search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை"

    • வருகிற 1-ந்தேதி முதல் செங்கோட்டை ரெயில்கள் மின்சார என்ஜினில் இயக்கப்படுகிறது.
    • மின்சார என்ஜின்கள் இணைக்கப்பட இருக்கின்றன.

    மதுரை

    தெற்கு ரெயில்வே மதுரை கோட்ட அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    விருதுநகர்- செங்கோட்டை ரெயில்வே பிரிவு மின்மயமாக்கல் பணிகள் முழுமையாக நிறைவு பெற்று விட்டன. இதையடுத்து வருகிற நவ.1 முதல் செங்கோட்டையில் இருந்து புறப்படும் பொதிகை, சிலம்பு மற்றும் மயிலாடு துறை விரைவு ரெயில்கள் மின்சார என்ஜின் மூலம் இயக்கப்பட இருக்கிறது.

    இதற்காக இந்த பிரிவில் அமைக்கப்பட்டுள்ள மின் வழித்தடத்தில் 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்பட இருக்கிறது. ஆகவே இந்த ரெயில் தடம் செல்லும் பகுதியில் உள்ள பொதுமக்கள் மின் வழித்தடத்தை நெருங்கவோ, தொடவோ முயற்சிக்க வேண்டாம் என ரெயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மழை மற்றும் மின்னல் வெட்டும் நேரங்களில் குடையுடன் மின் வழித் தடத்தின் கீழே கடப்பதும் ஆபத்தை விளைவிக்கும். மேம்பாலங்களில் இருந்து மின்வழித்தடத்தின் மேல் ஏதாவது ஒரு பொருளை எறிந்தாலும் கடும் மின்சார தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். ரெயில்வே நிர்வா கத்தின் அனுமதியில்லாமல் மின் வழித்தடத்தின் அருகில் உள்ள மரங்களை வெட்டு வது, மரக்கிளைகளை செம்மைப்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும்.

    லெவல் கிராசிங்குகளில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை ரெயில்வே நிர்வாகம் செய்திருந்த போதிலும், ரெயில்வே லெவல் கிராசிங்குகளை கடக்கும்போது நீண்ட இரும்பு கம்பிகளை செங்குத்தாக வைத்துக் கொண்டு நடப்பதும், வாகனங்கள் மேல் பகுதியில் அமர்ந்து பய ணிப்பதும், வாகனங்களில் சரக்குகளை உயரமாக அளவுக்கு அதிகமாக வைத்து செல்வதும் ஆபத்தை விளைவிக்க கூடிய செயல்கள் ஆகும்.

    நாளை மறுநாள் 31-ந் தேதி சென்னையில் இருந்து புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ், 1-ந்தேதி சென்னையில் இருந்து புறப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் மற்றும் மயிலாடுதுறை இருந்து புறப்படும் செங்கோட்டை விரைவு ரெயில் ஆகியவற்றில் மின்சார என்ஜின்கள் இணைக்கப்பட உள்ளன.

    அதேபோல் வருகிற 1-ந்தேதி செங்கோட்டையில் இருந்து புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ், 2 -ந்தேதி செங்கோட்டையில் இருந்து புறப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் மற்றும் மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவற்றில் மின்சார என்ஜின்கள் இணைக்கப்பட இருக்கின்றன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சோழவந்தானில் மருதுபாண்டியர் குருபூஜை விழா நடந்தது.
    • நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

    சோழவந்தான்

    சோழவந்தானில் மருதுபாண்டியர் 222-வது குருபூஜை விழா நடந்தது. சோழ வந்தான் பஸ் நிலையம் முன்பு மருது பாண்டியர் படம் வைக்கப் பட்டு அனைத்து கட்சியினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.தி.மு.க. சார்பில் வெங்க டேசன் எம்.எல்.ஏ. தலைமை யில் மரியாதை செலுத்தப் பட்டது. பின்னர் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    நகர செயலாளர் மாவட்ட திட்ட குழு உறுப்பினர் வக்கீல் சத்யபிரகாஷ், பேரூராட்சி தலைவர் ஜெய ராமன், துணைத் தலைவர் லதா கண்ணன், ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன், பேரூர் துணை செயலாளர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்ட னர்.

    அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் கொரி யர் கணேசன், ஒன்றிய தலைவர் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெய குமார், இளைஞரணி கேபிள் மணி, நிர்வாகிகள், தொண்டர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பா.ஜ.க. சார்பில் மண்டல தலைவர்கள் கதிர்வேல், அழகர்சாமி ஆகியோர் தலைமையில் மரியாதை செலுத்தப் பட்டது.

    காங்கிரஸ் கமிட்டி சார்பில் நகரத் தலைவர் முத்துப்பாண்டி, முன்னாள் வட்டார தலைவர் ராமன், மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

    தே.மு.தி.க. சார்பில்பேரூர் செயலாளர் கிருஷ்ணன், தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி, குருநாதன் தேவேந்திரன், நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

    சங்கங்கோட்டை கிராம கமிட்டி தலைவர் வக்கீல் சிவகுமார் மரியாதை செலுத்தினார்.

    சோழவந்தான் சப்-இன்ஸ்பெக்டர் முத்து தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

    • வாடிப்பட்டி ஒன்றிய கலைத்திருவிழா நடந்தது.
    • ஆசிரியர் பயிற்றுநர் பெரியகருப்பன் நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ஒன்றிய அளவிலான கலைத்திருவிழா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வட்டாரவளமையத்தில் நடந்தது. கவுன்சிலர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார்.

    தலைமை ஆசிரியர்கள் இனிகோ எட்வர்ட்ராஜா, திலகவதி, விஜயகுமார், மலர்விழி, வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வள மைய பொறுப்பாளர் கலைச்செல்வி வரவேற்றார்.

    இந்த போட்டிகளை பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் வாசுகி தொடங்கி வைத்தார். இதில் வாடிப்பட்டி ஒன்றிய அளவில் உள்ள அரசு பள்ளி மாணவ-மாணவிகள் இசை, கிராமிய நடனம், வில்லுப்பாட்டு, பேச்சு, கட்டுரை போட்டி, நாடகம், குழு நடனம், இசைசங்கமம், பலகுரல், வண்ணம் தீட்டுதல், கேலிசித்திரம், வரைந்துவண்ணம் தீட்டுதல், தலைப்பை ஒட்டிவரைதல், கையெழுத்து போட்டி, புகைப்படம் எடுத்தல், களிமண் பொம்மை செய்தல் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

    வட்டார கல்வி அலுவலர்கள் அகிலத்து இளவரசி, ஷாஜகான் கலந்துகொண்டனர். முடிவில் ஆசிரியர் பயிற்றுநர் பெரியகருப்பன் நன்றி கூறினார்.

    • தி.மு.க. இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.
    • கூட்டத்திற்கு சோழவந்தான் வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    சோழவந்தான்

    தி.மு.க. இளைஞரண சார்பில் வருகின்ற டிசம்பர் 17-ந் தேதி சேலத்தில் மாநில மாநாடு நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தின் பல் வேறு பகுதிகளில் தி.மு.க. சார்பில் இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர் சார்பில் சோழவந்தானில் நடைபெற்ற இளைஞரணி செயல் வீரர்கள் ஆலோ சனை கூட்டம் மற்றும்

    2024-ம் ஆண்டு பாராளு மன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்வதற்கான ஆலோ சனை கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்திற்கு சோழ வந்தான் வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சோழவந்தான் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், பேரூராட்சி தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர் லதா கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், பேரூர் துணைச் செயலாளர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மதுரை வடக்கு மாவட்ட செயலா ளருமான, அமைச்சருமான மூர்த்தி கலந்து கொண்டு பேசியதாவது:-

    வருகிற டிசம்பர் 17-ந் தேதி சேலத்தில் நடைபெறும் இளைஞரணி 2-வது மாநில மாநாட்டில் மதுரை புறநகர் வடக்கு மாவட்டத்தின் சார்பில் இளைஞர்கள் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் 2024 நடைபெறுகின்ற பாராளுமன்றத் தேர்தலில் சோழவந்தான் பேரூர் சார்பில் அதிகமான வாக்கு களை பெற பூத் கமிட்டி அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.இதில் மாவட்ட பொருளா ளர் சோமசுந்தர பாண்டியன், மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் நேரு, ஒன்றிய செயலாளர் சிறைச் செல்வன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் வெற்றி செல்வன், சோழவந்தான் பேரூர் நிர்வாகிகள், வார்டு உறுப்பி னர்கள் மாவட்ட பிரதி நிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பக்தர்கள் கொலு அரங்குகளை பார்வையிட்டு மீனாட்சி அம்மனை தரிசித்தனர்.
    • சகஸ்ரநாம பூஜை போன்ற விஷேச பூஜைகள் நடைபெறும்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா நேற்று தொடங்கியது. முதல் நாளில், மீனாட்சி அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் கொலு மண்டபத்தில் கொலு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை காண ஏராளமான பக்தர்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்திருந்தனர். இதனால் கோவில் உள் வளாகத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்கள் கொலு அரங்குகளை பார்வையிட்டு மீனாட்சி அம்மனை தரிசித்தனர்.

