை முருகப் பெருமான் திருக்கரத்து வேலினால் உண்டாக்கப்பட்டது என்று கூறுவர்.

    திருமுருகன் திருப்பரங்குன்றம் வந்தடைந்த போது தேவதச்சனை அழைத்துத் தனக்கொரு திருக்கோவில் அமைத்துக் கொடுக்க செய்து அங்கே இருந்து அருளாட்சி செய்வதாக ஒரு செய்தியும் உண்டு.

    மலைச்சுவரோடு பதிந்திருக்கிற படியால் மூலவருக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை.

    திருப்பரங்குன்றத்து நாயகன் திருக்கரத்தில் உள்ள வேல் படைக்கு அபிஷேகமும் முருகனுக்கு புனுகும், எண்ணெய்க் காப்பும்தான் சாத்துபடி செய்யப்படுகன்றன.

    ×