என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது-மாணிக்கம் தாகூர்
- இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது என மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.
- காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மதுரை
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநகர் மாவட்ட தலைவர் கார்த்தி கேயன், மாணிக்கம் தாகூர் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாணிக்கம் தாகூர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள இந்திய கூட்டணி வலுவாக உள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இணைத்து வைத்த இந்த இந்தியா கூட்டணி நிச்சய மாக வெற்றி பெறும். தமிழகத்தில் தி.மு.க .தலைமையில் இந்தியா கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தன்னை முதல்-அமைச்சர் என்று தெரிவிப்பதாக கூறப்ப டுகிறது. அவர் முதலில் அரவக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்று வரட்டும். அதன் பின்பு அது குறித்து பேசலாம்.
அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி முறிவு என்பது ஒரு நாடகமாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி மத்திய பா.ஜ.க. அரசின் குறைகளை சுட்டிக் காட்டுவதில்லை. அதே போல் இந்த கூட்டணி முறிவு குறித்து பா.ஜ.க. தரப்பில் எந்த அறிவிப்பும் வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் காங்கி ரஸ் நிர்வாகிகள் செய்யது பாபு, கவுன்சிலர் தல்லா குளம் முருகன், துரையரசன், மலர்கண்ணன், பறக்கும் படை பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்