    நேற்று தொடங்கிய இந்த விழா வருகிற 24-ந்தேதி வரை நடக்கிறது. நவராத்திரி திருவிழா நாட்களில் தினசரி மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை மூலஸ்தான சன்னதியில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் செய்து கல்பபூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற விஷேச பூஜைகள் நடைபெறும். அந்த நேரத்தில் பக்தர்களுக்கு அர்ச்சனைகள், மூலஸ்தான தரிசனத்திற்கு அனுமதி கிடையாது. கொலு மண்டபத்தில் எழுந்தருளும் உற்சவ அம்மனுக்குதான் அர்ச்சனைகள் செய்யப்படும்.

    விழாவின் தொடர்ச்சியாக, கோலாட்ட அலங்காரமும், அர்ஜூனனுக்கு பாசுபதம் அருளியது, ஏகபாதமூர்த்தி, கால்மாறி ஆடிய படலம், தபசு காட்சி, ஊஞ்சல், சண்டேசா அனுக்கிரஹமூர்த்தி, மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், சிவபூஜை செய்யும் அலங்காரத்தில் அம்மன் கொலு வீற்றிருந்து அருள்பாலிப்பார். தினமும் சிறப்பு பூஜை நடக்கிறது.

    திருவிழா நடைபெறும் நாட்களில் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை இசைக் கச்சேரி, கர்நாடக சங்கீதம், தோற்பாவை கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

    • புனித மண் டெல்லி செல்கிறது
    • பின் ஒரே கலசத்தில் அந்த மண்கள் சேர்க்கப்பட்டு புதுடெல்லிக்கு எடுத்து செல்லப்படுகிறது.

    மதுரை

    நேரு யுவகேந்திரா சார்பில் என் மண் என் தேசம் என்ற பெயரில் சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து புதுடெல்லியில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் பூங்கா அமைக்கப்பட உள்ளது.

    இந்த பூங்காவிற்கு நாடு முழுவதும் தியாகிகள் வாழ்ந்த பகுதிகளில் மண் சேகரிக்கப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது. அதன்படி மதுரை மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் இருந்து தியாகிகள் வாழ்ந்த இடங்களில் புனித மண் கலசங்களில் சேகரிக்கப்படுகிறது. இந்த மண்ணை ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒரு இளைஞர் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் அந்த கலசத்தை கொண்டு வருவர். பின் ஒரே கலசத்தில் அந்த மண்கள் சேர்க்கப்பட்டு புதுடெல்லிக்கு எடுத்து செல்லப்படுகிறது.

    வருகிற 28-30-ந் தேதிகளில் புதுடெல்லியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 75 ஆயிரம் கலசங்களில் கொண்டு செல்லப்படும் மண் சேர்க்கப்பட்டு பூங்காவில் வைக்கப்படும்.

    மதுரையில் நடைபெற்ற புனித மண் சேகரிப்பு நிகழ்ச்சியில் நேரு யுவகேந்திரா இணை இயக்குனர் செந்தில்குமார், அனில்குமார், தேசிய சேவை தொண்டர்கள் மீனாட்சி, பிரியங்கா, அபிதா, மணிமொழி, தனசேகரன், கணேசன், ராகவ், என்.எம்.ஆர்.மதுரை காந்தி கல்லூரி முதல்வர் கோமதி, மகிமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் வைகை கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளர்.
    • ஒரேநாள் மழைக்கு மதுரை தத்தளித்துள்ளது.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    ஒரு நாள் மழைக்கே தாங்காத மதுரை தத்தளிக்கி றது . வடகிழக்கு பருவமழை தொடர்வதற்கு முன்பாகவே நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக கார், இருசக்கர வாகனங்களை மூழ்கடிக்கும் அளவிலே சாலைகளில் தண்ணீர் ஓடியதால், பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு செல்ல முடியாமல் திரும்ப முடியாமல் பலரது வாக னங்கள் தண்ணீரிலே மூழ்கி செயலிழந்தது. அதற்கு சாட்சியாக சிலர் வாக னத்துடன் கீழே விழுந்து படுகாயம் அடைந்த நிகழ்வு களும் ஆங்காங்கே நடை பெற்றது.

    சாலைகளை எல்லாம் சீர் செய்ய வேண்டும். அதே போல் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மாவட்ட கலெக்டர் மற்றும் மதுரை மாவட்ட அமைச்சர்கள் இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

    ஒரே நாள் மழைக்கு மதுரை தத்தளித்துள்ளது.இந்த ஆண்டு அதிகமாக வடகிழக்கு பருவமழை இருப்பதாக கூட வானிலை ஆய்வு மையங்களுடைய கருத்துக்கள் சொல்லப்படு கிறது. வானிலை ஆராய்ச்சி மையத்தியின் எச்ச ரிக்கையை நாம் கவனிக்க வேண்டும். ஆகவே வைகை ஆற்று வரத்து கால்வாய் களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    முதலமைச்சர் இன்றைக்கு, ஒரு நாள் மழைக்கு சாலையில் ஆறுகள் போல ஓடும் தண்ணீரை சரி செய்ய உரிய முன் எச்சரிக்கை நட வடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் மாவட்ட அமைச்சர்கள் போர்க்கால நடவடிக்கை எடுத்திட ஆய்வு கூட்டத்தை நடத்த முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • என் மீது களங்கம் ஏற்படுத்தும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் செல்லூர் ராஜூ புகார் செய்துள்ளார்.
    • அதிகாரிகள்தான் முடிவெடுப்பார்கள்.

    மதுரை

    நெல்லை மாவட்டம் பணக்குடியைச் சேர்ந்த நவ மணி வேதமாணிக்கம் என்ப வர் கடந்த 1997 ஆம் ஆண்டு சொந்தமாக அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்தி வந்த நிலையில் கடந்த 2007 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு வந்து மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வந்ததாகவும்

    கடந்த அ.தி.மு.க. ஆட்சி யில் பணியாளர் கூட்டுறவு சங்கங்களை கணினி மய மாக்குவதற்கான டெண்ட ருக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் அப்போது கூட்டு றவு துறை அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூ அந்த டெண்டரை வேறொரு நபருக்கு கொடுத்த நிலையில் தன் நிறுவனம் நஷ்டம் ஏற் பட்டு தற்போது சென்னை யில் கால் டாக்சி ஓட்டிவருவ தாகவும் செய்திகள் வெளி யானது.

    இந்த நிலையில் தன் மீது அவதூறு பரப்பிய அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்று காலை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செல்லூர் காவல் நிலையத் தில் புகார் மனுவை அளித் தார்.

    பின்னர் அவர் கூறியதா வது-

    தனிப்பட்ட வாழ்க்கையை களங்கம் ஏற்படுத்தும் வித மாக ஒரு நிகழ்வு ஊடகத்தி லும், பத்திரிகையிலும் வந் துள்ளது.

    அமெரிக்காவில் உள்ள கோடீஸ்வரர் தெருவுக்கு கொண்டு வந்தது போல் தலைப்பை போட்டு என்னு டைய 40 ஆண்டு கால பொது வாழ்க்கைக்கு களங் கம் விளைவிக்கும் விதமாக என் நேர்மையை கெடுக்கும் வகையில் நான் பணியாற்றிய நிகழ்வை எல்லாம் கொச்சை படுத்தும் வகையில் செய்தி வந்துள்ளது. இது என் உள்ளத்தை மிகவும் பாதித் தது.

    என் குடும்பத்தினருக்கு மிகப்பெரிய மன உளைச் சலும் ஏற்பட்டுள்ளது.

    என்னுடைய நேர்மையை யும், நாணயத்தையும் வே றொருவர் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.கூட்டு றவுத் துறையில் எந்த ஒரு பொருளை கொள்முதல் செய்வதாக இருந்தாலும் நிபுணர்கள் மற்றும் அதி காரிகள் அடங்கிய குழு தான் முடிவு செய்வார்கள்.

