search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    என் மீது களங்கம் ஏற்படுத்தும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-செல்லூர் ராஜூ
    X

    என் மீது களங்கம் ஏற்படுத்தும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-செல்லூர் ராஜூ

    • என் மீது களங்கம் ஏற்படுத்தும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் செல்லூர் ராஜூ புகார் செய்துள்ளார்.
    • அதிகாரிகள்தான் முடிவெடுப்பார்கள்.

    மதுரை

    நெல்லை மாவட்டம் பணக்குடியைச் சேர்ந்த நவ மணி வேதமாணிக்கம் என்ப வர் கடந்த 1997 ஆம் ஆண்டு சொந்தமாக அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்தி வந்த நிலையில் கடந்த 2007 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு வந்து மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வந்ததாகவும்

    கடந்த அ.தி.மு.க. ஆட்சி யில் பணியாளர் கூட்டுறவு சங்கங்களை கணினி மய மாக்குவதற்கான டெண்ட ருக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் அப்போது கூட்டு றவு துறை அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூ அந்த டெண்டரை வேறொரு நபருக்கு கொடுத்த நிலையில் தன் நிறுவனம் நஷ்டம் ஏற் பட்டு தற்போது சென்னை யில் கால் டாக்சி ஓட்டிவருவ தாகவும் செய்திகள் வெளி யானது.

    இந்த நிலையில் தன் மீது அவதூறு பரப்பிய அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்று காலை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செல்லூர் காவல் நிலையத் தில் புகார் மனுவை அளித் தார்.

    பின்னர் அவர் கூறியதா வது-

    தனிப்பட்ட வாழ்க்கையை களங்கம் ஏற்படுத்தும் வித மாக ஒரு நிகழ்வு ஊடகத்தி லும், பத்திரிகையிலும் வந் துள்ளது.

    அமெரிக்காவில் உள்ள கோடீஸ்வரர் தெருவுக்கு கொண்டு வந்தது போல் தலைப்பை போட்டு என்னு டைய 40 ஆண்டு கால பொது வாழ்க்கைக்கு களங் கம் விளைவிக்கும் விதமாக என் நேர்மையை கெடுக்கும் வகையில் நான் பணியாற்றிய நிகழ்வை எல்லாம் கொச்சை படுத்தும் வகையில் செய்தி வந்துள்ளது. இது என் உள்ளத்தை மிகவும் பாதித் தது.

    என் குடும்பத்தினருக்கு மிகப்பெரிய மன உளைச் சலும் ஏற்பட்டுள்ளது.

    என்னுடைய நேர்மையை யும், நாணயத்தையும் வே றொருவர் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.கூட்டு றவுத் துறையில் எந்த ஒரு பொருளை கொள்முதல் செய்வதாக இருந்தாலும் நிபுணர்கள் மற்றும் அதி காரிகள் அடங்கிய குழு தான் முடிவு செய்வார்கள்.

    கணினி கொள்முதல் செய்வதாக இருந்தாலும் அதிகாரிகள் தான் முடி வெடுப்பார்கள். துறை அமைச்சர்களை கேட்டு செய்ய மாட்டார்கள்.

    நான் கணினி நிபுணரும் இல்லை என எல்லோருக்கும் தெரியும் சம்பந்தம் இல்லா மல் குறை சொல்லும் வகை யில் பேட்டி கொடுக்கப் பட்டுள்ளது. பணியாளர் கூட்டுறவு சங்கத்தில் வாங் கிய கணினி மென்பொருளை வேறொரு நபருக்கு கொடுத் ததாக தான் குற்றம் சொல் கிறார். அது முழுக்க முழுக்க தவறு. தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி, மாவட்ட கூட்டுறவு வங்கி என அனைத்திலும் கணினி மய மாக்கப்பட்ட நிலையில் யாரும் குறை சொல்ல வில்லை.

    தற்போது தேர்தல் வரு கின்ற நேரத்தில் இதுபோன்ற செய்திகள் வருவதற்கு ஏதோ பின்புலம் இருப்பது போல் தோன்றுகிறது.

    எனவே என் மீது தவறான உள்நோக்கத்துடன் பொய்தகவலை கூறிவரும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    Next Story
    ×