search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marutubandyar"

    • சோழவந்தானில் மருதுபாண்டியர் குருபூஜை விழா நடந்தது.
    • நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

    சோழவந்தான்

    சோழவந்தானில் மருதுபாண்டியர் 222-வது குருபூஜை விழா நடந்தது. சோழ வந்தான் பஸ் நிலையம் முன்பு மருது பாண்டியர் படம் வைக்கப் பட்டு அனைத்து கட்சியினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.தி.மு.க. சார்பில் வெங்க டேசன் எம்.எல்.ஏ. தலைமை யில் மரியாதை செலுத்தப் பட்டது. பின்னர் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    நகர செயலாளர் மாவட்ட திட்ட குழு உறுப்பினர் வக்கீல் சத்யபிரகாஷ், பேரூராட்சி தலைவர் ஜெய ராமன், துணைத் தலைவர் லதா கண்ணன், ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன், பேரூர் துணை செயலாளர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்ட னர்.

    அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் கொரி யர் கணேசன், ஒன்றிய தலைவர் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெய குமார், இளைஞரணி கேபிள் மணி, நிர்வாகிகள், தொண்டர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பா.ஜ.க. சார்பில் மண்டல தலைவர்கள் கதிர்வேல், அழகர்சாமி ஆகியோர் தலைமையில் மரியாதை செலுத்தப் பட்டது.

    காங்கிரஸ் கமிட்டி சார்பில் நகரத் தலைவர் முத்துப்பாண்டி, முன்னாள் வட்டார தலைவர் ராமன், மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

    தே.மு.தி.க. சார்பில்பேரூர் செயலாளர் கிருஷ்ணன், தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி, குருநாதன் தேவேந்திரன், நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

    சங்கங்கோட்டை கிராம கமிட்டி தலைவர் வக்கீல் சிவகுமார் மரியாதை செலுத்தினார்.

    சோழவந்தான் சப்-இன்ஸ்பெக்டர் முத்து தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

    • காளையார் கோவிலில் மருதுபாண்டியர்கள் குருபூஜை விழா நடந்து வருகிறது.
    • அரசியல் கட்சியினர் மரியாதை-2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    காளையார்கோவில்

    சுதந்திர போராட்ட வீரர்களான மருது சகோதரர்களை ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டனர். பின்னர் அவர்களது கடைசி ஆசை யின்படி மருது சகோத ரர்களின் உடல்கள் காளை யார்கோவிலில் உள்ள சொர்ண காளீஸ் வரர் கோவில் முன்பு அடக்கம் செய்யப்பட்டது. மருது சகோதரர்களின் தியா கத்தை போற்றிடும் வகை யில் ஆண்டுதோறும் அக். 27-ந்தேதி மருது பாண்டி யர்கள் குருபூஜை விழா காளையார்கோவிலில் விமரிசையாக நடைபெற்று வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான 222-வது குருபூஜை விழா வருகிற 27-ந்தேதி (வௌ்ளிக் கிழமை) நடைபெறுகிறது. அன்றைய தினம் மருது பாண்டியர் நினைவிடத்தில் சிறப்பு தியாக பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் நினைவிடம் முன்பு பொங்கல் வைத்தும், முடி காணிக்கை செலுத்தி யும் வழிபாடு நடத்துவார்கள்.

    அதன்பின் அரசியல் கட்சி பிரதிநிதிகள், பல்வேறு சமுதாய அமைப் பினர், பொதுமக்கள் மருது பாண்டியனர் நினை விடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்து வார்கள். குரு பூஜை விழா வில் ராமநாதபுரம், சிவ கங்கை, மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கலந்து கொள்ள காளை யார்கோவிலுக்கு வரு வார்கள்.

    இதையொட்டி சிவகங்கை மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    முக்கிய வழித்தடங்க ளான திருப்புவனம், சிவ கங்கை, கல்லல், இளை யான்குடி, காளையார் கோவில் ஆகிய பகுதிகளில் சோதனை சாவடி அமைக் கப்பட்டு கண்காணிப்பு காமிராவும் பொருத்தப் பட்டுள்ளது. இங்கு 24 மணி நேரம் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபடுத் தப்பட உள்ளனர். குருபூஜை விழாவிற்கு வருவோர் அரசு விதித்துள்ள கட்டுப் பாடுகளை கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும். வாகனங்ளில் ஒலிபெருக்கி பயன்படுத்த கூடாது. கோஷங்கள் போடக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறி உள்ளனர்.

    மருதுபாண்டியர் குரு பூஜை மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 30-ந் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • மருதுபாண்டியர் நினைவு தின நிகழ்ச்சி நடந்தது.
    • மருதுபாண்டியர்க ளுக்கு நினைவு அஞ்சலி செலுத்த நரிக்குடி முக்குளம் செல்வதற்கு அனைவரையும் அனுமதிக்க வேண்டும்.

    விருதுநகர்

    மருது பேரவை சார்பில் விருதுநகர் மாவட்ட நிர்வா கத்திடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதா வது:-

    மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் பிறந்த ஊரான நரிக்குடி முக்குளத் தில் அரசு சார்பில் மணி மண்டபம் அமைக்க வேண் டும். மருதுபாண்டி யர்கள் பிறந்த இடத்திற்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் வாழ்ந்த ஊர் என்ற பெயர் பலகை வைக்க வேண்டும்.

    ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 24-ந் தேதி மருதுபாண்டியர்க ளுக்கு நினைவு அஞ்சலி செலுத்த நரிக்குடி முக்குளம் செல்வதற்கு அனைவரையும் அனுமதிக்க வேண்டும். மருதுபாண்டியர் ஆலயத்தில் அமைந்துள்ள நரிக்குடி அரசு பள்ளிக்கு விடுமுறை வழங்க வேண்டும்.

    திருப்பத்தூர் காளையார் கோவிலில் நடைபெறுவது போல் மருது பாண்டியர்கள் பிறந்த நரிக்குடி முக்குளத் தில் அரசு விழா நடத்த வேண்டும். நரிக்குடி முக்கு ளம் அரசு தொடக்கக் கல்வி பள்ளி வளாகத்தில் அமைந் துள்ள பெரிய மருதுபாண்டி யர் ஆலயம் மற்றும் ஐந்து ராணிகளின் ஆலயத்தை புதிதாக கட்டித்தர வேண் டும். மேற்கண்ட கோரிக்கை கள் குறித்து தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    ×