    கணினி கொள்முதல் செய்வதாக இருந்தாலும் அதிகாரிகள் தான் முடி வெடுப்பார்கள். துறை அமைச்சர்களை கேட்டு செய்ய மாட்டார்கள்.

    நான் கணினி நிபுணரும் இல்லை என எல்லோருக்கும் தெரியும் சம்பந்தம் இல்லா மல் குறை சொல்லும் வகை யில் பேட்டி கொடுக்கப் பட்டுள்ளது. பணியாளர் கூட்டுறவு சங்கத்தில் வாங் கிய கணினி மென்பொருளை வேறொரு நபருக்கு கொடுத் ததாக தான் குற்றம் சொல் கிறார். அது முழுக்க முழுக்க தவறு. தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி, மாவட்ட கூட்டுறவு வங்கி என அனைத்திலும் கணினி மய மாக்கப்பட்ட நிலையில் யாரும் குறை சொல்ல வில்லை.

    தற்போது தேர்தல் வரு கின்ற நேரத்தில் இதுபோன்ற செய்திகள் வருவதற்கு ஏதோ பின்புலம் இருப்பது போல் தோன்றுகிறது.

    எனவே என் மீது தவறான உள்நோக்கத்துடன் பொய்தகவலை கூறிவரும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    • மேலூர் தொகுதியில் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் 9 புதிய கட்டிடங்களை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் திறந்து வைத்தார்.
    • பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகு திக்கு உட்பட்ட மேலூர், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மதுரை பாரா ளுமன்ற உறுப்பினர் நிதி மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 1 கோடி மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டி டம், ரேசன்கடை, பயணியர் நிழற்குடை கட்டிடங்களை மதுரை பாராளுமன்ற உறுப் பினர் வெங்கடேசன் ரிப் பன் வெட்டி திறந்து வைத் தார்.

    தெற்குதெரு ஊராட்சி டி.தர்மசானப்பட்டியில் 11 லட்சத்தி 97 ஆயிரம் மதிதப் பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டடிமும், அரசப் பன்பட்டி ஊராட்சியில் 15 லட்சம் மதிப்பீட்டில் பொது விநியோகம் (ரேசன் கடை), கோட்டநத்தம்பட்டி ஊராட் சியில் ரூ. 11 லட்சத்தி 97 ஆயிரம் மதிப்பீட்டில் அங் கன்வாடி கட்டிடம், தனியா மங்கலம் ஊராட்சியில் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் பொதுவிநியோகம் (ரேசன் கடை) கட்டிடமும், கொங்கம் பட்டி ஊராட்சியில் உள்ள பன்னிவீரன்பட்டியில் ரூ. 10 லட்சத்து 93 ஆயிரம் மதிப் பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடமும், கொடுக்கம் பட்டி ஊராட்சியில் உள்ள கொன்னப்பட்டியில் ரூ. 10 லட்சத்து 93 ஆயிரம் மதிப் பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம், 5 லட்சம் மதிப் பீட்டில் பயணியர் நிழற் குடை கட்டிடம், கொட்டாம் பட்டி ஊராட்சியில் ரூபாய் 10 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அங்கன் வாடி மைய கட்டிடமும், பட்டூர் ஊராட்சியில் 5 லட்சம் மதிப்பீட்டில் பயணி யர் நிழற்குடை கட்டிடம் திறந்த வைக்கப்பட்டன.

    மேலூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் குமரன், ராஜேந்திர பிரபு, பாலகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் அரசப் பன்பட்டி தலைவர் முரு கேஸ்வரி வெள்ளையன், கோட்ட நத்தம்பட்டி உஷா இளையராஜா, தனியா மங்கலம் குமார், கொங்கம் பட்டி சந்தோஷ், கொடுக்கம் பட்டி ராஜா, கொட்டாம் பட்டி பாலசுப்பிரமணியன், தும்பைபட்டி அயூப் கான், மேலூர் தாசில்தார் செந்தா மரை, மேலூர் வட்ட வழங் கல் அலுவலர் நாகராணி, மேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசந்தர், வேலவன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாநில குழு உறுப்பினர் பாலா, மேலூர் தாலுகா செயலாளர் கண்ணன், மாநில கரும்பு விவசாய சங்க தலைவர் வழக்கறிஞர் பழனிச்சாமி, தாலுகா குழு உறுப்பினர்கள் அடக்கி வீரணன், மணவா ளன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் வருகிற 12-ந்தேதி தொடங்கும் புத்தக கண்காட்சி 10 நாட்கள் நடக்கிறது.
    • சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் நடைபெற உள்ளன.

