search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gurupujai"

    • காளையார் கோவிலில் மருதுபாண்டியர்கள் குருபூஜை விழா நடந்து வருகிறது.
    • அரசியல் கட்சியினர் மரியாதை-2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    காளையார்கோவில்

    சுதந்திர போராட்ட வீரர்களான மருது சகோதரர்களை ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டனர். பின்னர் அவர்களது கடைசி ஆசை யின்படி மருது சகோத ரர்களின் உடல்கள் காளை யார்கோவிலில் உள்ள சொர்ண காளீஸ் வரர் கோவில் முன்பு அடக்கம் செய்யப்பட்டது. மருது சகோதரர்களின் தியா கத்தை போற்றிடும் வகை யில் ஆண்டுதோறும் அக். 27-ந்தேதி மருது பாண்டி யர்கள் குருபூஜை விழா காளையார்கோவிலில் விமரிசையாக நடைபெற்று வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான 222-வது குருபூஜை விழா வருகிற 27-ந்தேதி (வௌ்ளிக் கிழமை) நடைபெறுகிறது. அன்றைய தினம் மருது பாண்டியர் நினைவிடத்தில் சிறப்பு தியாக பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் நினைவிடம் முன்பு பொங்கல் வைத்தும், முடி காணிக்கை செலுத்தி யும் வழிபாடு நடத்துவார்கள்.

    அதன்பின் அரசியல் கட்சி பிரதிநிதிகள், பல்வேறு சமுதாய அமைப் பினர், பொதுமக்கள் மருது பாண்டியனர் நினை விடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்து வார்கள். குரு பூஜை விழா வில் ராமநாதபுரம், சிவ கங்கை, மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கலந்து கொள்ள காளை யார்கோவிலுக்கு வரு வார்கள்.

    இதையொட்டி சிவகங்கை மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    முக்கிய வழித்தடங்க ளான திருப்புவனம், சிவ கங்கை, கல்லல், இளை யான்குடி, காளையார் கோவில் ஆகிய பகுதிகளில் சோதனை சாவடி அமைக் கப்பட்டு கண்காணிப்பு காமிராவும் பொருத்தப் பட்டுள்ளது. இங்கு 24 மணி நேரம் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபடுத் தப்பட உள்ளனர். குருபூஜை விழாவிற்கு வருவோர் அரசு விதித்துள்ள கட்டுப் பாடுகளை கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும். வாகனங்ளில் ஒலிபெருக்கி பயன்படுத்த கூடாது. கோஷங்கள் போடக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறி உள்ளனர்.

    மருதுபாண்டியர் குரு பூஜை மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 30-ந் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ×