search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாய்வீடு"

    • ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பா.ஜ.க.வின் அடிமையாகி விட்டது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
    • நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்த உள் ளோம்.

    மதுரை

    மதுரை ரிங் ரோடு மஸ் தான்பட்டி அருகே கலைஞர் திடல் பகுதியில் அமைக்கப் பட்டுள்ள முன்னாள் முதல் வர் கருணாநிதியின் திருவு ருவச் சிலையை தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து தி.மு.க. இளைஞ ரணி சார்பாக நடை பெற்ற செயல்வீரர் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

    சேலத்தில் டிசம்பர் 17-ந்தேதி தி.மு.க. இளைஞரணி யின் 2-வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. அதற்கு அழைக்கும் விதமாக தான் இந்த செல்வீரர் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாடு நடத்துவதற்கு முக்கிய காரணம் அமைச்சர் மூர்த்தி தான். மதுரை எப்போதும் தி.மு.க. இளைஞர் அணியின் தாய்வீடு. மதுரை ஜான்சி ராணி பூங்காவில் தான் தி.மு.க. இளைஞர் அணி தொடங்கப்பட்டது.

    இளைஞர் அணியினர் மிக கடுமையாக உழைக்க வேண் டும். நம்முடைய முதல்வர் கொண்டு வந்த திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். உழைத்தால் முன் னேறலாம் என்பதற்கு எடுத் துக்காட்டு, இந்த மேடை யில் அமர்ந்திருப்ப வர்களே சாட்சி. அமைச்சர் மூர்த்தி இதற்கு முன்பு பகுதி செயலா ளராக இருந்து பிறகு ஒன்றிய செயலாளர், அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலா ளர், எம்.எல்.ஏ., தற்போது அமைச்சராக உயர்ந்துள்ளார்.

    அதேபோல் கோ.தளபதி எம்.எல்.ஏ. முதலில் பகுதி செயலாளராக இருந்து, பின்பு கடுமையாக உழைத்து மாவட்ட செயலாளராக வந்துள்ளார். அதேபோல் சேடப்பட்டி மணிமாறன். அவருடைய தந்தை சேடப் பட்டி முத்தையா முதிர்ந்த அரசியல்வாதி. ஒரு அரசியல் பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்தாலும் மிக கடுமையாக உழைத்து ஒன்றிய செயலாளராக இருந்து தற்போது மாவட்ட செயலாள ராக இருக்கிறார். எனவே கடுமையாக உழைத்தால் நீங்கள் முன்னேறலாம், என் றும் உயர்ந்த பதவிக்கு வர லாம்.

    மாநாட்டு நிதிக்காக ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார். சேலத்தில் டிசம்பர் 17-ந்தேதி இரண்டா வது மாநில மாநாடு நடத்த உள்ளோம். இதனை வெற்றி அடைய வைக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய முடியுமா என ஆர்.பி.உதய குமார் கூறிய கருத்திற்கு நாங்கள் நீட் தேர்வு ரத்து செய்வதற்காக போராடி வருகிறோம். கடந்த மாதம் 20-ந்தேதி உண்ணாவிரத ஆலப்போராட்டம் நடத்தி னோம். கூடிய விரைவில் நீட் தேர்வுக்கு எதிராக கையெ ழுத்து இயக்கம் நடத்த உள் ளோம்.

    அண்ணாவைப் பற்றி தவறாக பேசியவர்கள் மீது தி.மு.க. கொதித்து எழ வேண்டாமா? என செல்லூர் ராஜூ கூறுகிறார். சனாதனம் ஒழிப்பு கூட்டத்தில் பத்து நிமி டம் தான் பேசினேன். தற்போது உலகம் முழுவதும் சனாதனம் குறித்து தவறாக பேசியதாக கூறி வருகின்றனர்.

    பாராளுமன்றத்துக்குள் குடியரசு தலைவரை அழைத் துச் செல்லவில்லை இதுதான் அவர்களது சனாதனம். எப்போது ஜெயலலிதா இறந்தாரோ, அப்போதி லிருந்து பா.ஜ.க.வின் அடிமை யாகி விட்டது அ.தி.மு.க., அது அண்ணா தி.மு.க. அல்ல, அமித்ஷா தி.மு.க. என்றார்.

    சனாதன சேற்றில் இருந்து மக்கள் வெளியேறாதது வேதனையை அளிக்கிறது. மக்கள் இந்த சேற்றை சந்தனம் என்று எடுத்து பூசி கொள்கி றார்கள். இதை, நான் சொல்ல வில்லை, பேரறிஞர் அண்ணா சொன்னது. உங்களுக்கு தெம்பு, திராணி இருந்தால் இந்த வார்த்தையை நீங்கள் சொல்ல முடியுமா செல்லூ ராஜூ அவர்களே.

    ஒன்பது வருடமாக ஆட்சி செய்தீர்களே மோடி, என்ன செய்தீர்கள்? ஒன்பது வரு டங்களுக்கு முன்பு பிரதமர் இந்தியாவை மாற்றி காட்டு கிறேன், வல்லரசு ஆக்குகிறேன் என்று சொன்னார். தற்போது 2024-ல் வல்லரசு ஆக்குகி றேன் என சொல்கிறார்.

    இதற்கெல்லாம் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பதிலடி கொடுக்க நமது மக்கள் தயாராக வேண்டும். அதற்காக இளைஞர் அணியி னர் கடுமையாக பாடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி, கோ.தளபதி எம்.எல்.ஏ., சேடப்பட்டி மணிமா றன் ஆகியோர் தலைமை தாங்கினர். இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் கள் ஜி.பி. ராஜா, இன்பா ரகு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் விமல் சௌந்தரராஜன், அழகு பாண்டி, இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இளங்கோ, வைகை மருது, கவுன்சிலர் காளிதாஸ், ராம் பிரசாத் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

    அவைத்தலைவர்கள் பாலசுப்பிரமணியன், ஒச்சுப் பாலு, பொருளாளர் சோம சுந்தர பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம், முன்னாள் மேயர் குழந்தை வேலு, வேலுச்சாமி, பகுதி செயலாளர்கள் மருதுபாண்டி சசிகுமார், கிருஷ்ண பாண்டி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    ×