    மதுரை

    மதுரையில் புத்தக கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. சென்னைக்கு அடுத்த படியாக தமிழகத்தில் மிகப்பெரிய புத்தக கண்காட்சியாக மதுரையில் நடைபெறும் புத்தக கண்காட்சி உள்ளது.

    இந்த ஆண்டு புத்தக கண்காட்சி வருகிற 12ந்தேதி முதல் தமுக்கம் மைதா னத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. 22ந்தேதி முதல் 10 நாட்கள் வரை இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. தென் இந்திய புத்தக பதிப்பா ளர்கள் சங்கம், மதுரை மாவட்ட நிர்வாகம் இணைந்து இந்த கண் காட்சியை நடத்துகின்றன. காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி திறந்திருக்கும். இந்த ஆண்டு பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. இதில் பல்வேறு துறைகள், பதிப்பகங்கள், எழுத்தா ளர்களின் பல்லாயிரக் கணக்கான புத்தகங்கள் இடம்பெற உள்ளன.

    கண்காட்சி நடைபெறும் நாட்களில் மாலையில் நாள்தோறும் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பிரபல பேச்சாளர்களின் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் நடைபெற உள்ளன.

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச்செல்ல வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். அதன்படி இந்த புத்தக கண்காட்சி நடத்தப் படுகிறது. வாசிப்பை மக்கள் இயக்கமாக மாற்றும் வகையில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் திரளாக இந்த கண்காட்சியை பார்வையிட வேண்டும். சிறப்பான எதிர்கால தலைமுறையை உருவாக்கு வதற்கு புத்தகங்கள் வழி காட்டியாக அமையும் என்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அறிவுப்பூர்வமான, பிடித்தமான புத்தகங்களை வாங்கிக்கொடுத்து அவர் களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் சங்கீதா கேட்டுக்கொண்டுள்ளார்.

    • மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் திருவள்ளுவர் சிலை அருகே மத்திய தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்யப் பட்டதன் நினைவு நாளை கருப்பு தினமாக அனுசரித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் தொ.மு.ச. சார்பில் கருணாநிதி, சி.ஐ.டி.யு. சார்பில் லெனின், எச்.எம்.எஸ். சார்பில் பாதர் வெள்ளை, ஐ.என்.டி.யு.சி. சார்பில் ராஜசேகரன், ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் சேது, எம்.எல்.எப். சார்பில் மகபூப்ஜான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விவசாயிகள் படுகொலைக்கு காரண மானவர் மீது வழக்குபதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மின்சார திருத்த சட்ட மசோதாவை கைவிட வேண்டும், தொழிலாளர் நல சட்டங்களை திருத்தி யதை திரும்பப்பெற வேண் டும், அனைத்து தொழிலா ளர்களுக்கும் குறைந்த பட்ச சம்பளம் ரூ.26 ஆயிரமாக நிர்ணயம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    • இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது என மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.
    • காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    மதுரை

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநகர் மாவட்ட தலைவர் கார்த்தி கேயன், மாணிக்கம் தாகூர் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் மாணிக்கம் தாகூர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள இந்திய கூட்டணி வலுவாக உள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இணைத்து வைத்த இந்த இந்தியா கூட்டணி நிச்சய மாக வெற்றி பெறும். தமிழகத்தில் தி.மு.க .தலைமையில் இந்தியா கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தன்னை முதல்-அமைச்சர் என்று தெரிவிப்பதாக கூறப்ப டுகிறது. அவர் முதலில் அரவக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்று வரட்டும். அதன் பின்பு அது குறித்து பேசலாம்.

    அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி முறிவு என்பது ஒரு நாடகமாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி மத்திய பா.ஜ.க. அரசின் குறைகளை சுட்டிக் காட்டுவதில்லை. அதே போல் இந்த கூட்டணி முறிவு குறித்து பா.ஜ.க. தரப்பில் எந்த அறிவிப்பும் வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் காங்கி ரஸ் நிர்வாகிகள் செய்யது பாபு, கவுன்சிலர் தல்லா குளம் முருகன், துரையரசன், மலர்கண்ணன், பறக்கும் படை பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×